Sunday 2 August 2009

ஆண் குஞ்சு பாவம் - வீணாவின் பழிவாங்கல்

டிஸ்கி: நிறைய மெயில்கள் வர தொடங்கிவிட்டன. மகிழ்ச்சி. பலர் ஆரோக்கியமான சந்தேகங்கள் கேட்கிறார்கள். பலரை என் எழுத்து ஈர்த்திருப்பது உண்மை. சிலர் என் எழுத்தை குறை சொல்கிறார்கள். இருக்கட்டும். ஆனால் சிலர் என்னை ஏதோ சாடிஸ்ட் போலவும்...விவாகரத்து ஆனவள் என்றும்....கற்பழிக்கப்பட்டு அதனால பாதிக்கப்பட்டவள் எனவும்...மன நோயாளியாக இருப்பேனோ எனவும் கற்பனித்துக்கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது இது தான். உங்கள் கற்பனை எதுவும் உண்மை இல்லை. நான் ஒரு 24 வயது பெண். எனக்கும் பாய் பிரண்ட்ஸ் உண்டு. உங்களை போல் சந்தோஷமாக வாழும் ஒரு சின்ன பறவை தான் நான். இந்த பிளாகில் எழுதுவதெல்லாம் என்னுடைய சிந்தனைகள். உங்களுக்கு பிடித்திருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். இல்லையேல் விட்டுவிடலாம். அதற்காக இந்த சிந்தனைகளை வைத்து என்னை பற்றி ஒரு மாய பிம்பத்தை தயவு செய்து ஏற்படுத்தி உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். என் எழுத்தை ஆரோக்கியமாக விமர்சியுங்கள் என்னை அல்ல.



சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். ஒரு பெண் . பெயர் வீணா என்று வைத்துக்கொள்வோம். அவள் ஒரு நிறுவனத்தில் ஹெச். ஆர் துறையில் பணியாற்றி வந்தாள். அவள் அழகாக இருப்பாள். கூடவே புத்திசாலி. படிப்பிலும் பேச்சிலும் உடையிலும் யாரையும் பின்னால் அலைய வைக்கும் அளவுக்கு சக்தி அவளிடம் உண்டு. அவளது அலுவலகத்தில் வேலை செய்து வந்த சுந்தர் என்பவன் அவளிடம் வழிய தொடங்கினான். லஞ்ச் பிரேக்கில் மீட்டிங் ரூம்களில் குரங்கு சேஷ்டைகள் செய்து அவளை வளைக்க நினைத்தான். அவன் ஒன்றும் பெரிய அழகில்லை. சுமார். வேலையும் நிரந்தரம் இல்லை. சொற்ப சம்பளத்தில் இருந்தான். வீணா அவனை ஒரு காமெடியன் போலத்தான் பார்த்தாள். ஆனால் அவன் ஒரு நாள் வீணாவை காதலிப்பதாக சொல்லி கெஞ்சினான். நண்பர்களை தூதுவிட்டான். உதவாக்கரை கவிதைகள் எழுதினான். காதலித்தால் தான் ஆச்சு என்பது போல் தரையில் விழுந்து புரண்டான். பிறகு வீணா அவனது காதலை உண்மை என்று நம்பி அவனை இரக்கப்பட்டு காதலித்தாள். ஆறு மாதத்தில் அவன் அவனுடைய குணத்தை காட்ட ஆரம்பித்தான். அது தான் ஆண்மை என்று எல்லோரும் பெருமை பட அழைக்கும் எச்சில் குணம். அவளை மயக்கி தன் ஆசைக்கு பணிய வைத்துவிட்டு திருமணம் என்றவுடன் அப்பா திட்டும் அம்மா திட்டும் என்று பின் வாங்கினான். வீணா கண்ணீரோடு எங்களிடம் சொன்னாள். நாங்கள் ஒரு நான்கு பேர் அவனிடம் பேசுவதற்காக போனோம். சேற்று தண்ணீரை குடித்த நாய் எப்படி வாயை நாக்கால் துடைக்குமோ அது போல் துடைத்தபடி உட்கார்ந்திருந்தான்.


நாங்கள் உண்மையில் அவனிடம் கெஞ்சினோம். அவன் என்ன சொன்னான் தெரியுமா?” நீங்கள் என்ன பெரிய பருப்பா. ஆள் கூட்டிட்டு வந்து மிரட்டுறியா. பொம்புளைங்க நீங்க சொன்னா அவள கல்யாணம் பண்ணிப்பனா. அவளுக்கு திமிரு. என்ன மதிக்கிறதில்ல. அவன் வந்து என் கால புடிச்சு கெஞ்சி கதறினா கூட நான் அவள கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” என்று ஏக வசனம் பேசினான். நாங்கள் வீணாவுக்காக மிகவும் வருத்தப்பட்டோம். அப்போது தான் வீணாவுக்கு ஒரு ரோஷம் ஒரு வெறி ஒரு கோபம் வந்தது. எப்படியாவது அவனை அவன் செய்த தவறை உணர வைக்க வேண்டும் என்றாள். நாங்கள் உடனே தயாரானோம். ஒரு புகார் எழுதிக்கொண்டு மகளிர் காவல் நிலையத்துக்கு போனோம்.




















என் காலில் விழு விட்டுவிடுகிறேன்.

எங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதுவும் படித்த பெண்கள் புகாருடன் போகும் போது போலீசாருக்கே அந்த பையன் யாரு ஒரு வீசு வீசுவோம் என்பது போல் ஒரு உற்சாகம் வந்துவிடுகிறது. எங்கள் புகாரை அன்போடு ஏற்றுக்கொண்டு நம்பிக்கை ஊட்டினார்கள். நாங்கள் புறப்பட்டோம். அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த ஆண் காளையை போலீஸ் அவனது அலுவலகத்திலேயே போய் எல்லோர் முன்னிலையிலும் அழைத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்தார்கள். ஒரு நாள் முழுக்க காவல் நிலையத்தில் இருந்தான். அவனை பார்க்க அவனது பெற்றோர் கூட வரவில்லை. கை கழுவி விட்டார்கள். அவனுடைய அப்பாவுக்கு இவனை பற்றி தெரிந்திருக்கிறது.

அடுத்த நாள் காலையில் நாங்கள் ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டுவிட்டு காரில் போலீஸ் ஸ்டேஷனுக்கு போனோம். எஸ்.ஐ. எங்களை வரவேற்று ஒரு அறைக்கு அழைத்து சென்றார். அங்கே அந்த ஆண் வேட்டை புலி ஜெட்டியோடு கை இரண்டும் பின்னால் கட்டியபடி எங்கள் முன்னால் முட்டி போட்டு நின்றுகொண்டிருந்தது. வீணாவுக்கு மனம் எல்லாம் நிறைந்தது. அதுவே அவளுக்கு பாதி ஞாயம் கிடைத்துவிட்டது போல் உணார்ந்தாள்.


இப்படியே அவனை விட்டுவிட்டால் கூட பரிபூரண திருப்த்தி தான் என்றாள். அவன் தலை குனிந்திருந்தான். எங்களை பார்த்து எளக்காரம் பேசியவன் ஒரு புளுவை போல் ஆண் சிங்கம் என இடுப்புக்கு கீழே கொஞ்சூண்டு சதையை தொங்கவிட்டபடி திரியும் அந்த மிருகம் எங்கள் முன்னால் மண்டி போட்டு நின்றிருந்தது எங்களுக்கான விடுதலை என்று உணார்ந்தோம்.

பிறகு இன்ஸ்பெக்டர் அறைக்கு போனோம். உட்கார்ந்தோம். இன்ஸ்பெக்டர் எங்களிடம் இராத்திரி முழுதும் அவனை பின்னி எடுத்ததாக கூறினார். அவரும் ஒரு பெண் தான். பையன் அரண்டுட்டான். எங்கள் கால்களை பிடித்து கதறுகிறான். இப்போது வீணாவை திருமணம் செய்துகொள்வதாகவும் தன்னை சிறையில் அடைக்க வேண்டாம் விடுவித்துவிடுங்கள் என்று கெஞ்சுவதாகவும் கூறினார். பிறகு அவனை அந்த அறைக்கு அழைத்து வர சொன்னார்.

மீண்டும் ஜெட்டியோடு வந்தான். நான் அந்த இடத்தை பார்த்தேன். சிரிப்பு வந்தது. கூடவே வெறி அதை அபபடியே வெட்டி காக்காவுக்கு போட வேண்டும் போல் இருந்தது. இன்ஸ்பெக்டர் அவன் தலை முடியை பிடித்து உலுக்கி என்ன சொல்ற சொல்லு என்றார். அவன் முதுகை வளைத்து

நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் கல்யாணம் பண்ணிக்கிறேன். என்றான். எங்களுக்கு சிரிப்பு தான் வந்தது. இது எல்லாம் சட்டம் தந்த சுதந்திரம். ஒரு பெண் கால் மேல் கால் போட்டபடி தனக்கு தீங்கு இளைத்த ஒரு ஆண் தண்டிக்க படுவதை பார்த்து ரசிக்கும் உரிமை.

பிறகு அவனை அனுப்பிவிட்டார்கள். வீணாவிடம் கருத்து கேட்டார்கள். இப்போது அவள் எடுக்கும் முடிவு தான் பிரதானம். வீணா திடமாய் சொன்னாள்.


சிரித்தபடி...”என்ன கல்யாணம் கட்டிக்கிறானா...பக்கர்.....கேஸ் போடுங்க “என்றாள். இன்ஸ்பெக்டர் வீணாவை பார்த்தார். அவளை பாராட்டினார். அவளின் மன தைரியத்தை புகழ்ந்தார். ஆனால் ரேப் கேஸ் போட்டால் அவனுக்கு குறைந்தது பத்து வருடம் கிடைக்கும். அது மட்டும் அவனுக்கு போதாது. இருந்த போதும் அப்படி கேஸ் போட்டால் நீயும் அதில் சம்மந்தப்பட வேண்டியிருக்கும். அதனால் அவன் மேல் சிறு வழக்கு ஏதாவது போட்டு ஒரு வருடம் வெளியில் வராதபடி செய்துவிடுகிறேன் நீயும் அதற்குள் ஒரு நல்ல வாழக்கை அமைத்துக்கொள் என்றார். வீணா அவன் மேல் இரக்கப்பட்டு அதற்கு அதற்கு ஒப்புகொண்டார். அந்த ஆண் சிங்கத்தின் மேல் ஈவ் டீசிங் மேலும் இரண்டு வழக்குகள் போட்டு பேப்பரில் போட்டோவோடு போட்டார்கள். அவன் வெளியே வர ஆறு மாதத்துக்கு மேல் ஆனது. அவனுடைய வேலை போனது. இப்போது ஒரு தெரு பொறுக்கி போல் சுற்றிக்கொண்டிருக்கிறான். அவன் அன்று ஜெட்டியோடு எங்கள் முன் நின்று கதறியதை பார்த்தால் எனக்கு சிரிப்பு சிரிப்பாய் வரும்.


வீணாவுக்கு திருமணம் ஆகி பூனேவில் கணவோரோடு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறாள். பத்து வருட சிறை தண்டனையிலிருந்து அவனை விடுவித்த வீணாவின் இரக்கத்தை பெருமிதத்தை நினைத்தால் மனம் நெகிழ்ச்சி அடைகிறது.


உங்கள் கருத்துக்களையும் சந்தேகங்களையும் விவாதங்களையும் எனக்கு அனுப்புங்கள்.
உங்கள் தோழி

வின்சி

vincyontop@gmail.com

11 comments:

Anonymous said...

வின்சி ..எழுத்துலதான் பட்டய கிளப்புறேங்கன்னு பார்த்தா ..உண்மையிலே அப்படி தானா..

அருண்

டக்கால்டி said...

உங்கள் தோழியை அந்த நபர் மயக்கிய போது அவர் ஏன் சுயக்கட்டுப்பாட்டை இழந்தார்.

தான் பழகும் ஆடவன் நல்லவனா?கெட்டவனா? என்று கூட தெரியாமல் பழகிவிட்டு உடலையும்,மனதையும் பறிகொடுத்துவிட்டு அவனை பழி வாங்க வஞ்சமும், சூழ்ச்சியும் செய்து யப்பா...மெகா சீரியல் நன்றாக தான் உங்களை மாற்றியிருக்கிறது.

ஆண்கள் அனைவரையும் ஒரு தவறான கண்ணோட்டத்தில் நீங்கள் பார்கிறீர்கள் என்ற சந்தேகம் எனக்கு வலுக்கிறது.

பாலா said...

அடடா.. க"போதி கூறியதுபோல், உங்கள் பதிவிலும் இருவரும் மனமுவந்து தானே சிற்றின்பத்தில் ஈடுபட்டனர் என்கிறீர்கள். இதில் பலாத்காரம் இருந்ததாகத் தெரியவில்லையே. வெட்டிப்பேச்சு பேசி வாய்ச்சவடால் அடிப்பது பேடித்தனம், ஆனால் அது கிரிமினல் குற்றமில்லையே.

உண்டான குழந்தையின் வளர்ப்பிக்கு அவனையும் முழு பங்குதாரராக (child support) ஆக்குவதற்கு அவன் மறுத்தால் அது குற்றம் அதை சட்டத்தின் மூலம் உறுதி செய்யவேண்டும். அதைவிடுத்து extra-judicial முறையில் பழிவாங்குவது சமுதாயத்திற்கு நல்லதல்ல.

ஒருவேளை புதியதான இந்திய குற்றவியல் சட்டம் 498A பிரிவு (IPC Sec 498A) மற்றும் குடும்ப வன்முறைச் சட்டம் (Domestic Violence Act) என்பவை இச்சம்பவத்தின்் மூலவன் செய்ததை கற்பழிப்பு என்று சொல்லலாம். அந்த பட்சத்தில் அவன் செய்தது குற்றமெனில், நீங்கள் செய்தது சட்டப்படி சரியே. குற்றம் சட்டத்தை இயற்றியவர்களிடமும் அதற்கும் மேலாக அதனைப் படிக்காமலேயே அமுல் படுத்தச்செய்த அரசியல்வாதிகளிடமும் சேரும்.

Anonymous said...

வீணாவுக்கு திருமணம் ஆகி பூனேவில் கணவோரோடு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறாள். பத்து வருட சிறை தண்டனையிலிருந்து அவனை விடுவித்த வீணாவின் இரக்கத்தை பெருமிதத்தை நினைத்தால் மனம் நெகிழ்ச்சி அடைகிறது.//

யார் அந்த ஏமாந்த மாப்பிளை
பவம் :((

balanraji said...

aankalil sila nallavarkalum irukkiraarkal kettavarkalum irukkirarkal,pengalil sila nallavarum irukkiraarkal kettavarkalum iruklkiraarkal ellaa angalayum kurai solluvathu thavaru ungal kunaththai matrikkollungal,pennaal paathikkappattavan anpudan

balanraji said...

thavaru

வெண்ணிற இரவுகள்....! said...

தோழியே தங்கள் பதிவு அற்புதம் ...........ஆனால் எல்லா ஆண்களும் அப்படி இல்லை ....
ஏமாற்றும் பெண்களும் இருக்கிறார்கள் ..............தன் பின்னால் நாயாக அலைய வைத்து வாழ்கை கெடுக்கும் பெண்களும் இருக்கிறார்கள் ...நினைவிருக்கட்டும் ...............உங்கள் தைரியம் அருமை

Unknown said...

VINCI, Pinni pedal edukkaringa, ana neenga ella ambalyume thappa nenaikkaringa parunga , athu than konjam nerudala iruku.

Enna neenga sonna sambavam mathiriye , ethanai ponunga pasangala suthalla viturukkanga theriyuma!!!! athaiyum mudinga eluthunga.

neenga eluthara most of the posts padichi irukken, unga thayiriam enaku romba pudichi irukku!


Ravikumar

Anonymous said...

தோழி வின்சி அவர்களே என் பெயர் அம்மு உங்கள் தோழி வீணா எடுத்த முடிவு மிக சரி.அதை போல எங்கள் பெண்கள் விடுதில் ஒரு நாள் திருட வந்த ஆண் .அவன் ஒரு பெண்னை கற்பழிக்க முயன்றான் அவனை விடுதில் உள்ள பெண்களும் சோர்ந்து துரதி பிடித்து அவனை போலிஸ் பிடித்து கொடுத்து விடலாம் என்று நினைத்தோம். ஆனால் ஜீமினில் வெளியே சென்றுவிடுவான் என நினைத்து அவனுக்கு தகுந்த தண்டனை கொடுக்க முடிவு செய்தோம்.அது ஏன்னொறல் அவன் இரண்டு கைகளையும் கம்பத்தில் கட்டிஆடையொல்லம் கழற்றி நீர்வணமாக நிக்கவைத்தோம்அவன் இடிப்பில் கிழ் இருந்த நிறைய முடிகளுடன் குஞ்சு பாவம் தொங்கி கொண்டு இருந்தது .அதை பார்த்து நாங்கள் சிரித்தோம்.அவன் அவமனமையை கண்ணீர் விட்டன் ஒர் நாள் முழவதும் அப்படியே இருந்தான்.அவனுது குஞ்சை எறும்பு கடித்து அவன் கதறினான்.அவனை ஒரு டைலக் அதாவது இனிமேல் திருட மட்டேன் பெண்கள் விட்டின் கண்கள் பெண்கள் நாட்டின் கண்கள் என்று சொல்ல சொன்னேம் அவனும் சொன்னான்.ஒரு நாள் கழித்து விடுதலை செய்தோம. பின் அப்படியே நீர்வணமாய் ஒடி விட்டான் .நடிகர் விவேக் சொன்னது போல தண்டனைகள் அதிகமனால் தான் தப்பு குறையும் என்ற கருத்து நீருபணம் ஆகிறது.

Anonymous said...

மனித குணமே கெஞ்சமும் இல்லாத தன்மை இங்கு நன்றாக தெரிகிறது.

Bala said...

Inum mosama kuda avanai panirukalam