Saturday, 18 April 2015

Mangalsutra - Thaali

What do you think about women forced to wear Mangalsutra by our culture police. Comment or email me.

Monday, 3 February 2014

hi all

hi all, are you all there, shall i write something

Wednesday, 1 June 2011

மனைவியின் ஆடைகளை துவைக்க வழிமுறைகள்(1)

மனைவியின் ஆடைகளை கணவன் துவைப்போது போன்ற காட்சிகள் எப்போதும் சினிமாவில் காமெடி மயமாகவே சித்தரிக்கப்படுகின்றன. அதே நேரம் ஒரு பெண் கணவனின் துணியை துவைப்பதோ தண்ணீர் சுமந்து வருவதோ வீட்டில் கழிவறையை சுத்தப்படுத்துவதோ இயல்பான காட்சிகளாக வடிக்கப்படுகிறது. மனைவியின் துணிகளை கணவன் துவைத்துப்போடுவதில் என்ன காமெடி இருக்கிறது என்று கேட்கிறார் என் தோழியின் கணவர்.

"என் மனைவி என்னை விட அதிகம் சம்பாதிக்கிறார். அதிகம் படித்தவர். ஒரு அலுவலகத்தில் பத்து பேரை கட்டி மேய்க்கும் மேலாண்மை அதிகாரியாக பணி புரிகிறார். அவர் தினமும் நேர்த்தியாக உடை உடுத்துவது அவசியம். ஒரு காலத்தில் பெண்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்தார்கள். அப்போது அவர்களை நாம் கண்ட மேனிக்கு வேலை வாங்கினோம். இப்போது அவர்கள் படிப்பிலும் அறிவிலும் வேலை வாய்ப்பிலும் சம்பாத்தியத்திலும் நம்மை மிஞ்சி அசுர வேகத்தில் முன்னேறிவருகிறார்கள். இந்த சமுதாய சூழ்நிலையில் மனைவிமார்கள் துணி துவைப்பது போன்ற காட்சிகள் தான் உண்மையில் காமெடி காட்சிகளாக சித்தரிக்கப்பட வேண்டியவை.மேலும் கணவரை விட அதிகம் படித்திருந்தும் அதிகம் சம்பாதிக்கும் வேலையில் இருந்தாலும் வீட்டு வேலைகளை பெண்கள் தான் செய்யவேண்டும் என்று நிர்ப்பந்திப்பது எத்தனை பெரிய கொடுமை.ஆண்கள் பெண்களின் ஆடைகளை துவைத்துப்போடுவது தான் யதார்த்தம்."

அவர் சொல்வது எத்தனை நிதர்சனம்.

ஒரு ஆராய்ச்சி கூடத்தில் உயர் அதிகாரியாக பணிபுரியும் மற்றொரு தோழியிடம் கேட்டபோது "பெண்களை அடிப்பது ஆபாசமாய் பேசுவது அதே போல் பெண்களை வீட்டு வேலை செய்ய பணிப்பது சில நேரங்களில் வீட்டில் மனைவியிடம் எதிர்த்து பேசுவதை கூட வன்கொடுமை சட்டத்திற்கு கீழ் கொண்டு வரவேண்டும்" என்று ஆதங்கத்தோடு தெரிவித்தார். உண்மையில் பெண்கள் இன்று படும் பாட்டை பார்க்கிற போது இது போன்ற சட்டங்கள் வந்தால் தான் பெண்கள் தங்கள் முன்னேற்ற பாதையில் இன்னும் பல சாதனைகளை செய்ய முடியும் என்று நம்புகிறேன்.

பிரபல பதிவர் ஒருவர் பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் போதெல்லாம் இவ்வாறு சொல்வார். அதாவது மாணவர்களை வீட்டில் எப்போதும் பருப்பு வாங்கிட்டு வா அப்பளம் வாங்கிட்டு வா என்று அடிக்கடி கடைக்கு அனுப்புகிறார்களாம். அதனால் தான் அந்த சீமான்களால் அதிக அளவில் தேர்ச்சி பெற முடியவில்லையாம். அடடே என்ன ஒரு கண்டுபிடிப்பு!!!

நேற்று கண்ட காட்சி. ஒரு பெண் சாலையில் சிவனே என்று நடந்து போய்க்கொண்டிருக்கிறார். பருப்பு அரிசி வாங்க கடைக்கு ஓடி ஓடி உழைத்து கிடைக்கும் நேரத்தில் படிக்கும் ஆண் குஞ்சுகள் எல்லாம் பத்து பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தான் பின்னால் வருவதும் சத்தமிடுவதும் ஊளையிடுவதுமாக என்ன அருமையாக தெருவில் அந்த பெண்ணை கேலி செய்தவாறு தங்கள் வேதியில் அறிவியல் புத்தகத்தை திறந்து படித்து திண்டாடுகிறார்கள்.

அன்பு நண்பரே நீங்கள் யோசித்து பாருங்கள். பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக அளவில் தேர்ச்சி பெறும் எம் குல மாணவிகள் எல்லாம் அடுத்த ஐந்தாண்டுகளில் அதே மிதமான முன்னேற்றத்தை ஆண்களுக்கு நிகராக பெற முடிகிறதா. பத்தாம் வகுப்பிலோ பிளஸ் டூவிலோ ஒரு மாணவனை விட அதிக மதிப்பெண் பெற்ற மாணவியை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பத்து வருடம் கழித்து இருவரின் நிலையும் என்ன என்று பாருங்கள். பிளஸ் டூவில் மாணவனை படிப்பில் வீழ்த்திய மாணவி தொடர்ந்து தன் வாழ்க்கையில் அந்த மாணவனை கல்வியிலும் அறிவிலும் வாழ்க்கை முறையிலும் வீழ்த்த முடிகிறதா?

அது தான் எங்களின் வாழ்க்கை. மாணவர்கள் பருப்பு அரிசி வாங்க கடைக்கு போவதால் அதிகம் தோல்வியுறவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஆண்கள் எப்போதும் போலத்தான் படிக்கிறார்கள். பெண்கள் நாங்கள் தான் எங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் கொஞ்சூண்டு வாய்ப்பை பயன்படுத்தி எங்களை நாங்களே முன்னேற்றிக்கொள்கிறோம். ஆண்களை விட பெண்கள் கல்வியில் பிரகாசிக்க முடியும் என்பதற்கு வருடா வருடம் சான்றுகள் வந்துகொண்டு தானே இருக்கின்றன. சொல்லப்போனால் உங்களை விட நாங்கள் தான் அறிவில் மேன்மக்கள். ஆனால் பிளஸ் டூவில் சாதிக்கும் நாங்கள் அடுத்தடுத்த கலாசார கட்டுப்பாடுகளில் சிக்கி சிதறுண்டு முப்பது வயதில் சமையல்காரியாகவும் கக்கூஸ் கழுபுவளாகவும் கணவனின் ஜெட்டி துவைத்து போடுபளாகவும் குழந்தையின் பீ அள்ளி கழுவி விடுபவளாகவும் மாறிப்போகிறோம். நீங்கள் ரொம்ப பாவம் அரிசி பருப்பு வாங்க கடைக்கு ஓடி ஓடியும் என்னவா முன்னேறுகிறீர்கள்?


சரி இனி மனைவியின் ஆடைகளை துவைத்து பராமரிப்பது பற்றி பார்ப்போம். இது என்னுடைய கற்பனை அல்ல. முழுக்க முழுக்க மனைவியின் ஆடைகளை தானே துவைத்துப்போடும் ஒரு அற்புத கணவரிடமிருந்து வாய் வழியாக கேட்டுப்பெற்ற தகவல்களை அவருடைய அனுமதியோடு இங்கே எழுதுகிறேன்.

பிளவுஸ்:

பெண்களின் பல்வேறு ஆடைகளில் ஆண்கள் ரசித்து துவைக்கும் ஒரு ஆடை பிளவுஸ். காரணம் அதிலிருக்கும் ஒரு கிளுகிளுப்பு தான். பெரும்பாலான ஆண்களுக்கு தங்கள் மனைவிமார்களின் அக்குள் வாசம் முகர்ந்து பார்க்க பிடிக்கும். தினமும் இரவு தன் மனைவி வேலையிலிருந்து வீட்டுக்கு வந்து உடைகளை அறையில் அவிழ்த்து போட்ட பிறகு உள்ளே போய் பிளவுஸில் தன் மனைவியின் வியர்வை வாசத்தை முகர்வது தனக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார்.

பொதுவாக பிளவுஸ் அதிக நேரம் தண்ணீரில் ஊற வைக்கக்கூடாது. காரணம் சாயம் போய்விடும். பிறகு உங்கள் மனைவி காலையில் மேச்சிங்காக இல்லை என்று உங்களிடம் கோவித்துக்கொள்வார். எனவே பிளவுஸ் எப்போதும் அதிக நேரம் ஊற வைக்கக்கூடாது. அடுத்தது பெண்களை போல அவர்களின் ஆடைகளும் மிருதுவானவை. அதன் மேல் உங்கள் காட்டுமிராண்டி வன்புணர்ச்சி உணர்வுகளை வெளிப்படுத்தாதீர்கள். பிளஸை அடித்து துவைப்பது அறிவாளி எருமை மாடு மேய்க்க கூட லாயக்கில்லாதவன் என்பேன்.

பிளவுஸை சிறிது நேரம் ஊற வைத்த பிறகு மெதுவாக கல்லில் வைத்து குலுக்க வேண்டும். அதிலே வியர்வை போன்றவை கரைந்து போய்விடும். பிறகு சிறிய அளவில் மட்டுமே சோப்பு பயன்படுத்தவேண்டும். எங்காவது கரை தென்பட்டால் அங்கு மட்டும் அதிகமாக சோப்பு போடலாம். அல்லது மிதமான சோப்பும் நுரையுமே போதுமானது. பிரஷ் உபயோகிக்கலாம். ஆனால் தேவையான பிரதேசத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அக்குளில் கண்டிப்பாக பயன்படுத்தலாம். அதுவும் கை பகுதியை மறித்து உள் பகுதியில் தான் பிரஷ் போடவேண்டும். இரண்டு இழுப்பு போதும். எங்காவது கரை இருக்குமானல் கவனமாக அதை அகற்றுங்கள். திங்கட்கிழமை காலை நீங்கள் சமையல் செய்துகொண்டிருக்க உங்கள் மனைவி டிரெஸ்ஸிங் ரூமிலிருந்து "என்ன துவச்சிருக்கீங்க இங்க பாருங்க" என்று கறையை காட்டி பிளவுஸை உங்கள் முகத்துக்கு நேராக விட்டெறியப்போகிறார்கள் ஜாக்கிரதை.

நன்றாக அலசிவிடவேண்டும். அலசிய பிறகு கொக்கிகள் சரியாக இருக்கின்றனவா என்று கவனிக்கவேண்டும். சில கொக்கிகள் விரிந்திருந்தால் அவற்றை அமர்த்தி சரி செய்வது நலம். பிறகு நன்றாக பிழிந்து கொட்டை வெயில் கொண்டு காயப்போடுபவரா நீங்கள் அப்படியானால் உங்களுக்கு பன்றி மேய்க்கும் வேலை கூட கிடைக்காது. பிளவுஸ் எப்போதும் நிழலில் தான் உலர்த்தவேண்டும். எனவே வெயில் இல்லாத இடத்தில் காயப்போட்டு காய்ந்தவுடன் அருகிலிருந்து பத்திரமாக எடுத்துவிடுங்கள்.

எடுத்த பிறகு ஒரு முறை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு அயர்ன் செய்யவும். அயர்ன் செய்யும் போது அக்குள் பகுதியிலிருக்கும் சுருக்கங்கள் சுத்தமாக போய்விடவேண்டும். இல்லையென்றால் ஓரிரு முறை அப்படியே விட்டுவிட்டால் சுருக்கம் சேர்ந்துவிடும். அழகாக அயர்ன் செய்து உங்கள் மனைவியின் அலமாரியில் மடித்து வைத்துவிடுங்கள்.

விரும்பினால் அடுத்தடுத்த ஆடைகள் பற்றி அடுத்தடுத்த பதிவில்.




ஆண்களே நீங்கள் பிளஸ் டூவில் வாங்கிய மார்க்கை பார்த்தால் இது போன்ற பிளவுஸ் துவைக்க அறிவு போதாது தனியாக வகுப்பெடுக்கவேண்டும் போலல்லவா இருக்கிறது.

Monday, 3 January 2011

யோனி ஆராய்ச்சி (திறக்காத மொட்டு)
















சமீபத்தில் ஒருவர் என்னோடு சாட் செய்தார். தன்னை பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டார். என் பிளாகை தொடர்ந்து படிப்பதாகவும் என்னுடைய கருத்துக்கள் பிடித்திருப்பதாகவும் சொன்னார். பிறகு என்னிடம் திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்டார். நான் இல்லை என்றேன். உடனே அவரது பதில் என்ன தெரியுமா?

"வாவ்...திருமணம் ஆகவில்லையா? அப்போது நீங்கள் புதிய மொட்டு அப்படித்தானே? மன்னிக்கவும் திறக்காத மொட்டு. என்ன சரி தானே திறக்காத மொட்டு சரிதானே?"
என்று தொடர்ந்து பத்து முறை கேட்டு பதில் அனுப்பிக்கொண்டிருந்தார்.

இது தான் ஆண்களின் கம்பீரம். அதாவது இரண்டு கன்னத்தில் இரண்டு கையை முட்டு கொடுத்து நிறுத்தியபடி மண்டி போட்டு எப்போதும் நமது யோனியை ஆராய்வது தான் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான வேலை.

திறந்த மொட்டா? திறக்காத மொட்டா? அங்கே யார் யார் வந்து போகிறார்கள். அவர்கள் துப்பிவிட்டு போவது என்ன? அதன் வாசம் என்ன? சுவை என்ன? ஏன் அவர்களுக்கு எல்லாம் மொட்டு திறக்கிறது? இப்படி மண்டி போட்டு பெண்களின் மறைவு பிரதேசத்தை ஆராய்வது தான் ஆண்களுக்கு மிகவும் பிடித்தமான வேலை. அந்த மறைவு பிரதேசத்தை ஆராய்ந்து டாக்டரேட் பட்டம் பெற்றதன் விளைவு தான் கற்பு என்ற கர்மாந்திரம்.

அதாவது பெண்கள் மட்டும் தங்கள் உறுப்பை யாருக்கும் காட்டாமல் ஒருவனுககே அதை உரித்தாக்க வேண்டும் என்ற பாசிஸ சிந்தனை குறைந்தது பத்து தலைமுறை ஆண்கள் வேறு வேலை வட்டி இல்லாமல் பொழுது புலர்ந்து இரவு முழுதும் யோனியின் அருகே மண்டி போட்டு வேறு வேலை வட்டி இல்லாமல் யோசித்திருந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பது இந்த திருமணமாகாது மொட்டின் கருத்து.

இப்படிப்பட்ட வம்சத்தில் வந்த ஆண் வர்க்கத்தை தான் நாம் வரதட்சணை கொடுத்து வாங்கி வைத்து குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறோம். வரிசையாக ஒரு ஆயிரம் யோனியை அடுக்கி வைத்தால் நாள் முழுத ஆராய்ச்சி செய்திகொண்டிருப்பேனே என்று உற்சாகமாக துள்ளி எழும் ஆண்களிடமிருந்து தான் இது போன்ற வக்கிரங்கள் வெளிப்படும். இவர்கள் கக்கூஸை ஆராய்வது போல் யோனியை ஆராய்ச்சி செய்துவிட்டு ஏதோ தாங்கள் தான் இந்த உலகில் மேன்மையாக படைக்கப்பட்டவர்கள் போல் பாவ்லா காட்டவேண்டும் அல்லவா? அதற்காகத்தான் வைத்திருக்கிறார்கள் தாலி மெட்டி கற்பு கன்ட்ராவி வாழாவெட்டி.

அதாவது அவர்களுக்கு ஆட்டை பலியிடுவது போதாது. நாமாகவே போய் என்னை பலியிடுங்கள் என்னை பலியிடுங்கள் எனக்கு வாழ்க்கை கொடுங்கள் என்னை வாழ வையுங்கள் என்று கெஞ்சவேண்டும். அதற்குத்தான் இந்த அடக்குமுறைகளும் சம்பிரதாயங்களும் பெண்கள் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது.

ஒரு பெண் என்ன படித்திருக்கிறாள். சமுதாயத்திற்கு அவள் என்ன தொண்டாற்றுகிறாள். அவள் என்ன வேலை செய்கிராள் இதை எல்லாம் விட ஆணுக்கு மிகவும் முக்கியமான ஒன்று அவள் திறந்த மொட்ட திறக்காத மொட்ட என்ற தகவல் மட்டுமே.

உதாரணமாக கார் டிரைவருக்கு தன் எஜமானியின் யோனி பற்றி கவலை. அவனுக்கு தன்னை விட படிப்பிலும் பணத்திலும் திறமையிலும் ஒரு பெண் சாதித்திருப்பது பற்றி வியப்பில்லை. அதை மதிக்கவோ ஆராதிக்கவோ அதன் பொருட்டு தன்னை உயர்த்திக்கொள்ளவோ அவனுக்கு எண்ணமில்லை . அவனுடைய கவலை எல்லாம் தன் எஜமானியின் யோனி எப்படிபட்டது என்பதே. இப்படிப்பட்ட ஆண்களுக்கும் தெருவில் மாடுகள் போட்டு வைக்கும் சாணத்துக்கும் எந்த வேருபாடும் இல்லை.

திருமணம் ஆனால் திறந்த மொட்டு இல்லையென்றால் திறக்காத மொட்டு என்று உங்களுக்கு நீங்களே ஒரு உன்னதமான முடிவுக்கு வந்து மகிழ்ந்துகொள்கிறீர்கள்.

"உங்கள் தாயும் திருமணம் ஆனவள் தான். அப்போது அவளை திறந்த மொட்டு என்று அழைப்பீர்களா? "
இப்படி நான் கேட்கப்போவதில்லை. இது போன்ற கேள்விகளை தமிழின் வடிகட்டிய ஆணாதிக்க இயக்குனர்கள் தான் கேட்க முடியும். அவர்கள் தான் அப்பாவி பெண்களை வைத்து இப்படியெல்லாம் கேட்கச்சொல்வார்கள்
"நீ அக்கா தங்கச்சியோட பொறக்கலையா? நான் உன் அம்ம மாதிரிடா எட்சட்ரா எட்சட்ரா..."
அக்கா தங்கச்சியோட பொறந்தவன் மட்டும் யோக்கியமா எல்லா பெண்களை அக்க தங்கச்சி போல் நினைக்கவேண்டும் என்று நான் அறிவுறுத்தவில்லை மாறாக அக்க தங்கச்சியோடு பொறந்தவன் பிற பெண்களை போல தன் அக்க தங்கச்சி மனைவி தாய் போன்ற தன் பெண் உறவுகளுக்கும் உரிய மரியாதையும் சுதந்திரமும் கொடுக்கட்டுமே. சன் மியூசிக்கில் வரும் 18 வயது பெண்ணை மேடம் என்று அழைக்கும் நீ உன் மனைவியை அழைக்க மட்டும் கூசுவது ஏன். அவளை மட்டும் வாடீ...போடீ என்று உன் ஆண் திமிரை கட்டி அழைத்து மகிழ்வது ஏன்?

எது எப்படியோ ஆண் திமிர் பிடித்தவர்களுக்கு பெண்களை வெறும் யோனியை சுமக்கும் பொம்மைகளாக பார்க்க மட்டுமே அறிவு வளம் பெற்றிருக்கிறது என்பதை அறிகிறபோது கேலி சிரிப்பு தான் வருகிறது.
வாழ்க ஆண்களின் யோனி ஆராய்ச்சி.

Thursday, 16 December 2010

புத்திசாலிப்பெண்கள் வீட்டு வேலை செய்யக்கூடாது

ஆண் சாவகாசமாக அமர்ந்து தினகரனில் வரும் கற்பழிப்பு செய்தியை மாய்ந்து மாய்ந்து படித்துக்கொண்டிருக்கும் பொழுது பெண் அடுப்பங்கரையில் (அது மாடுலர் கிச்சனாக இருந்தாலும் சரி) கஞ்சி வடித்துக்கொண்டிருப்பாள். ஆண் எப்போதும் தொலைக்காட்சியில் செய்திகள் கேட்டபடி "ஏன்டீ....கொஞ்சம் ஜூஸ் எடுத்துட்டு வா" என்று கட்டளையிடுவான். அதென்ன டீ போட்டு கூப்பிடுறது. புருஷன நாம டா போட்டு கூப்பிட்டா ஏதோ அவங்களுக்கு புடவை கட்டி விட்டமாதிரி அவமானப்பட்டுக்குறாங்க. நம்மள மட்டும் நிமிஷத்துக்கு நூறு வாட்டி டீ போட்டு கூப்பிடுறது.


இப்படி பொண்டாட்டிய 'டீ' போட்டு கூப்பிடுற அதிவீர தீர அதி பயங்கர ரணகள கெட்டவார்த்தை பான்பாராக் ஆண் சிங்கங்கள் தான் சன் மியூசிக்கில் வரும் பதினெட்டு வயது பெண்ணை 'மேடேம்....மேடேம்..."என்று மேய்கிறார்கள். ஆக அவர்களுக்கு பெண்களை மேடம் என்று அழைப்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதை மனைவியிடம் காட்டிவிட்டால் ஈகோ போய்விடும் அல்லவா. காலம் காலமாக என்ன சொல்லிக்கொடுத்தார்கள்? மனைவியை 'டீ' போட்டு அழைப்பது தான் ஆண்மைத்தனம். நல்ல கூப்பிடுங்கப்பா. பெண்களே உங்களுக்கும் சூடு சொரணை இல்லை. அவன் டீ போட்டு கூப்பிட்டா 'என்னங்க' என்று கே.ஆர்.விஜயா மாதிரி போய் நில்லுங்க.

பெண்கள் ஏன் வீட்டு வேலை செய்யவேண்டும் என்பது எனக்கு புரியவேயில்லை. ஆண் தன்னை பலசாலி எனவும் அதிவீர பான்பாராக் பாண்டிகளாகவும் பாக்கு போட்டு படிக்கட்டு முக்கில் துப்பி வைப்பது ஆண் வர்க்கத்தின் அதிபயங்கர போர்வீரனின் நெஞ்சுரம் போலவும் பீற்றிக்கொள்ளும் ஆண் கேவலம் பாத்திரம் கழுவவும் துணி துவைக்கவும் ஏன் பெண்ணை பணிக்கவேண்டும். அந்த சொற்ப வேலைகளை கூடவா அவர்களால் செய்ய முடியாது. புட்போர்டில் தொங்கியபடி சாகசம் காட்டும் ஆண்கள் அந்த சக்தியில் ஒரு பகுதியை செலவிட்டாலே பெண்களை உள்ளாடை வரை துவைத்து போட்டுவிடலாமே பிறகு ஏன் வீட்டு கழுவ பெருக்க என்று வீட்டு வேலைகளை எப்போதும் பெண்ணே செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

இன்று ஆணும் பெண்ணும் உழைக்கும் குடும்பங்களில் கூட பெண் தான் வீட்டு வேலை செய்ய பணிக்கப்படுகிறாள். கஞ்சி வடிப்பதும் கக்கூஸ் கழுவுவதும் பெண்களின் பிறப்புரிமை போல ஆணுக்கு நிகராக சம்பாதித்தாலும் இந்த கன்ட்ராவிகளை எல்லாம் நாமே செய்யவேண்டியிருக்கிறது.

பழங்காலத்தில் ஆண் வெளியில் போய் சம்பாதித்துவிட்டு வருவான். (அப்போது பெண்களாகிய நம்மை எங்கே அவர்களை விட நிறைய சம்பாதித்துவிடுவோமோ என்று அஞ்சி வேலைக்கே அனுப்பவில்லை.) அது வேறு கதை. அப்படி சம்பாதித்த காலத்தில் இரவில் ஆண்கள் தங்களை ஓசியில் குஷிபடுத்திக்கொள்ள தாலி என்ற புனித வஸ்துவை கட்டி மாட்டை போல் பெண்களை கூட்டி வைத்துக்கொண்டார்கள்.

ஒருவனை அடிமையாக வைத்துக்கொள்ள சிறந்த வழி எது தெரியுமா அந்த அடிமைத்தனத்தை புனிதப்படுத்துவது தான்.

ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அது ஒரு ஆங்கிலோ இந்தியப்பள்ளி. அங்கே ஒரு ஆசிரியை பயங்கர கோபக்காரி. எதற்கெடுத்தாலும் எங்களை அடித்துவிடுவார். அதுவும் அவரது ஸ்டைல் எப்படிஎன்றால் மண்டி போட்டு நிற்க வைத்து புட்டத்தில் பிரம்பால் அடிப்பாள். ஆண் பெண் பேதம் இல்லாமல் எல்லோரும் அவரிடத்தில் அடி வாங்கியிருக்கிறோம். வகுப்பில் பேசினால் போதும் எழுந்து வந்து கன்னத்தை பளாரிவிடுவார்.

ஒரு முறை இப்படி பிரம்பால் அடித்து ஒரு பையனுக்கு புட்டம் வீங்கிவிட்டது. அவன் அதை வீட்டில் சொல்லியிருக்கிறேன். வீட்டில் என்ன சொன்னார்கள் தெரியுமா "ஆசிரியர் அடித்தால் வாங்கிக்கொள்ள வேண்டும். அவர்கள் நீ நல்வழிப்படத்தான் அடிக்கிறார்கள். குருவின் தண்டனையை எதிர்த்து கேள்வி கேட்டவன் எவனும் உருப்பட்டதில்லை" என்று அறிவுரை வேறு கூறி அனுப்பிவிட்டார்கள்.

காலப்போக்கில் நாங்களும் அந்த ஆசிரியரின் வக்கிரங்களை குரு, சிஷ்யர்களுக்கு அளிக்கும் புனிதப்பரிசாக நினைக்க ஆரம்பித்தோம். இன்னும் ஒரு படி மேலே போய் அவர் கையால் அடி வாங்குவது ஏதோ வரம் கிடைத்தது போல உருவகப்படுத்திக்கொண்டோம். தொடர்ந்து அடி வாங்கியபடியே இருந்தோம். ஒரு நாள் வகுப்பில் ஒரு பெண் பேசிக்கொண்டிருந்தாள். அந்த ஆசிரியை பார்த்துவிட்டாள். கையில் வைத்திருந்த கட்டை டஸ்டரை எடுத்து அந்த பெண் மீது வீசினாள். அது அவளின் நெற்றியில் பட்டு கீழே விழுந்தது. அந்த பெணுக்கு சட்டென்று பெருங்கோபம் வந்தது. எப்படித்தான் அப்படி கோபப்பட்டாளோ தெரியாது. குனிந்து டஸ்டரை எடுத்து அந்த ஆசிரியை மீது ஓங்கி அடித்தாள். அவ்வளவு தான். அதன் பிறகு அந்த ஆசிரியை எங்கள் யாரையும் அடிப்பதில்லை. இது தான் புரட்சி. நம் அடிமைத்தனத்தை நாமே புனிதப்படுத்தி மண் சோறு தின்று தாலிக்கு மஞ்சள் குங்குமம் தடவி என்னங்க ஏதுங்க என்று ஒரு விலைக்கு வாங்கப்பட்ட அடிமை நாயை போல புனித யாத்திரை மேற்கொண்டால் ஆண்கள் இப்படித்தான் தொடர்ந்து நம்மை வதைத்துக்கொண்டிருப்பார்கள்.

ஆண்கள் பலே கில்லாடிகள் பாருங்கள். பெண்களை அடிமைகளாக வைத்திருக்கும் திருட்டு ரகசியம் நமக்கு தெரிந்துவிடும் என்பதால் உடனே அதை புனிதப்படுத்திவிடுகிறார்கள். உதாரணமாக தாலி. தாலியை ஒரு புனித சம்பிரதாயமாக நம் மீது திணிக்கிறார்கள். இன்று சில குடும்பங்களில் பறவாயில்லை முன்பெல்லாம் பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருக்கிற உரிமை இருந்ததா?

அதாவது இரவில் ஆணை குஷி படுத்துவதும் பிறகு மசக்கை வாந்தி மயிரு என்று படாதபாடுபட்டு குழந்தை பெற்றுக்கொள்வதும் பிறகு அதை வளர்ப்பதும் அடுத்த ஒரு மாதத்திலேயே மீண்டும் ஆணை இரவில் குஷி படுத்துவதும் அடுத்த குழந்தையை சுமந்து வாந்தி எடுத்து சாப்பிடபிடிக்காமல் பசித்து துடித்து மீண்டும் மீண்டும் அதே துன்பத்தை வருடாவருடம் நம்மிடம் திணித்தார்கள். ஒரு ஐம்பது வருடத்திற்கு முன்பு பார்த்தால் எல்லார் வீட்டிலும் ஐந்தோ பத்தோ குழந்தைகள் இருக்கும். எந்த பெண்ணுக்காவது இனி குழந்தை பெற்றுக்கொள்ளமாட்டேன் என்றோ இன்றைக்கு என்னை தொடாதே என்றோ சொல்ல உரிமை இருந்ததா? இல்லை. ஏனென்றால் தாய்மை என்பதையே ஏதோ புனித புண்ணாக்காக மாற்றி அதை காட்டியே பெண்ணை அடிமையாக வைக்க நினைத்த மகா கில்லாடிகள் நம் ஆண்கள்.

அதாவது தாய்க்குபின் தாரம் என்று ஏதோ கவர்னர் பதவியை நமக்கு கொடுத்துவிட்டது போல் இந்த ஆண்கள் நம்மை படுத்தியபாடு தெரியாதா என்ன?

விதவைகளுக்கு மொட்டை அடித்து வெள்ளை துணி கட்டி அழகு பார்த்த அரும்பெரும் புலிகள் அல்லவா இந்த ஆண் சமூகம்.



யோசித்து பார்த்தால் இப்படி பெண்ணை அடிமைபடுத்தும் எல்லா விஷயங்களையும் புனிதப்படுத்தியோ கடவுளோடு தொடர்புபடுத்தியோ அல்லது தியாகம் அன்பு என்று உருவகப்படுத்தியோ சமூகம் நம் மீது மறுபடியும் மறுபடியும் திணிக்கிறது. குழந்தையை தாய் கவனித்துக்கொள்ளவேண்டுமாம். ஓத்துவிட்டு போன ஆணுக்கு என்ன பொறுப்பு இருக்கிறதென்று கேட்டு பாருங்கள். தாய் தெய்வீகம் புனிதம் என்று வந்துவிடுவார்கள்.

இப்படித்தான் வீட்டு வேலை செய்வதையும் பெண்கள் மீது திணித்துவிட்டார்கள். மார்கழி மாதம் எந்த வீட்டிலாவது ஒரு ஆண் எழுந்து வாசல் தெளித்து கோலம் போடுவதை பார்க்க முடியுமா?



ஏன் என்று சொல்லுங்கள்? கேவலம் வாசலில் கொஞ்சூண்டு தண்ணி தெளித்து உக்காந்து தெமாத்தூண்டுக்கு ஒரு படம் வரைய முடியாத அளவுக்கு ஆண்கள் எல்லாம் பலகீனமாக உடல் ஊனமாகவா போய்விட்டார்கள்.

அல்லது ஓவியம் வரைவது ஆண்களுக்கு தீட்டு என்று எழுதியிருக்கிறதா? ஒரு வீட்டிலும் அப்படி பார்க்க முடியாது. காரணம் அதெல்லாம் பெண்களின் குல தொழில்.

தாய்க்கு பின் தாரம் அல்லவா ஆண்களே.

தொடரும்...

Wednesday, 7 July 2010

மாப்பிள்ளை பொண்ணோட கால்ல விழுந்து கும்பிடணும்



யோசிக்காதீங்க பாஸ் விழுந்து கும்பிடுங்க

எனக்கு வந்த ஒரு கடிதம். இதை பற்றி விவாதிப்போம்

----------------------------------------------------------------

Hi Vincy,
please tamil la elutha mudila...sorry..
Unga blog sudden ah nan google la parthen...Thanks to Google..neenga solra karuthu avlovum...correct(1000000000000%). Ipdilam iruntha epdi irukkum nu enakku ippa yosikka thonuthu
Ennakku ippa than kalyanam achu...5 months munnadi than....aangala pengalukku adangi irukkanumnu solringala...athu unmai...athukku en life ey oru example...nanum en husband um software la work panrom
avar 5.5 years ah work panrar....nan 2.5 years than. parunga...last month enakku promotion ..ippa nan team leader ah irukken...en keela 6 members.....intha 6 perum ...leave venumna en kitta than kekranga...
ana...en husband oh...5.5 years ah work panrar..innum team member ah irukkar..pengal evlo thiramai salingrathukku ithu oru alagana example...
enakku ivlo thiramai irunthum...nan than veetu vela seiren...thuni thoikren....kalyanathukku niraya panamum nanga than kuduthom...ithu yen???
ana onnu nanga thani kuduthnam la than irukkom....en amma adikadi vanthu povanga...ammakku ponnu mela paasam...ana ivar solrar...athan thani kuduthnama thana...yen un amma adikadi varanga...
unga terms la solren nan - vilaikku vanginathu nanga..kelvi kekrathu en purushan...
unga blog ah en amma kitta katinen..amma kooda...yen namma ipdi lam irukka koodathu nu solranga..
ana enakku than bayama irukku ithu mudiyuma nu...
en husband kitta kooda katinen...avar...itha padichuttu....romba upset...munnadi mathiri enna athathrathu illa....thanni kooda enna than ketpar munnadilam...ippa ennada nu avara eduthu kudikrar...unnakkum venuma nu enna kekrar...nan venam nanye eduthukren nu solliten...
aprammm.bed lam clean panni vaikrar...
anal ivar vangina panathukku ivar seira vela romba kammi vincy
amma kitta ketten...amma sonnanga...kutram ulla nenju kurukurukuthu...nee adakki aala ithan correct ana time....start pannu...vincy ya mail la contact panni advice kelu nu sonnangay
athan ungalukku mail panren...
enna lam nan panlam...ivara....epdi adakrathu...ennalam rules kudukkanum...enakku onum puriya...pls advice pannunga Vincy..
apram unga pen parkum padalam blog padichen...atha padichuttu...namma mapla pakka pona super ah irukkumey nu thonuthu aasaya irukku...but enakku marriage ayuduchu :(
oru pengal government urvanganum...aan parkum padalam urvaganum...governement rules podanum...ipdi than poi pakkanumnu ...itho en karpanai rules...
Rule 1: Mapla pakka ponnu veetar poganum
Rule 2: mapla than cofee kudukkanum
Rule 3: mapla ponnu kalula vilunthu kummudanum..
Rule 4: ponnu maplaya kelvi kekkanum.samayal theriyuma etc etc
Rule 5: mapla...Saree la varanum...ponnu jeans shirt la varanum
Rule 6: mapla pudichurukka illaya nu...pohone panni than sollanum...
Rule 7: ponnu veetukaranga...udaney pathil sollanumnu entha kattayamum illa..eppa venumnalum sollalam
Rule 8: anal ponnu veetla irunthu pathil vara varikkum...maplaya our moolayila paai pottu ukkara vaikkanum....like period for girls
Mapla veetla phone pottu kenjanum...enna result enna result nu...
Rule 9 - ***** Important*****
9a) result - mapla pudikala na...
Govt Central Database for Mapla Pakkum padalam - GCD MPP la...record pannanum..mapla parthanga...ponnukku mapla pudikalanu...each mapla will have unique id...
mapla pakka porathukku munnadi..ponnuga ithula chek pannalam..intha maplaya ethana ponnunga parthuttu poirukanganu...
Database pakka mudiyathavanga epdi purinjupanga nu thana kekringa...mapla rejected nu ketta udaney...mapla moolaila ukkara theva illa...avan normal routine kku pogalam...anal...High heels pottu than poganum...yello color high heels....it means rejected first time....
Intha rules thodarum...ithu epdi irukku nu sollunga pls...but enna pathi veliya sollathinga..just oru ponnu sonnal nu sollunga..pls VIncy mam
9b) result - mapla pudichurukku na..
mapla veetukaranga...payanukku...kalula kolusu maati vidanum
mapla veetu gate munnadi...mapla ya nikka vaikkanum...kaila oru pad with paper..
15 ponnunga no objection nu solli sign podanum....
intha paper oda..maplaya ponnu veetla kondu poi vidanum
anga maplaikku test vaipanga...1 week..samaikka therima...thuni thoikka therima....etc etc
epdilam nammala kodumai padithripanga...mapla veetla...namma yen athaye thiruppi seiyanum...diferrent ah panlamey thonuna karpana than ithu..

...ithu epdi irukku nu sollunga pls...but enna pathi veliya sollathinga..just oru ponnu sonnal nu sollunga..pls VIncy


ippadikku

Malathy(Nija per illai)

Tuesday, 6 July 2010

போலி பெண்ணியவாதிகளின் ஆபாச நடனம்.



சமகாலத்தில் பெண் போலி பெண்ணியவாதிகளிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளாள்.

இந்த போலிகள் வலை உலகிலும் வலம் வருகின்றன.

ஒரு பெண் சைக்கிளில் போய்க்கொண்டிருக்கிறாள். வெட்டியாய் மூன்று ஆண்கள் தெருவில் நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு நாய் குறுக்கே வர பெண் தடுமாறி கீழே விழுகிறாள். அவ்வளவு தான். அந்த மூன்று பேரும் அவளை தூக்குவதென்ன....அந்த நாயை விரட்டுவதென்ன...சைக்கிளை நிமிர்த்தி வைப்பதென்ன....அவளது கீழே விழுந்த பொருட்களை குனிந்து எடுப்பதென்ன. இதை எல்லாம் கூட ஒரு மனிதாபிமானத்தின் அடிப்படையில் என்று சொல்லலாம். அந்த பெண் எழுந்து சைக்கிளை மிதித்தபடி தன் வேலையை பார்த்துக்கொண்டு கிளம்பிவிட்டாள். ஆனால் போலிகளோ அங்கேயே நின்றுகொண்டு அங்கு சுற்றி திரியும் நாய் மீது கல்லடிப்பதென்ன....நாய் ஒழிப்பு பிரசாரம் நடத்துவதென்ன...

கூடவே வீட்டு நாய்களையும் சேர்த்து வைத்து வசைபாடுவதென்ன...

"பெண்களுக்கு எதிராக தீங்கு செய்த நாய்கள் மண்டி போட்டு மன்னிப்பு கேட்கவேண்டும்" என்று போராடுவதென்ன...

போயா போ போய் வேலையை பாரு.

பெண்ணுக்கு தன்னை சீண்டும் மிருகத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் அதை முட்டி மோதி எப்படி ஜெயிக்க வேண்டும் சாக்கடையிலிருந்து எப்படி விலகி நடக்கவேண்டும் தொடர்ந்து தான் வாழ்க்கையை எப்படி வெற்றிகரமாய் இயக்கவேண்டும் என்பதெல்லாம் தெரிந்தே இருக்கிறது. பெண்ணியம் பேசுவதென் மூலம் கை தட்டோ அல்லது உள்ளுக்குள் கொப்பளிக்கும் ஒரு வித ஆனந்த களிப்புக்கோ சுய இன்பத்திற்கோ வேண்டுமானால் உங்களின் பெண்ணிய பேச்சுக்கள் பயன்படலாம். ஆனால் பெண்ணுக்கு இது எந்த வகையிலும் உபயோகப்படப்போவதில்லை. இன்றைய காலகட்டத்தில் அதை அவள் எதிர்பார்ப்பதும் இல்லை.

ஒரு வேளை ஐம்பது வருடத்திற்கு முன்பு இப்படி கூப்பாடு போட்டிருந்தால் உங்களுக்கு சிலை வைத்திருப்பார்கள். இன்றைய காலகட்டத்தில் பெண்ணியம் பேசுவதை பெண் விரும்புவதில்லை. காலம் காலமாய் நம்மை அடிமையாய் வைத்து ஆண்டு முடித்த ஆண்கள் பேசும் பெண்ணியத்தை அவள் அவ்வளவாக நம்பப்போவதில்லை. ஒரு வேளை பெண்ணிய செயல்பாடுகளை பார்த்து வேண்டுமானால் உங்களை பெண்ணிய வாதியாக ஏற்றுக்கொள்ளலாம். வெருமனே வலைபதிவில் குதறுவதை விட்டுவிட்டு முதலில் ஆண்களே உங்களுக்கு உபயோகமானதை செய்யுங்கள்.

வீணாக தூ...தூ...என துப்பி எச்சில் ஆறு ஓடவைப்பதோ....

மாஸ்டர்பேஷன் என்று சொல்லி விந்தாறு ஓடவைப்பதோ...

ஜாதி ஜமுக்காளம் என்று சொல்லி வீண் பிரிவினை தோற்றுவிப்பதோ

பெண்ணுக்கு எந்த வகையிலும் உதவியாக இருக்கப்போவதில்லை.

ஆண் வர்க்கம் முட்டாள்களின் மந்தை என்பதை நாங்கள் எப்போதோ புரிந்துகொண்டுவிட்டோம். உங்களை நீங்களே மீண்டும் மீண்டும் முட்டாளாக்கி காட்டவெண்டியதில்லை.

பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்க்க நாங்கள் துணிந்துவிட்டோம். உதவிக்கு அழைத்தால் மட்டும் விருப்பமுள்ளவர்கள் வரலாம். அதை விட்டுவிட்டு வீணாக வாண்டடா வந்து எங்கள் கால்களை வருடியபடி நிற்கவேண்டாம் என்று பெரும் சிரிப்புடன் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

துணிந்து போராட திராணி இல்லாமலா இன்று பெண்கள் ஆண்களே வியந்து பார்க்கும் உயரத்திற்கு நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

என்வே பதிவுலக போலி பெண்ணியவாதிகளே உங்கள் காபரே நடனத்தை நிறுத்திவிட்டு மனைவிகளுக்கு காய் கறி வாங்கி கொடுங்கள் துணி துவைத்து போடுங்கள் சமைத்து பாருங்கள் முடிந்தால் அவளின் கை கால்களை பிடித்து விடுங்கள். அதன் மூலம் உங்கள் மனைவியருகாவது உபயோகமாய் இருங்கள்.

வெறுமனே இங்கு வந்து துப்பி தீர்க்காதீர்கள். உங்களின் துப்பு கலாசாரம் வீதிகளை அசிங்கப்படுத்துவது போல் வலைத்தளங்களையும் நாறடிக்கிறது.

DISC: பெண்ணியவாதிகள் யாராவது இருந்தால் இதை தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டு போடவும்.



Just for fun.

பெண்: சார் நீங்க பெண்ணியவாதி தானே?
ஆண்கள் :( கோரஸாக) ஆமாங்க மேடம்.
பெண் : டென்னிஸ் விளையாடிகிட்டு இருந்தேன் அந்த சந்துல பால் விழுந்திடிச்சு கொஞ்சம் எடுத்து கொடுங்களேன்.
ஆண்கள்: நீங்க விளையாடுவீங்க நீங்க பந்து பொறுக்கி போடணுமா? (ஆணாதிக்கம்)
பெண்: ஆக்சுவலா நானும் என் பாய் பிரண்டும் தான் விளையாடிட்டு இருந்தோம். பந்த அடிச்சது அவன் தான்.
ஆண்கள் உடனே தள்ளுமுள்ளு ஆகும் அளாவுக்கு கூட்டமாய் புறப்பட்டுவிட்டார்கள். பந்தை பொறுக்க.....அந்த கூட்டத்தில் பேசிக்கொண்டவை....

"இது எவ்வளவு பெரிய தடித்தனம் ஒரு பெண் விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது பந்தை அடித்து குழியில் போடுவதா?"

"பந்தை அடித்து குழியில் போட்டது அவளுக்கு எதிரான வன்புணர்ச்சி"

"சீ தூ....கோழையே பந்தை அடித்து பாதாளத்தில் போய்ட்டாயே?"

"மன்னிப்பு கேள்"

அடப்பாவிகளா இதுக்கு நாமளே போய் பந்த எடுத்துட்டு வந்திருக்கலாமே....