Tuesday 15 December 2009

வரதட்சணை - பெண்கள் மாட்டை விட கீழானவர்களா?

இந்தியா உலக நாடுகள் வரிசையில் பின் தங்கியிருக்க முக்கிய காரணம் ஆணாதிக்க கலாசாரமும் முட்டாள்தனமான மத கோட்பாடுகளும் தான். மேலும் எழுதுவதற்கு முன் நான் இரண்டு விஷயங்களை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

1. தண்டோரா என்ற பதிவர் வலைச்சரத்தில் என்னுடைய வலை பக்கத்தை அறிமுகப்படுத்தினார். என்னை ஆப்பரசி என்று வர்ணித்தார். ஆணாதிக்கத்துக்கு ஆப்படிக்கும் ஆப்பரசி. மிக்க மகிழ்ச்சி. பெரும்பாலானவர்கள் என் வலை தளத்துக்கு வரவே அச்சப்படுகிறார்கள். ஆணாதிக்க சிந்தனையுடைய யாரும் என் வலை பக்கத்துக்கு வர அச்சப்படுவார்கள். என் எழுத்துக்களை சரியாக புரிந்துகொள்ள சில பேர் இன்னும் இருக்கிறார்கள் என்று அறிகிற போது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. மீண்டும் நன்றி தண்டோரா.

அடுத்ததாக வருகிறார் ரோஷ்மா. அதாவது பெண் பெயரில் என்னை திட்டி எழுதினால் நான் உடனே ஐயஹோ பெண்களுக்கு என் இனத்துக்கே நான் எழுதுவது பிடிக்கவில்லை என்று மூடிக்கொண்டு போய்விடுவேனா. பெண் வேடமிட்ட ரோஷ்மா ஒரு கருத்தை முன் வைக்கிறார். சரளமான ஆங்கிலத்தில் என் பதிவுகளை திட்டுகிறார். சரி போகட்டும் . பிறகு அவர் சொல்லும் ஒரு விஷயத்தை தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் புரட்சிகரமான கருத்துக்களை எழுத்வேண்டுமென்றால் தமிழச்சி எழுதுவதை போல் எழுதவேண்டுமாம். அவரது வலை தளத்தின் சுட்டியையும் இணைத்துள்ளார். என்னுடைய எழுத்துக்கள் பலரை நோயாளிகள் ஆக்குமாம். ஐயா தமிழச்சியை போல் எழுத நான் பல அடுக்கு புத்தகங்கள் படித்த அறிவாளியோ பெரியாரை கரைத்து குடித்த பெரியார்தாசியோ அல்ல. பிறகு நேர்த்தியான தமிழில் கிரேக்க வரலாற்றில் ஆணாதிக்கம் போர்ச்சுகீசிய ஆண்கள் பெண் உடை உடுத்தினார்கள் என்றெல்லாம் வரலாற்றை மேற்கோள் காட்டி எழுத நான் அதிகம் படிக்கவில்லை ஐயா. என்னுடைய குரல் ஒரு பாரம தமிழச்சியின் குரல். அது தெரு சண்டை போல் கொச்சையா இருக்கலாம். இருக்கும். அப்படித்தான் நான் கத்த விரும்புகிறேன். அன்றாடம் நான் காணும் ஆணாதிக்க போக்கை எனக்கு தெரிந்த மொழியில் கை வந்த வார்த்தைகளை பயன்படுத்தி கொஞ்சம் வன்மையாக எழுதுகிறேன். அவ்வளவு தான். எனக்கு கவிதை எழுதவோ புறநாநூறு படிக்கவோ நேரமில்லை. விபசார விடுதிகளில் அல்லல்படும் ஒரு பெண் டயரி குறிப்பு எழுதினால் ஓத்தா தெவிடியா பையா என்ற இரண்டு வார்த்தைகள் கூட ஒரு கவிதை தான். அதை புரிந்துகொள்ளுங்கள். ஒடுக்கப்பட்டவர்களும் ஏழைகளும் பாமரர்களும் அழகாக தமிழ் கற்றுக்கொண்டு இமேஜ் பாதிக்காமல் எழுதவேண்டுமென்றால் அதற்கு நான் ஆளல்ல. உங்களுக்கு என் வலை மனை பிடிக்கவில்லை என்றால் வரவேண்டாம். யாரையும் வற்புறுத்தி நான் அழைக்கவில்லை. அழைக்க நான் என்ன வேசியா.

நான் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன். பெண்கள் பெரும்பாலானவர்கள் சமையல் குறிப்புகளும் வீட்டை சுத்தமாக வைக்கும் டிப்ஸும் பிறகு ஹார்ப்பிக் வைத்து டாயிலட் கழுவுவதை பற்றி செய்முறை விளக்கங்களும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட பாலோவர்ஸ். அதற்கு பின்னூட்டம் போடும் கூட்டம் ஆண்கள் கூட்டம். ஆக சமையல் குறிப்பும் டாயிலட் கழுவுவதை பற்றி பெண்கள் எழுதினால் அதற்குத்தான் பெண்கள் இருக்கிறார்கள் என்ற ஆணாதிக்க நம்பிக்கை வலுப்பெறுவதனால் ஆண்கள் செய்யும் நன்றிக்கடன் தான் பின்னூட்டமோ என்று தோன்றுகிறது. ஆக சமையல் குறிப்பு எழுதினால் நிறைய பாலோவர்ஸ் கிடைக்கும் போலிருக்கிறது. நானும் எழுதுகிறேன். நிறைய ஆண்களுக்கு பெண்கள் அடுக்களை சம்மந்தமாக எழுதினால் ஒரு திருப்தி.















உடனே பெண் சிகிரெட் புகைக்கும் புகைப்படத்தை ஏன் போடுகிறீர்கள் என்று கேட்பார்கள். உங்களுக்கெல்லாம் குளித்து தலையில் டவல் கட்டிக்கொண்டு புடவை சுற்றியபடி சாமி கும்பிடும் பெண் படம் போட்டால் சூப்பரா இருக்கும் இல்ல....




என் வலைத்தளம் பலருக்கு எரிச்சலூட்டுகிறது. இங்கே வர பல ஆண்கள் அச்சப்படுகிறார்கள். நான் தொடர்ந்து அவர்களின் முகமூடிகளை கிழிப்பதால் அவர்களுக்கு பயம். திருடனை பற்றி செய்தி வந்தால் திருடனோ அல்லது அவனுக்கு ஆதரவு தெரிவிப்பவனோ தானே எரிச்சல் அடைய வேண்டும். ஏன் நீங்கள் பதட்டப்படுகிறீர்கள். காரணம் மறைமுகமாக ஆணாதிக்கம் என்ற மாய வன்மத்தால் விளையும் சுகங்களை உங்களுக்கு தங்கு தடையின்றி அளிக்க பெண்கள் எப்போதும் ஏமாளிகளாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் போனால் உங்களுக்கு பொசுக்கென்று கோபம் வந்துவிடுகிறது.

வரதட்சணை புழங்கும் ஒவ்வொரு திருமணமும் மாட்டு வியாபாரமே அல்லது அதை விட கீழ்த்தரமானது. நீங்கள் சந்தையில் ஒரு மாடு வாங்க போகிறீர்கள். எத்தனை லிட்டர் பால் கறக்கும்....அவனுடைய வருமானம் என்ன?.....வயது என்ன வசதிகள் என்னென்ன என்றெல்லாம் பார்த்துவிட்டு மாட்டை வாங்குகிறோம். வாங்கிவிட்டு மாட்டை ஒரு கயிறு கட்டி இழுத்துக்கொண்டு வந்து நம் வீட்டில் கட்டுவோம். ஆனால் திருமணம் என்னும் மாட்டு வியாபாரத்தில் தான் பெண் காசு கொடுத்து ஒரு மாப்பிள்ளையை வாங்கிவிட்டு அந்த மாப்பிள்ளையோடு தங்க போகிறாள். அதாவது மாட்டை வாங்கி சந்தையிலேயே மாட்டோடு படுத்துக்கொள்ள வேண்டும். நாம் வாங்கிய மாடு நம்மோடு வந்து இருக்காது. மாறாக நாம் காசு கொடுத்து மாட்டை வாங்கிவிட்டு அதன் இடத்திற்கு அதன் இஷ்டத்திற்கு நாம் இருக்க வேண்டும். அட கொடுமையே....என்னை பொருத்தவரை வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் ஒவ்வொரு ஆணும் வீட்டோடு மாப்பிள்ளை ஆகிவிடுவது தான் சரி. காரணம் உங்களை காசு கொடுத்து வாங்கியிருக்கும் பெண்ணுக்கு தான் நீங்கள் சொந்தம். அவள் வசிக்கும் இடத்துக்கு நீங்கள் போய் வசிக்கவேண்டுமே தவிர அவளை உங்கள் வசிப்பிடத்துக்கு கொண்டு வருவது சரியா? அப்படி ஒரு நடைமுறை நம் நாட்டில் இருக்கிறதென்றால் பெண்கள் மாட்டை விட கேவலமானவர்கள் என்று தானே அர்த்தம். அப்படி ஒரு அர்த்தம் கற்பித்து ஆணாதிக்க சிந்தனையோடு வாழும் இந்த சமுதாயத்தில் பெண்ணே உனக்கு திருமணம் தேவையா?

தமிழச்சியை போல் என்னால் எழுத முடியாது. என் கோபத்தை பச்சை பச்சையாய் தான் காட்டுவேன்.

சரி நம் விஷயத்துக்கு வருவோம். இந்தியா ஒரு வளமான நாடு. இங்கே நம் முன்னோர்கள் அதாவது ராஜாக்கள் காலத்திலிருந்தே நாம் இரண்டு விஷயங்களுக்கு பேமஸ் ஒன்று குக்கிங் இன்னொன்று பக்கிங். அந்தப்புறம் அமைத்து நம் ராஜாக்கள் கலவி செய்துகொண்டிருந்த போது தான் மேலை நாடுகளிலில் மின்சாரமும் கம்ப்யூட்டரும் செய்துகொண்டிருந்தார்கள். நாம் இங்கே மதம் என்ற பெயரில் இந்திரனையும் சந்திரனையும் வணங்கிக்கொண்டிருந்த போது தான் மேலை நாட்டுக்காரன் நிலாவுக்கு ராக்கெட் செய்துகொண்டிருந்தான். அதாவது இந்தியா உருப்படாமல் போனதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு ஒன்று ஆணாதிக்க கலாசாரம் மற்றொன்று மூட நம்பிக்கைகளால் பொதிந்த மதம்.

உதாரணமாக பெண் கல்வியை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த காலத்தில் அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு என்றார்கள். இப்போது நாம் அடுப்பு ஊதாமலே எரிகிறதே என்ற கடுப்பு ஆண்களுக்கு இருக்கிறதோ என்னமோ. பெண் கல்வி எத்தனை ஆண்டுகளாய் இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் மறுக்கப்பட்டு வந்திருக்கிறது. அந்த காலம் தொட்டு பெண் கல்வியை ஊக்குவித்திருந்தால் நம் நாட்டின் கல்வி அறிவு எவ்வளவு உயர்ந்திருக்கும். ஐம்பது சதவீதம் பெண்கள் என்று தோராயமாக வைத்துக்கொள்வோம். அப்படியானால் ஐம்பது சதவீத ஜனத்தொகை கல்வி அறிவு பெறாமல் அவர்களால் இந்த நாட்டுக்கு எதையும் அளிக்க முடியாமல் போனதே. அதன் பொருட்டு பொருளாதார வளர்ச்சியும் அறிவியல் வளர்ச்சியும் குறைபட்டிருக்கிறது. அதை பற்றி எல்லாம் நமக்கு என்ன கவலை நமக்கு சூடான ஆணாதிக்க எண்ணங்கள் செழித்தால் போதுமே. விதவைகள் வாழாவெட்டி இப்படி எல்லாம் பெண்களை நீங்கள் அடக்கி வைத்த காலத்தில் இந்தியாவின் ஜனத்தொகையில் சரி பாதி 50% இந்திய வளங்கள் முடக்கப்பட்டிருந்தன. பல நூற்றாண்டுகளாய் வெறும் 50% மைலேஜில் தான் இந்தியா முன்னேறிக்கொண்டிருந்திருக்கிறது. இப்படி 50% மைலேஜில் முன்னேறினால் எப்போது நாம் வல்லரசாவது?

இதை பற்றி மேலும் அடுத்த பதிவில் பார்ப்போம்

Wednesday 9 December 2009

ஷகீலாவுக்கு வேலை வாங்கி கொடுங்கள்.

ஒரு காலத்தில் மலயாள திரை உலகில் கொடி கட்டி பறந்த ஒரு நடிகை. தமிழிலும், வட நாட்டினர் கூட தெரிந்து வைத்திருக்கும் ஒரு செக்ஸ் சிம்பள் ஷகீலா. நான் நிறைய முறை இதை கவனிப்பதுண்டு. ஷகீலாவின் செக்ஸ் போஸ்டர்களை மாதர் சங்கங்கள் கிழிப்பதும் அதன் மேல் சாணி அடிப்பதும் செருப்பால் அடிப்பதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதும் பிட் நோட்டீஸ் கொடுப்பதுமாக ஷகீலா உட்பட பலர் நடித்து வெளிவரும் செக்ஸ் படங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்.

இப்படி செய்யும் இவர்களின் நோக்கம் என்ன. சிலர் அந்த திரைப்படம் ஓடும் தியேட்டர் வாசலில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்துவதும் அங்கு வரும் ஆண்களை விரட்டுவதுமாக ஆண்களை கேட்டால் ஒரு பெரிய கலை எதிர்ப்பு கலாட்சாபமே அவர்கள் நடத்துவதாக சொல்லக்கூடும். எனக்கு ஒரே ஒரு கேள்வி தான் அப்போதெல்லாம் தோன்றும். இப்படி போராடும் இந்த மாதர் சங்க தொழிகளும் பெண்கள் தான் அந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகையும் ஒரு பெண் தான். ஒரு பெண் தன் இனத்தின் கௌரவத்தின் மீது அக்கரை கொள்ளாமல் தன் இனத்தை மேலும் மேலும் இழிவுபடுத்தும் ஒரு செயலை தொடர்ந்து செய்து வருகிறாள். ஆனால் மாதர் சங்கங்கள் ஷகீலாவுக்கு எதிராக போர் கொடி உயர்த்துவார்களா என்றால் இல்லை. காரணம் அவள் ஒரு பெண். இப்படி பெண்ணுக்கு பரிதாபம் பார்ப்பதை முதலில் நிறுத்த வேண்டும். நீங்கள் பரிதாபமாக ஒரு பெண்ணை பார்ப்பதன் மூலம் பெண் இனத்தை அவமதிக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒரு விதத்தில் பரிதாபப்படுவது கூட பேசிஸம். (புரியாதவர்களுக்காக ஹிட்லரின் பேசிஸம்.)

உண்மையில் இப்படிப்பட்ட திரைப்படங்கள் வெளிவருவதற்கு முதல் குற்றம் சாட்டப்பட வேண்டியவர் ஷகீலா. அவரை தான் நாம் முதலில் திருத்த வேண்டும். காரணம் யாரும் அவரை துப்பாக்கி முனையில் மிரட்டி அது போன்ற படங்களில் நடிக்க வைப்பதில்லை. அந்த அம்மையாரே இஷ்டப்பட்டு தான் அது போன்ற திரைப்படங்களில் தோன்றி தன் பெருத்த உடலை காட்டி பணம் சம்பாதிக்கிறாள். என்னை கேட்டால் அந்த மாதர் சங்கங்கள் உடனடியாக ஷகீலாவுக்கு ஒரு நல்ல சம்பளத்தில் ஒரு வேலை வாங்கி கொடுத்து அவரது வருமானத்துக்கு வழி பண்ணலாம். அதை விட்டுவிட்டு போஸ்டரில் சாணி அடிப்பதும் படம் பார்க்க வரும் ஆண்களை விரட்டுவதும் அரசியல் போராட்ட ஸ்டண்டே தவிர வேறொன்றுக்கும் உதவாது.
















எனக்கு ரொம்ப நாளாக சந்தேகம் ஷகீலா அளவுக்கு குண்டாக ஒரு ஆன்டி போனால் எந்த ஆணும் சீண்ட கூட மாட்டான். ஆனால் தியேட்டர் இருட்டில் அப்படி அந்த பெண்மணியிடம் என்ன தான் ரசிக்கிறார்களோ தெரியவில்லை.

----------------

கெட்ட வார்த்தைகள் அதிகம் பேசுபவர்கள் ஆண்கள் தான். பெண்கள் அவ்வளவு சகஜமாக கெட்ட வார்த்தைகள் உபயோகிப்பதை நீங்கள் பார்க்க முடியாது. ஆனால் ஆண்களுக்கு கோபம் வந்தால் மளமளவென கெட்ட கெட்ட வார்த்தைகளாக துப்பி தள்ளுவார்கள். உண்மையில் அப்படி கெட்ட வார்த்தை பேசும் ஆண்கள் கோழைகள் என்பதே உண்மை. அவர்களை கண்டு நீங்கள் அச்சப்பட தேவையில்லை. சைக்காலஜி படி கெட்ட வார்த்தை பேசுவதென்பது உங்கள் இயலாமையை வெளிப்படுத்தும் ஒரு மீடியா அவ்வளவுதான்.

பேருந்து ஓட்டுனர்கள் அதிகமாக கெட்ட வார்த்தை உபயோகிப்பதை நாம் பார்க்கிறோம். யாராவது குறுக்கே வந்துவிட்டால் உடனே ஓரிரு கெட்ட வார்த்தைகளை அள்ளி வீசினால் தான் அவருக்கு ஆண்மை அடங்கும். எதிராளியை உண்மையில் நேருக்கு நேராக சந்தித்து வீழ்த்த அல்லது நமது கோபத்தை தணித்துக்கொள்ள முடியாத சூழ்நிலையில் நமக்கு நாமே ஆறுதல் தேடும் விதமாகத்தான் கெட்ட வார்த்தைகளை நாம் பயன்படுத்துகிறோம். சில ஆண்கள் அதுவும் காலேஜ் பையன்கள் கெட்ட வார்த்தை பேசுவதை தாங்கள் வயதுக்கு வந்துவிட்டதை அறிவுறுத்தும் ஒரு மேற்கோளாக வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு இன்டர்நெட் சென்டரில் நின்றிருந்தேன். மூன்று கல்லூரி பையன்கள் வந்தார்கள். இன்டர்நெட் சென்டரில் ஒரு பெண் இருந்தாள். அது என்னவோ அந்த பெண்ணை பார்த்த பிறகு ஒருவன் இன்னும் பலமாக கெட்ட கெட்ட வார்த்தைகளால் தன் நண்பனை அர்ச்சிக்கிறான். அவர்களுக்கு கெட்ட வார்த்தை பேசுவது தன்னை ஆண் என்று தலை தூக்கி காட்ட உதவுகிறதென்றே நினைக்கிறேன். உண்மையில் கெட்ட வார்த்தை பேசும் ஒவ்வொருவரும் கோழைகள். தங்கள் இயலாமையை இப்படி வெளிப்படுத்துகிறார்கள்.

ஆண்மை இல்லாத ஒருவனை கட்டிலில் மனைவி ஆசையாய் நெருங்கினால் உடனே அவன் "தே...உனக்கு எப்ப பாத்தாலும் இதே நெனப்பு தானா? அச்சா புச்சா...." என்று கெட்ட கெட்ட வார்த்தையால் அர்ச்சிப்பான். உடனே மனைவி ஐயயோ நான் எவ்வளவு பாவம் செய்துவிட்டேன். அவர் கோபமாக இருக்கிறார். என்றெல்லாம் மனம் வருந்தி தலையணைக்குள் அழுது உறங்கிவிடுவாள். உண்மையில் ஆண்கள் கெட்ட வார்த்தை உபயோகிப்பது பல நேரங்களில் தங்கள் இயலாமையை மறைப்பதற்கே.


vincyontop@gmail.com

Sunday 6 December 2009

செக்ஸ் சாமியார் செய்த நன்மைகள்.

சமீபத்தில் ஒரு சாமியார் கோயில் கருவறைக்குள் பெண்களை அழைத்து வந்து சல்லாபித்திருந்தார் என்ற செய்தி வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் அந்த வீடியோ காட்சி ஒன்றை தோழி மெயிலுக்கு அனுப்பியிருந்தாள். அதை பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியோ வேதனையோ ஏற்படவில்லை. ஏனெனில் நான் சாமியார்களையோ பாதிரியார்களையோ கடவுளின் மினி தூதர்கள் என்று பாவிக்கும் மனப்பான்மை உடையவள் அல்ல. பல்வேறு பெண்கள் சாமியார்களை பாதிரியார்களை கடவுளின் மினி அவதாரங்களாக பாவிப்பதும் அவர்களின் காலில் விழுவதும் அவர்களிடம் மண்டியிடுவதும் சாமியார்களின் சொல்லே மந்திரம் என்று திரிகிறார்கள். நான் அப்படி அல்ல. நான் சாமியார்களும் ரெத்தமும் சதையுமால் ஆன மனிதர்கள் என்பதை உணர்ந்தவள். அதனால் எனக்கு அதை பார்த்தவுடன் அதிர்ச்சியோ ஆச்சரியமோ ஏற்படவில்லை.

சாதாரண மனிதர்களான இவர்கள் மத தொண்டாற்றுகிறார்கள். நாம் எப்படி அன்றாடம் வேலைக்கு போய் சம்பாதிக்கிறோமோ அது போல் இவர்கள் மத தொண்டின் மூலம் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் போதைனை செய்கிறார்கள் மந்திரம் சொல்கிறார்கள். அதனால் அவர்கள் எல்லாம் உத்தமர்கள் செக்ஸ் ஆசையை துறந்தவர்கள் என்றெல்லாம் கற்பனித்துக்கொண்டு நம் பெண்கள் சாமிகளுக்கு சிகப்பு புடவை கட்டிக்கொண்டு பூஜை செய்வதும் அம்மா...ஆத்தா...சாமி என்று காலில் விழுவதுமாக கிட்ட தட்ட மத குருக்களை கடவுளாகவே ஆக்கிவிட்டிருக்கிறார்கள். நான் அப்படி பட்ட மூட நம்பிக்கைகளுக்கு அடிமையானவள் அல்ல.

அந்த சாமியாருக்கு செக்ஸ் ஆசை வந்ததில் தவறில்லை. அவரும் மனிதர் தானே. அடுத்து அவர் வேசிகளை அழைத்து அவர்களுக்கு பணம் கொடுத்து அவர்களோடு சல்லாபிக்கிறார். அதிலும் தவறில்லை என்றே சொல்லியாக வேண்டியிருக்கிறது. காரணம் பெண்களில் இன்னும் பல பேர் பணத்திற்காக தங்கள் உடலை விற்கும் கேவலத்தை செய்யும் பொருளாதார பலவீனர்களாகவே இருக்கிறார்கள். ஒரு வகையில் அப்படி செய்யவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் பெண்களுக்கு சாமியார் உதவினார் என்று கூட கொள்ளலாம்.

ஆனால் அவர் செய்தவற்றில் தவறு என்று நான் கணிப்பது பல பேர் நம்பும் கடவுளின் கருவறையில் அந்த காரியங்களை அரங்கேற்றியது பிறகு அதை வீடியோ எடுக்கும் வக்கிரமும் தான்.

மற்றபடி பலர் ஆச்சரியப்படுவது போலவும் குய்யோ முய்யோ என்று கத்துவதும் போலவும் அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பது என் கருத்து. நீங்கள் சேற்றை வாரி அக்குளில் பூசிக்கொள்கிறீர்கள். பிறகு அது நாறுகிறது என்று சொல்வதில் பிழை உங்கள் பக்கம் தான் இருக்கிறது. சாமியார்களை நீங்கள் மினி டெமி காட் என்ற வகையில் வைத்து பார்த்தது உங்கள் தவறே அன்றி சாமியாருடையது அல்ல. சாமியார் ஒரு சாமானிய வாழ்க்கை வாழ பிரியப்பட்டார். அதையே அவர் செய்தார். ஆனால் அவரை கடவுளாக பாவித்து வணங்கி வந்த நாம் தான் கேனைகள் என்பதை இப்போதாவது புரிந்துகொள்ளுங்கள்.

அவ்வப்போது சாமியார்களின் சிற்று லீலைகள் வெளிவருவது உண்மையில் ஒரு விளிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
ஆனால் பிரேமானந்த தொடங்கி எத்தனை சாமியார்கள் உள்ளே போனாலும் மன பிராந்து பிடித்த நம் மக்கள் இன்னும் சாமியார்களை வெறும் மத போதைகம் செய்து வயிற்றை கழுவும் நம்மை போன்றதொரு தொழிளாலி என்று பார்க்காமல் கடவுளாகவும் வேத வாக்கு சொல்பவராகவும் அற்புதம் செய்பவராகவும் நம் கஷ்டங்களை எல்லாம் போக்க வல்லவராகவும் கிட்ட தட்ட கடவுளின் அவதாரமாகவும் பார்க்கிறார்கள். அதை நிறுத்திக்கொண்டால் நல்லது.

இல்லையேல் உங்கள் சேறு பூசிய அக்குள் நாறத்தான் செய்யும் அதற்கு சேறு ஒன்றும் செய்ய முடியாது.

ac

Sunday 15 November 2009

ஆண்கள் புடவை கட்டுவது பாவமா? - 2

தூள் படம் என்று நினைவு. அதில் ஒரு வசனம் வரும். அவ புடவைய வாங்கி கட்டிக்கோ. அந்த திரைப்படம் என்றில்லை. தமிழ் திரைப்படங்களில் காலம் காலமாய் ஒருவனை அவமானப்படுத்த அல்லது அவன் கோழை என்பதை கேலி பேச அல்லது புரட்சி செய்ய அஞ்சும் ஊர் மக்களை உசுப்பேத்த என்ற பல தருணங்களில் புடவை கட்டிக்கொள் என்ற வசனம் வரும். நிஜ வாழ்க்கையில் கூட நாம் கோழைகளை வன்முறையை விரும்பாதவர்களை கூட சில நேரங்களில் "பாவாடை கட்டிக்கோ...புடவை கட்டிக்கோ..." என்றெல்லாம் கேலி பேசுவதை கேட்டிருக்கிறோம்.

இதை எல்லாம் வைத்து பார்க்கிற போது புடவை என்பது சமுதாயத்தில் கேலி சின்னமாகவும் கோழைகள் அணிய வேண்டியதாகவும் ஒரு ஆணை அவமானப்படுத்த சிறந்து யுத்தியாகவும் கையாளப்பட்டிருக்கிறது. எனக்கு இவைகளை கேட்கிற போதும் பார்க்கிற போதும் கோபமும் கொஞ்சம் சிரிப்பும் வரும். யோசித்து பாருங்கள் நம் நாட்டின் மிக உயரிய பதவியில் இருக்கும் மாண்புமிகு குடியரசு தலைவர் அணிந்திருப்பதும் சேலை தான். அப்படி ஒரு மாபெரும் பொறுப்பிலிருக்கும் பெண் அணிந்திருக்கும் ஒரு ஆடையை ஒரு ஆண் அணிவது அவனை எள்ளலுக்கும் கேவலத்திற்கும் ஆளாக்கும் என்கிற கருத்து தான் என்னை கோப்பப்பட வைக்கிறது.

திருநங்கைகள் படும் பாட்டை நான் பார்த்திருக்கிறேன். ஒரு ஆண் ஒரு பெண்ணின் உடையை அணிந்து பார்க்க பிரியப்படுகிறான் என்பதாலேயே அவன் எத்தகைய ஒரு நெருக்கடிக்கு ஆளாக்கப்படுகிறான் என்பது வருத்ததிற்கு உரியது. நான் ஹோமோ செக்ஸுவல்ஸ் பற்றி பேசுவதாய் பாமரத்தனமாய் நினைக்கவேண்டாம். ஹோமோ செக்ஸ் என்பது வேறு. பெண்களின் ஆடையை அணிய பிரியப்படும் எல்லா ஆண்களும் ஹோமோ செக்ஸுவல்ஸ் இல்லை. எனக்கு தெரிந்த ஒரு தோழியின் கணவருக்கும் இந்த ரகசிய ஆசை இருந்திருக்கிறது. ஆனால் அவர்கள் திருமணம் ஆகி தாம்பத்தியத்தில் எந்த வித நெருடலோ இல்லாமல் குடும்பம் நடத்தி வருகிறார்கள்.

ஆனால் சமுதாயத்தில் இன்னும் பெண்களையும் பெண்கள் அணியும் ஆடைகளையும் கேலி பொருட்களாக பார்க்கும் பண்பு நிறைந்திருப்பது வருத்தமே. இது முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு.

புடவை என்பது ஒரு அசாத்திய உடை. அது நம் நாட்டின் கலாசாரத்தை பறைசாற்றும் உடை. புடவையில் இருக்கும் கவர்ச்சியும் ஆளுமையும் வேறு எந்த உடையிலும் இருப்பதில்லை என்பது என் கருத்து. மேலும் நாம் அணியும் ஜீன்ஸ் சுடிதார் கூட ஒரு வகையில் ஆண்களின் உடை அலங்காரத்திலிருந்து பிரித்து எடுக்கப்பட்டது என்பதே உண்மை. ஆனால் புடவையும் ஸ்கர்ட் பாவாடையும் அப்படி அல்ல. அது பெண்மையை பறைசாற்றும் பெண்களுக்கு ஒரு தனித்தன்மையை தரும் ஒரு மரியாதையை தரும் உடை. நம் பாரத மாத பெருமையாக போர்த்தியிருக்கும் உடை.

பாரத மாதாவை கை எடுத்து வணங்கும் நீங்கள் அந்த உடையை பற்றி எத்தனை ஒரு கீழ்த்தரமான தீர்மானம் வைத்திருக்கிறோம் என்பது உங்களை எல்லாம் ஆணாதிக்க வெறியர்கள் என்றே காட்டுகிறது.

புடவை கட்ட பிரியப்படும் ஆண்களை வெறுக்காதீர்கள். நீங்கள் அணியும் ஒரு உடையை ஒரு ஆண் அணிய பிரியப்படுகிறான் என்பது உங்களுக்கு பெருமையான விஷயம் அல்லவா. நீங்களே முன் வந்து அந்த ஆணை ஊக்குவிப்பதில் எந்த தவறும் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது. ஒரு ஆண் தானாக முன் வந்து புடவை கட்ட பிரியப்படுகிற போது அவனை அந்நியனாய் பார்க்காதீர்கள். உங்கள் கணவரோ பாய் பிரண்டோ அப்படி ஒரு ஆசையை உங்களிடம் தெரிவித்தால் உடனே அவனை ஏதோ கேலி செய்து அவனுடைய மன ஆரோக்கியத்தை கெடுக்காதீர்கள். பெண்கள் நாமே நம் உடையை அணிய பிரியப்படும் ஒருவரை பழித்தால் ஆண்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்.

இங்கே பெரும்பாலான அண்களுக்கு புடவை பாவாடை போன்ற பெண்களின் ஆடைகளை அணிந்து பார்க்க ரகசிய ஆசை உண்டு. ஆனால் ஆணாதிக்க சமுதாயத்தில் தாங்கள் கேலி பொருளாய் ஆகிவிடுவோமா என்கிற அச்சம் தான் அவர்களை தவிர்க்கிறது. திரைப்படங்களில் ஒரு ஹீரோவின் சட்டையை விரும்பி அணிந்துகொள்ளும் ஹீரோயின்களை நாம் பாராட்டுகிறோம். அது காதல் என்று மயங்குகிறோம். ஏன் ஒரு ஆண் தன் மனைவியின் காதலியின் உடையை அணிந்து பார்க்க பிரியப்படும் பொழுது நாம் அவர்களை அந்நியமாய் பார்க்கிறோம்.





பெண்களே நீங்களும் உங்கள் குறுகிய பார்வையை மாற்ற வேண்டும். பெண்களின் உடையை ஆணிந்து பார்க்க பிரியப்படும் ஒரு ஆணை நீங்கள் ஊக்குவிக்காத போது நீங்களும் மறைமுகமாக ஆணாதிக்கத்துக்கு துணை போகிறீர்கள்.உங்கள் பாய் பிரண்ட் அல்லது உங்கள் கணவர் அணியும் லுங்கியை நீங்கள் தனிமையில் இருக்கிற போது அணிந்துகொள்வதில் உங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் உங்கள் கணவர் உங்கள் உள்பாவடையை அணிந்துகொண்டு வீட்டில் தனிமையில் உலா வந்தால் அவரை ஏன் வித்தியாசமாக பார்க்கிறீர்கள். ஒரு வேளை இந்த ஆணாதிக்க சமுதாயம் காலம் காலமாய் உங்களுக்கும் அப்படியே கற்பித்திருக்கலாம். இப்போது மாற்றிக்கொள்ளுங்கள் தோழிகளே.


என்னுடைய கருத்துக்கள் இது தான்.
1. புடவையை அவமான சின்னமாக சித்தரிப்பது நகைப்புக்குரியது. புடவை ஆளுமையின் வெளிப்படு. புடவை கட்டும் ஆண் ஒரு கோழை என்று நீங்கள் நினைத்தால் அந்த புடவையை காலம் காலமாக கட்டிக்கொள்ளும் பெண் வர்க்கத்தை தான் நீங்கள் மகா கோழைகளாக நினைக்கிறீர்கள் என்று அர்த்தம் . அந்த நிலைப்பாட்டை மாற்றுங்கள்.
2. பெண்களே நம்மை சுற்றியிருக்கும் ஒரு ஆண் பெண்களின் உடையை அணிந்து பார்க்க பிரியப்பட்டால் அவனை அந்நியனாய் பார்த்து கேலி பேசாதீர்கள். மாறாக அவனுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள். அவனது அந்த விருப்பத்தை ஊக்குவியுங்கள். பெண்களின் உடை எந்த விதத்திலும் கீழ்த்தரமானது அல்ல. அதை அணிவதால் அவனுடைய ஆண் தன்மை மாறிவிடபோவதில்லை என்கிற உண்மையை ஏற்றுக்கொண்டு அது போன்ற ஆண்களை நேசியுங்கள்.
3. ஆண்களே. உங்கள் ஆணாதிக்க போக்கை நீங்கள் திருநங்கைகளை இத்தனை நாள் படுத்திய பாட்டிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. இனி மேலாவது திருந்துங்கள்.
4. தன் மனைவியோ காதலியோ அவர்களுக்கு முன் புடவையிலோ பாவாடையிலோ நிற்பதில் ஒரு வித எக்ஸ்டசி இருப்பதாய் ஆண்கள் சொல்லி கேட்டும் படித்தும் இருக்கிறேன். எனக்கு அதை அனுபவிக்க வாய்ப்பில்லை. ஒருவேளை நான் ஆணாக இருந்திருந்தால் நிச்சயம் அதை செய்திருப்பேன். பெண்ணாக இருப்பதால் அப்படி விருப்பப்படும் ஆண்களை நான் ஆதரிக்கிறேன்.






ஆண்களே உங்கள் போலி ஈகோவை தூக்கிவீசிவிட்டு உங்கள் மனதில் இயல்பாக எழும் ஆசைகளை பூர்த்தி செய்துகொள்ளுங்கள். என்ன ஒரு அறுபது வருடம் இந்த உலகில் வாழ்ந்துவிட்டு மடிய போகிறோம். நாம் வாழத்தான் வாழ்க்கை நம்மில் சமுதாயம் வாழ அல்ல.

முன்னரே ஆண்கள் புடவை கட்டுவதை பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதன் பொருட்டு எனக்கு நிறைய கடிதங்கள் வந்தன். நிறைய பேர் இந்த தலைப்பில் எழுத சொல்கிறார்கள். இந்த விஷயத்தில் ஒரு ஆணின் மன நிலையை புரிந்துகொள்வதில் நான் இன்னும் சிறுமியாகவே இருக்கிறேன். ஆண்களின் இந்த இயல்பான இச்சையை பற்றி அறிந்துகொள்ள நானும் ஆவலோடு இருக்கிறேன். மேலும் இந்த தலைப்பை பற்றி உங்கள் சந்தேகங்களையும் கருத்துக்களையும் ரகசியங்களையும் என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள். கேட்க ஆவலாய் உள்ளேன்.
பெண்களும் இது தொடர்பாக கருத்து சொல்லலாம்.

vincyontop@gmail.com

Sunday 8 November 2009

யார் பத்தினி - ஒரு அதிரடி ரிப்போர்ட்.

பத்தினியை ஒழிப்போம்.

உலக தமிழ்மாநாடு நடக்கும் இத்தருணத்தில் நான் அதிகாரத்தில் இருந்தால் முதலில் தமிழ் அகராதியில் சில வார்த்தைகளை நீக்கவேண்டும் என பரிந்துரைப்பேன்.
முதல் வார்த்தை
பத்தினி.
சமீபத்தில் ஒரு அனானி (சஞ்சை அல்ல வேறொருவர். அவருடைய பின்னூட்டத்தில் மேலும் தகாத வார்த்தைகள் இருந்ததால் அனுமதிக்கவில்லை.) என் பதிவில் வந்து நீ ஒரு சைக்கோ....பத்தினி வேஷம் போடுகிறாய் என்று முழங்கினார்.
எனக்கு அதை படித்துவிட்டு செம சிரிப்பு.

பத்தினி வேஷம் நான் போடுகிறேனா? முதலில் பத்தினி என்றால் என்ன? பத்தினி என்பவள் ஒரு அணு விஞ்ஞானியா அல்லது பல தத்துவங்களை எழுதிய ஒரு சிறந்த எழுத்தாளரா...அல்லது மின்சாரம் டெலிபோன் இப்படிப்பட்ட அறிவியல் சாதனைகளை நிகழ்த்திய பெண்மணியா...இல்லை சமுதாய முன்னேற்றத்துக்கு உழைத்த சமூக சேவகியா.
அது எல்லாம் இல்லை. பத்தினி என்பவள்அகராதிப்படி கணவன் எத்தனை பேருடன் படுத்தாலும் தன்னை எத்தனை கொடுமைகளுக்கு ஆளாக்கினாலும் நெறி தவறாமல் தன் கணவனுக்கு மட்டுமே முந்தி விரிக்கும் ஒரு பேதை பெண். பச்சையாக சொல்லவேண்டுமானால் கணவனுக்கு அரிப்பெடுத்தால் அவனை கூடையில் சுமந்துகொண்டு போய் அவன் விரும்பும் பெண் வீட்டில் விட்டுவிட்டு வெளியே காவல் இருக்கவேண்டும். காரியம் முடிந்த பிறகு மீண்டும் கூடையில் சுமந்து வீட்டில் கொண்டு போய் விடவேண்டும். அவனை கூடையில் சுமந்துகொண்டு போய் நடுக்கடலில் போட்டால் தான் என்ன?

இப்படி கணவனுக்கு முந்தி விரித்து கிடைக்கையில் அவன் தன் உடல் தேவையை பூர்த்தி செய்துவிட்டு எழுந்து போவான். இவள் உடனே தாலியை முத்தம் செய்து கண்ணில் ஒற்றிக்கொள்ளவேண்டும். இது தானே பத்தினி என்ற ஆணாதிக்க சொல்லின் விளக்கம். அப்படியானால் அந்த வேஷம் போட நான் தயாராய் இல்லை. அப்படி ஒரு அடிமை வேஷம் போட நான் தயாராய் இல்லை தோழரே.

சில பெண்கள் இன்னும் பத்தினியாய் இருக்க பிரியப்படுகிறார்கள். அவர்கள் இருந்து தொலையட்டும். கணவன் நலம் வாழ மண் சோறு தின்று வாழட்டும். அந்த மூட நம்பிக்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு வேளை என் கணவனுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் நான் மருத்துவமனைக்கு கூட்டிக்கொண்டு போவேனே தவிர மண் சோறு தின்ன மாட்டேன். உடனே தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டு குஷ்புவை போல் அங்க பிரதட்சணம் செய்யமாட்டேன். அவன் அருகில் இருந்து அவனை அக்கரையோடு பார்த்துக்கொள்வேன்.

அந்த நபருடைய பின்னூட்டத்தை படித்த பிறகு என்னை திருமணம் செய்துகொள்ளப்போகும் நபரிடம் முதலில் நான் சொல்ல நினைப்பது "நான் ஒரு பத்தினி இல்லை” என்பதை தான்.


அடுத்தது வாழாவெட்டி.

ஆண்களே சிந்தித்து பாருங்கள் . இப்படி ஒரு சொல் வழக்கில் இருக்கும் ஒரு சமுதாயத்தில் ஆண்டாண்டு காலமாய் எப்பேர்ப்பட்ட ஒரு ஆணாதிக்க போக்கு நடைமுறையில் இருந்திருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்.

பெண்ணுடைய அப்பா வரதட்சணை கொடுத்து ஒருவனுக்கு தன் மகளை திருமணம் செய்து வைக்கிறார். அதாவது காசு கொடுத்து ஒரு கழுதையை பொதி சுமக்க நாம் விலைக்கு வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம். (வரதட்சணை வாங்கி திருமணம் செய்பவர்களை எல்லாம் நான் கழுதைகள் என்று சொல்லவில்லை....வரதட்சணை கேட்டு திருமணம் செய்பவர்களைத்தான் சொல்கிறேன் என்று புரிந்துகொள்பவர்கள் புரிந்துகொள்ளட்டும்) அந்த கழுதை பாதி தூரம் போன பிறகு சோம்பேறித்தனம் பட்டோ அல்லது கொழுப்பு எடுத்தோ அங்கேயே படுத்துவிடுகிறது.






ஆனால் நமக்கோ கடமை இருக்கிறது. பொதியை குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் கொடுத்தாக வேண்டும். என்ன செய்கிறோம் கஷ்டப்பட்டு அந்த பொதியை நாமே தூக்கிக்கொண்டு போகிறோம். அப்படி சுமக்கும் நமக்கு பெயர் தான் வாழாவெட்டி. புருஷன் திருமண பந்தத்தின் கடமையை மறந்த ஏதாவது ஒரு காரணத்திற்கு மனைவியை வீட்டை விட்டு துரத்திவிடுவான். அப்படி துரத்தப்பட்ட பெண்ணுக்கு பெயர் வாழாவெட்டி. அல்லது புருஷன் வேறொரு பெண்ணுடன் கிளிக்காகி ஓடிவிடுவான் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வரும் அவமான சொல் வாழாவெட்டி. ஓடிப்போன கணவனுக்கு இன்னொரு ரேஷன் கார்டில் "குடும்ப தலைவர்" என்ற அருமையான பெயர் கிடைத்துவிடும்.

உண்மையில் நம் கலாசாரத்தை வடிவமைத்தவர்களுக்கு நிச்சயம் நல்ல கற்பனை திறன் இருந்திருக்கவேண்டும். பாருங்கள் எத்தனை இரவுகள் ரூம் போட்டு யோசிச்சு பெண்களை எப்படி எல்லாம் கேவலப்படுத்தலாம் கொடுமைபடுத்தலாம் தங்கள் கட்டுப்பாட்டுக்கள் வைத்துக்கொள்ளலாம் என்று வடிவமைத்திருக்கிறார்கள். மேலும் வாழாவெட்டி என்பவளை கேவலமாக நடத்தினால் எந்த பெண்ணும் தான் வாழாவெட்டி ஆகிவிடாமல் இருக்க கணவனுக்கு பணிந்து இருப்பாள் என்ற சாடிஸ் மனநிலையோடு உருவாக்கப்பட்ட சொல் தான் வாழாவெட்டி.

இப்படிப்பட்ட சொற்களை தமிழ் அகராதியிலிருந்து நீக்கும் முன்பாக மனித மனங்களிலிருந்தும் நீக்கவேண்டும். பெண் எப்படியெல்லாம் அடக்குமுறைகளுக்கு ஆட்பட்டிருந்தால் இது போன்றதொரு சொற் பிரயோகம் நம் வழக்கில் இருக்கும் என்பதை சிந்தித்து பாருங்கள்.

நான் ஆண்களை கேவலமாக பேசுவதாக சில ஆண்கள் கண்டமேனிக்கு என்னை திட்டி தாளிக்கிறார்கள். நான் பிரசுரிக்கும் கமென்டுகள் ஒரு சாம்பிள் தான். வருபவையோ ஏராளம். அப்படிப்பட்ட ஆண்களுக்கு பொதுவான ஒரு குணம் என்னவென்றால் அவர்களுக்கே தெரிகிறது தாங்கள் இருக்கும் தளம் போலியானது...வெட்டி ஈகோவால் உருவானதென்று. அதனால் அந்த தளத்தை நான் தகர்கிற பொழுது அவர்கள் விழுந்துவிடுவார்களோ என்ற அச்சத்தினால் தான் என்னை தூஷிக்கிறார்கள். அதனால் நான் அசரப்போவதில்லை.

ஒன்று தெரிந்துகொள்ளுங்கள் ஒயின் ஷாப்பில் வேட்டி கிழிய குடித்துவிட்டு அந்த குப் நாற்றத்தோடு கெட்ட வார்த்தை பேசுவதையும்....சாலையில் எல்லோரையும் முந்திக்கொண்டு போக நினைக்கும் அவசர (செக்ஸில் காட்டும் அவசரத்தை ஆண்களே ஏன் சாலையில் காட்டுகிறீர்கள்) நிலையும் அப்படி போகிற போது யாராவது அப்பாவி குறுக்கே வந்து மாட்டிக்கொண்டால் உடனே காளரை தூக்கிவிட்டுக்கொண்டு மச்சி மாமு என சகலரையும் துணைக்கு அழைத்து வன்முறையை தூண்டும் உங்களின் அராஜக போக்கு தான் வீரம் என்று நீங்கள் நினைத்துக்கொண்டால் அந்த வீரமும் கெட்ட வார்த்தைகளும் வன்முறையும் பெண்களிடம் செல்லுபடியாகாதென்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்னும் அகராதியில் நிறைய பெண்ணடிமை வார்த்தைகள் இருக்கின்றன. மேலும் நிறைய வார்த்தைகள் புழக்கத்தில் உள்ளன.

மேலும் இந்த அவல நிலைக்கெல்லாம் தீர்வு என்னவென்று கேட்டால் உடனே மேலோட்டமாக பெண் கல்வி பெண் இட ஒதுக்கீடு என்றெல்லாம் பேசுவோம். அது எல்லாம் தவறு. அதற்கெல்லாம் மேலே பெண்கள் முதலில் தங்களை மதிக்க தெரிந்துகொள்ளவேண்டும். நான் ஒரு பெண் தானே என்று சோர்ந்து போகாமல் நான் ஒரு பெண் என்று தன்னம்பிக்கையோடு எழுந்து நிற்கவேண்டும். அந்த எழுச்சியில் தான் ஆணாதிக்கத்தை நாம் சுருட்ட முடியும். இன்னும் ஆண்களை சார்ந்து வாழ்வதையே நம் தலையாய கடைமையாக நினைத்துக்கொண்டிருந்தால் முன்னேர்ரம் கடினம் தான்.

வேறொரு நபர்...பெண்களுக்கு அழகே சக்தி என்று சொல்லி அவர்களை நான் போகப்பொருளாக பார்க்கிறேன் என்று பொங்கியிருந்தார்.
அந்த தோழருக்கு நான் சொல்லிக்கொள்வது மறுபடியும் மறுபடியும் பெண்களுக்கு அழகே சக்தி.
ரோஜா மலர் அழகாய் இருப்பது அதன் சக்தி. அதை செடியில் வைத்து அழகுபார்க்காமல் உங்கள் தேவைக்கு அதை பறித்து கயிற்றில் கட்டி தொங்கவிடுகிறீர்களே அந்த ஆணாதிக்கம் தான் பெண்ணை போக பொருளாய் பார்க்கிறது. பெண்ணை பெண்ணாக பாவியுங்கள். பெண் அழகாய் இருப்பதால் அவள் போதை பொருளாகிப்போவது உங்களுக்குத்தான். நீங்கள் அவளை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் அப்போது நீங்களே சொல்வீர்கள் பெண்ணுக்கு அழகே சக்தி.

பெண்ணுக்கு அழகே சக்தி.

நாங்கள் போதை பொருளாய் இருப்பதில் கூட வருத்தப்படவில்லை. ஆனால் எங்கள் அனுமதி இல்லாமல் எங்களை ஏமாற்றி அந்த போதையை நீங்கள் நுகர்ந்து பார்த்து அனுபவித்து பின்பு எங்களை அடிமைகளை போல் நடத்துவதை தான் நான் பெரிதும் எதிர்க்கிறேன்.

இன்னொரு நபர்...என் பதிவுகளை பெண்கள் புறக்கணிக்கிறார்களாம். அதில் அவருக்கு ஒரு சந்தோஷம் வேறு இருக்கிறது போல. ஏனென்றால் பெண்கள் எல்லாம் என் பதிவுகளை படித்து ஆண்களின் ஈகோவையும் ஆதிக்க அராஜகங்களையும் எதிர்க்க தொடங்கினால் ஆண்களுக்கு டவுசர் கிழிந்துவிடுமோ என்ற பயம். மேலும் பெண்கள் இதை புறக்கணித்தாலோ ஆண்கள் இதை புறக்கணித்தாலோ எனக்கு கவலை இல்லை. நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தான் இருப்பேன். ஆதரிப்பவர்கள் ஆதரிக்கட்டும்.


மேலும் எனக்கு ஓட்டு போடும் பின்னூட்டமிடும் அத்தனை தோழர் தோழிகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பிறகு ஒருவர் நான் மற்ற பதிவர்களின் பதிவுகளில் பின்னூட்டமிடுவதன் மூலம் பிரபலமாக நினைக்கும்ம் ஒரு வேசி என குறிப்பிட்டிருந்தார். பலே பலே....என் பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்கவே எனக்கு நேரம் போதவில்லை. பிறகு எப்படி இந்த குற்றச்சாட்டு.



இப்படி எனக்கு வரும் பின்னூட்டங்களில் வரும் தவறான புரிதல்களுக்கு பதில் எழுதுவதிலேயே என் காலம் போய்விடுகிறது. இருந்த போதும் எனக்கு அது மகிழ்ச்சியே. தொடர்ந்து உங்கள் வாதங்களை நாகரீகமான முறையில் முன் வையுங்கள். விவாதிப்போம்.

மேலும் உங்கள் சந்தேகங்களையும் ரகசிய கேள்விகளையும் என் மின் அஞ்சலுக்கு செலுத்துங்கள்.....

vincyontop@gmail.com

Sunday 1 November 2009

மாதவிடாய் பெண்கள் தீண்டத்தகாதவர்கள்

பெண்களுக்கு அழகே சக்தி.




என்னது பீரியட்ஸ் காலத்துல வெளிய ஒரு பாய் போட்டு குத்த வச்சுக்கணுமா?....அடி செருப்பால....


காலம் காலமாய் பெண் விடுதலைக்கு குரல் கொடுக்கிறேன் பேர்வழி என்று இங்கே நிறையே பேர் பெண் அடிமைத்தனத்தை பற்றி மட்டுமே மேலும் மேலும் பேசியும் எழுதியும் இருக்கிறார்கள். அவர்கள் மேல் எனக்கு ஒரு வகையில் பெருத்த கோபம் உண்டு. அவர்கள் ஓயாமல் பெண் அடிமையாய் நடத்தப்படுகிறாள் என்று பரிதாபப்பட்டும் கோபப்பட்டும் எழுதுகிறார்கள். நீங்களே யோசித்து பாருங்கள். ஒரு பெண் குழந்தைக்கு விபரம் தெரியும் நாள் முதல் அதனிடம் "நீ ஒரு அடிமை...உன் இனம் ஒரு காலத்தில் அடிமையாய் நடத்தப்பட்டது....நீயும் அடிமை இனத்தின் ஒரு நீட்சி" என்று கூறுவதன் மூலம் அந்த பிஞ்சு மனதில் ஒரு வகை தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடுகிறார்கள். அந்த பிஞ்சு மனதில் அடிமை விதையை அவர்களே ஊன்றிவிடுகிறார்கள்.

இவர்கள் ஆணின் இரக்கத்தால், பெண் விடுதலை அடைய வேண்டும் என்ற வகையில் எழுதவும் செய்கிறார்கள். ஆனால் நான் பெண் அடிமை என்ற கருத்தையே முன்வைக்க போவதில்லை. பெண் ஆண்களுக்கு சமமானவள் என்ற வாதத்தையும் பின்னுக்கு தள்ளி பெண் ஆணை விட உயர்ந்தவள் என்கிற ரீதியில் தான் பார்க்கிறேன்.

பெண்கள் தங்கள் அழகாலும் அறிவாலும் ஆண்களை தங்களுக்கு சேவகர்களாக ஆக்கிக்கொள்ள முடியும் என்பதை தான் நான் அழுத்தமாக எடுத்துரைக்க விரும்புகிறேன். பெண் அடிமைத்தனம் என்னும் அழுக்கான பழைய புராணத்தை பாடிப்பாடி ஏன் பெண்ணை இன்னும் தலைகுனிய வைக்கிறீர்கள். அவளை நிமிர விடுங்கள்.

அதனால் நான் இங்கே பேசப்போவதெல்லாம் ஆணடிமைத்தனத்தை பற்றியே. அதனால் நிறைய பேர் கொதிப்படைகிறார்கள். அப்படி கொதிப்படைபவர்கள் எல்லாம் தங்கள் காதலி மனைவி என்று வரும்போது உள்ளாடைகளை கசக்கவும் தயாராய் இருப்பார்கள் என்பதை வாழ்வியல் நடைமுறை கூறும். பெண்களின் ஆடைகளை துவைபப்தில் இருக்கும் சுகம் பற்றி எனக்கு வந்த ஒரு கடிதத்தை அடுத்த பதிவில் பிழை திருத்தி நீங்கள் வாசிக்க தருகிறேன்.

பெண்களே யோசித்து பாருங்கள்...ஒரு காலத்தில் கலாசாரம் பண்பாட்டு மத காவலர்கள் நமக்கு இயற்கையாய் வரும் மாதவிடாய் காலத்தில் நாம் ஏதோ தீட்டுபட்டவர்கள் போல் வீட்டின் வெளியே ஒரு பாய் விரித்து படுத்துக்கொள்ள வேண்டும் என்று கீழ்த்தரமான சட்டங்களை கொண்டு வந்தார்கள். இது எல்லாம் பெண்களின் அறிவும் அழகும் ஓங்கி நின்றால் அவர்களின் பின்னால் ஆண்கள் அலைய வேண்டிவரும் என்று பயந்த கோழை கூட்டத்தால் உருவாக்கப்பட்டது. ஆண்களே……இப்படியெல்லாம் அடக்கி வைத்தால் பெண் எப்போதும் தலை குனிந்தே வாழ்ந்து விடுவாள் அவளை உங்கள் சுகங்களுக்கு உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்று தானே நீங்கள் இது போன்ற மனிதாபிமானம் இல்லாத சட்டங்களை உருவாக்கினீர்கள்.

பெண்களை குழந்தை பெற்றுத்தரும் ஒரு எந்திரம் போல் பயன்படுத்தி வந்த காலமும் உண்டு. குழந்தை பெற்றுக்கொள்வதால் பெண்களின் அழகு குறைபடும் என்று நம்பிவிடவேண்டாம். உங்கள் அழகின் மீது தகுந்த அக்கரையும் பராமரிப்பும் செலுத்தினால் போதும் நீங்கள் குழந்தை பெற்றுக்கொண்ட பிறகும் இளமையாய் தோன்றலாம். எப்போதும் உங்கள் அழகின் மீதும் கல்வி, படிப்பு இவற்றின் மீதே உங்கள் கவனம் இருக்கட்டும். குரங்கு போல் புட் போர்ட்டில் தொங்கிக்கொண்டு வரும் ஆண்களின் குரங்கு சேட்டைகளை நம்பி உங்கள் மனங்களை அலைய விடாதீர்கள். அவர்களெல்லாம் ஒயின் ஷாப்பில் மது அருந்துவதை வீரம் என்றும் கெட்ட வார்த்தையில் உளறுவதை தைரியம் என்றும் ஆண்மை என்றும் ஆண் தன்மை என்றும் நம்பி அறிவிலியாய் திரிபவர்கள். அதனால் பெண்களே உங்கள் கல்வியும் அழகும் சீராக இருந்து ஆண்களை ஆட்சி செய்யும் ஆவல் இருந்தால் உங்களுக்கு சேவை செய்ய ஆண்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள்.அழகான அறிவுடைய பெண்களுக்கு சேவை செய்வதில் தான் தங்கள் வாழ்வு பூரணம் அடைகிறது என்கிற உண்மையை ஆண்கள் உணரத்தொடங்கிவிட்டார்கள். என்ன ஆண்களே சரி தானே?

குழந்தை பெற்றுக்கொள்வதில் உங்கள் சம்மதம் இன்றி எதுவும் நடந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மாமனார் மாமியார் புருஷன் இவர்களுக்காக நீங்கள் குழந்தை சுமக்க போனால் உங்களுக்கும் கழுதைக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. தாய்மை என்பதை முதலில் நீங்கள் நேசிக்கவேண்டும். மனதளவில் அதன் மீதான தாகம் வரவேண்டும். மனம் தாய்மையை தரிக்க தயாராகவேண்டும். அதன் பின்பே நீங்கள் விரும்பும் பட்சத்தில் மட்டுமே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் குழந்தை பெற்றுக்கொள்ளும் அந்த காலகட்டத்தில் கணவன் உங்களிடம் இன்னும் அன்பாகவும் சேவைகளை சரிவர செய்பவராகவும் உங்களுக்கு கீழ்படிபவராகவும் இருத்தல் அவசியம்.

பிறகு எனக்கு நிறைய கடிதங்கள் வருகின்றன. அதில் ஒரு கடிதத்தில் ஒருவர் தனக்கு பெண்களின் பாதங்கள் மிகவும் பிடிக்கும் என எழுதியிருந்தார். என் பிளாகில் உள்ள புகைப்படத்தில் வருவது போல் தன் தோழிக்கு அவர் சேவகம் செய்வதை பெரிதும் விரும்புவதாக கூறினார். மேலும் பெண்களின் பாதத்தை தொட்டு வணங்கி வழிபடுவதில் ஒரு வித தெய்வீக நிலையை அவர் அடைவதாய் குறிப்பிட்டிருந்தார். மேலும் சாலையில் நடக்கிற போதே எந்த ஒரு பெண்ணை பார்க்கிற போதே அவர் முதலில் பார்ப்பது அவளின் பாதங்களை தானாம். ஒவ்வொரு வகை பாதங்களிலும் ஒவ்வொரு சங்கதி இருக்கிறதென்கிறார்.


ஒவ்வொரு வகை பாதங்களிலும் ஒவ்வொரு சங்கதி இருக்கிறதென்கிறார்.பெண்களின் பாதங்களின் மூலம் அவர்களின் மனநிலையையும் டாமினேட்டிங் சம்பிசிவ் கேரக்டர்களையும் தெரிந்துகொள்ள முடியும் என்றும் பெண்களின் பாத அமைப்பும் அவர்கள் பாதங்களை வெளிக்காட்டும் முறையிலும் ஸ்டைல் மேனரிஸம் இதிலெல்லாம் நிறைய சங்கதிகள் இருப்பதாய் குறிப்பிட்டிருந்தார். அவை பற்றி எனக்கு முன்னரே தெளிவான வாசிப்பும் புரிதலும் இருப்பதால் எனக்கு அது ஒன்றும் புதிதல்ல. மேலும் சில அழகான பெண் பாதங்களின் புகைப்படங்களையும் அனுப்பியிருக்கிறார்க். சில உங்களுக்காக. எந்த பாதம் என்ன செய்தி சொல்கிறதென்று பின்னூட்டமிடுங்கள்.













Tuesday 27 October 2009

ஆண்களின் இயலாமையே பெண்ணடிமைத்தனத்தின் துவக்கம்.

என்னை தொடர்ந்து ஊக்குவித்து வரும் அனைவருக்கும் நன்றி. என் கருத்துக்களுக்கு எதிராக பின்னூட்டம் இடுபவர்கள் ஆனாலும் என் பதிவை படிக்கும் ஒவ்வொருவருக்கும் என் நன்றி. என் கருத்துக்களுக்கு எதிராக பின்னூட்டமிட்டால் அவை பிரசுரிக்கப்படுவதில்லை என்கிறார்கள். கீழ்த்தரமான வார்த்தைகள் இல்லாத எந்த பின்னூட்டமும் பிரசுரிக்கப்படும்.

பல நேரங்களில் என்னுடைய கருத்துக்கள் தவறாக புரிந்துகொள்ளப்படும் வாய்ப்பு வருகிறது. நான் வலியுறுத்துவது எல்லாம் ஆணும் பெண்ணும் சமம் என்னும் கோட்பாட்டை அல்ல. ஆணை விட பெண் மேலானவள் என்பதே. பெண் வணக்கத்துக்குரியவள் என்பதே. ஆண் என்பவன் பெண்ணை மதித்து அவளின் அன்பிலும் அரவணைப்பிலும் அதிகாரத்திலும் வாழ பழகிக்கொள்ளவேண்டும் என்பதே. நீங்கள் ஒரு மேலோட்டமான கணக்கீடு எடுத்து பாருங்கள். எந்தெந்த குடும்பங்களில் ஆண் அதிகாரம் செய்திக்கொண்டும் போலி முதன்மை நிலையை பிரகடனப்படுத்திக்கொண்டும் பெண்ணை அடிமை போல் நடத்தி தன் ஆணாதிக்க போக்கில் குடும்பம் நடக்கிறதோ அங்கெல்லாம் முன்னேற்றம் தடைப்பட்டிருக்கும். பெண் விடுதலையும் பெண் முன்னேற்றமும் பெண் ஆளுமையும் தான் குடும்பத்தையும் நாட்டையும் முன்னுக்கு கொண்டு செல்லும் என்பது என் கருத்து.





இப்படி ஒரு அழகான பெண்ணிடம் குத்து வாங்குவதும் சுகம் தான் இல்லையா?



சிலர் இப்படி சொல்வார்கள். பெண்களை காமப்பொருளாய் பார்க்கக்கூடாதென்று. அதற்கும் நான் எதிரானவள். செக்ஸ் அடிமைகளாய் பார்க்காதீர்கள் என்பது தான் என் கருத்து.

திடமான திரட்ச்சியான ஒரு பெண்ணின் மார்பை பார்க்கிற போது எந்த ஆணுக்கும் உணர்ச்சிகள் உந்தப்படும். அப்படி உந்தப்பட கூடாதென்று நான் சொல்லவில்லை. அப்படி உந்தப்படாதவன் நிச்சயம் சாமியாராகத்தான் இருக்கவேண்டும். சாமியார் என்றும் சொல்ல இயலாது. காரணம் போலி சாமியார்களின அட்டகாசங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஒரு பெண்ணின் அழகில் அறிவில் அன்பில் மயங்காதவன் ஆணாகவே இருக்க முடியாது. எனவே ஒரு பெண்ணின் அழகை கவர்ச்சியை ரசிக்கக்கூடாதென்று நான் சொல்லவில்லை. ரசிக்கவேண்டும். பெண் என்பவள் ஆண்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகி போகிறாள்.

அப்படியாக ஆண்களால் தவிர்க்கமுடியாத ஒரு விரும்பு பொருளாக பெண் இருக்கிறாள். பெண் என்பவளின் காதல் அன்பு அழகு அறிவு வசீகரம் எல்லாம் ஆண்களை கட்டிப்போடும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. இத்தனை சக்தி வாய்ந்த ஒரு பெண்ணின் முன்னால் ஆண் மண்டியிட மட்டும் மறுப்பது வியப்பாக இருக்கிறது.

இந்தியாவை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள் என்பது வரலாறு. அப்படி அடிமைப்படுத்துவதின் நோக்கம் என்ன? இந்தியா போன்றதொரு வளமிக்க நாட்டை அவர்கள் விரும்பினார்கள். இந்தியாவின் வளத்திலும் செல்வ செழிப்பையும் கண்டு அவர்கள் பெருமூச்சு விட்டார்கள். அந்த செல்வ செழிப்பின் மேல் அவர்களுக்கு அசை வருகிறது மோகம் வருகிறது. இப்போது அந்த செல்வ செழிப்பை அனுபவிக்க நினைக்கிறார்கள். ஆனால் இந்தியாவோடு ஒரு நேர்மையான வணிக ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இந்தியாவோடு ஒரு நடுநிலை வாணிக தொடர்பு வைத்துக்கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை. இந்தனை வளமிக்க இந்தியாவிடம் மண்டியிட அவர்களின் ஈகோ தடை சொல்கிறது.. ஆனால் அவர்களுக்கு இந்தியாவின் வளங்கள் வேண்டும். உடனே என்ன செய்கிறார்கள்? தங்களின் அதிகாரத்தையும் அடக்குமுறைகளையும் பயன்படுத்தி இந்தியாவை அடிமை நாடாக்கினார்கள். இந்தியாவின் வளங்களை அடித்துப்பிடுங்க ஆசைப்பட்டார்கள். இந்தியர்களை தங்கள் ஆதிக்கத்தால் மிரட்டி, இந்தியர்களே பணிந்து ஆங்கிலேயர்களின் காலடியில் இந்தியாவின் வளங்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என விரும்பினார்கள். ஆக இந்தியாவின் வளங்களை ஒரு அதிகார தொணியில் கவர்வதற்கு ம் திருடுவதற்கும் அவர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தினார்கள்.


அதையே தான் ஆண்களும் காலம் காலமாய் மதம் மூட நம்பிக்கை கலாசாரம் பண்பாடு என்ற போர்வையில் பெண்ணுக்கு செய்தார்கள். பெண்கள் இல்லாமல் ஆண்களால் வாழ முடியாது. அதே சமயம் பெண் தங்களை ஆளவும் கூடாது. உடனே எல்லா அரசியல் கலாசார பண்பாட்ட நெறிமுறைகளில் பெண்ணை அடிமைப்படுத்தும் சட்டங்களையும் பழக்கவழக்கங்களையும் உட்புகுத்துகிறார்கள். ஆக காலம் காலமாய் பெண்ணடிமைத்தனம் என்பது ஆண்களின் இயலாமையில் முளைத்ததென்பதே உண்மை.

நம் நாட்டில் மட்டுமல்ல வரலாற்றை புரட்டிப்பார்த்தால் ஆதி காலம் தொட்டு பெரும்பாலான மத கோட்பாடுகள் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாகவே பார்க்கிறது. கிறிஸ்துவமும் மேரி மாதாவின் பெயரால் திருச்சபை அமையக்கூடாதென்று தான் இயேசுவை முன்னிலைப்படுத்தி மதத்தை உருவாக்கினார்கள்.

ஆனால் இனி வரும் நூற்றாண்டுகளில் அது சாத்தியம் இல்லை. இப்போது கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பெண்கள் தாறுமாறாக முன்னேறியிருக்கிறார்கள். அதுவும் இத்தனை குறுகிய காலத்தில். அந்த முன்னேற்றம் இட ஒதுக்கீட்டில் வந்ததல்ல. ஆண்களின் இடத்தை தங்கள் அசாத்திய திறமையால் பெண் ஆக்கிரமிக்க தொடங்கியிருக்கிறாள். இந்த நிலையில் பெண் முன்னேற்றம் இருக்குமானால் ஆண்களை விட பெண்கள் கல்வியிலும் நிறைய சம்பளம் கொளிக்கும் பெரிய உத்தியோககங்களிலும் ஆக்கிரமித்துவிட்டால் ஆண்களின் நிலை என்னவாக இருக்கும்? இன்னும் ஆண்கள் பெண்கள் மீதான ஒரு அச்சத்தினால் தான் இன்னும் பெண்ணை அடிமையாக வைத்திருக்க அல்லது சம அந்தஸ்து கொடுத்து அதே நிலையில் அவர்களை வைத்திருக்க விரும்புகிறான்.

ஆனால் ஒன்று மட்டும் நிதர்சனம்

என்ன தான் பெண்கள் பல துறைகளிலும் முன்னேறியிருந்தால் கூட பெண்களுக்கு காலம் காலமாக வாழ்ந்து வந்த அடிமை வாழ்க்கையின் அழுக்கு இன்னும் அவர்களின் மனதில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதனால் தான் இன்றும் பெண் ஒரு ஆணிடம் ஒப்படைக்கப்பட வேண்டியவள் அவனுக்கு சேவகம் செய்யவேண்டியவள் என்ற மட்டகரமான எண்ணம் இருக்கிறது. பெண்கள் அதிலிருந்து விடுபட வேண்டும். நம்மை அடக்கி ஆண்ட காலம் போய்விட்டதென அவர்கள் உணர வேண்டும். இது நாம் ஆண்களை ஆளும் காலம் என்பதை உணரவ வேண்டும். உங்களின் கல்வியும் அழகும் வசீகரமும் ஆணை கட்டிப்போட வல்லது. ஆனால் ஆண்களால் கட்டுப்பாட்டில் இருக்க முடியாது என்பதால் தான் ஒரு போலி ஆதிக்க நிலையை நிறுவி ஆண்கள் உயர்ந்தவர்கள் என தங்களை காட்டிக்கொண்டு நம்மை அடிமைப்படுத்தி வந்தார்கள்.


நிறைய பேருக்கு என் மேல் கோபம் இருக்கிறது கெட்ட வார்த்தையில் திட்டுகிறார்கள். ஏனென்று தான் புரியவில்லை. உண்மையை அப்பட்டமாக எடுத்துரைத்திருப்பதால் அவர்களின் மனம் குறுகுறுக்கிறதென்றே தோன்றுகிறது.

நிறைய வாசகர் கடிதங்கள் வருகின்றன. எல்லாவற்றிற்கும் பதிலளிக்க நேரம் போதவில்லை. ஒரே ஒரு கடிதத்தை இங்கே பிரசுரிக்கிறேன்.

கேள்வி: வின்சி மேடம் அவர்களே வணக்கம். உங்கள் பிளாகை தொடர்ந்து படித்து வருகிறேன். அருமையான ஒரு வலைபக்கம். தமிழில் உங்களை போல் எழுத்தாளர்கள் இல்லை என்ற குறையை போக்கியுள்ளீர்கள். நான் ஆங்கிலத்தில் இது போன்ற நிறைய இலக்கியங்கள் படித்திருக்கிறேன். என்னுடைய கேள்வி இது தான்.

நான் திருமணமானவன். என் மனைவியை கடவுளாக போற்றவில்லை எனினும் அவளை என்னில் பாதியாகவே நினைக்கிறேன். என் மேல் அவள் செலுத்திய காதலும் அன்பும் தான் என்னை ஒரு மனுஷனாக மாற்றியதென்றே சொல்லலாம். அவளின் அரவணைப்பும் சில சமயம் கண்டிப்பும் இல்லையென்றால் எங்கள் குடும்பம் இப்போதிருக்கும் நிலையில் இருந்திருக்காதென்றே தோன்றுகிறது. அவளை நான் முழுவதும் நேசிக்கிறேன். எனக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. அதாவது என் மனைவிக்கு தெரியாமல் அவளுடைய ஆடைகளை முகர்ந்து பார்ப்பது. இதை நான் காமத்தின் தூண்டுதலால் செய்வதாக நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் உண்மையில் அவளுடைய ஆடைகளை முகர்ந்து பார்க்கிற போது மனம் முழுதும் அவள் நிறைந்து ஒரு தேவதை போல் என் முன்னால் நின்றுகொண்டு என்னை அரவணைப்பது போல் உணர்கிறேன்.

ஒரு வகையான தெய்வீக தன்மையை அதில் உணர்கிறேன். அவளுடைய ஆடையை முகர்ந்து பார்ப்பதை கீழ்த்தரமான செக்ஸ் இச்சையாய் நான் கருதவில்லை. நாம் பெரிதும் மதிக்கும் ஒருவர் உபயோகப்படுத்திய பொருட்களை பயபக்தியோடு தொட்டு உணர்த்து துய்ப்போமே அது போல் தான் என் மனைவியின் ஆடைகளை தொட்டு உணர்ந்து முகர்கிற போது உணர்கிறேன். அந்த ஆடைகளின் சுகந்தம் மட்டுமல்ல மென்மை மட்டுமல்ல அந்த ஆடைகளை என் மனைவி உபயோகப்படுத்துகிறாள் என்கிற மரியாதையின் மித்தமாகவே அதை தொட்டு உணர்ந்து முகர்ந்து பார்க்கிறேன்.

ஆனால் என் மனைவி தான் என் ஆடைகளையும் சேர்த்து துவைப்பாள். இப்போதெல்லாம் வீட்டு வேலைகளை பகிர தொடங்கிவிட்டேன். ஆனால் எனக்கு அவளின் ஆடைகளை அதே பயபக்தியோடு அணுகி துவைக்கவேண்டும் என்ற ஆசை உள்ளது. அதை என் மனைவியிடம் சொல்ல கூச்சமாக உள்ளது என்ன செய்வது?


நீங்கள் மட்டுமல்ல. பெரும்பாலான ஆண்களுக்கு இந்த ஆசைகள் இருக்கும். ஆனால் ஆண் என்ற ஈகோ அவர்களை தடுக்கும். காலம் காலமாக ஆண்களுக்கு கால் அமுக்கி விடவும் அவன் சாப்பிட்ட எச்சில் தட்டில் சோறு தின்னவும் தான் நாம் பெண்களை பழக்கி வைத்திருக்கிறோம். இப்போது ஆண்களின் போலியான அதிக்க தளத்தை விட்டுக்கொடுக்க அவர்களுக்க்கு மனம் வரவில்லை. அதனால் தான் இவ துணியை நான் துவைக்கணுமா?என்று விலகி விடுகிறார்கள். உங்கள் விருப்பங்களை நீங்கள் உயிரோடு இருக்கிற போதே நிறைவேற்றிக்கொள்ளாமல் மரித்துப்போவதில் என்ன பயன். மனைவியின் ஆடைகளை துவைத்துப்போடுவதில் பெருங்குற்றம் இருப்பதாய் எனக்கு தோன்றவில்லை. அவளுடைய ஆடைகளை துவைத்துப்போடுவதால் உங்களின் ஆண் என்ற போலியான கொம்பு முறிந்துவிடும் என்று நினைத்தால் மனைவியிடம் கேட்காதீர்கள். இல்லையென்றால் மனைவிக்கு தெரியாமலையே அவள் ஆடைகளை துவைத்து போடுங்கள் அவள் நிச்சயம் மகிழ்வாள். எந்த மனைவியும் கணவனின் அன்புக்கு எதிரானவள் அல்ல. எனவே மனைவியின் ஆடைகளை துவைத்து உங்கள் அன்பை வெளிப்படுத்துவதை உங்களை மனைவியும் நிச்சயம் விரும்புவாள்.

உங்கள் கேள்விகளையும் ரகசிய சந்தேகங்களையும் வாதங்களையும் இந்த முகவரிக்கு அனுப்புங்கள்.

vincyontop@gmail.com

Sunday 25 October 2009

அம்மன் பெயரில் ஆணாதிக்கம்!!!

அம்மன் பெயரில் ஆணாதிக்கம்.
நம் தேசத்தில் நிறைய பெண் கடவுள்களை நாம் வழிபடுகிறோம் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று. ஆனால் பெண்களை கடவுளாக வழிபட நமக்கு மனம் ஒத்துக்கொள்வதில்லை. சரி போகட்டும். பாரத மாதா எனவும் நதிகளுக்கு பெண்களின் பெயரை இட்டும் அழகுபார்த்த நாம் அந்த பெண்கடவுள்களின் வழிபாட்டு முறையின் அடித்தளத்தை ஆணாதிக்கத்தில் உருவாக்கியிருக்கிறோம் என்பது தான் வேதனைக்குரியது.

அம்மனை வழிபடுபவர்கள் பெரும்பாலும் கீழ்தட்டு உழைக்கும் வர்க்கத்தை சார்ந்தவர்களாகவே இருப்பார்கள். அந்த குடும்பங்களில் அம்மன் கடவுளாகவும் அவர்கள் வீட்டிலிருக்கும் பெண்கள் அடிமைகளாகவும் தான் பார்க்கப்படுகிறார்கள். தாங்கள் வழிபடும் தெய்வம் பெண்ணாக இருக்கும்போதும் அவர்களுக்கு கிடைப்பதென்னவோ சாராய நெடி வீசும் அடியும் உதையும் வன் புணர்வும் தான்.

பெண் கடவுளின் வாயிலாக நாம் வலியுறுத்துவதெல்லாம் பெண் கற்புள்ளவளாக இருக்கவேண்டும் என்பதும் கணவனின் நல்வாழ்வுக்காக மண் சோறு உட்கொள்ளவேண்டும் அங்கபிரதட்சணம் செய்யவேண்டும் நோன்பு இருக்கவேண்டும் தீட்டு என்ற பெயரில் பெண்களிடம் கற்பு கற்பு என்னும் ஆணாதிக்க வலையை விரித்துவிடுகிறார்கள். ஒரு பெண் வேறு ஆணுடன் தொடர்பு வைத்துக்கொண்டால் அவளை ஏதோ தீட்டு பெற்றவள் போலவும் பாவியை போலவும் பாவித்து பல சித்திரவதைகளுக்கும் ஆளாக்கி ஆணாதிக்க வெறியர்கள் மகிழ்கிறார்கள். அந்த சித்திரவதைகளின் நோக்கமெல்லாம் நீ நெறிகெட்டவள் எனவே உன்னை எல்லோரும் அனுபவிக்கலாம் என்கிற மறைமுக வக்கிர எண்ணமே மேலோங்கியிருக்கிறது. ஒருத்தியை நெறிகெட்டவள் ஆக்குவது தங்கள் உடல் சுகத்துக்கு ஒரு பலி ஆட்டை தயார் செய்வதுக்கு ஒப்பாகும்.

நான் இங்கே பெண் ஆணை விட உயர்ந்தவள் என்று சொல்லி எழுதுகிற போது எல்லோரும் கொதித்துப்போகிறார்கள். ஆனால் அபராதம் கட்டினால் கற்பழிப்பு ஒரு குற்றமே இல்லை என்கிற ரீதியில் நம் நாட்டில் ஆண் நாட்டாமைகள் தீர்ப்பு வழங்கி மகிழ்ந்ததை நாம் மறந்துவிடவேண்டாம். அப்படி வக்கிரங்களையும் பெண்ணை ஒரு இன்பத்தின் தூண்டுபொருளாக்கி மகிழ்ந்த இந்த சமுதாய ஆண்கள் இன்று ஏதோ திருந்திவிட்டது போல் பொய் வேடம் போடுகிறார்கள். நம்பவேண்டாம். அவர்கள் என்றும் பெண்களை அடிமைகளாக வைத்திருக்கவே விரும்புகிறார்கள். தெய்வமாக வேண்டுமானல் ஒரு பெண் இருந்துவிட்டு போகட்டும் ஆனால் மனுஷியாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் அடிமையாக இருக்கவேண்டும் என்ற கோட்பாடோடு தான் இந்த அம்மன் வழிபாட்டு முறைகள் உருவாக்கியிருக்கிறார்கள் என்பது என் கருத்து.







ஆண்க்ளே உங்கள் சேவையை ஒரு பெண்ணின் பாதங்களிலிருந்து தொடங்குங்கள்


நான் சைக்கோவா?
ஆணும் பெண்ணும் சமம் போன்ற எழுத்துக்கள் ஒரு காலத்தில் அடிமைகளிடம் மட்டுமே அதிகாரம் செலுத்த விரும்பும் ஆண் மன நோயாளிகளுக்கு பெரிய எரிச்சலாக இருந்தது. அவர்கள் அதை பல வழிகளில் எதிர்த்தார்கள். மேலும் அவ்வாறான எழுத்துக்கள் தங்கள் வீட்டு பெண்களிடம் சிக்கிவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். அந்த எழுத்துக்களை படித்து பெரிய எரிச்சல் கொண்டு அதை தங்கள் மனைவியிடம் அடக்குமுறைகளாக வெளிப்படுத்தினார்கள் அந்த மன நோயாளிகள்.

பிறகு காலப்போக்கில் பெண்களுக்கு சம வாய்ப்புகள் வழங்கப்பட்டு ஆண்களுக்கு மேலாக அவர்கள் சாதிக்க தொடங்கிவிட்டார்கள். இப்போது அவர்களின் பயமெல்லாம் ஒரு காலத்தில் நம் காலை வருடிக்கிடந்த பெண்கள் முன்னேறிவிட்டார்கள். முன்பு போல் போலி ஆதிக்கம் செலுத்தி மூட வழக்கங்களை சொல்லி அவர்களை அடிமைப்படுத்தி வைப்பது சாத்தியமில்லை. அவர்களை முன்பு போல் நம் அடிமைகள் என்று நினைக்கும் பட்சத்தில் ஆண்கள் கசக்கி எறியும் காகிதம் போல் வீசப்பட்டுவிடுவார்கள் என்ற பயத்தில் உடனே ஆணும் பெண்ணும் சமம் என்பதை ஒத்துக்கொண்டு பம்மிவிட்டார்கள். இப்போதும் ஆணும் பெண்ணும் சமம் என்பதை ஏதோ ஆண்கள் தங்களுக்கான ஒரு இடத்தை பெண்களுக்கு ஒதுக்கி கொடுத்துவிட்டதாய் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. காலம் காலமாய் அடிமைகளை நடத்தப்பட்டு வந்த பெண்கள் இன்று அவர்களின் மூக்குடைத்துவிட்டார்கள் என்பது தான் உண்மை.



இப்போது நான் ஆண்களை விட பெண் உயர்ந்தவள். பெண் வணக்கத்துக்குரியவள். பெண்களுக்கு சேவகம் செய்ய படைக்கப்பட்டவன் தான் ஆண் என்று சொல்கிறபோதும் அதே வகை கொதிப்பும் மன உளைச்சலும் இந்த மன நோயாளிகளுக்கு ஏற்படுகிறது.

உடனே என்னை சைக்கோ என்றும் நான் திருமண வாழ்வில் துன்பப்பட்டவள் என்பதால் என்னுடைய வலியை இங்கே பதிவு செய்கிறேன் என்றும் உடனே நான் ஒரு மருத்துவரை அணுகவேண்டும் என்றும் பல கீழ்த்தரமான( சகிப்புத்தன்மை கொஞ்சமும் இல்லாத வீரம் இல்லாத ஆண்கள் பயன்படுத்தும் வார்த்தைகள்) வார்த்தைகளால் வஞ்சித்து மகிழ்ந்தார்கள். இதனால் அவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனக்கும் ஆண்களை பிடிக்கும். அழகான ஆண்கள் மிகவும் பிடிக்கும்.


ஆண்களே ஒரு அழகான பெண்ணை பார்க்கிற பொழுது உங்களுக்கு மனம் படபடக்கிறது அவள் மேல் ஆசை வருகிறது. அவள் பின்னால் அலைவதில் ஒரு சுகம் இருக்கிறது. ஆனால் அப்படி அலைவதும் திரிவதும் அவள் உங்களின் செக்ஸ் தேவைகளுக்கும் சுகங்களுக்கும் ஒத்துழைக்கவேண்டும் என்பதற்குத்தானே. ஒரு பெண்ணின் விருப்பமில்லாமல் அவளின் உடல் பாகங்களை தீண்டும் எந்த ஆணும் அவளை கற்பழிக்கிறான். ஒரு ஆண் ஒரு பெண்ணின் உடல் பாகங்களை அவள் அனுமதி இல்லாமல் தொடுவதும் உரசுவதும் எதற்கு? அவளின் காம உணர்ச்சிகளை தூண்டி அவளை தங்கள் இச்சைகளை தீர்க்கும் பொருளாக மாற்றும் பொருட்டான நடவடிக்கைகளே தவிர அதில் ஒரு காதலும் கத்திரிக்காயும் இல்லை.




அதாவதுங்க ஆணாதிக்க வெறியர்கள் என்ன கமென்டுவார்கள் என்றால் கெட்ட கெட்ட வார்த்தைகள் அதாவது அந்த வார்த்தைகளை எல்லாம் கேட்டால் நான் பயந்து போய்விடுவேன் என்று கண்ணுகளா என்னிடம் ஆங்கிலத்திலும் தமிழிலும் கெட்ட வார்த்தைக்கென்றே தனி புத்தகம் இருக்கிறது. அப்படிப்பட்ட கோழைகளின் கமென்டுகள் எவ்வாறாக இருக்குமென்றால் மேலே நீங்கள் பார்க்கும் படம் ஆபாசமாக உள்ளதென்பார்கள். அதாவது ஒரு பெண்ணின் பாதத்தை அதன் மென்மையை அதன் பரிசுத்தத்தை ஆராய்ந்து பார்க்கும் ஒரு ஆண் அல்லது அவள் பாதங்களை வணங்கும் ஒரு ஆண் அவளுக்கு சேவகம் செய்யும் ஒரு ஆண் அல்லது அவள் பாதங்களை முத்தம் செய்யும் சுத்தம் செய்யும் ஒரு ஆண் - அது ஆபாசம். தொப்புளை காட்டிக்கொண்டு ஆம்ப்லேட்டுக்கும் பம்பரத்துக்கும் படுத்திருந்தால் ஐயோ அப்படியே வழிஞ்சு ஒழுகும் இல்ல.....ஏன்யா இப்படி இருக்கீங்க???



எனவே பெண்களே உங்கள் உடலை தீண்டி உங்கள் காம இச்சைகளை தூண்டிவிட்டு அதில் குளிர் காய நினைக்கும் ஆண் ஓநாய்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.

பெண்களே நீங்கள் ஆள பிறந்தவர்கள். ஒரு ஆணிடம் உங்கள் உடலை ஒப்படைத்துவிட்டு மல்லாக்க படுத்திருக்கும் அடிமை கோலம் பூண்டு வாழ்வதற்கு அல்ல. அழகும் கல்வியும் உங்களை உயர்த்தும். தொடர்ந்து முன்னேறுவதில் நோக்கமாய் இருங்கள். வீணான உடல் இச்சைகளுக்கு பலியாகவிடாதீர்கள்.


-உங்கள் தோழி வின்சி.
உங்கள் கேள்விகள் சந்தேகங்கள் கோட்பாடுகள் தர்க்கங்கள் நாகரீகமான மொழி பயன்பாட்டில் இருப்பின் என் முகவரிக்கு அனுப்புங்கள். பதில் அளிக்கப்படும்.


vincyontop@gmail.com

Monday 21 September 2009

கன்னியாகுமாரி மாமனார்களின் வரதட்சணை வெறி.

உலகின் அழகான படைப்புகளின் ஒன்றாக திகழ்ந்தும் அறிவில் ஆண்களை மிஞ்சும் பல சாகசம் புரிந்தும் உலகிற்கு உயிர்களை நீட்டித்து கொடுத்தும் தன் உடல் சுகங்களை ஓரங்கட்டிவிட்டு அடுத்த சந்நதியின் உடல் நலத்துக்காய் தன்னை வருத்தி பாடு பட்டும் இன்னும் இங்கே பெண்களை யாரும் வணங்குவதாய் தெரியவில்லை. வணக்கத்துக்கு உரியவள் பெண். அவளை இன்னும் தெருவில் கைகுழந்தையோடு தெருநாய் போல் அலைய வைக்கும் ஆணாதிக்க வர்க்கம் இருக்கும் போது அவற்றிற்கு பதிலடி கொடுக்க ஒரே வழி பெண் ஆதிக்கம் என்று நான் பல முறை கூறுகிறேன். என் மீது சேறும் சகதியும் வாரி இரைக்கிறீர்கள் போகட்டும்.

கன்னியாகுமாரியில் நடக்கும் கொடுமைகளில் வெளியே வந்திருக்கும் ஒரு கொடுமையை படிக்க இங்கே சொடுக்கவும்.

http://www.dinamalar.com/new/Incident_detail.asp?news_id=12935


தமிழக மாவட்டங்களின் அதிகமாக வரதட்சணை புழங்கும் மாவட்டம் கன்னியாகுமாரி. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் இங்கு பெண்களின் படிப்பு விகிதம் ஆண்களை விட மிக மிக அதிகம். உதாரணத்துக்கு இங்கே அதிக வரதட்சணையோடு கல்லூரியில் மூன்று நான்கு டிகிரி வாங்கிய ஒரு பெண் பத்தாம் வகுப்பு படித்து பஸ் டயர் உருட்டும் வேலை பார்க்கும் ஒருவனை மணந்துகொள்ள நேர்கிறது. அதற்கும் மாப்பிள்ளையின் தாய் தந்தை பேசும் பேரத்துக்கு அளவில்லை.

படிப்பிலும் அறிவிலும் சிறந்து விளங்குபவள், மாதா கடவுளுக்கு சமமாக போற்றப்படவேண்டியவள் இந்த கன்னியாகுமாரி மாவட்டத்தில் அழுகிய மீனுக்கு இணையாக விலை பேசப்படுகிறாள். பெண் ஆதிக்கம் கொண்டு தான் இதை உடைக்க முடியும் என்பது என் கருத்து மட்டுமல்ல அது தான் உண்மையும் கூட.

நீங்கள் கூட இதை முயற்சித்து பார்க்கலாம்.
மேட்ரிமோனி வாயிலாக ஒரு கன்னியாகுமாரி பையனின் புரோபைலை எடுத்துக்கொள்ளுங்கள். அவன் பி.ஈ எனும் அதி புத்திசாலி படிப்பு படித்தவனாக இருந்தால் நல்லது. ஹரியர்ஸ் வைத்து ஏதோ ஒரு குப்பை காலேஜில் பி.ஈ வாங்கிவிட்டால் இவர்கள் எல்லாம் ஐ.ஐ.டி யில் படித்த மேதாவிகள் என நினைப்பு. பிறகு அவன் சாப்ட்வேர் நிறுவனத்தில் இரா பகலாக உழைத்து இருபது முதல் முப்பதாயிரம் சம்பளம் வாங்குபவனாக இருக்கவேண்டும். செய்வது என்னவோ அடிமை வேலை இருந்தாலும் சாப்ட்வேர் எம்.என்.சி கூடவே என்ஜினியர் அட்ரா சக்க....
பிறகு அதில் கொடுக்கப்பட்டிருக்கும் நம்பருக்கு போன் செய்து உங்களுக்கு ஒரு மகள் இருப்பதாகவும் அவளும் பி.ஈ அல்லது அதற்கும் மேல் படித்தவள் என்றும் உங்கள் மகனின் புரோபைல் எங்களுக்கு பிடித்திருக்கிறது என்றும் சொல்லுங்கள். உடனே அந்த பையனின் தகப்பனாரிடமிருந்து கீழ்கண்ட கேள்விகள் வரும்.







வரதட்சணை வாங்கி திருமணம் செய்துகொள்ளும் ஆண்களை நீங்கள் கால் மேல் கால் போட்டுக்கொண்டு சுண்ட விரலை அசைத்து அருகில் அழைத்து உங்களின் பாதணிகளின் அடிப்பகுதியில் இருக்கும் அழுக்கை துடைத்துவிட சொல்வதற்கு உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு.அவர்களும் மண்டி போட்டு துடைத்துவிட வேண்டும். நமக்கு உபயோகம் இல்லாத பொருளை எதற்காக நாம் விலை கொடுத்து வாங்கவேண்டும்


பொண்ணுக்கு என்ன செய்வீங்க? (டேய் கெழ நாயே...போற வயசுல உனக்கு
ஏன்டா இந்த ஆசை. பையனுக்கு பொண்ண புடிக்குமா? பொண்ணுக்கு பையனை புடிக்கும? பெண் எப்படி பட்டவள்...குடும்பம் எப்படி அதை பற்றி எல்லாம் கவலை இல்லை. முதலில் கேட்கும் கேள்வி பொண்ணுக்கு என்ன செய்வீங்க. அதாவது என்னுடைய என்ஜினியர் ஆண் மாட்டுக்கு என்ன விலை என்று கேட்காமல் பெண்ணுக்கு என்ன செய்வீர்கள் என்று தான் முதல் கேள்வி இருக்கும். குறைந்தது ஒரு கோடி எதிர்பார்ப்பார்கள்.

இப்படி கோடி கணக்கில் பணம் சேர்த்து வைக்காத அப்பாவி பெண்கள் ஏதாவது கூலி வேலை செய்பவனோடு குடும்பம் நடத்த வேண்டியிருக்கும். பல குடும்பங்களில் பெண் பள்ளியில் ஆசிரியையாக இருப்பாள் ஆண் கூலி வேலைக்கு போவான். வரதட்சணை மட்டும் பத்து முதல் இருபது லட்சம் கேட்பான்.

இன்னும் சில கிழ அப்பாக்கள் ஒரு கோடி இருந்தால் பேசுங்கள்...இரண்டு கோடி இருந்தால் பேசுங்கள் என்பார். நீங்கள் அவரிடம் சம்மந்தம் பேச போனால் அவர் கேட்கும் முதல் கேள்வியே இது தான். எப்படி இருக்கிறது பாருங்கள்.
ஆக இப்படி வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ய சக்தி உள்ள பெண்கள் செய்து கொள்ளுங்கள். ஆனால் செய்துகொண்ட பின் ஒன்றை மட்டும் மனதில் நிலைநிறுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் ஒரு கோடியோ இரண்டு கோடியோ அல்லது பல லட்சமோ கொடுத்து அந்த ஆண் மாட்டை விலைக்கு வாங்கியிருக்கிறீர்கள். மாட்டை வாங்கி கயிறு கட்டி இழுத்துக்கொண்டு வருவோம். ஆனால் ஆணாதிக்க சமுதாயத்தில் மாடு ஓனருக்கு கயிறு (தாலி) கட்டுகிறது. பரிதாபம்.


இப்படி வரதட்சணை கொடுத்து ஒரு வீட்டில் நீங்கள் வாழ போகிற போது அந்த வீட்டிலிருக்கும் மாமனார் மாமியார் மற்றும் உங்கள் கணவன் உங்களுக்கு அடிமை பிராணிகளாக இருக்க நீங்கள் எதிர்பார்ப்பதில் தவறேதும் இல்லை. வரதட்சணை கொடுத்து திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் மாமனார் வீட்டில் கீழ்கண்டவற்றை எதிர்பார்க்கலாம்.

வரதட்சணை கொடுத்து வாங்கிய மாடு வீட்டு வேலை செய்யட்டும். எஜமானிக்கு சேவை செய்வது தானே அவனுக்கு அழகு. பின்னே ஒரு கோடிக்கு அவனை வாங்கிவிட்டு நாம் அவன் ஜெட்டியை துவைத்து போடுவது எவ்வகையில் ஞாயம். கணவனே கண் கண்ட தெய்வம் என்றா சொல்கிறாய் தாயே ஒரு கோடி இல்லையென்றால் உனக்கு கணவனே இல்லை.

உங்கள் மாமனார் உங்கள் உள்பாவாடையை துவைத்து போடட்டும். உங்களிடமிருந்து ஒரு கோடி இரண்டு கோடி என்று பேரம் பேசி தன் மகனை விற்றிருக்கிறார். புரோக்கர் வேலை பார்த்திருக்கிறார். உங்கள் கணவனின் சேவையில் ஏதேனும் குறைபாடு இருந்தால் உடனடியாக உங்கள் மாண்புமிகு மாமனாரை அணுகுங்கள்.

வரதட்சணை ஒழிப்பது கடினம் என்றாலும் இப்படி வரதட்சணை கொடுத்து மாட்டை வாங்கிவிட்டு அந்த வீட்டில் நீங்கள் போய் தொழுவத்தில் உட்கார்ந்துகொள்ளாதீர்கள் பெண்களே. ஆளவேண்டியது நீங்கள்.

Thursday 10 September 2009

என்னை பழித்த நல் உள்ளங்களுக்கு...

கடந்த பதிவுக்கு ரோஷ்மா என்ற பெண்ணோ ஆணோ அனானி வேடமிட்டு என்னை கண்டபடி திட்டி தீர்த்தார். அவரை ஒன்றும் குறை சொல்வதற்கு இல்லை. நான் சொல்ல வரும் கருத்துக்களை குறித்த புரிதலும் அந்த கருத்துக்கள் யாருக்காக சொல்லப்படுகின்றன என்ற அறிவும் இல்லாமல் இருப்பது தான் காரணம். எனவே மேலும் நான் தொடர்ந்து எழுதுவதற்கு முன் சில விஷயங்களை தெளிவுபடுத்துவது நல்லது என நினைக்கிறேன்.

முதலில் என் எழுத்தோடு என் தனிப்பட்ட வாழ்கையை ஒப்பிட்டு பார்க்கும் பாமர தனத்தை விடுங்கள். எழுத்தை எழுத்தாக பாருங்கள். அதில் இருக்கும் கருத்துக்களை விவாதியுங்கள். நான் கணவனுக்கு அடங்கிய ஒரு ஆல்பா பீமேலாக இருந்து கூட இது போன்ற கருத்துக்களை எழுதலாம். கொலை பற்றி கதை எழுதுபவன் கொலை செய்திருக்க வேண்டும் என நினைப்பது பாமரத்தனம்.

நான் சொல்ல வரும் கருத்துக்களை பற்றிய சில அடிப்படை விஷயங்களை பார்ப்போம்.
நான் பெரியாரோ பாரதியாரோ அல்ல. அவர்கள் எல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே பெண் உரிமைக்காக போராடியவர்கள். அவர்கள் விரும்பியதெல்லாம் சமத்துவம். ஆண்கள் பெண்களை கலாசாரம் மதம் மூட பழக்க வழக்கங்கள் என்ற பெயரில் சர்வ சாதாரணமாக அடிமை படுத்தி வைத்திருந்தார்கள். அப்படிப்பட்ட அடிமை விலங்குகளை உடைத்தெறிய போராடியவர்கள் தான் அவர்கள். நான் சொல்ல வருவது பெண்மை என்னும் புனிதத்தை போற்றவேண்டும் வழிபட வேண்டும். பெண் இனி மேல் ஒரு போதை பொருளல்ல அவள் ஒரு வழிபாட்டு ஸ்தலம். அவள் வணக்கத்துக்கு உரியவள். அவள் ஆணுக்கு சமமானவள் அல்ல. அவனை விட ஒரு படி உயர்ந்தவள் என்பது தான் என் கருத்தும் நம்பிக்கையும். காலம் காலமாக அடிமை பட்டு கிடந்த ஒரு இனம் இன்று சம வாய்ப்புகள் வழங்கப்படுகிற பொழுது சர்வ சாதாரணமாக ஆண்களை மிஞ்சி நிற்க முடிகிறதென்றால் அது நிச்சயம் உயர்ந்த இனம் தானே. நான் சொல்ல வரும் கருத்து இது தான். ஆண்களை விட பெண்கள் உயர்ந்தவர்கள். பெண்கள் போதை பொருள் அல்ல வழிபாட்டு பொருள்.





பெண்மையை அதன் புனிதத்தன்மையை போற்றி வழிபடும் தன்மையே ஆண்மை என்பது தான் என் கருத்து. இது நான் ஏதோ புதிதாக சொல்ல வந்த கருத்தும் அல்ல. பல நூற்றாண்டுகளாய் இந்த உலகத்தில் போற்றப்பட்டு வரும் ஒரு மேலான ஒழுக்கம். நம் தமிழர்களுக்கோ இந்தியர்களுக்கோ இது வியப்பை தரலாம். தரும். காரணம் நாம் தெருவில் ஒருவன் யார் மீதாவது மோதிவிட்டால் உடனே இருக்கும் வேலையை எல்லாம் விட்டுவிட்டு அவனை காட்டு மிராண்டித்தனமாக அடிக்க புறப்படும் காட்டு கூட்டம். அவர்களிடம் ஒழுக்கத்தையோ அறிவையோ பண்பாட்டையோ எதிர்பார்க்க முடியாது. அப்படி பட்ட ஒரு காட்டுவாசி கூட்டத்துக்கு பெண்மையின் மேன்மையை போற்ற தெரியாது. வெறும் ஐந்து நிமிட சுகத்துக்காக பெண்ணை வன்புணர்ந்து அதை ஏதோ பெரிய வீர தீர செயல் செய்தது போல் மீசையை தடவி விட்டபடி செல்லும் ஆண்கள் தானே இங்கே இருக்கிறார்கள்.

இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு பெண்ணும் கடவுளுக்கு சமமானவள். அவளை கடவுளாக வழிபட படைக்கப்பட்டவர்கள் தான் ஆண்கள். இது தான் என்னுடைய கருத்து. பெரியாரோ பாரதியோ சொன்ன பெண் உரிமை அல்ல. ஆண் பெண் சமத்துவமும் அல்ல.


யாருக்காக இதை எழுதுகிறேன்.
காலம் காலமாக அடிமைகளாகவே வாழ்ந்துவிட்ட நமக்கு தலை நிமிர்ந்து நடப்பது கூட அகங்காரமாக தோன்றலாம். அப்படி பெண்மையின் மேன்மை குறித்து சராசரி அறிவு கூட இல்லாமல் கோழைத்தனமாக ஆண்களை சார்ந்து அவர்களுக்கு கீழே வாழ விருப்பப்படும் மஞ்சள் பூசி தாலி சொருகி புடவை சுற்றிய அப்பாவி பெண்கள் சிறிதளவாவது தங்கள் இனத்தின் மேன்மையை உணரவேண்டும் என்பதற்காக இதை எழுதுகிறேன். சிலர் என் மீது கோபப்படலாம். படுங்கள். எந்த புதிய சித்தாந்தமும் சொல்லப்படுகிற போது பொது ஜனங்களால் கல்லடித்து துரத்தப்பட்டது என்பதை நான் சொல்ல தேவையில்லை.

யாருக்காக இதை எழுதுகிறேன்.
அதே போல் பெண்களை தெய்வமாக மதித்து அவர்களை போற்றி அவர்களின் அன்பிலும் அதிகாரத்திலும் வாழ்வதால் தங்கள் வாழ்வு மேன்மை பெறும் என ஆணித்தரமாய் நம்பும் லட்சாதி லட்சம் ஆண்களும் இங்கே இருக்கிறார்கள். நீங்களே சிந்தித்து பாருங்கள் ஆண்கள் காதல் என்ற பெயரில் ஒரு பெண்ணிடம் அடிமை பட்டு கிடப்பதை பெரிய கொடுப்பனையாக நினைப்பார்கள் அதுவே திருமணம் முடிந்தவுடன் ஈகோ தலை தூக்கும். நான் புருஷன் என்ற அகங்காரம் வரும். பெண்ணை ஆழவேண்டும் என்ற முடியாத ஆசைக்கு வலை வீசுவதால் சிக்கல்கள் வரும். ஆண்களில் இது போன்ற கீழ்த்தரமான ஈகோவை தூக்கி எறிந்து பெண்களை வழிபாட்டு பொருளாக பாவிக்க தெரிந்த உன்னத ஆண்கள் இங்கே நிறையே பேர் இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் தான் நான் இதை எழுதுகிறேன்.

பெண்களின் ஆடையை அணிந்து பெண்ணாக வாழ விருப்பப்படும் ஆண்கள் புராண காலம் தொட்டு இருந்து வருகிறார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் அப்படிப்பட்ட ஆண்களை நாம் பழிப்போம். அவர்களை கேலி பேசுவோம். இன்று எவ்வளவோ சமுதாய மாற்றம் வந்துவிட்டது. இன்று அவர்களை மரியாதையோடு திருநங்ககைகள் என்று அழைக்கிறோம். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என தீர்மானிக்க அதிகாரம் உண்டு. எனவே நான் எழுதும் இந்த கருத்துக்களை நீங்கள் படித்து தான் ஆகவேண்டும் என்று நான் நிர்ப்பந்திக்கவில்லை. உங்களுக்கு விருப்பம் இருந்தால் படியுங்கள். இல்லையேல் தயவு செய்து என் பக்கங்களை நாடவேண்டாம். அப்படி படித்துவிட்டு சரியான புரிதலும் அறிவு முதிர்ச்சியும் இல்லாமல் என்னை பழிக்க வேண்டாம். என் பக்கங்களை எத்தனை பேர் படிக்கிறார்கள்...யாரும் படிக்கவில்லையே என்று நான் என்றைக்கும் வருத்தப்படுவது இல்லை.

இந்த கருத்துக்களில் உடன்பாடு இல்லாதவர்கள் தயவு செய்து என் பக்கங்களுக்கு வரவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

வாசகர் கேள்விகளுக்கு பதில்கள்.
1. இவ்வளவு நல்ல கருத்துக்களை சொல்லும் நீங்கள் ஏன் உங்கள் பிளாகில் ஆபாசமான படம் வைத்திருக்கிறீர்கள்?

எத்தனை வன்மம் பாருங்கள். ஒரு பெண்ணின் பாதங்களை தொட்டு வணங்குவதோ அல்லது தசைகளை நெருடி ஓய்வு கொடுப்பதையோ ஒரு ஆண் செய்வது போன்ற காட்சி ஆபாசமாக தெரிகிறது. இதே ஒரு ஆணின் காலில் ஒரு பெண் விழுவது போல் எத்தனை காட்சிகள் சினிமாவில் பத்திரிகையில் தொலைக்காட்சியில் வருகிறது. என்றாவது அது ஆபாசம் என்று நீங்கள் ஒதுக்கியதுண்டா. ஆண்களுக்கு கால் அமுக்கி விடுவதும் முதுகு தேய்த்து விடுவதும் ஒரு பெண்ணின் அன்றாட வேலைகளில் ஒன்று என கருதியும் அவை ஆபாச வர்க்கம் இல்லை என்ற உறுதியும் இருக்கும் உங்களுக்கு இது போன்ற படங்கள் ஆபாசமாக தெரியும். தொப்புளில் பம்பரமும் ஆம்லேட்டும் போடுவது போல் படம் போட்டால் இழித்துக்கொண்டு வருவீர் தானே.

Tuesday 8 September 2009

என் கணவர் ஆண்மை இல்லாதவர் - அந்தரங்க பேட்டி.- 1

Vincy - உங்கள் கணவருக்கு ஆண்மை இல்லை என்பதை எப்போது ஒப்புக்கொண்டார்.

Menaka: முதலிரவில். மற்ற முதலிரவு போல் ஆண் உள்ளே காத்திருக்க பெண் தலை குனிந்தபடி பால் சொம்போடு உள்ளே போகும் ஆணாதிக்க தனமான முதலிரவு இல்லை எங்களுடையது. சொல்லப்போனால் முதலிரவு அறையில் நான் தான் முதலில் போய் அமர்ந்திருந்தேன். புடவை கட்டவில்லை. ஒரு ஜீன்ஸும் டீ ஷர்டும் அணிந்திருந்தேன். பெமினா படித்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் என்னுடைய பாய் பிரண்ட் கம் கணவன் வந்தான். தயங்கி தயங்கி உள்ளே வந்தான். நான் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு மீண்டும் பெமினாவில் ஆழ்ந்திருந்தேன். அவன் கட்டிலின் ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு என் பாதங்களையே பார்த்தபடி இருந்தான்.
செக்ஸ் என்பது நான் விருப்பப்படும் பொழுது அவன் எனக்காக அளிக்க வேண்டிய ஒரு உடல் சுகம் என்பது அவனுக்கு தெரியும். அதனால் அமைதியாக அமர்ந்திருந்தான். நான் கால் மேல் கால் போட்டிருந்தது அவனுக்கு பிடித்திருந்தது. அரை மணி நேரம் புத்தகம் படித்துவிட்டு அதை சோபாவில் எறிந்தேன். எழுந்து கொண்டேன். உடனே அவன் நான் எதிர்பார்க்காத நிமிடத்தில் என் காலில் விழுந்தான். எனக்கு தலை கால் புரியவில்லை. கோடானு கோடி பெண்களை முதலிரவு அறையில் தங்கள் காலில் விழும்படி அதிகாரம் செய்த ஆண் வர்க்கத்தின் ஒரு உதிரி என் காலில் விழுந்து கிடந்ததை பார்த்தபோது பெண் விடுதலையும் அதன் ஆதிக்கமும் மெல்ல துளிர்விட்டிருப்பதை உணர முடிந்த்தது.

ஏய் என்னது இது சில்லியா என்று சொல்லிவிட்டு நான் பாத்ரூமுக்கு போனேன். இதே ஆண்களாய் இருந்திருந்தால் தன் காலில் ஒரு பெண் விழுந்துவிட்டால் போதும் உடனே பெரிய ராஜாவை போல் பாவ்லா செய்து அவளை எழுப்பி ஆசீர்வதித்து தூ....கான்ட்ராவி....(கோபத்தோடு சிரிக்கிறார்).நான் அவனை கண்டுகொள்ளாதது அவனுக்கு ஏமாற்றமும் என்னை குறித்து ஒரு பயமும் வந்திருக்கும். நான் டாயிலட்டுக்கு போய் கதவை சாற்றிக்கொண்டேன். வெளியே வந்து பார்த்தபோது அவன் டாயிலட் வாசலில் நின்றுகொண்டிருந்தான். நான் மெதுவாக புன்னகைத்தேன். அவனும் பதிலுக்கு சிரித்தான். போய் பிளஷ் பண்ணிட்டு வா என்றேன். அவன் உடனே உள்ளே போய் பிளஷ் செய்துவிட்டு வந்தான். அதை பார்க்க பரிதாபமாக இருந்தது.
அவன் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தபோது உட்கார் என்று கட்டிலின் விளிம்பை காட்டினேன். அவன் மெதுவாய் அமர்ந்தான்.



















ஆண்மை இல்லாதவர்கள் நாட வேண்டியது என் பூட்ஸின் அடிப்புறத்தை.


"நான் ஒரு துரோகம் பண்ணிட்டேன். என்று தொடங்கி தனக்கு ஆண்மை இல்லை என்பதையும் என் மேல் தீராத காதலும் மோகமும் இருந்ததால் தான் என்னை துரத்தி துரத்தி காதலித்ததாகவும் அது பெரிய தப்பு எனவும் என்னை ஏமாற்றிவிட்டதாகவும் கூறினான். அவனை நான் மன்னிக்கவேண்டும் எனவும் கெஞ்சினான். நான் அவனை பார்த்து லேசாக சிரித்தேன். நீ ஒண்ணுக்கும் யூஸ் இல்லாத தகர டப்பான்னு எனக்கு என்னைக்கோ தெரியும். ஆனாலும் உன்ன ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் தெரியுமா முதல்ல நீ என் மேல வச்சிருந்த பக்தி நிறைந்த காதல். என்னையே சுற்றி சுற்றி வந்த. எனக்கு என்னவெல்லாமோ செஞ்ச. நான் என்ன சொன்னாலும் அது எவ்வளவு கஷ்டமான காரியமா இருந்தாலும் ஓடி ஓடி பண்ணின. அது எனக்கு புடிச்சிருந்தது. அதனால உன்ன கல்யாணம் பண்ண முடிவு பண்ணினேன்.

அப்புறமா என்ன விட்டு போயிட மாட்டியேன்னு கேட்டான். உன்ன மாதிரி ஆப்ஜக்ட எல்லாம் யாரும் மிஸ் பண்ண மாட்டாங்க. கல்யாணம் ரிஷப்ஷனுன்னு நின்னுகிட்டே இருந்து கால் எல்லாம் வலிக்கிது. கொஞ்சம் அமுக்கி விடுன்னு சொன்னேன். சொன்னது தான் தாமதம் தரையில உக்காந்து அமுக்க ஆரம்பிச்சிடிச்சு.

Vincy - உங்கள் கணவர் செக்ஸ் விஷயத்தில் லாயக்கில்லாதவர் என தெரிந்தும் அவரை இன்னும் ஏற்றுக்கொண்டு வாழ்கிறீர்கள். அது மிக பெரிய விஷயம். செக்ஸ் விஷயத்தில் பிறகு உங்களை எப்படி திருப்தி படுத்திக்கொள்கிறீர்கள்.


Menaka - கட்டிய கணவன் மட்டுமே இந்த உலகத்தில் தனக்கு ஒரே ஆண் என வாழும் கோழை பெண் அல்ல நான். அப்படி வாழவேண்டும் என இந்த ஆணாதிக்க சமுதாயம் நம்மை ஊக்குவிக்கிறது. காரணம் பெண்களின் அழகும் அறிவும் ஆண்களை விட மித மிஞ்சியது. அப்படிப்பட்ட ஒரு பெண்ணை காலம் பூராவும் தன் வசம் வைத்திருக்கும் தகுதி இங்கு பல ஆண்களுக்கு கிடையாது. அந்த பயத்தில் தான் இப்படிப்பட்ட முட்டாள் தனமான வரைமுறைகளை கலாசாரம் என்ற பெயரைல் பரப்பி விட்டிருக்கிறார்கள். தங்கள் திறமையால் சாதிக்க முடியாததை சட்டம் போட்டு சாதிக்க நினைக்கும் கோழைகள் தான் ஆண்கள். அந்த சட்டங்களை கலாசாரம் என்ற பெயர் சூட்டி அழைக்கிறார்கள்.....

தொடரும்....


இதை படித்துவிட்டு ஸ்கூள் பிள்ளைகள் போல் ஆண்களே தயவு செய்து இது போல கமென்ட் எழுத வேண்டாம்..."வின்சி தோழி வெறும் செக்ஸ் மட்டும் வாழ்க்கை இல்லை...இல்லறம் என்பது....இத்யாதி இத்யாதி...."

Monday 31 August 2009

ஆண்கள் புஸ்ஸ்ஸ்ஸ் - மீள் பதிவு

பெண்கள் ஆட்சி செய்ய ஆண்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் காலம் எப்போது வருமோ அன்று தான் இந்த நாடு ஒழுக்க நெறிகளில் சிறந்து முன்னேற்ற பாதையில் நகரும்.





















தொப்பையும் தொந்தியுமாய் திரியும் ஆண்களே உங்களுக்கெல்லாம் மண்டியிட்டு இவளை வணங்குவதை தவிர வேறொன்றும் சாத்தியம் இல்லை.
அதுவும் சாத்திய படாதவர்கள் அவள் பாத தடங்களை சேவியுங்கள்







































என்ன பார்க்கிறீர்கள்.....ஜொள்ளை துடையுங்கள் முதலில். என்ன....அவளின் அந்த மென்மையான பாதங்களை தொட்டு வணங்க வேண்டுமா....முதலில் அதற்கெல்லாம் ஆண் என்ற தகுதி மட்டும் போதாது.






















பெண்கள் உங்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள்
எல்லா துறையிலும் ஜெயிக்கிறோம்.
இன்னும் எதற்கு வீம்பு. வயின் ஷாப்பில் நின்று வேட்டி அவிழ்வது கூட தெரியாமல் குடிக்கத்தான் ஆண்களே நீங்கள் எல்லாம் லாயக்கு. வாருங்கள் இந்த தேவதையின் பாதங்களை வருடி உங்கள் வணக்கத்தை தெரிவியுங்கள். என்ன ஒரு எழுச்சி.























சிரிப்பு தான் வருகிறது. என்றைக்கு தான் இந்த ஆண்கள் எல்லாம் இப்படி அலைவதை நிறுத்த போகிறார்களோ.

























அம்மா வரதட்சனை, ஈவ் டீசிங் கேசுல மாட்டி விட்டுடாதேம்மா....நீ என்ன சொன்னாலும் செய்றேன்......























என்னது கல்யாணத்துக்கு அப்புறம் வாங்க போங்கன்னு கூப்பிடணும்....தாலி கட்டிக்கணும்....மெட்டி போட்டுக்கணுமா....அடிங்க.....ராஸ்கள்.


















உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா 90% ஆண்கள் தங்கள் முகத்தை புதைக்க ஏங்கும் இடம் எது தெரியுமா....அந்தோ பரிதாபம் இது தானாம். என்ன செய்வது அவரவர் தகுதிக்கு ஏற்ற ஆசை. ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்றால் இன்றைக்கு இருக்கும் ஆண்களுக்கு அதற்கு கூட தகுதி இல்லை என்று.























ஏன் எப்போதும் அழுக்கு சேலை கட்டிக்கொண்டு கிச்சனில் வேலை செய்தபடியே நாம் இருக்க வேண்டும். என்று நாம் இப்படி அமர்ந்து ஆண்கள் குனிந்து நிமிர்ந்து வீட்டு வேலை செய்வதை பார்த்து ரசிப்பது.


ஏக்கத்துடன்

உங்கள் தோழி....

வின்சி

vincyontop@gmail.com

வன்முறை புகார் - அலறும் ஆண் கொத்தடிமைகள்

எனக்கு வந்த கடிதத்தை இங்கே பிரசுரிக்கிறேன்.

அன்புள்ள வின்சி,

உங்கள் வலை பூ என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது. நீங்கள் பெண்களின் உயர்ந்த உண்மை நிலையையும் ஆண்கள் எப்படி எல்லாம் பெண்கள் மீது வன்முறை செய்கிறார்கள் என்பதையும் மிக தெளிவாக விளக்க்குகிறீர்கள். நிச்சயமாக ஆண்கள் பெண்களின் அடிமைகள் என்பதை நான் முழுக்க நம்புகிறேன். என்னுடைய வாழ்வில் நடந்த சம்பவத்தை இங்கே விளக்குகிறேன். படித்து பதில் எழுதுங்கள்.

வின்சி என் பெயர் பிரியா. நான் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியக பணியாற்றுகிறேன். என்னுடைய முறை பையன் பாஸ்கர். என்னை விட ஐந்து வயது சின்னவன் என்னை காதலித்தான். எனக்கு அது கோமாளித்தனமாக தெரிந்தது. ஆனால் அவன் என்னை காதலிப்பதாகவும் என் மீது பையித்தியமாக இருப்பதாகவும் சொன்னான். ஒரு நாள் என் உள்ளாடைகளை எடுத்து முகர்ந்து பார்த்தபடி இருந்தபோது கையும் களவுமாக பிடித்தேன். என் காலில் விழுந்தான். என்னை விட்டு போக மனம் இல்லை எனவும் எனக்கு அடிமையாக இருக்க விரும்புவதாகவும் சொன்னான். பன்னிரண்டாம் வகுப்பு பெயிலானவன். அவன் நன்றாக படிக்காமல் நல்ல வேலை கிடைக்கவில்லை. நான் அவரை வீட்டோடு மாப்பிள்ளை அதாவது வேலைக்காரன் – கொத்தடிமை ஆக்க நினைத்தேன். அவனிடம் விருப்பத்தை சொன்னேன். அதற்காகவே காத்திருந்தது போல் ஒத்துக்கொண்டான்.










நான் டாயிலட் யூஸ் பண்ணப்புறம் உள்ள போய் Flush பண்ணி விடணும் புரியுதா?




வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க வேண்டும்.
என்னுடைய அம்மா அதாவது அவருடைய மாமியார் மற்றும் என்னுடைய அக்காவை அனுசரித்து போக வேண்டும்.
வீட்டு வேலைகள் எல்லோருடைய துணி மணிகளை துவைத்து போட வேண்டும். டாயிலட் கழுவுவது முதல் வாசல் தெளிப்பது வரை எல்லாம் செய்ய வேண்டும்.
என் அக்கா அம்மா நான் உட்பட காரில் வெளியே சென்று வீடு திரும்பி ஹாரன் சத்தம் கேட்டவுடன் கேட் திறந்துவிட வேண்டும்.
கழுத்தில் தாலி கட்டிக்கொள்ள வேண்டும்.
நான் உண்ட எச்சில் தட்டில் தான் சாப்பிட வேண்டும்.
என் ஆடைகளை என் அனுமதி இல்லாமல் தொடக்கூடாது.
வீட்டை விட்டு வெளியே போக கூடாது
இப்படி நிறைய சட்ட திட்டங்களை வகுத்தேன். ஒன்றுக்கும் உதாவாத அவன் எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டான். திருமணம் முடிந்து என் சட்ட திட்டங்களின் படி நடந்துகொண்டான். என் அக்காவும் அம்மாவும் அவனை நிறைய வேலை வாங்கினார்கள். நான் பெரும்பாலும் அலுவலகத்திலிருந்து தாமதமாக தான் வீட்டுக்கு வருவேன். என் அம்மா தான் அவனை முழுவது கண்டித்து வேலை வாங்கி வந்தார். அவனும் சலிக்காமல் எல்லா வேலைகளையும் செய்வான்.
இரவில் என் ஆடைகளை கொடுத்தால் முகர்ந்து பார்த்துவிட்டு கட்டிலுக்கு அடியில் போய் படுத்துக்கொள்வான்.

என் அக்கா மிகவும் அரகன்ட். அவளுடைய தோழிகளுடன் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் பார்ட்டி நடத்துவாள். நான் இரவில் சில சமயம் கலந்துகொள்வேன். அப்போது அவர்களின் தோழிகள் முன் இவனை சுக்கு நூறாக கிழிப்பாள். இவன் பதிலேதும் பேசினாள் அவ்வளவு தான். சில சமயம் அடித்தும் விடுவாள். என்னிடம் வந்து புகார் சொல்வான். நான் திருமண சட்ட திட்டத்தின்படி என் அம்மா அக்காவை அனுசரித்து போக வேண்டியது உன் கடமை என்பேன். அதற்கு மேல் எதுவும் பேச மாட்டான். கிட்ட தட்ட் எங்கள் வீட்டில் ஒரு அடிமை போலவே வைத்துக்கொண்டோம்.

மூன்று மாதம் கழித்து அலுவல் மித்தமாக நான் அமெரிக்க செல்ல வேண்டியிருந்தது. நான் போன பிறகு என் கணவனின் நடத்தையில் மாற்றம் இருப்பதாகவும் முன்பு போல் வேலைகள் செய்வதில்லை எனவும் கீழ்படிதல் இல்லை எனவும் என் அம்மா சொன்னாள். நான் போனில் என் கணவனை கண்டித்தேன். இவ்வாறு நடந்துகொண்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டினேன். பிறகு இரண்டு மூன்று நாள் ஒழுங்காக வேலை பார்ப்பான் பிறகும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதை. அதிக வேலைகள் மத்தியில் என் கணவனை கண் காணிப்பது கடினமாக இருந்தது. அப்போது தான் ஒரு நாள் அந்த பூதாகர சம்பவம் நடந்தது.

என் அக்காவின் தோழிகள் ஒரு வீட்டில் தங்கியிருந்தார்கள். அந்த ஹாஸ்டலில் திடீரென வேலைக்காரி வரவில்லை.அதனால் பாஸ்கரை அவர்களின் வீட்டுக்கு போய் வீட்டை சுத்தம் செய்து அவர்களின் துணி மணிகளை துவைத்து போட்டுவிட்டு வரும்படி என் அக்கா சொல்லியிருக்கிறார்ள். அதற்கு அவன் முடியாதென்றிருக்கிறான். பிறகு இருவருக்கும் வாக்குவாதம் முற்றிப்போய் என் அக்கா பாஸ்கரை செமத்தையாக அடித்துவிட்டாள். கோபத்தில் பாஸ்கர் என் அக்கவை நோக்கி கெட்ட வார்த்தையில் திட்ட அது என் காதுக்கு வந்தது. எனக்கு பயங்கர கோபம். ஒரு வாரத்தில் சென்னை வந்தேன்.

பாஸ்கர் என்னிடம் மன்னிப்பு கேட்டான். நான் விடவில்லை. என் அக்கவையும் என் அம்மாவையும் கெட்ட வார்த்தையில் திட்டிய அவனை தண்டிக்க நினைத்தேன். என் அக்காவுடன் போய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் அவனை கைது செய்து கொண்டு போனார்கள். எனக்கு மனது கேட்கவில்லை. ஒரு வாரத்தில் வெளியே கொண்டு வந்தேன். இப்போது ஒரு பெண் நினைத்தால் எப்படி எல்லாம் தன்னை ஒழுக்க நெறிக்குள் கொண்டு வரலாம் என்பதை உணர்ந்தவன் ஆனான்.இப்போது என் அக்காவின் செருப்பை நக்க சொன்னால் கூட பவ்வியமாக நக்குகிறான் என் கொத்தடிமை கணவன். ஹா ஹா ஹா


இப்படிக்கு பிரியா


vincyontop@gmail.com

Wednesday 26 August 2009

ஆண்கள் புடவை துவைக்க பிறந்தவர்கள்

DISC: நான் ஒரு பெண் என்பதால் என் மீது பழி வாரி இரைக்கும் விதமாக வீராதி வீர ஆண்கள் அனானி கமென்டுகளுடன் வருவார்கள். ஏனென்றால் ஆண்களால் அது தான் செய்யமுடியும். ஹா ஹா ஹா....குடித்துவிட்டு கெட்ட வார்த்தை பேசுவதையும் அடிப்பதையுமே வீரம் என்று எண்ணிக்கொண்டிருக்கும் பாமர கூட்டமல்லவா அது. அவர்களுக்கு பெண்களே நம் முன்னேற்ற சிந்தனைகள் புரிய போவதில்லை.



நாம் அவிழ்த்து எறிந்த அழுக்கு பேன்டீசை தலையில் தொப்பி போல் அணிந்தபடி ஒரு உள்பாவாடையை தோளில் துண்டாக போட்டுக்கொண்டு கரண்டியுடன் அடுப்படியிலிருந்து வெளிப்படும் கணவனையோ பாய் பிரண்டையோ சோபாவில் அமர்ந்தபடி காலை பேப்பரை கொஞ்சம் விலக்கி ஒரு வித ஏளன சிரிப்போடு பார்க்கும் காலம் எப்போதும் வரும். விளம்பரங்களில் பெரும்பாலும் டாயிலட் கழுவது பாத்திரம் கழுவுவது துணி துவைப்பது என வீட்டு வேலைகளுக்கு எல்லாம் பெண்கள் தான் பிரதிநிதிகளாய் காண்பிக்கப்படுகிறார்கள். ஏன் ஆண்கள் வீட்டு வேலைகளை செய்ய கூடாதா?


இங்கு தான் இந்த அபத்தங்களும் அந்நியாங்களும் அரங்கேறுகின்றன. கணவன் காலையில் சமையல் செய்ய மனைவி காபி கப்போடு சோபாவில் அமர்ந்தபடி பேப்பர் படிக்கும் காலம் எப்போதும் வரும். மனைவியின் பூட்ஸ்களை கணவனோ பாய் பிரண்டோ பளபளப்பாக பாலீஷ் போட்டு துடைத்து வைக்கும் காலம் எப்போது வரும். மனைவிக்கு கார் கதவு திறந்து விடுவது தொடங்கி டிரெஸ்சிங் ரூமில் ஆங்காங்கே அவிழ்த்து போடும் அழுக்கு ஆடைகளை மிகுந்த மரியாதையோடு எடுத்து மடித்து வைத்து பின்னர் துவைத்து போடும் காலம் எப்போது வரும்?






ஏய் கோமாளி ஒரு ரூபா சம்பாதிக்க துப்பு இல்ல. அங்க என்னடா பண்ணிகிட்டு இருக்க. சீக்கிரம் போ என் உள்பாவடை பார்டர்ல ஏதோ கறை இருக்கு பாரு. இன்னும் நல்ல பிரஷ் போட்டு துவச்சு இஸ்திரி போட்டு வை டா.




நம் நாட்டில் தான் இந்த துரதிர்ஷ்டம். இங்கே கணவன் இரவு குடித்துவிட்டு வந்து நடு ஹாளில் மல்லாக்க படுத்திருக்க மனைவி மஞ்சள் நிறத்தில் நூல் ஒன்றை அடிமைகளின் ஆதார சின்னம் போல் கழுத்தில் அணிந்துகொண்டு தண்ணீர் பிடிப்பதும் சமையல் செய்வதும் கணவனின் உள்ளாடையை துவைப்பதுமாய் திரிகிறாள். அவளுக்கு என்று தான் விடுதலை என்று புரியவில்லை. தாலி என்ற அந்த தரித்திரத்தை கழுத்தில் ஆண்கள் அடிமை சின்னமாய் கட்டிவிட்டு பெண்களை தங்களுக்கு பணிவிடை செய்ய வைத்துக்கொள்கிறார்கள். இன்னும் இங்கே சில பெண்கள் நூல் கட்டிக்கொள்வதும் பெரிய பொட்டு வைத்துக்கொள்வதுமாய் தாங்கள் அடிமைகள் என பிரகடனப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். பெண்களே சமுதாயத்தில் மாற்றம் வர நீங்கள் தான் முதலில் ஒத்துழைக்க வேண்டும். எப்போதும் தாலி என்னும் ஒரு அவமானத்தை கழுத்தில் தொங்கவிட்டபடி அலையாதீர்கள்.

பெண்கள் இந்த நாட்டில் ராணிகள் போலும் ஆண்கள் சேவகர்கள் போலும் உலா வரும் காலம் அண்மையில் உள்ளதாகவே எனக்கு படுகிறது. இப்போது ஆண்கள் படிப்பில் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என ஆண்டுக்கு ஆண்டு நிரூபித்து வருகிறார்கள். பெண்கள் தான் அதிக அளவில் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுகிறார்கள். அப்போது பாருங்கள் இத்தனை வருடமாய் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு எத்தனை அறிவு வளம் நசுக்கப்பட்டிருக்கிறது. இனி ஆண்களுக்கு படிப்பு ஏறாது என்றே எனக்கு தோன்றுகிறது. அவர்கள் ஈவ் டீசிங் செய்வதையும் புட் போர்டில் பயணிப்பதையும் த்தா என்ன என்று யாரையாவது முறைத்து அடித்து வன்முறையில் வீரத்தை காட்டும் மலம் தின்னும் கோளைகள் போலும் இருப்பதால் அவர்களின் அடுத்தடுத்த தலைமுறை படிப்பில் கோட்டைவிட்டுவிடும்.

பிறகென்ன அலுவலகங்களில் அதிக சம்பளம் வரும் உயரிய பதவிகளில் நாம் தான் இருப்போம். ஆண்கள் டேபிள் துடைக்கவோ டாயிலட் கழுவவோ வைத்துக்கொள்ளலாம். ஆனால் அப்படி ஒரு காலம் வந்தாலும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் அவன் ஒரு மனுஷன் என்று அடிமை சின்னம் தாலியை கழுத்தில் பித்துக்கொண்டு அவன் பின்னாலே அலையாதீர்கள். அவனை உங்கள் பின்னால் அலைய விடுங்கள்.

பெண்களே உங்கள் அழகை பராமரிப்பதிலும் உங்கள் அறிவை பெருக்குவதிலும் அதிக நேரம் செலவிடுங்கள். ஆண்களுக்கு சமைத்து போடுவதில் அல்ல. சமைப்பதுக்கும் துவைப்பதற்கும் பிறந்தவர்கள் ஆண்கள். எனவே அந்த அதி கௌரவ வேலைகளை அவர்களிடம் விட்டுவிட்டு உங்கள் அறிவை பெருக்குங்கள். கல்வி தான் உங்கள் கேடையம். இன்று இத்தனை பெரிய மாற்றம் சமுதாயத்தில் ஆண்களை வாய் பிளக்க வைத்திருக்கிறதென்றால் அதற்கெல்லாம் கல்வி தான் காரணம். நமக்கு இறைவன் கொடுத்திருக்கும் கொடை கல்வியும் அழகும். அது இரண்டையும் பேணுங்கள்.

வரதட்சணை கேட்ட் கொடுமை படுத்தும் ஆண்களையும் ஏன் இன்று வீட்டிலோ வெளியிலோ ஒரு பெண் மேல் கை வைக்கும் எந்த ஆணையும் தண்டிக்க சட்டத்தில் வழி இருக்கிறது. ஈவ் டீசிங் போன்ற கொடூர குற்றங்களுக்கும் ஜெட்டியோடு ஜெயிலில் தள்ள பாக்கியம் நமக்கு இருக்கிறது. எனவே தலை நிமிர்ந்த இந்த அற்ப ஆண்களை எதிர்கொள்ளுங்கள்.


நிறைய ஆண்களுக்கு பெண்களின் ஆடைகளை அதுவும் உள்ளாடைகளை முகர்ந்து பார்க்க கொள்ளை ஆசை என் பழைய பாய் பிரண்டுக்கும் இது போன்ற ஆசை இருந்தது. அதை பற்றி அடுத்த பதிவில்.

Tuesday 11 August 2009

சோ அவர்களின் ஆணாதிக்கம்.

சமீபத்தில் சோவின் பேட்டி ஒன்றில் அவரது ஆணாதிக்க போக்கை உணர முடிந்தது. 33% இட ஒதுக்கீடு பற்றி ஒரு கேள்விக்கு அவர் என்ன சொல்கிறாரென்றால் பெண்கள் எல்லோரும் குடும்பம் கணவன் பிள்ளைகள் என மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள். அவர்களுக்கு இட ஒதுக்கீட்டிலோ அரசியலிலோ ஈடுபாடு இல்லை. ஆனால் பெண்ணிய தலைவிகள் தான் இதை வலியுறுத்தி வருகிறார்கள். எனவே இட ஒதுக்கீடு அவசியமற்றது என்கிறார்.

சோவின் பயம் எனக்கு புரிகிறது. ஆண்களையும் பெண்களையும் சமமான ஒரு தளத்தில் முன்னேற விட்டால் பெண்கள் தங்கள் அறிவிலாலும் அழகாலும் திறமையாலும் ஆண்களை விட பன் மடங்கு முன்னேறி விடுவார்கள். அப்படி ஒரு காலம் வந்தால் எங்கே ஆண்கள் தங்களின் உண்மையான தாழ்ந்த நிலைக்கு போய்விட நேருமோ என்ற பயம் தான் அவரை இப்படி எல்லாம் பேச வைக்கிறது. அவருக்கு பெண்கள் எப்போதும் குடும்ப வரை முறையில் இருக்க வேண்Dஉம். தண்ணி கொண்டா டீ.....என்றால் பயபக்தியுடன் தண்ணி சொம்புடன் முன்னால் வந்து நிற்க வேண்டும். வீட்டு வேலைகள் செய்ய வேண்டும். தனக்கு செக்ஸ் இலவசமாக தன் விருப்பத்துக்கு தக்கபடி கொடுக்க வேண்டும். இது எல்லாம் பெண்கள் முன்னேறிவிட்டால் நடக்காது. எங்கே ஆண்களுக்கு பெண்கள் அவிழ்த்து எறியும் அழுக்கு ஆடைகளை துவைத்து போடும் நிலை வந்துவிடுமோ என்ற பதட்டத்தில் நம்மை எல்லாம் ஒரு போலி பிம்பம் வரைந்து அதை நம்ப சொல்கிறார். அந்த பிம்பத்தில் பெண் வீட்டை பார்த்துக்கொள்பவள். ஆண்கள் தெரு பொறுக்க தயாராக இருக்கிறோம் என்று சொல்லாமல் சொல்கிறார்.






என்னது நாங்க தம் அடிக்க கூடாது தண்ணி அடிக்க கூடாதா. அதை சொல்ல நீ யாரடா டுபுக்கு.











நிச்சயமாக அந்த காலம் வரும். அப்போது நாங்கள் வீசி எறியும் அழுக்கு ஆடைகளை நீங்கள் துவைத்து போட வேண்டி வரும். வேலை வாய்ப்பிலும் படிப்பிலும் நீங்கள் பின் தள்ளப்படுவீர்கள். எங்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டி வரும். எங்கள் முன் கை கட்டி நின்று சம்பளம் வாங்கும் நிலை வரும். பேருந்துகளில் ஆண்கள் எல்லாம் தரையில் அமர்த்தப்படுவீர்கள். பெண்களை மதித்து அவர்களின் உயர்வை விரும்பும் ஆண்கள் மட்டுமே சமுதாயத்தில் மதிக்கப்படுவீர்கள். அந்த காலம் விரைவில் வரும். இப்படி நான் எழுதினால் என்னை தூஷிப்பார்கள்.

பெண் அடிமை தனத்தை களைந்து ஆண்களையும் பெண்களையும் சம வெளியில் வளர விடுங்கள். அப்போது பாருங்கள் உங்கள் அகங்கார போக்குகள் தகர்த்தெறியப்படும். இவர்கள் நமக்கு செய்த கொடுமைகள் எத்தனை எத்தனை.

சமீபத்தில் ஒரு பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். அதற்கு அவளை எப்படி எல்லாம் கொடுமை படுத்தினார்கள் தெரியுமா. சாஸ்திரம் சம்பிரதாயம் என்று நீங்கள் பெண்களை எப்படி எல்லாம் வதைக்கிறீர்கள். அவளின் வளையல்களை உடைக்கிறீர்கள். பூவை பறிக்கிறீர்கள். வெள்ளை ஆடை உடுத்த செய்கிறீர்கள். தாலியை பறித்து எறிகிறீர்கள். அது தரித்திரம் போகட்டும். மற்றபடி பெண்ணை விதவை என்றும் வப்பாட்டி என்று வாழாவெட்டி என்றும் அழைத்து அவளை ஒரு தாழ்ந்த நிலையிலேயே வைத்து இன்பம் காணும் சாடிஸ்டுகள் நீங்கள். பெண்களே இவர்களுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டாமா. கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் உயருங்கள். உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். உங்களை இப்போது கொஞ்சம் தலை எடுக்க விடுகிறார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆண்களை நம் காலடியில் கொண்டு வாருங்கள்.

அஜித் விஜய் என்று சண்டை போட்டுக்கொள்கிறீர்களே. ஒரு நடிகர் ஒரு நடிகையின் தொப்புளின் பம்பரம் விடுகிறார். பிறகு அவர் அரசியலில் புகுந்து சாதிக்கிறார். அந்த நடிகை டி.வி. சீரியல்களிலும் ஷோக்களிலும் வாய்ப்பு கேட்டு அலைய வேண்டிய அவல நிலை இருக்கிறது. நான் அந்த ஒரு நடிகரை மட்டும் சொல்லவில்லை. எல்லோரையும் சேர்த்து தான் சொல்கிறேன். பெண் கதாபாத்திரங்களை பற்றி என்ன வெளிப்பட்டு இந்த சமுதாயத்துக்கு கிடைக்கிறது.

இப்படி பல விதங்களிலும் ஒடுக்கப்பட்டு வரும் நாம் முன்னேற வேண்டும். கழுத்தில் தாலி கட்டி நம்மை அடிமையாய் பார்க்கும் இந்த ஆண் குஞ்சுகளின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும். வாழ்க்கையில் உயருங்கள்.

கர்நாடகாவில் பெண்கள் குடிக்க கூடாதென்று பப்புக்குள் போய் காட்டு மிராண்டித்தனமாக தாக்கினார்கள். அதே ஆண் குஞ்சுகள் பக்கத்து வீட்டு ஆன்டி கொஞ்சம் ஓர பார்வை பார்த்து அழைத்தாள் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு போவார்கள். ஆண்களுக்கு பெண்கள் செக்ஸ் அடிமைகளாய் வேண்டும். அவர்கள் குடிக்க கூடாது. வீட்டு வேலை செய்யவேண்டும். அழைத்தால் வந்து படுக்க வேண்டும். இவர்கள் வந்து ஆட்டிவிட்டு போய்விடுவார்கள். ஆண் வர்க்கமே எப்போது நீ திருந்த போகிறாய்.

ஒரு பின்னூட்டத்தில் ஒருவர் ஒரு கருத்தை சொல்லியிருந்தார். அதாவது பெண்களுக்கு சில வேளைகளில் பெண்களே எதிரிகள் என. நான் அப்படி பட்ட பெண்களையும் சாடுகிறேன். அவ்வாறான பெண்கள் எப்படிப்பட்ட மனநிலையில் அப்படி செய்கிறார்கள் என்று யோசித்து பார்க்க வேண்டும். ஒரு விதவை நல்ல ஆடை உடுத்துவதை ஒரு பெண்ணே கேலி பேசுவதாய் குறிப்பிட்டு இருந்தார் ஒரு நண்பர். கேலி பேசிய அந்த பெண் அடக்கு முறைகளுக்கு தன்னை சமர்பித்திருக்கிறாள். அவள் ஆணாதிக்க சமுதாயத்தின் அடக்குமுறைகளின் வாழ்ந்திருக்கிறாள். அதனால் தன் சக தோழி அந்த அடக்கு முறைகளை தகர்க்கிற பொழுது ஒரு பொறாமை அவளுக்கு ஏற்படுகிறது. அதன் வெளிப்பாடாகவே கேலி பேசுகிறாள். உதாரணத்துக்கு சிறையில் எல்லோரும் கீழ்த்தரமாய் நடத்தப்படுகிற பொழுது ஒருவருக்கு மட்டும் சலுகைகள் அளிக்கிற போது மற்றவர்கள் எரிவார்களே அந்த எரிச்சல் தான் அது. பெண்கள் சமுதாயம் ஒட்டுமொத்தமாய் முன்னேறுகிற போது அது தோன்றாது. இது ஒரு தலைமுறை பிழை. போக போக சரி ஆகிவிடும். ஆனால் பெண் முன்னேற்றத்துக்கு பெண்களே தடையாய் இருக்காதீர்கள். அம்மாக்களே உங்கள் தலைமுறை காணாத சுதந்திரத்தை உங்கள் பெண் குழந்தைகள் அனுபவிப்பதை ஏதோ வெறுப்புடன் பார்க்காதீர்கள்.