Tuesday 8 September 2009

என் கணவர் ஆண்மை இல்லாதவர் - அந்தரங்க பேட்டி.- 1

Vincy - உங்கள் கணவருக்கு ஆண்மை இல்லை என்பதை எப்போது ஒப்புக்கொண்டார்.

Menaka: முதலிரவில். மற்ற முதலிரவு போல் ஆண் உள்ளே காத்திருக்க பெண் தலை குனிந்தபடி பால் சொம்போடு உள்ளே போகும் ஆணாதிக்க தனமான முதலிரவு இல்லை எங்களுடையது. சொல்லப்போனால் முதலிரவு அறையில் நான் தான் முதலில் போய் அமர்ந்திருந்தேன். புடவை கட்டவில்லை. ஒரு ஜீன்ஸும் டீ ஷர்டும் அணிந்திருந்தேன். பெமினா படித்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் என்னுடைய பாய் பிரண்ட் கம் கணவன் வந்தான். தயங்கி தயங்கி உள்ளே வந்தான். நான் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு மீண்டும் பெமினாவில் ஆழ்ந்திருந்தேன். அவன் கட்டிலின் ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு என் பாதங்களையே பார்த்தபடி இருந்தான்.
செக்ஸ் என்பது நான் விருப்பப்படும் பொழுது அவன் எனக்காக அளிக்க வேண்டிய ஒரு உடல் சுகம் என்பது அவனுக்கு தெரியும். அதனால் அமைதியாக அமர்ந்திருந்தான். நான் கால் மேல் கால் போட்டிருந்தது அவனுக்கு பிடித்திருந்தது. அரை மணி நேரம் புத்தகம் படித்துவிட்டு அதை சோபாவில் எறிந்தேன். எழுந்து கொண்டேன். உடனே அவன் நான் எதிர்பார்க்காத நிமிடத்தில் என் காலில் விழுந்தான். எனக்கு தலை கால் புரியவில்லை. கோடானு கோடி பெண்களை முதலிரவு அறையில் தங்கள் காலில் விழும்படி அதிகாரம் செய்த ஆண் வர்க்கத்தின் ஒரு உதிரி என் காலில் விழுந்து கிடந்ததை பார்த்தபோது பெண் விடுதலையும் அதன் ஆதிக்கமும் மெல்ல துளிர்விட்டிருப்பதை உணர முடிந்த்தது.

ஏய் என்னது இது சில்லியா என்று சொல்லிவிட்டு நான் பாத்ரூமுக்கு போனேன். இதே ஆண்களாய் இருந்திருந்தால் தன் காலில் ஒரு பெண் விழுந்துவிட்டால் போதும் உடனே பெரிய ராஜாவை போல் பாவ்லா செய்து அவளை எழுப்பி ஆசீர்வதித்து தூ....கான்ட்ராவி....(கோபத்தோடு சிரிக்கிறார்).நான் அவனை கண்டுகொள்ளாதது அவனுக்கு ஏமாற்றமும் என்னை குறித்து ஒரு பயமும் வந்திருக்கும். நான் டாயிலட்டுக்கு போய் கதவை சாற்றிக்கொண்டேன். வெளியே வந்து பார்த்தபோது அவன் டாயிலட் வாசலில் நின்றுகொண்டிருந்தான். நான் மெதுவாக புன்னகைத்தேன். அவனும் பதிலுக்கு சிரித்தான். போய் பிளஷ் பண்ணிட்டு வா என்றேன். அவன் உடனே உள்ளே போய் பிளஷ் செய்துவிட்டு வந்தான். அதை பார்க்க பரிதாபமாக இருந்தது.
அவன் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தபோது உட்கார் என்று கட்டிலின் விளிம்பை காட்டினேன். அவன் மெதுவாய் அமர்ந்தான்.



















ஆண்மை இல்லாதவர்கள் நாட வேண்டியது என் பூட்ஸின் அடிப்புறத்தை.


"நான் ஒரு துரோகம் பண்ணிட்டேன். என்று தொடங்கி தனக்கு ஆண்மை இல்லை என்பதையும் என் மேல் தீராத காதலும் மோகமும் இருந்ததால் தான் என்னை துரத்தி துரத்தி காதலித்ததாகவும் அது பெரிய தப்பு எனவும் என்னை ஏமாற்றிவிட்டதாகவும் கூறினான். அவனை நான் மன்னிக்கவேண்டும் எனவும் கெஞ்சினான். நான் அவனை பார்த்து லேசாக சிரித்தேன். நீ ஒண்ணுக்கும் யூஸ் இல்லாத தகர டப்பான்னு எனக்கு என்னைக்கோ தெரியும். ஆனாலும் உன்ன ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் தெரியுமா முதல்ல நீ என் மேல வச்சிருந்த பக்தி நிறைந்த காதல். என்னையே சுற்றி சுற்றி வந்த. எனக்கு என்னவெல்லாமோ செஞ்ச. நான் என்ன சொன்னாலும் அது எவ்வளவு கஷ்டமான காரியமா இருந்தாலும் ஓடி ஓடி பண்ணின. அது எனக்கு புடிச்சிருந்தது. அதனால உன்ன கல்யாணம் பண்ண முடிவு பண்ணினேன்.

அப்புறமா என்ன விட்டு போயிட மாட்டியேன்னு கேட்டான். உன்ன மாதிரி ஆப்ஜக்ட எல்லாம் யாரும் மிஸ் பண்ண மாட்டாங்க. கல்யாணம் ரிஷப்ஷனுன்னு நின்னுகிட்டே இருந்து கால் எல்லாம் வலிக்கிது. கொஞ்சம் அமுக்கி விடுன்னு சொன்னேன். சொன்னது தான் தாமதம் தரையில உக்காந்து அமுக்க ஆரம்பிச்சிடிச்சு.

Vincy - உங்கள் கணவர் செக்ஸ் விஷயத்தில் லாயக்கில்லாதவர் என தெரிந்தும் அவரை இன்னும் ஏற்றுக்கொண்டு வாழ்கிறீர்கள். அது மிக பெரிய விஷயம். செக்ஸ் விஷயத்தில் பிறகு உங்களை எப்படி திருப்தி படுத்திக்கொள்கிறீர்கள்.


Menaka - கட்டிய கணவன் மட்டுமே இந்த உலகத்தில் தனக்கு ஒரே ஆண் என வாழும் கோழை பெண் அல்ல நான். அப்படி வாழவேண்டும் என இந்த ஆணாதிக்க சமுதாயம் நம்மை ஊக்குவிக்கிறது. காரணம் பெண்களின் அழகும் அறிவும் ஆண்களை விட மித மிஞ்சியது. அப்படிப்பட்ட ஒரு பெண்ணை காலம் பூராவும் தன் வசம் வைத்திருக்கும் தகுதி இங்கு பல ஆண்களுக்கு கிடையாது. அந்த பயத்தில் தான் இப்படிப்பட்ட முட்டாள் தனமான வரைமுறைகளை கலாசாரம் என்ற பெயரைல் பரப்பி விட்டிருக்கிறார்கள். தங்கள் திறமையால் சாதிக்க முடியாததை சட்டம் போட்டு சாதிக்க நினைக்கும் கோழைகள் தான் ஆண்கள். அந்த சட்டங்களை கலாசாரம் என்ற பெயர் சூட்டி அழைக்கிறார்கள்.....

தொடரும்....


இதை படித்துவிட்டு ஸ்கூள் பிள்ளைகள் போல் ஆண்களே தயவு செய்து இது போல கமென்ட் எழுத வேண்டாம்..."வின்சி தோழி வெறும் செக்ஸ் மட்டும் வாழ்க்கை இல்லை...இல்லறம் என்பது....இத்யாதி இத்யாதி...."

12 comments:

Unknown said...

உங்க கருத்துக்கள் ஓரளவு சரியே. ஆனால் எங்களை ரொம்ப திட்டா தீங்க . கொஞ்சம் கஷ்டமா இருக்கு.

Anonymous said...

வின்சி .. lesbianism பற்றி உங்கள் எண்ணங்களையும், கருத்துகளையும் அறிய ஆசை..நேற்று The world unseen என்ற ஆங்கில படம் பார்த்தேன் .. அதனால் தான் இந்த கேள்வி ..
அருண்
9382635000
karmoulds@yahoo.com

anandrajah said...

செக்ஸ் என்பது மகிழ்ச்சிக்கு. இப்போதிருக்கும் ஆண்கள் அப்போது இல்லை. பெண்கள் அழைத்தால் மட்டுமே அவர்களை தொடுவார்கள் இப்போது உள்ள ஆண்கள். பெண்களை போதை பொருளாக அல்ல தெய்வீக மறை பொருளாகவும் பாவிக்க விரும்பவில்லை. நேரமும் இல்லை. பெண் கூப்பிட்டால் மட்டும் ஆண் போனால் அது அடிமைத்தனம் இல்லையம்மா...! சக மனுஷியை புரிந்து கொண்டதன்மை. உண்மையிலே... உங்க கணவர் அல்லது துணைவர் கொடுத்து வைத்தவர்.
ஆனந்த் ராஜ்.

வால்பையன் said...

இது வேறு பரிமாணம்!
நடக்கட்டும் நடக்கட்டும்!

thiru said...

உங்களோட கருத்துக்களை நான் முழுவதுமாக ஏற்கிறேன். சமூகத்தோட பார்வையில் பெண்கள் போதைப் பொருள் போலவும் ,போகப் பொருள் போலவும் தான் காட்டப் படுறாங்க. உங்களோட கருத்தை சொல்றதுக்கு ஏன் அப்படிக் கீழ்த்தரமான படங்களை நீங்க பயன்படுத்தறீங்க ? பெரியார் உங்களை விட அதிகமா பெண்கள் விடுதலை பற்றி பேசினார். ஆனா நீங்க பயன்படுத்தற படங்கள் உங்கள் வலைப்பூவை மூன்றாந்தரமாக ஆக்கி விடுகிறது. ரொம்ப வருத்தம்.

கற்பு - கலாசாரம் - மதம் என்றெல்லாம் சொல்லி பெண்களை காலம் காலமாக அடிமைப் படுத்திய ஆண் வர்க்கம் இன்னும் பெண்ணை ஒரு "use and throw" விஷயமாகப் பார்க்குறதுக்கு முக்கிய காரணம், பெண்கள் கிட்ட இருக்கிற தாழ்வு மனப்பான்மை தான். தமிழ்,தெலுங்கு, மலையாளம், ஹிந்தி சேனல்கள்ல வர்ற சீரியல் எல்லாமே பாத்தீங்கன்னா பெண்களை எவ்ளோ கேவலமாக் காட்ட முடியுமோ அவ்வளவு கேவலமாக் காட்டுறாங்க. குறிப்பா அதுல வர்ற ஹீரோயின் எல்லாம் "Masochistic"-ஆ காட்டப் படுறாங்க. அதப் பாக்குற பெரும்பாலான பெண்கள் தாங்களும் அப்படி இருந்தா தான் ஒரு "ideal" பெண்மணி என்பதைப் போல ஆகிடுறாங்க. உங்களோட எழுத்துக்கள பெரும்பாலான பெண்கள் படிக்கறாங்க என்றால், அவர்களிடத்தில், அவங்கள பலகீனப் படுத்தற சீரியல்களை தவிர்க்கச் சொல்லுங்க ..

ஏதோ தாங்கள் எல்லாம் கொடுமயத் தாங்கவே மண்ணில் அவதரிச்சு இருக்கோம் என்று எண்ணும் பெண்கள் தான் பெண்ணினத்துக்கே ஒரு சாபக்கேடு. அவங்கள மாத்துங்க. அப்படிப் பண்ணினாலே உங்க வலைப் பூவிற்கு பாதி வெற்றி ..

பெண்கள் பலகீனமானவங்க இல்லன்னு அவங்களுக்குப் புரியனும்.
அத மொதல்ல செய்யுங்க ..

Mohammed Hillal said...

if u dare contact me

dj_hilal@yahoo.com
djhillal@gmail.com

BIG DREAMER said...

Unaku romba thimir than! Oruthan appadi irundhal nee eppadi ellarayum thappa pesuva

By Real Ambala

Unknown said...

கலக்கல் வின்ஸி. பாதிக்கப்பட்ட பெண்கள் இதுபோல இறங்கினால் தான் ஆணாதிக்கவாதிகள் ஒழிவார்கள்.

அன்புடன்,
காயத்ரி

mightymaverick said...

உங்களுக்கு நல்ல கற்பனை திறனும் நகைச்சுவை உணர்வும் இருக்கிறது... உங்கள் எழுத்துக்களை படித்து நானும் என் நண்பர்களும் (நண்பிகளும் சேர்ந்து தான்) விழுந்து விழுந்து சிரித்தோம்... இது போன்ற நகைச்சுவை கதைகளையும் துணுக்குகளையும் உங்களிடம் இருந்து மென்மேலும் எதிர்பார்க்கிறோம்... lol

Anonymous said...

நல்ல கற்பனை

Anonymous said...

ஒரு பெண்ணுக்கு தகப்பனும் ஆண் தான் தமையனும் ஆண் தான் கணவனும் ஆண் தான், ஒரு ஆணுக்கு தாயும் பெண் தான் தமைக்கையும் பெண் தான் மனைவியும் பெண் தான், விட்டுக் கொடுத்தலிலே அன்பு ஆரம்பிக்கின்றது அது யாராக இருந்தாலும் ஒன்று தான், அடக்கப் படுவர்களும் அடங்குவர்களும் சந்தோஷமாக வாழ போவதில்லை, அன்பு ஒன்று மட்டுமே சகலரும் அடிமை ( நான் ஒரு பெண்)

Anonymous said...

இந்த மாற்றம் எனக்கு புடிச்சிருக்கு