Tuesday 15 December 2009

வரதட்சணை - பெண்கள் மாட்டை விட கீழானவர்களா?

இந்தியா உலக நாடுகள் வரிசையில் பின் தங்கியிருக்க முக்கிய காரணம் ஆணாதிக்க கலாசாரமும் முட்டாள்தனமான மத கோட்பாடுகளும் தான். மேலும் எழுதுவதற்கு முன் நான் இரண்டு விஷயங்களை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

1. தண்டோரா என்ற பதிவர் வலைச்சரத்தில் என்னுடைய வலை பக்கத்தை அறிமுகப்படுத்தினார். என்னை ஆப்பரசி என்று வர்ணித்தார். ஆணாதிக்கத்துக்கு ஆப்படிக்கும் ஆப்பரசி. மிக்க மகிழ்ச்சி. பெரும்பாலானவர்கள் என் வலை தளத்துக்கு வரவே அச்சப்படுகிறார்கள். ஆணாதிக்க சிந்தனையுடைய யாரும் என் வலை பக்கத்துக்கு வர அச்சப்படுவார்கள். என் எழுத்துக்களை சரியாக புரிந்துகொள்ள சில பேர் இன்னும் இருக்கிறார்கள் என்று அறிகிற போது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. மீண்டும் நன்றி தண்டோரா.

அடுத்ததாக வருகிறார் ரோஷ்மா. அதாவது பெண் பெயரில் என்னை திட்டி எழுதினால் நான் உடனே ஐயஹோ பெண்களுக்கு என் இனத்துக்கே நான் எழுதுவது பிடிக்கவில்லை என்று மூடிக்கொண்டு போய்விடுவேனா. பெண் வேடமிட்ட ரோஷ்மா ஒரு கருத்தை முன் வைக்கிறார். சரளமான ஆங்கிலத்தில் என் பதிவுகளை திட்டுகிறார். சரி போகட்டும் . பிறகு அவர் சொல்லும் ஒரு விஷயத்தை தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் புரட்சிகரமான கருத்துக்களை எழுத்வேண்டுமென்றால் தமிழச்சி எழுதுவதை போல் எழுதவேண்டுமாம். அவரது வலை தளத்தின் சுட்டியையும் இணைத்துள்ளார். என்னுடைய எழுத்துக்கள் பலரை நோயாளிகள் ஆக்குமாம். ஐயா தமிழச்சியை போல் எழுத நான் பல அடுக்கு புத்தகங்கள் படித்த அறிவாளியோ பெரியாரை கரைத்து குடித்த பெரியார்தாசியோ அல்ல. பிறகு நேர்த்தியான தமிழில் கிரேக்க வரலாற்றில் ஆணாதிக்கம் போர்ச்சுகீசிய ஆண்கள் பெண் உடை உடுத்தினார்கள் என்றெல்லாம் வரலாற்றை மேற்கோள் காட்டி எழுத நான் அதிகம் படிக்கவில்லை ஐயா. என்னுடைய குரல் ஒரு பாரம தமிழச்சியின் குரல். அது தெரு சண்டை போல் கொச்சையா இருக்கலாம். இருக்கும். அப்படித்தான் நான் கத்த விரும்புகிறேன். அன்றாடம் நான் காணும் ஆணாதிக்க போக்கை எனக்கு தெரிந்த மொழியில் கை வந்த வார்த்தைகளை பயன்படுத்தி கொஞ்சம் வன்மையாக எழுதுகிறேன். அவ்வளவு தான். எனக்கு கவிதை எழுதவோ புறநாநூறு படிக்கவோ நேரமில்லை. விபசார விடுதிகளில் அல்லல்படும் ஒரு பெண் டயரி குறிப்பு எழுதினால் ஓத்தா தெவிடியா பையா என்ற இரண்டு வார்த்தைகள் கூட ஒரு கவிதை தான். அதை புரிந்துகொள்ளுங்கள். ஒடுக்கப்பட்டவர்களும் ஏழைகளும் பாமரர்களும் அழகாக தமிழ் கற்றுக்கொண்டு இமேஜ் பாதிக்காமல் எழுதவேண்டுமென்றால் அதற்கு நான் ஆளல்ல. உங்களுக்கு என் வலை மனை பிடிக்கவில்லை என்றால் வரவேண்டாம். யாரையும் வற்புறுத்தி நான் அழைக்கவில்லை. அழைக்க நான் என்ன வேசியா.

நான் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன். பெண்கள் பெரும்பாலானவர்கள் சமையல் குறிப்புகளும் வீட்டை சுத்தமாக வைக்கும் டிப்ஸும் பிறகு ஹார்ப்பிக் வைத்து டாயிலட் கழுவுவதை பற்றி செய்முறை விளக்கங்களும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட பாலோவர்ஸ். அதற்கு பின்னூட்டம் போடும் கூட்டம் ஆண்கள் கூட்டம். ஆக சமையல் குறிப்பும் டாயிலட் கழுவுவதை பற்றி பெண்கள் எழுதினால் அதற்குத்தான் பெண்கள் இருக்கிறார்கள் என்ற ஆணாதிக்க நம்பிக்கை வலுப்பெறுவதனால் ஆண்கள் செய்யும் நன்றிக்கடன் தான் பின்னூட்டமோ என்று தோன்றுகிறது. ஆக சமையல் குறிப்பு எழுதினால் நிறைய பாலோவர்ஸ் கிடைக்கும் போலிருக்கிறது. நானும் எழுதுகிறேன். நிறைய ஆண்களுக்கு பெண்கள் அடுக்களை சம்மந்தமாக எழுதினால் ஒரு திருப்தி.















உடனே பெண் சிகிரெட் புகைக்கும் புகைப்படத்தை ஏன் போடுகிறீர்கள் என்று கேட்பார்கள். உங்களுக்கெல்லாம் குளித்து தலையில் டவல் கட்டிக்கொண்டு புடவை சுற்றியபடி சாமி கும்பிடும் பெண் படம் போட்டால் சூப்பரா இருக்கும் இல்ல....




என் வலைத்தளம் பலருக்கு எரிச்சலூட்டுகிறது. இங்கே வர பல ஆண்கள் அச்சப்படுகிறார்கள். நான் தொடர்ந்து அவர்களின் முகமூடிகளை கிழிப்பதால் அவர்களுக்கு பயம். திருடனை பற்றி செய்தி வந்தால் திருடனோ அல்லது அவனுக்கு ஆதரவு தெரிவிப்பவனோ தானே எரிச்சல் அடைய வேண்டும். ஏன் நீங்கள் பதட்டப்படுகிறீர்கள். காரணம் மறைமுகமாக ஆணாதிக்கம் என்ற மாய வன்மத்தால் விளையும் சுகங்களை உங்களுக்கு தங்கு தடையின்றி அளிக்க பெண்கள் எப்போதும் ஏமாளிகளாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் போனால் உங்களுக்கு பொசுக்கென்று கோபம் வந்துவிடுகிறது.

வரதட்சணை புழங்கும் ஒவ்வொரு திருமணமும் மாட்டு வியாபாரமே அல்லது அதை விட கீழ்த்தரமானது. நீங்கள் சந்தையில் ஒரு மாடு வாங்க போகிறீர்கள். எத்தனை லிட்டர் பால் கறக்கும்....அவனுடைய வருமானம் என்ன?.....வயது என்ன வசதிகள் என்னென்ன என்றெல்லாம் பார்த்துவிட்டு மாட்டை வாங்குகிறோம். வாங்கிவிட்டு மாட்டை ஒரு கயிறு கட்டி இழுத்துக்கொண்டு வந்து நம் வீட்டில் கட்டுவோம். ஆனால் திருமணம் என்னும் மாட்டு வியாபாரத்தில் தான் பெண் காசு கொடுத்து ஒரு மாப்பிள்ளையை வாங்கிவிட்டு அந்த மாப்பிள்ளையோடு தங்க போகிறாள். அதாவது மாட்டை வாங்கி சந்தையிலேயே மாட்டோடு படுத்துக்கொள்ள வேண்டும். நாம் வாங்கிய மாடு நம்மோடு வந்து இருக்காது. மாறாக நாம் காசு கொடுத்து மாட்டை வாங்கிவிட்டு அதன் இடத்திற்கு அதன் இஷ்டத்திற்கு நாம் இருக்க வேண்டும். அட கொடுமையே....என்னை பொருத்தவரை வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் ஒவ்வொரு ஆணும் வீட்டோடு மாப்பிள்ளை ஆகிவிடுவது தான் சரி. காரணம் உங்களை காசு கொடுத்து வாங்கியிருக்கும் பெண்ணுக்கு தான் நீங்கள் சொந்தம். அவள் வசிக்கும் இடத்துக்கு நீங்கள் போய் வசிக்கவேண்டுமே தவிர அவளை உங்கள் வசிப்பிடத்துக்கு கொண்டு வருவது சரியா? அப்படி ஒரு நடைமுறை நம் நாட்டில் இருக்கிறதென்றால் பெண்கள் மாட்டை விட கேவலமானவர்கள் என்று தானே அர்த்தம். அப்படி ஒரு அர்த்தம் கற்பித்து ஆணாதிக்க சிந்தனையோடு வாழும் இந்த சமுதாயத்தில் பெண்ணே உனக்கு திருமணம் தேவையா?

தமிழச்சியை போல் என்னால் எழுத முடியாது. என் கோபத்தை பச்சை பச்சையாய் தான் காட்டுவேன்.

சரி நம் விஷயத்துக்கு வருவோம். இந்தியா ஒரு வளமான நாடு. இங்கே நம் முன்னோர்கள் அதாவது ராஜாக்கள் காலத்திலிருந்தே நாம் இரண்டு விஷயங்களுக்கு பேமஸ் ஒன்று குக்கிங் இன்னொன்று பக்கிங். அந்தப்புறம் அமைத்து நம் ராஜாக்கள் கலவி செய்துகொண்டிருந்த போது தான் மேலை நாடுகளிலில் மின்சாரமும் கம்ப்யூட்டரும் செய்துகொண்டிருந்தார்கள். நாம் இங்கே மதம் என்ற பெயரில் இந்திரனையும் சந்திரனையும் வணங்கிக்கொண்டிருந்த போது தான் மேலை நாட்டுக்காரன் நிலாவுக்கு ராக்கெட் செய்துகொண்டிருந்தான். அதாவது இந்தியா உருப்படாமல் போனதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு ஒன்று ஆணாதிக்க கலாசாரம் மற்றொன்று மூட நம்பிக்கைகளால் பொதிந்த மதம்.

உதாரணமாக பெண் கல்வியை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த காலத்தில் அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு என்றார்கள். இப்போது நாம் அடுப்பு ஊதாமலே எரிகிறதே என்ற கடுப்பு ஆண்களுக்கு இருக்கிறதோ என்னமோ. பெண் கல்வி எத்தனை ஆண்டுகளாய் இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் மறுக்கப்பட்டு வந்திருக்கிறது. அந்த காலம் தொட்டு பெண் கல்வியை ஊக்குவித்திருந்தால் நம் நாட்டின் கல்வி அறிவு எவ்வளவு உயர்ந்திருக்கும். ஐம்பது சதவீதம் பெண்கள் என்று தோராயமாக வைத்துக்கொள்வோம். அப்படியானால் ஐம்பது சதவீத ஜனத்தொகை கல்வி அறிவு பெறாமல் அவர்களால் இந்த நாட்டுக்கு எதையும் அளிக்க முடியாமல் போனதே. அதன் பொருட்டு பொருளாதார வளர்ச்சியும் அறிவியல் வளர்ச்சியும் குறைபட்டிருக்கிறது. அதை பற்றி எல்லாம் நமக்கு என்ன கவலை நமக்கு சூடான ஆணாதிக்க எண்ணங்கள் செழித்தால் போதுமே. விதவைகள் வாழாவெட்டி இப்படி எல்லாம் பெண்களை நீங்கள் அடக்கி வைத்த காலத்தில் இந்தியாவின் ஜனத்தொகையில் சரி பாதி 50% இந்திய வளங்கள் முடக்கப்பட்டிருந்தன. பல நூற்றாண்டுகளாய் வெறும் 50% மைலேஜில் தான் இந்தியா முன்னேறிக்கொண்டிருந்திருக்கிறது. இப்படி 50% மைலேஜில் முன்னேறினால் எப்போது நாம் வல்லரசாவது?

இதை பற்றி மேலும் அடுத்த பதிவில் பார்ப்போம்

Wednesday 9 December 2009

ஷகீலாவுக்கு வேலை வாங்கி கொடுங்கள்.

ஒரு காலத்தில் மலயாள திரை உலகில் கொடி கட்டி பறந்த ஒரு நடிகை. தமிழிலும், வட நாட்டினர் கூட தெரிந்து வைத்திருக்கும் ஒரு செக்ஸ் சிம்பள் ஷகீலா. நான் நிறைய முறை இதை கவனிப்பதுண்டு. ஷகீலாவின் செக்ஸ் போஸ்டர்களை மாதர் சங்கங்கள் கிழிப்பதும் அதன் மேல் சாணி அடிப்பதும் செருப்பால் அடிப்பதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதும் பிட் நோட்டீஸ் கொடுப்பதுமாக ஷகீலா உட்பட பலர் நடித்து வெளிவரும் செக்ஸ் படங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்.

இப்படி செய்யும் இவர்களின் நோக்கம் என்ன. சிலர் அந்த திரைப்படம் ஓடும் தியேட்டர் வாசலில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்துவதும் அங்கு வரும் ஆண்களை விரட்டுவதுமாக ஆண்களை கேட்டால் ஒரு பெரிய கலை எதிர்ப்பு கலாட்சாபமே அவர்கள் நடத்துவதாக சொல்லக்கூடும். எனக்கு ஒரே ஒரு கேள்வி தான் அப்போதெல்லாம் தோன்றும். இப்படி போராடும் இந்த மாதர் சங்க தொழிகளும் பெண்கள் தான் அந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகையும் ஒரு பெண் தான். ஒரு பெண் தன் இனத்தின் கௌரவத்தின் மீது அக்கரை கொள்ளாமல் தன் இனத்தை மேலும் மேலும் இழிவுபடுத்தும் ஒரு செயலை தொடர்ந்து செய்து வருகிறாள். ஆனால் மாதர் சங்கங்கள் ஷகீலாவுக்கு எதிராக போர் கொடி உயர்த்துவார்களா என்றால் இல்லை. காரணம் அவள் ஒரு பெண். இப்படி பெண்ணுக்கு பரிதாபம் பார்ப்பதை முதலில் நிறுத்த வேண்டும். நீங்கள் பரிதாபமாக ஒரு பெண்ணை பார்ப்பதன் மூலம் பெண் இனத்தை அவமதிக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒரு விதத்தில் பரிதாபப்படுவது கூட பேசிஸம். (புரியாதவர்களுக்காக ஹிட்லரின் பேசிஸம்.)

உண்மையில் இப்படிப்பட்ட திரைப்படங்கள் வெளிவருவதற்கு முதல் குற்றம் சாட்டப்பட வேண்டியவர் ஷகீலா. அவரை தான் நாம் முதலில் திருத்த வேண்டும். காரணம் யாரும் அவரை துப்பாக்கி முனையில் மிரட்டி அது போன்ற படங்களில் நடிக்க வைப்பதில்லை. அந்த அம்மையாரே இஷ்டப்பட்டு தான் அது போன்ற திரைப்படங்களில் தோன்றி தன் பெருத்த உடலை காட்டி பணம் சம்பாதிக்கிறாள். என்னை கேட்டால் அந்த மாதர் சங்கங்கள் உடனடியாக ஷகீலாவுக்கு ஒரு நல்ல சம்பளத்தில் ஒரு வேலை வாங்கி கொடுத்து அவரது வருமானத்துக்கு வழி பண்ணலாம். அதை விட்டுவிட்டு போஸ்டரில் சாணி அடிப்பதும் படம் பார்க்க வரும் ஆண்களை விரட்டுவதும் அரசியல் போராட்ட ஸ்டண்டே தவிர வேறொன்றுக்கும் உதவாது.
















எனக்கு ரொம்ப நாளாக சந்தேகம் ஷகீலா அளவுக்கு குண்டாக ஒரு ஆன்டி போனால் எந்த ஆணும் சீண்ட கூட மாட்டான். ஆனால் தியேட்டர் இருட்டில் அப்படி அந்த பெண்மணியிடம் என்ன தான் ரசிக்கிறார்களோ தெரியவில்லை.

----------------

கெட்ட வார்த்தைகள் அதிகம் பேசுபவர்கள் ஆண்கள் தான். பெண்கள் அவ்வளவு சகஜமாக கெட்ட வார்த்தைகள் உபயோகிப்பதை நீங்கள் பார்க்க முடியாது. ஆனால் ஆண்களுக்கு கோபம் வந்தால் மளமளவென கெட்ட கெட்ட வார்த்தைகளாக துப்பி தள்ளுவார்கள். உண்மையில் அப்படி கெட்ட வார்த்தை பேசும் ஆண்கள் கோழைகள் என்பதே உண்மை. அவர்களை கண்டு நீங்கள் அச்சப்பட தேவையில்லை. சைக்காலஜி படி கெட்ட வார்த்தை பேசுவதென்பது உங்கள் இயலாமையை வெளிப்படுத்தும் ஒரு மீடியா அவ்வளவுதான்.

பேருந்து ஓட்டுனர்கள் அதிகமாக கெட்ட வார்த்தை உபயோகிப்பதை நாம் பார்க்கிறோம். யாராவது குறுக்கே வந்துவிட்டால் உடனே ஓரிரு கெட்ட வார்த்தைகளை அள்ளி வீசினால் தான் அவருக்கு ஆண்மை அடங்கும். எதிராளியை உண்மையில் நேருக்கு நேராக சந்தித்து வீழ்த்த அல்லது நமது கோபத்தை தணித்துக்கொள்ள முடியாத சூழ்நிலையில் நமக்கு நாமே ஆறுதல் தேடும் விதமாகத்தான் கெட்ட வார்த்தைகளை நாம் பயன்படுத்துகிறோம். சில ஆண்கள் அதுவும் காலேஜ் பையன்கள் கெட்ட வார்த்தை பேசுவதை தாங்கள் வயதுக்கு வந்துவிட்டதை அறிவுறுத்தும் ஒரு மேற்கோளாக வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு இன்டர்நெட் சென்டரில் நின்றிருந்தேன். மூன்று கல்லூரி பையன்கள் வந்தார்கள். இன்டர்நெட் சென்டரில் ஒரு பெண் இருந்தாள். அது என்னவோ அந்த பெண்ணை பார்த்த பிறகு ஒருவன் இன்னும் பலமாக கெட்ட கெட்ட வார்த்தைகளால் தன் நண்பனை அர்ச்சிக்கிறான். அவர்களுக்கு கெட்ட வார்த்தை பேசுவது தன்னை ஆண் என்று தலை தூக்கி காட்ட உதவுகிறதென்றே நினைக்கிறேன். உண்மையில் கெட்ட வார்த்தை பேசும் ஒவ்வொருவரும் கோழைகள். தங்கள் இயலாமையை இப்படி வெளிப்படுத்துகிறார்கள்.

ஆண்மை இல்லாத ஒருவனை கட்டிலில் மனைவி ஆசையாய் நெருங்கினால் உடனே அவன் "தே...உனக்கு எப்ப பாத்தாலும் இதே நெனப்பு தானா? அச்சா புச்சா...." என்று கெட்ட கெட்ட வார்த்தையால் அர்ச்சிப்பான். உடனே மனைவி ஐயயோ நான் எவ்வளவு பாவம் செய்துவிட்டேன். அவர் கோபமாக இருக்கிறார். என்றெல்லாம் மனம் வருந்தி தலையணைக்குள் அழுது உறங்கிவிடுவாள். உண்மையில் ஆண்கள் கெட்ட வார்த்தை உபயோகிப்பது பல நேரங்களில் தங்கள் இயலாமையை மறைப்பதற்கே.


vincyontop@gmail.com

Sunday 6 December 2009

செக்ஸ் சாமியார் செய்த நன்மைகள்.

சமீபத்தில் ஒரு சாமியார் கோயில் கருவறைக்குள் பெண்களை அழைத்து வந்து சல்லாபித்திருந்தார் என்ற செய்தி வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் அந்த வீடியோ காட்சி ஒன்றை தோழி மெயிலுக்கு அனுப்பியிருந்தாள். அதை பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியோ வேதனையோ ஏற்படவில்லை. ஏனெனில் நான் சாமியார்களையோ பாதிரியார்களையோ கடவுளின் மினி தூதர்கள் என்று பாவிக்கும் மனப்பான்மை உடையவள் அல்ல. பல்வேறு பெண்கள் சாமியார்களை பாதிரியார்களை கடவுளின் மினி அவதாரங்களாக பாவிப்பதும் அவர்களின் காலில் விழுவதும் அவர்களிடம் மண்டியிடுவதும் சாமியார்களின் சொல்லே மந்திரம் என்று திரிகிறார்கள். நான் அப்படி அல்ல. நான் சாமியார்களும் ரெத்தமும் சதையுமால் ஆன மனிதர்கள் என்பதை உணர்ந்தவள். அதனால் எனக்கு அதை பார்த்தவுடன் அதிர்ச்சியோ ஆச்சரியமோ ஏற்படவில்லை.

சாதாரண மனிதர்களான இவர்கள் மத தொண்டாற்றுகிறார்கள். நாம் எப்படி அன்றாடம் வேலைக்கு போய் சம்பாதிக்கிறோமோ அது போல் இவர்கள் மத தொண்டின் மூலம் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் போதைனை செய்கிறார்கள் மந்திரம் சொல்கிறார்கள். அதனால் அவர்கள் எல்லாம் உத்தமர்கள் செக்ஸ் ஆசையை துறந்தவர்கள் என்றெல்லாம் கற்பனித்துக்கொண்டு நம் பெண்கள் சாமிகளுக்கு சிகப்பு புடவை கட்டிக்கொண்டு பூஜை செய்வதும் அம்மா...ஆத்தா...சாமி என்று காலில் விழுவதுமாக கிட்ட தட்ட மத குருக்களை கடவுளாகவே ஆக்கிவிட்டிருக்கிறார்கள். நான் அப்படி பட்ட மூட நம்பிக்கைகளுக்கு அடிமையானவள் அல்ல.

அந்த சாமியாருக்கு செக்ஸ் ஆசை வந்ததில் தவறில்லை. அவரும் மனிதர் தானே. அடுத்து அவர் வேசிகளை அழைத்து அவர்களுக்கு பணம் கொடுத்து அவர்களோடு சல்லாபிக்கிறார். அதிலும் தவறில்லை என்றே சொல்லியாக வேண்டியிருக்கிறது. காரணம் பெண்களில் இன்னும் பல பேர் பணத்திற்காக தங்கள் உடலை விற்கும் கேவலத்தை செய்யும் பொருளாதார பலவீனர்களாகவே இருக்கிறார்கள். ஒரு வகையில் அப்படி செய்யவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் பெண்களுக்கு சாமியார் உதவினார் என்று கூட கொள்ளலாம்.

ஆனால் அவர் செய்தவற்றில் தவறு என்று நான் கணிப்பது பல பேர் நம்பும் கடவுளின் கருவறையில் அந்த காரியங்களை அரங்கேற்றியது பிறகு அதை வீடியோ எடுக்கும் வக்கிரமும் தான்.

மற்றபடி பலர் ஆச்சரியப்படுவது போலவும் குய்யோ முய்யோ என்று கத்துவதும் போலவும் அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பது என் கருத்து. நீங்கள் சேற்றை வாரி அக்குளில் பூசிக்கொள்கிறீர்கள். பிறகு அது நாறுகிறது என்று சொல்வதில் பிழை உங்கள் பக்கம் தான் இருக்கிறது. சாமியார்களை நீங்கள் மினி டெமி காட் என்ற வகையில் வைத்து பார்த்தது உங்கள் தவறே அன்றி சாமியாருடையது அல்ல. சாமியார் ஒரு சாமானிய வாழ்க்கை வாழ பிரியப்பட்டார். அதையே அவர் செய்தார். ஆனால் அவரை கடவுளாக பாவித்து வணங்கி வந்த நாம் தான் கேனைகள் என்பதை இப்போதாவது புரிந்துகொள்ளுங்கள்.

அவ்வப்போது சாமியார்களின் சிற்று லீலைகள் வெளிவருவது உண்மையில் ஒரு விளிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
ஆனால் பிரேமானந்த தொடங்கி எத்தனை சாமியார்கள் உள்ளே போனாலும் மன பிராந்து பிடித்த நம் மக்கள் இன்னும் சாமியார்களை வெறும் மத போதைகம் செய்து வயிற்றை கழுவும் நம்மை போன்றதொரு தொழிளாலி என்று பார்க்காமல் கடவுளாகவும் வேத வாக்கு சொல்பவராகவும் அற்புதம் செய்பவராகவும் நம் கஷ்டங்களை எல்லாம் போக்க வல்லவராகவும் கிட்ட தட்ட கடவுளின் அவதாரமாகவும் பார்க்கிறார்கள். அதை நிறுத்திக்கொண்டால் நல்லது.

இல்லையேல் உங்கள் சேறு பூசிய அக்குள் நாறத்தான் செய்யும் அதற்கு சேறு ஒன்றும் செய்ய முடியாது.

ac