Sunday 15 November 2009

ஆண்கள் புடவை கட்டுவது பாவமா? - 2

தூள் படம் என்று நினைவு. அதில் ஒரு வசனம் வரும். அவ புடவைய வாங்கி கட்டிக்கோ. அந்த திரைப்படம் என்றில்லை. தமிழ் திரைப்படங்களில் காலம் காலமாய் ஒருவனை அவமானப்படுத்த அல்லது அவன் கோழை என்பதை கேலி பேச அல்லது புரட்சி செய்ய அஞ்சும் ஊர் மக்களை உசுப்பேத்த என்ற பல தருணங்களில் புடவை கட்டிக்கொள் என்ற வசனம் வரும். நிஜ வாழ்க்கையில் கூட நாம் கோழைகளை வன்முறையை விரும்பாதவர்களை கூட சில நேரங்களில் "பாவாடை கட்டிக்கோ...புடவை கட்டிக்கோ..." என்றெல்லாம் கேலி பேசுவதை கேட்டிருக்கிறோம்.

இதை எல்லாம் வைத்து பார்க்கிற போது புடவை என்பது சமுதாயத்தில் கேலி சின்னமாகவும் கோழைகள் அணிய வேண்டியதாகவும் ஒரு ஆணை அவமானப்படுத்த சிறந்து யுத்தியாகவும் கையாளப்பட்டிருக்கிறது. எனக்கு இவைகளை கேட்கிற போதும் பார்க்கிற போதும் கோபமும் கொஞ்சம் சிரிப்பும் வரும். யோசித்து பாருங்கள் நம் நாட்டின் மிக உயரிய பதவியில் இருக்கும் மாண்புமிகு குடியரசு தலைவர் அணிந்திருப்பதும் சேலை தான். அப்படி ஒரு மாபெரும் பொறுப்பிலிருக்கும் பெண் அணிந்திருக்கும் ஒரு ஆடையை ஒரு ஆண் அணிவது அவனை எள்ளலுக்கும் கேவலத்திற்கும் ஆளாக்கும் என்கிற கருத்து தான் என்னை கோப்பப்பட வைக்கிறது.

திருநங்கைகள் படும் பாட்டை நான் பார்த்திருக்கிறேன். ஒரு ஆண் ஒரு பெண்ணின் உடையை அணிந்து பார்க்க பிரியப்படுகிறான் என்பதாலேயே அவன் எத்தகைய ஒரு நெருக்கடிக்கு ஆளாக்கப்படுகிறான் என்பது வருத்ததிற்கு உரியது. நான் ஹோமோ செக்ஸுவல்ஸ் பற்றி பேசுவதாய் பாமரத்தனமாய் நினைக்கவேண்டாம். ஹோமோ செக்ஸ் என்பது வேறு. பெண்களின் ஆடையை அணிய பிரியப்படும் எல்லா ஆண்களும் ஹோமோ செக்ஸுவல்ஸ் இல்லை. எனக்கு தெரிந்த ஒரு தோழியின் கணவருக்கும் இந்த ரகசிய ஆசை இருந்திருக்கிறது. ஆனால் அவர்கள் திருமணம் ஆகி தாம்பத்தியத்தில் எந்த வித நெருடலோ இல்லாமல் குடும்பம் நடத்தி வருகிறார்கள்.

ஆனால் சமுதாயத்தில் இன்னும் பெண்களையும் பெண்கள் அணியும் ஆடைகளையும் கேலி பொருட்களாக பார்க்கும் பண்பு நிறைந்திருப்பது வருத்தமே. இது முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு.

புடவை என்பது ஒரு அசாத்திய உடை. அது நம் நாட்டின் கலாசாரத்தை பறைசாற்றும் உடை. புடவையில் இருக்கும் கவர்ச்சியும் ஆளுமையும் வேறு எந்த உடையிலும் இருப்பதில்லை என்பது என் கருத்து. மேலும் நாம் அணியும் ஜீன்ஸ் சுடிதார் கூட ஒரு வகையில் ஆண்களின் உடை அலங்காரத்திலிருந்து பிரித்து எடுக்கப்பட்டது என்பதே உண்மை. ஆனால் புடவையும் ஸ்கர்ட் பாவாடையும் அப்படி அல்ல. அது பெண்மையை பறைசாற்றும் பெண்களுக்கு ஒரு தனித்தன்மையை தரும் ஒரு மரியாதையை தரும் உடை. நம் பாரத மாத பெருமையாக போர்த்தியிருக்கும் உடை.

பாரத மாதாவை கை எடுத்து வணங்கும் நீங்கள் அந்த உடையை பற்றி எத்தனை ஒரு கீழ்த்தரமான தீர்மானம் வைத்திருக்கிறோம் என்பது உங்களை எல்லாம் ஆணாதிக்க வெறியர்கள் என்றே காட்டுகிறது.

புடவை கட்ட பிரியப்படும் ஆண்களை வெறுக்காதீர்கள். நீங்கள் அணியும் ஒரு உடையை ஒரு ஆண் அணிய பிரியப்படுகிறான் என்பது உங்களுக்கு பெருமையான விஷயம் அல்லவா. நீங்களே முன் வந்து அந்த ஆணை ஊக்குவிப்பதில் எந்த தவறும் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது. ஒரு ஆண் தானாக முன் வந்து புடவை கட்ட பிரியப்படுகிற போது அவனை அந்நியனாய் பார்க்காதீர்கள். உங்கள் கணவரோ பாய் பிரண்டோ அப்படி ஒரு ஆசையை உங்களிடம் தெரிவித்தால் உடனே அவனை ஏதோ கேலி செய்து அவனுடைய மன ஆரோக்கியத்தை கெடுக்காதீர்கள். பெண்கள் நாமே நம் உடையை அணிய பிரியப்படும் ஒருவரை பழித்தால் ஆண்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்.

இங்கே பெரும்பாலான அண்களுக்கு புடவை பாவாடை போன்ற பெண்களின் ஆடைகளை அணிந்து பார்க்க ரகசிய ஆசை உண்டு. ஆனால் ஆணாதிக்க சமுதாயத்தில் தாங்கள் கேலி பொருளாய் ஆகிவிடுவோமா என்கிற அச்சம் தான் அவர்களை தவிர்க்கிறது. திரைப்படங்களில் ஒரு ஹீரோவின் சட்டையை விரும்பி அணிந்துகொள்ளும் ஹீரோயின்களை நாம் பாராட்டுகிறோம். அது காதல் என்று மயங்குகிறோம். ஏன் ஒரு ஆண் தன் மனைவியின் காதலியின் உடையை அணிந்து பார்க்க பிரியப்படும் பொழுது நாம் அவர்களை அந்நியமாய் பார்க்கிறோம்.





பெண்களே நீங்களும் உங்கள் குறுகிய பார்வையை மாற்ற வேண்டும். பெண்களின் உடையை ஆணிந்து பார்க்க பிரியப்படும் ஒரு ஆணை நீங்கள் ஊக்குவிக்காத போது நீங்களும் மறைமுகமாக ஆணாதிக்கத்துக்கு துணை போகிறீர்கள்.உங்கள் பாய் பிரண்ட் அல்லது உங்கள் கணவர் அணியும் லுங்கியை நீங்கள் தனிமையில் இருக்கிற போது அணிந்துகொள்வதில் உங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் உங்கள் கணவர் உங்கள் உள்பாவடையை அணிந்துகொண்டு வீட்டில் தனிமையில் உலா வந்தால் அவரை ஏன் வித்தியாசமாக பார்க்கிறீர்கள். ஒரு வேளை இந்த ஆணாதிக்க சமுதாயம் காலம் காலமாய் உங்களுக்கும் அப்படியே கற்பித்திருக்கலாம். இப்போது மாற்றிக்கொள்ளுங்கள் தோழிகளே.


என்னுடைய கருத்துக்கள் இது தான்.
1. புடவையை அவமான சின்னமாக சித்தரிப்பது நகைப்புக்குரியது. புடவை ஆளுமையின் வெளிப்படு. புடவை கட்டும் ஆண் ஒரு கோழை என்று நீங்கள் நினைத்தால் அந்த புடவையை காலம் காலமாக கட்டிக்கொள்ளும் பெண் வர்க்கத்தை தான் நீங்கள் மகா கோழைகளாக நினைக்கிறீர்கள் என்று அர்த்தம் . அந்த நிலைப்பாட்டை மாற்றுங்கள்.
2. பெண்களே நம்மை சுற்றியிருக்கும் ஒரு ஆண் பெண்களின் உடையை அணிந்து பார்க்க பிரியப்பட்டால் அவனை அந்நியனாய் பார்த்து கேலி பேசாதீர்கள். மாறாக அவனுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள். அவனது அந்த விருப்பத்தை ஊக்குவியுங்கள். பெண்களின் உடை எந்த விதத்திலும் கீழ்த்தரமானது அல்ல. அதை அணிவதால் அவனுடைய ஆண் தன்மை மாறிவிடபோவதில்லை என்கிற உண்மையை ஏற்றுக்கொண்டு அது போன்ற ஆண்களை நேசியுங்கள்.
3. ஆண்களே. உங்கள் ஆணாதிக்க போக்கை நீங்கள் திருநங்கைகளை இத்தனை நாள் படுத்திய பாட்டிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. இனி மேலாவது திருந்துங்கள்.
4. தன் மனைவியோ காதலியோ அவர்களுக்கு முன் புடவையிலோ பாவாடையிலோ நிற்பதில் ஒரு வித எக்ஸ்டசி இருப்பதாய் ஆண்கள் சொல்லி கேட்டும் படித்தும் இருக்கிறேன். எனக்கு அதை அனுபவிக்க வாய்ப்பில்லை. ஒருவேளை நான் ஆணாக இருந்திருந்தால் நிச்சயம் அதை செய்திருப்பேன். பெண்ணாக இருப்பதால் அப்படி விருப்பப்படும் ஆண்களை நான் ஆதரிக்கிறேன்.






ஆண்களே உங்கள் போலி ஈகோவை தூக்கிவீசிவிட்டு உங்கள் மனதில் இயல்பாக எழும் ஆசைகளை பூர்த்தி செய்துகொள்ளுங்கள். என்ன ஒரு அறுபது வருடம் இந்த உலகில் வாழ்ந்துவிட்டு மடிய போகிறோம். நாம் வாழத்தான் வாழ்க்கை நம்மில் சமுதாயம் வாழ அல்ல.

முன்னரே ஆண்கள் புடவை கட்டுவதை பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதன் பொருட்டு எனக்கு நிறைய கடிதங்கள் வந்தன். நிறைய பேர் இந்த தலைப்பில் எழுத சொல்கிறார்கள். இந்த விஷயத்தில் ஒரு ஆணின் மன நிலையை புரிந்துகொள்வதில் நான் இன்னும் சிறுமியாகவே இருக்கிறேன். ஆண்களின் இந்த இயல்பான இச்சையை பற்றி அறிந்துகொள்ள நானும் ஆவலோடு இருக்கிறேன். மேலும் இந்த தலைப்பை பற்றி உங்கள் சந்தேகங்களையும் கருத்துக்களையும் ரகசியங்களையும் என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள். கேட்க ஆவலாய் உள்ளேன்.
பெண்களும் இது தொடர்பாக கருத்து சொல்லலாம்.

vincyontop@gmail.com

Sunday 8 November 2009

யார் பத்தினி - ஒரு அதிரடி ரிப்போர்ட்.

பத்தினியை ஒழிப்போம்.

உலக தமிழ்மாநாடு நடக்கும் இத்தருணத்தில் நான் அதிகாரத்தில் இருந்தால் முதலில் தமிழ் அகராதியில் சில வார்த்தைகளை நீக்கவேண்டும் என பரிந்துரைப்பேன்.
முதல் வார்த்தை
பத்தினி.
சமீபத்தில் ஒரு அனானி (சஞ்சை அல்ல வேறொருவர். அவருடைய பின்னூட்டத்தில் மேலும் தகாத வார்த்தைகள் இருந்ததால் அனுமதிக்கவில்லை.) என் பதிவில் வந்து நீ ஒரு சைக்கோ....பத்தினி வேஷம் போடுகிறாய் என்று முழங்கினார்.
எனக்கு அதை படித்துவிட்டு செம சிரிப்பு.

பத்தினி வேஷம் நான் போடுகிறேனா? முதலில் பத்தினி என்றால் என்ன? பத்தினி என்பவள் ஒரு அணு விஞ்ஞானியா அல்லது பல தத்துவங்களை எழுதிய ஒரு சிறந்த எழுத்தாளரா...அல்லது மின்சாரம் டெலிபோன் இப்படிப்பட்ட அறிவியல் சாதனைகளை நிகழ்த்திய பெண்மணியா...இல்லை சமுதாய முன்னேற்றத்துக்கு உழைத்த சமூக சேவகியா.
அது எல்லாம் இல்லை. பத்தினி என்பவள்அகராதிப்படி கணவன் எத்தனை பேருடன் படுத்தாலும் தன்னை எத்தனை கொடுமைகளுக்கு ஆளாக்கினாலும் நெறி தவறாமல் தன் கணவனுக்கு மட்டுமே முந்தி விரிக்கும் ஒரு பேதை பெண். பச்சையாக சொல்லவேண்டுமானால் கணவனுக்கு அரிப்பெடுத்தால் அவனை கூடையில் சுமந்துகொண்டு போய் அவன் விரும்பும் பெண் வீட்டில் விட்டுவிட்டு வெளியே காவல் இருக்கவேண்டும். காரியம் முடிந்த பிறகு மீண்டும் கூடையில் சுமந்து வீட்டில் கொண்டு போய் விடவேண்டும். அவனை கூடையில் சுமந்துகொண்டு போய் நடுக்கடலில் போட்டால் தான் என்ன?

இப்படி கணவனுக்கு முந்தி விரித்து கிடைக்கையில் அவன் தன் உடல் தேவையை பூர்த்தி செய்துவிட்டு எழுந்து போவான். இவள் உடனே தாலியை முத்தம் செய்து கண்ணில் ஒற்றிக்கொள்ளவேண்டும். இது தானே பத்தினி என்ற ஆணாதிக்க சொல்லின் விளக்கம். அப்படியானால் அந்த வேஷம் போட நான் தயாராய் இல்லை. அப்படி ஒரு அடிமை வேஷம் போட நான் தயாராய் இல்லை தோழரே.

சில பெண்கள் இன்னும் பத்தினியாய் இருக்க பிரியப்படுகிறார்கள். அவர்கள் இருந்து தொலையட்டும். கணவன் நலம் வாழ மண் சோறு தின்று வாழட்டும். அந்த மூட நம்பிக்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு வேளை என் கணவனுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் நான் மருத்துவமனைக்கு கூட்டிக்கொண்டு போவேனே தவிர மண் சோறு தின்ன மாட்டேன். உடனே தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டு குஷ்புவை போல் அங்க பிரதட்சணம் செய்யமாட்டேன். அவன் அருகில் இருந்து அவனை அக்கரையோடு பார்த்துக்கொள்வேன்.

அந்த நபருடைய பின்னூட்டத்தை படித்த பிறகு என்னை திருமணம் செய்துகொள்ளப்போகும் நபரிடம் முதலில் நான் சொல்ல நினைப்பது "நான் ஒரு பத்தினி இல்லை” என்பதை தான்.


அடுத்தது வாழாவெட்டி.

ஆண்களே சிந்தித்து பாருங்கள் . இப்படி ஒரு சொல் வழக்கில் இருக்கும் ஒரு சமுதாயத்தில் ஆண்டாண்டு காலமாய் எப்பேர்ப்பட்ட ஒரு ஆணாதிக்க போக்கு நடைமுறையில் இருந்திருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்.

பெண்ணுடைய அப்பா வரதட்சணை கொடுத்து ஒருவனுக்கு தன் மகளை திருமணம் செய்து வைக்கிறார். அதாவது காசு கொடுத்து ஒரு கழுதையை பொதி சுமக்க நாம் விலைக்கு வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம். (வரதட்சணை வாங்கி திருமணம் செய்பவர்களை எல்லாம் நான் கழுதைகள் என்று சொல்லவில்லை....வரதட்சணை கேட்டு திருமணம் செய்பவர்களைத்தான் சொல்கிறேன் என்று புரிந்துகொள்பவர்கள் புரிந்துகொள்ளட்டும்) அந்த கழுதை பாதி தூரம் போன பிறகு சோம்பேறித்தனம் பட்டோ அல்லது கொழுப்பு எடுத்தோ அங்கேயே படுத்துவிடுகிறது.






ஆனால் நமக்கோ கடமை இருக்கிறது. பொதியை குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் கொடுத்தாக வேண்டும். என்ன செய்கிறோம் கஷ்டப்பட்டு அந்த பொதியை நாமே தூக்கிக்கொண்டு போகிறோம். அப்படி சுமக்கும் நமக்கு பெயர் தான் வாழாவெட்டி. புருஷன் திருமண பந்தத்தின் கடமையை மறந்த ஏதாவது ஒரு காரணத்திற்கு மனைவியை வீட்டை விட்டு துரத்திவிடுவான். அப்படி துரத்தப்பட்ட பெண்ணுக்கு பெயர் வாழாவெட்டி. அல்லது புருஷன் வேறொரு பெண்ணுடன் கிளிக்காகி ஓடிவிடுவான் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வரும் அவமான சொல் வாழாவெட்டி. ஓடிப்போன கணவனுக்கு இன்னொரு ரேஷன் கார்டில் "குடும்ப தலைவர்" என்ற அருமையான பெயர் கிடைத்துவிடும்.

உண்மையில் நம் கலாசாரத்தை வடிவமைத்தவர்களுக்கு நிச்சயம் நல்ல கற்பனை திறன் இருந்திருக்கவேண்டும். பாருங்கள் எத்தனை இரவுகள் ரூம் போட்டு யோசிச்சு பெண்களை எப்படி எல்லாம் கேவலப்படுத்தலாம் கொடுமைபடுத்தலாம் தங்கள் கட்டுப்பாட்டுக்கள் வைத்துக்கொள்ளலாம் என்று வடிவமைத்திருக்கிறார்கள். மேலும் வாழாவெட்டி என்பவளை கேவலமாக நடத்தினால் எந்த பெண்ணும் தான் வாழாவெட்டி ஆகிவிடாமல் இருக்க கணவனுக்கு பணிந்து இருப்பாள் என்ற சாடிஸ் மனநிலையோடு உருவாக்கப்பட்ட சொல் தான் வாழாவெட்டி.

இப்படிப்பட்ட சொற்களை தமிழ் அகராதியிலிருந்து நீக்கும் முன்பாக மனித மனங்களிலிருந்தும் நீக்கவேண்டும். பெண் எப்படியெல்லாம் அடக்குமுறைகளுக்கு ஆட்பட்டிருந்தால் இது போன்றதொரு சொற் பிரயோகம் நம் வழக்கில் இருக்கும் என்பதை சிந்தித்து பாருங்கள்.

நான் ஆண்களை கேவலமாக பேசுவதாக சில ஆண்கள் கண்டமேனிக்கு என்னை திட்டி தாளிக்கிறார்கள். நான் பிரசுரிக்கும் கமென்டுகள் ஒரு சாம்பிள் தான். வருபவையோ ஏராளம். அப்படிப்பட்ட ஆண்களுக்கு பொதுவான ஒரு குணம் என்னவென்றால் அவர்களுக்கே தெரிகிறது தாங்கள் இருக்கும் தளம் போலியானது...வெட்டி ஈகோவால் உருவானதென்று. அதனால் அந்த தளத்தை நான் தகர்கிற பொழுது அவர்கள் விழுந்துவிடுவார்களோ என்ற அச்சத்தினால் தான் என்னை தூஷிக்கிறார்கள். அதனால் நான் அசரப்போவதில்லை.

ஒன்று தெரிந்துகொள்ளுங்கள் ஒயின் ஷாப்பில் வேட்டி கிழிய குடித்துவிட்டு அந்த குப் நாற்றத்தோடு கெட்ட வார்த்தை பேசுவதையும்....சாலையில் எல்லோரையும் முந்திக்கொண்டு போக நினைக்கும் அவசர (செக்ஸில் காட்டும் அவசரத்தை ஆண்களே ஏன் சாலையில் காட்டுகிறீர்கள்) நிலையும் அப்படி போகிற போது யாராவது அப்பாவி குறுக்கே வந்து மாட்டிக்கொண்டால் உடனே காளரை தூக்கிவிட்டுக்கொண்டு மச்சி மாமு என சகலரையும் துணைக்கு அழைத்து வன்முறையை தூண்டும் உங்களின் அராஜக போக்கு தான் வீரம் என்று நீங்கள் நினைத்துக்கொண்டால் அந்த வீரமும் கெட்ட வார்த்தைகளும் வன்முறையும் பெண்களிடம் செல்லுபடியாகாதென்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்னும் அகராதியில் நிறைய பெண்ணடிமை வார்த்தைகள் இருக்கின்றன. மேலும் நிறைய வார்த்தைகள் புழக்கத்தில் உள்ளன.

மேலும் இந்த அவல நிலைக்கெல்லாம் தீர்வு என்னவென்று கேட்டால் உடனே மேலோட்டமாக பெண் கல்வி பெண் இட ஒதுக்கீடு என்றெல்லாம் பேசுவோம். அது எல்லாம் தவறு. அதற்கெல்லாம் மேலே பெண்கள் முதலில் தங்களை மதிக்க தெரிந்துகொள்ளவேண்டும். நான் ஒரு பெண் தானே என்று சோர்ந்து போகாமல் நான் ஒரு பெண் என்று தன்னம்பிக்கையோடு எழுந்து நிற்கவேண்டும். அந்த எழுச்சியில் தான் ஆணாதிக்கத்தை நாம் சுருட்ட முடியும். இன்னும் ஆண்களை சார்ந்து வாழ்வதையே நம் தலையாய கடைமையாக நினைத்துக்கொண்டிருந்தால் முன்னேர்ரம் கடினம் தான்.

வேறொரு நபர்...பெண்களுக்கு அழகே சக்தி என்று சொல்லி அவர்களை நான் போகப்பொருளாக பார்க்கிறேன் என்று பொங்கியிருந்தார்.
அந்த தோழருக்கு நான் சொல்லிக்கொள்வது மறுபடியும் மறுபடியும் பெண்களுக்கு அழகே சக்தி.
ரோஜா மலர் அழகாய் இருப்பது அதன் சக்தி. அதை செடியில் வைத்து அழகுபார்க்காமல் உங்கள் தேவைக்கு அதை பறித்து கயிற்றில் கட்டி தொங்கவிடுகிறீர்களே அந்த ஆணாதிக்கம் தான் பெண்ணை போக பொருளாய் பார்க்கிறது. பெண்ணை பெண்ணாக பாவியுங்கள். பெண் அழகாய் இருப்பதால் அவள் போதை பொருளாகிப்போவது உங்களுக்குத்தான். நீங்கள் அவளை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் அப்போது நீங்களே சொல்வீர்கள் பெண்ணுக்கு அழகே சக்தி.

பெண்ணுக்கு அழகே சக்தி.

நாங்கள் போதை பொருளாய் இருப்பதில் கூட வருத்தப்படவில்லை. ஆனால் எங்கள் அனுமதி இல்லாமல் எங்களை ஏமாற்றி அந்த போதையை நீங்கள் நுகர்ந்து பார்த்து அனுபவித்து பின்பு எங்களை அடிமைகளை போல் நடத்துவதை தான் நான் பெரிதும் எதிர்க்கிறேன்.

இன்னொரு நபர்...என் பதிவுகளை பெண்கள் புறக்கணிக்கிறார்களாம். அதில் அவருக்கு ஒரு சந்தோஷம் வேறு இருக்கிறது போல. ஏனென்றால் பெண்கள் எல்லாம் என் பதிவுகளை படித்து ஆண்களின் ஈகோவையும் ஆதிக்க அராஜகங்களையும் எதிர்க்க தொடங்கினால் ஆண்களுக்கு டவுசர் கிழிந்துவிடுமோ என்ற பயம். மேலும் பெண்கள் இதை புறக்கணித்தாலோ ஆண்கள் இதை புறக்கணித்தாலோ எனக்கு கவலை இல்லை. நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தான் இருப்பேன். ஆதரிப்பவர்கள் ஆதரிக்கட்டும்.


மேலும் எனக்கு ஓட்டு போடும் பின்னூட்டமிடும் அத்தனை தோழர் தோழிகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பிறகு ஒருவர் நான் மற்ற பதிவர்களின் பதிவுகளில் பின்னூட்டமிடுவதன் மூலம் பிரபலமாக நினைக்கும்ம் ஒரு வேசி என குறிப்பிட்டிருந்தார். பலே பலே....என் பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்கவே எனக்கு நேரம் போதவில்லை. பிறகு எப்படி இந்த குற்றச்சாட்டு.



இப்படி எனக்கு வரும் பின்னூட்டங்களில் வரும் தவறான புரிதல்களுக்கு பதில் எழுதுவதிலேயே என் காலம் போய்விடுகிறது. இருந்த போதும் எனக்கு அது மகிழ்ச்சியே. தொடர்ந்து உங்கள் வாதங்களை நாகரீகமான முறையில் முன் வையுங்கள். விவாதிப்போம்.

மேலும் உங்கள் சந்தேகங்களையும் ரகசிய கேள்விகளையும் என் மின் அஞ்சலுக்கு செலுத்துங்கள்.....

vincyontop@gmail.com

Sunday 1 November 2009

மாதவிடாய் பெண்கள் தீண்டத்தகாதவர்கள்

பெண்களுக்கு அழகே சக்தி.




என்னது பீரியட்ஸ் காலத்துல வெளிய ஒரு பாய் போட்டு குத்த வச்சுக்கணுமா?....அடி செருப்பால....


காலம் காலமாய் பெண் விடுதலைக்கு குரல் கொடுக்கிறேன் பேர்வழி என்று இங்கே நிறையே பேர் பெண் அடிமைத்தனத்தை பற்றி மட்டுமே மேலும் மேலும் பேசியும் எழுதியும் இருக்கிறார்கள். அவர்கள் மேல் எனக்கு ஒரு வகையில் பெருத்த கோபம் உண்டு. அவர்கள் ஓயாமல் பெண் அடிமையாய் நடத்தப்படுகிறாள் என்று பரிதாபப்பட்டும் கோபப்பட்டும் எழுதுகிறார்கள். நீங்களே யோசித்து பாருங்கள். ஒரு பெண் குழந்தைக்கு விபரம் தெரியும் நாள் முதல் அதனிடம் "நீ ஒரு அடிமை...உன் இனம் ஒரு காலத்தில் அடிமையாய் நடத்தப்பட்டது....நீயும் அடிமை இனத்தின் ஒரு நீட்சி" என்று கூறுவதன் மூலம் அந்த பிஞ்சு மனதில் ஒரு வகை தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடுகிறார்கள். அந்த பிஞ்சு மனதில் அடிமை விதையை அவர்களே ஊன்றிவிடுகிறார்கள்.

இவர்கள் ஆணின் இரக்கத்தால், பெண் விடுதலை அடைய வேண்டும் என்ற வகையில் எழுதவும் செய்கிறார்கள். ஆனால் நான் பெண் அடிமை என்ற கருத்தையே முன்வைக்க போவதில்லை. பெண் ஆண்களுக்கு சமமானவள் என்ற வாதத்தையும் பின்னுக்கு தள்ளி பெண் ஆணை விட உயர்ந்தவள் என்கிற ரீதியில் தான் பார்க்கிறேன்.

பெண்கள் தங்கள் அழகாலும் அறிவாலும் ஆண்களை தங்களுக்கு சேவகர்களாக ஆக்கிக்கொள்ள முடியும் என்பதை தான் நான் அழுத்தமாக எடுத்துரைக்க விரும்புகிறேன். பெண் அடிமைத்தனம் என்னும் அழுக்கான பழைய புராணத்தை பாடிப்பாடி ஏன் பெண்ணை இன்னும் தலைகுனிய வைக்கிறீர்கள். அவளை நிமிர விடுங்கள்.

அதனால் நான் இங்கே பேசப்போவதெல்லாம் ஆணடிமைத்தனத்தை பற்றியே. அதனால் நிறைய பேர் கொதிப்படைகிறார்கள். அப்படி கொதிப்படைபவர்கள் எல்லாம் தங்கள் காதலி மனைவி என்று வரும்போது உள்ளாடைகளை கசக்கவும் தயாராய் இருப்பார்கள் என்பதை வாழ்வியல் நடைமுறை கூறும். பெண்களின் ஆடைகளை துவைபப்தில் இருக்கும் சுகம் பற்றி எனக்கு வந்த ஒரு கடிதத்தை அடுத்த பதிவில் பிழை திருத்தி நீங்கள் வாசிக்க தருகிறேன்.

பெண்களே யோசித்து பாருங்கள்...ஒரு காலத்தில் கலாசாரம் பண்பாட்டு மத காவலர்கள் நமக்கு இயற்கையாய் வரும் மாதவிடாய் காலத்தில் நாம் ஏதோ தீட்டுபட்டவர்கள் போல் வீட்டின் வெளியே ஒரு பாய் விரித்து படுத்துக்கொள்ள வேண்டும் என்று கீழ்த்தரமான சட்டங்களை கொண்டு வந்தார்கள். இது எல்லாம் பெண்களின் அறிவும் அழகும் ஓங்கி நின்றால் அவர்களின் பின்னால் ஆண்கள் அலைய வேண்டிவரும் என்று பயந்த கோழை கூட்டத்தால் உருவாக்கப்பட்டது. ஆண்களே……இப்படியெல்லாம் அடக்கி வைத்தால் பெண் எப்போதும் தலை குனிந்தே வாழ்ந்து விடுவாள் அவளை உங்கள் சுகங்களுக்கு உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்று தானே நீங்கள் இது போன்ற மனிதாபிமானம் இல்லாத சட்டங்களை உருவாக்கினீர்கள்.

பெண்களை குழந்தை பெற்றுத்தரும் ஒரு எந்திரம் போல் பயன்படுத்தி வந்த காலமும் உண்டு. குழந்தை பெற்றுக்கொள்வதால் பெண்களின் அழகு குறைபடும் என்று நம்பிவிடவேண்டாம். உங்கள் அழகின் மீது தகுந்த அக்கரையும் பராமரிப்பும் செலுத்தினால் போதும் நீங்கள் குழந்தை பெற்றுக்கொண்ட பிறகும் இளமையாய் தோன்றலாம். எப்போதும் உங்கள் அழகின் மீதும் கல்வி, படிப்பு இவற்றின் மீதே உங்கள் கவனம் இருக்கட்டும். குரங்கு போல் புட் போர்ட்டில் தொங்கிக்கொண்டு வரும் ஆண்களின் குரங்கு சேட்டைகளை நம்பி உங்கள் மனங்களை அலைய விடாதீர்கள். அவர்களெல்லாம் ஒயின் ஷாப்பில் மது அருந்துவதை வீரம் என்றும் கெட்ட வார்த்தையில் உளறுவதை தைரியம் என்றும் ஆண்மை என்றும் ஆண் தன்மை என்றும் நம்பி அறிவிலியாய் திரிபவர்கள். அதனால் பெண்களே உங்கள் கல்வியும் அழகும் சீராக இருந்து ஆண்களை ஆட்சி செய்யும் ஆவல் இருந்தால் உங்களுக்கு சேவை செய்ய ஆண்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள்.அழகான அறிவுடைய பெண்களுக்கு சேவை செய்வதில் தான் தங்கள் வாழ்வு பூரணம் அடைகிறது என்கிற உண்மையை ஆண்கள் உணரத்தொடங்கிவிட்டார்கள். என்ன ஆண்களே சரி தானே?

குழந்தை பெற்றுக்கொள்வதில் உங்கள் சம்மதம் இன்றி எதுவும் நடந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மாமனார் மாமியார் புருஷன் இவர்களுக்காக நீங்கள் குழந்தை சுமக்க போனால் உங்களுக்கும் கழுதைக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. தாய்மை என்பதை முதலில் நீங்கள் நேசிக்கவேண்டும். மனதளவில் அதன் மீதான தாகம் வரவேண்டும். மனம் தாய்மையை தரிக்க தயாராகவேண்டும். அதன் பின்பே நீங்கள் விரும்பும் பட்சத்தில் மட்டுமே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் குழந்தை பெற்றுக்கொள்ளும் அந்த காலகட்டத்தில் கணவன் உங்களிடம் இன்னும் அன்பாகவும் சேவைகளை சரிவர செய்பவராகவும் உங்களுக்கு கீழ்படிபவராகவும் இருத்தல் அவசியம்.

பிறகு எனக்கு நிறைய கடிதங்கள் வருகின்றன. அதில் ஒரு கடிதத்தில் ஒருவர் தனக்கு பெண்களின் பாதங்கள் மிகவும் பிடிக்கும் என எழுதியிருந்தார். என் பிளாகில் உள்ள புகைப்படத்தில் வருவது போல் தன் தோழிக்கு அவர் சேவகம் செய்வதை பெரிதும் விரும்புவதாக கூறினார். மேலும் பெண்களின் பாதத்தை தொட்டு வணங்கி வழிபடுவதில் ஒரு வித தெய்வீக நிலையை அவர் அடைவதாய் குறிப்பிட்டிருந்தார். மேலும் சாலையில் நடக்கிற போதே எந்த ஒரு பெண்ணை பார்க்கிற போதே அவர் முதலில் பார்ப்பது அவளின் பாதங்களை தானாம். ஒவ்வொரு வகை பாதங்களிலும் ஒவ்வொரு சங்கதி இருக்கிறதென்கிறார்.


ஒவ்வொரு வகை பாதங்களிலும் ஒவ்வொரு சங்கதி இருக்கிறதென்கிறார்.பெண்களின் பாதங்களின் மூலம் அவர்களின் மனநிலையையும் டாமினேட்டிங் சம்பிசிவ் கேரக்டர்களையும் தெரிந்துகொள்ள முடியும் என்றும் பெண்களின் பாத அமைப்பும் அவர்கள் பாதங்களை வெளிக்காட்டும் முறையிலும் ஸ்டைல் மேனரிஸம் இதிலெல்லாம் நிறைய சங்கதிகள் இருப்பதாய் குறிப்பிட்டிருந்தார். அவை பற்றி எனக்கு முன்னரே தெளிவான வாசிப்பும் புரிதலும் இருப்பதால் எனக்கு அது ஒன்றும் புதிதல்ல. மேலும் சில அழகான பெண் பாதங்களின் புகைப்படங்களையும் அனுப்பியிருக்கிறார்க். சில உங்களுக்காக. எந்த பாதம் என்ன செய்தி சொல்கிறதென்று பின்னூட்டமிடுங்கள்.