Monday 4 July 2016

ஆண்கள் புடவை துவைக்கட்டுமே(1)


அனிதா அந்த உள்பாவாடையை சுருட்டி அவனுடைய முகத்துக்கு நேராக எறிந்தாள். அது அவன் முகத்தில் முட்டி விரிந்து கீழே விழுந்தது. அதை அவன் பரிதாபமாக குனிந்து தன் கையில் எடுத்தான். அவளை நேருக்கு நேராக பார்க்க அவமானபட்டு தலை குனிந்தபடி நின்றான். "எத்தனை தடவைடா சொல்றது நாயே....வீட்டுல வெட்டியா தானே இருக்க...உள்பாவடையை தொவச்சி இஸ்திரி போட்டு வைக்கிறப்போ நாடா உள்ளே போயிருக்கான்னு பாக்க மாட்டிய. இந்த மாசத்துல இதோட இரண்டாவது தடவை....போ வெளியே"என்று ஆத்திரப்பட்டாள்

அவன் உள்பாவாடையை பிரித்து ஒரு பக்க நாடா உள்ளே போயிருப்பதை பார்த்து தன்னைத்தானே நொந்துகொண்டான். அனிதா கோபப்படுவதில் ஞாயம் இருக்கிறது. அனிதா ஒரு பெரிய பேக்ட்டரியில் லைன் மேனேஜர். தனக்கு கீழே 200 பேரை கட்டி மேய்க்கிற பெரிய பொறுப்பு. காலையில் 8 மணிக்கு பேக்டரிக்குள் போனால் சாயங்காலம் 6 மணி வரை சுற்றி சுழன்று எல்லோரையும் தன் அறையிலிருந்தபடியே மிரட்டி பெண்ட் எடுத்து வேலை வாங்க வேண்டும். இது வரை ப்ரொடக்ஷனில் ஒரு புள்ளி விழாமல் பார்த்துக்கொள்கிறாள். அனிதா பேக்ட்டரிக்குள் நுழைந்தால் எல்லொருக்கும் மனசுக்குள் பயப்பந்து உருண்டு கண்ணும் கருத்துமாக வேலை செய்வதால் மேனேஜ்மென்டுக்கு இவள் செல்லப்பிள்ளை.

இப்படி அவசரமாக வேலைக்கு கிளம்பும் போது உள்பாவடை நாடாவை சரியாக எடுத்து வைக்காமலிருந்தால் கோபம் வரும் தானே.

வேலை முடித்து வீட்டுக்கு காரில் வந்துகொண்டிருந்த அனிதாவிடம் ஒரு குட்டி பேட்டி.


பெண்கள் தங்கள் வீட்டில் வீட்டு வேலைகளை": செய்வதை பற்றி உங்கள் கருத்து என்ன?


பெண்கள் முதலில் நிறுத்த வேண்டியது இதைத்தான். வீட்டு வேலை ஹவுஸ் கீப்பிங் என்பது ஒரு Routine வேலை. அதனால் உங்களின் மூளை திறன் வளரவோ 20 வருடம் வீட்டு வேலை செய்தேன் என்ற அனுபவத்தால் உங்களுக்கு பெரிய உத்தியோகம் கிடைக்கவோ வாய்ப்பில்லை. காலம் காலமாக பெண்களை இப்படி இலவசமாக வீட்டு வேலை செய்ய வைத்து ஆண்கள் சுகம் கண்டுவிட்டார்கள்.

பெண்கள் வீட்டு வேலை செய்வதை கேவலமாக எண்ண தொடங்க வேண்டும். எந்த வித வெகுமதியோ பலனோ இல்லாமல் வீட்டு வேலையை இலவசமாக செய்ய நாம் என்ன பிறவி அடிமைகளா என்ற எண்ணம் வரவேண்டும். சமுதாயத்தில் மாற்றத்தை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கொண்டு வரமுடியும். அதற்கு முதல் படி பெண்கள் வீட்டு வேலை செய்வதை முதலில் நிறுத்தவேண்டும்.

உதாரணமாக வீட்டில் பெருக்குவது டாய்லெட் கழுவுவது பாத்திரம் தேய்ப்பது....ஒரு மாதம் இதை செய்வதால் உங்கள் அறிவுத்திறன் வளர்கிறதா? அதே நேரம் அந்த ஒரு மாதம்  உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளும் காரியங்களில் ஈடுபட்டு பாருங்கள். புத்தகங்கள் படிக்கலாம்....செயல்திறன் வளர்த்துக்கொள்ள சிறிய கோர்ஸ்களுக்கு சென்று படிக்கலாம்....ஏதாவது ஒரு வேலைக்கு செல்லலாம். பெண்களாகிய நம்முடைய நோக்கம் இரண்டாக மட்டுமே இருக்க வேண்டும்.

1. நம் அறிவை வளர்த்துக்கொள்வது.
2. நம் அழகை பேணுவது.

அறிவை வளர்த்துக்கொள்வதன் மூலம் நாம் அதை உழைப்பாக மாற்றி பணம் பொருள் ஈட்ட முடியும். அது நமக்கு தன்னம்பிக்கையை தரும். நமது அழகை பேணுவது மிகவும் முக்கியம் . இது இரண்டும் தான் இந்த சமுதாயத்தில் பெண்களை மேன்மேலும் உயர்த்தும். வீட்டில் கரி சட்டி கழுவுவதல்ல.




கேட்கவே நெகிழ்ச்சியாக உள்ளது. சரி வீட்டு வேலைகளை பெண்கள் செய்யாமல் போனால் யார் தான் செய்வது?



ஹா...ஹா...ஹா....தங்களை தாங்களே பலசாலிகளாக கூறிக்கொள்ளும் ஆண்கள் செய்யட்டுமே. ஏன் ஆண்கள் வீட்டு வேலை செய்வதை நாம் இன்னும் வினோதமாக பார்க்கிறோம் என்பதே எனக்கு புரியவில்லை. ஏன் ஒரு ஆண் காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போடக்கூடாது. ஏன் ஒரு ஆண் குனிந்து வீட்டு தரையை சுத்தம் செய்யக்கூடாது. ஏன் ஒரு ஆண் நாம் அவிழ்த்து போடும் அழுக்கு துணிகளை ஒன்று சேர்த்து அழகாக துவைத்து காயப்போடக்கூடாது. ஏன் ஒரு ஆண் நாம் உண்டு வைக்கும் எச்சில் தட்டை எடுத்து சுத்தமாக கழுவி வைக்கக்கூடது. செய்யலாமே. ஆண்கள் பெண்களை விட பலசாலிகல். அன்று அந்த பலத்துக்கு வேறு வேலைகள் இருந்தன.

ஒரு காலத்தில் காட்டு வாழ்க்கை. காட்டில் போய் உண்டு சேகரித்து வரவேண்டும். வேட்டை ஆடவேண்டும். குடும்பத்தை ஆண் வீரனாக இருந்து விலங்குகள் எதிரிகளிடமிருந்து காக்க வேண்டும் அப்படி எல்லாம் இருந்தது. இப்போது அப்படி இல்லை. அவர்களுக்கு இணையாக இல்லை அவர்களை விட மேலாக நாம் சம்பாதிக்கிறோம். கல்வியில் அவர்களை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டோம். இன்னும் அதே பழைய பஞ்சாங்கத்தை பிடித்துக்கொண்டு பெண்களாகிய எங்களிடம் சட்டியை கழுவு கக்கூஸை சுத்தம் செய் என்று சொன்னால் ஆண்களே உங்களுக்கே அது காமெடியாக இல்லையா. ஆண்கள் தான் இனி மேல் இந்த வேலைகளை எல்லாம் செய்ய வேண்டும். அந்த காலம் விரைவில் வரும். அதற்கான முதல் படியை நாம் தான் எடுத்து வைக்க வேண்டும்.

                    Say NO to house chores.


இந்த பேட்டி தொடரும்......

Comment your feedback

உங்கள் கருத்துக்களை தயங்காமல் இந்த ஈமெயில் முகவரியில் தெரிவியுங்கள்

vincyontop@gmail.com

4 comments:

ram said...

madam what you say is correct
only men should do house work and
keep treat their wives as queens

Anonymous said...

உண்மை ஆண்கள் பெண்களின் அடிமை. ஆண்கள்தான் வீட்டுவேலைகள் செய்யனும் பெண்கள் வீட்ட்டின் மகாரானிகள்

prathap said...

mam please post atleast a word once in a week daily checking ur blog... im great fan of ur writings ..... please post any thing.. atleast say hi or somethings pls pls

ram said...

madam please continue your highness