Thursday 16 December 2010

புத்திசாலிப்பெண்கள் வீட்டு வேலை செய்யக்கூடாது

ஆண் சாவகாசமாக அமர்ந்து தினகரனில் வரும் கற்பழிப்பு செய்தியை மாய்ந்து மாய்ந்து படித்துக்கொண்டிருக்கும் பொழுது பெண் அடுப்பங்கரையில் (அது மாடுலர் கிச்சனாக இருந்தாலும் சரி) கஞ்சி வடித்துக்கொண்டிருப்பாள். ஆண் எப்போதும் தொலைக்காட்சியில் செய்திகள் கேட்டபடி "ஏன்டீ....கொஞ்சம் ஜூஸ் எடுத்துட்டு வா" என்று கட்டளையிடுவான். அதென்ன டீ போட்டு கூப்பிடுறது. புருஷன நாம டா போட்டு கூப்பிட்டா ஏதோ அவங்களுக்கு புடவை கட்டி விட்டமாதிரி அவமானப்பட்டுக்குறாங்க. நம்மள மட்டும் நிமிஷத்துக்கு நூறு வாட்டி டீ போட்டு கூப்பிடுறது.


இப்படி பொண்டாட்டிய 'டீ' போட்டு கூப்பிடுற அதிவீர தீர அதி பயங்கர ரணகள கெட்டவார்த்தை பான்பாராக் ஆண் சிங்கங்கள் தான் சன் மியூசிக்கில் வரும் பதினெட்டு வயது பெண்ணை 'மேடேம்....மேடேம்..."என்று மேய்கிறார்கள். ஆக அவர்களுக்கு பெண்களை மேடம் என்று அழைப்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதை மனைவியிடம் காட்டிவிட்டால் ஈகோ போய்விடும் அல்லவா. காலம் காலமாக என்ன சொல்லிக்கொடுத்தார்கள்? மனைவியை 'டீ' போட்டு அழைப்பது தான் ஆண்மைத்தனம். நல்ல கூப்பிடுங்கப்பா. பெண்களே உங்களுக்கும் சூடு சொரணை இல்லை. அவன் டீ போட்டு கூப்பிட்டா 'என்னங்க' என்று கே.ஆர்.விஜயா மாதிரி போய் நில்லுங்க.

பெண்கள் ஏன் வீட்டு வேலை செய்யவேண்டும் என்பது எனக்கு புரியவேயில்லை. ஆண் தன்னை பலசாலி எனவும் அதிவீர பான்பாராக் பாண்டிகளாகவும் பாக்கு போட்டு படிக்கட்டு முக்கில் துப்பி வைப்பது ஆண் வர்க்கத்தின் அதிபயங்கர போர்வீரனின் நெஞ்சுரம் போலவும் பீற்றிக்கொள்ளும் ஆண் கேவலம் பாத்திரம் கழுவவும் துணி துவைக்கவும் ஏன் பெண்ணை பணிக்கவேண்டும். அந்த சொற்ப வேலைகளை கூடவா அவர்களால் செய்ய முடியாது. புட்போர்டில் தொங்கியபடி சாகசம் காட்டும் ஆண்கள் அந்த சக்தியில் ஒரு பகுதியை செலவிட்டாலே பெண்களை உள்ளாடை வரை துவைத்து போட்டுவிடலாமே பிறகு ஏன் வீட்டு கழுவ பெருக்க என்று வீட்டு வேலைகளை எப்போதும் பெண்ணே செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

இன்று ஆணும் பெண்ணும் உழைக்கும் குடும்பங்களில் கூட பெண் தான் வீட்டு வேலை செய்ய பணிக்கப்படுகிறாள். கஞ்சி வடிப்பதும் கக்கூஸ் கழுவுவதும் பெண்களின் பிறப்புரிமை போல ஆணுக்கு நிகராக சம்பாதித்தாலும் இந்த கன்ட்ராவிகளை எல்லாம் நாமே செய்யவேண்டியிருக்கிறது.

பழங்காலத்தில் ஆண் வெளியில் போய் சம்பாதித்துவிட்டு வருவான். (அப்போது பெண்களாகிய நம்மை எங்கே அவர்களை விட நிறைய சம்பாதித்துவிடுவோமோ என்று அஞ்சி வேலைக்கே அனுப்பவில்லை.) அது வேறு கதை. அப்படி சம்பாதித்த காலத்தில் இரவில் ஆண்கள் தங்களை ஓசியில் குஷிபடுத்திக்கொள்ள தாலி என்ற புனித வஸ்துவை கட்டி மாட்டை போல் பெண்களை கூட்டி வைத்துக்கொண்டார்கள்.

ஒருவனை அடிமையாக வைத்துக்கொள்ள சிறந்த வழி எது தெரியுமா அந்த அடிமைத்தனத்தை புனிதப்படுத்துவது தான்.

ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அது ஒரு ஆங்கிலோ இந்தியப்பள்ளி. அங்கே ஒரு ஆசிரியை பயங்கர கோபக்காரி. எதற்கெடுத்தாலும் எங்களை அடித்துவிடுவார். அதுவும் அவரது ஸ்டைல் எப்படிஎன்றால் மண்டி போட்டு நிற்க வைத்து புட்டத்தில் பிரம்பால் அடிப்பாள். ஆண் பெண் பேதம் இல்லாமல் எல்லோரும் அவரிடத்தில் அடி வாங்கியிருக்கிறோம். வகுப்பில் பேசினால் போதும் எழுந்து வந்து கன்னத்தை பளாரிவிடுவார்.

ஒரு முறை இப்படி பிரம்பால் அடித்து ஒரு பையனுக்கு புட்டம் வீங்கிவிட்டது. அவன் அதை வீட்டில் சொல்லியிருக்கிறேன். வீட்டில் என்ன சொன்னார்கள் தெரியுமா "ஆசிரியர் அடித்தால் வாங்கிக்கொள்ள வேண்டும். அவர்கள் நீ நல்வழிப்படத்தான் அடிக்கிறார்கள். குருவின் தண்டனையை எதிர்த்து கேள்வி கேட்டவன் எவனும் உருப்பட்டதில்லை" என்று அறிவுரை வேறு கூறி அனுப்பிவிட்டார்கள்.

காலப்போக்கில் நாங்களும் அந்த ஆசிரியரின் வக்கிரங்களை குரு, சிஷ்யர்களுக்கு அளிக்கும் புனிதப்பரிசாக நினைக்க ஆரம்பித்தோம். இன்னும் ஒரு படி மேலே போய் அவர் கையால் அடி வாங்குவது ஏதோ வரம் கிடைத்தது போல உருவகப்படுத்திக்கொண்டோம். தொடர்ந்து அடி வாங்கியபடியே இருந்தோம். ஒரு நாள் வகுப்பில் ஒரு பெண் பேசிக்கொண்டிருந்தாள். அந்த ஆசிரியை பார்த்துவிட்டாள். கையில் வைத்திருந்த கட்டை டஸ்டரை எடுத்து அந்த பெண் மீது வீசினாள். அது அவளின் நெற்றியில் பட்டு கீழே விழுந்தது. அந்த பெணுக்கு சட்டென்று பெருங்கோபம் வந்தது. எப்படித்தான் அப்படி கோபப்பட்டாளோ தெரியாது. குனிந்து டஸ்டரை எடுத்து அந்த ஆசிரியை மீது ஓங்கி அடித்தாள். அவ்வளவு தான். அதன் பிறகு அந்த ஆசிரியை எங்கள் யாரையும் அடிப்பதில்லை. இது தான் புரட்சி. நம் அடிமைத்தனத்தை நாமே புனிதப்படுத்தி மண் சோறு தின்று தாலிக்கு மஞ்சள் குங்குமம் தடவி என்னங்க ஏதுங்க என்று ஒரு விலைக்கு வாங்கப்பட்ட அடிமை நாயை போல புனித யாத்திரை மேற்கொண்டால் ஆண்கள் இப்படித்தான் தொடர்ந்து நம்மை வதைத்துக்கொண்டிருப்பார்கள்.

ஆண்கள் பலே கில்லாடிகள் பாருங்கள். பெண்களை அடிமைகளாக வைத்திருக்கும் திருட்டு ரகசியம் நமக்கு தெரிந்துவிடும் என்பதால் உடனே அதை புனிதப்படுத்திவிடுகிறார்கள். உதாரணமாக தாலி. தாலியை ஒரு புனித சம்பிரதாயமாக நம் மீது திணிக்கிறார்கள். இன்று சில குடும்பங்களில் பறவாயில்லை முன்பெல்லாம் பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருக்கிற உரிமை இருந்ததா?

அதாவது இரவில் ஆணை குஷி படுத்துவதும் பிறகு மசக்கை வாந்தி மயிரு என்று படாதபாடுபட்டு குழந்தை பெற்றுக்கொள்வதும் பிறகு அதை வளர்ப்பதும் அடுத்த ஒரு மாதத்திலேயே மீண்டும் ஆணை இரவில் குஷி படுத்துவதும் அடுத்த குழந்தையை சுமந்து வாந்தி எடுத்து சாப்பிடபிடிக்காமல் பசித்து துடித்து மீண்டும் மீண்டும் அதே துன்பத்தை வருடாவருடம் நம்மிடம் திணித்தார்கள். ஒரு ஐம்பது வருடத்திற்கு முன்பு பார்த்தால் எல்லார் வீட்டிலும் ஐந்தோ பத்தோ குழந்தைகள் இருக்கும். எந்த பெண்ணுக்காவது இனி குழந்தை பெற்றுக்கொள்ளமாட்டேன் என்றோ இன்றைக்கு என்னை தொடாதே என்றோ சொல்ல உரிமை இருந்ததா? இல்லை. ஏனென்றால் தாய்மை என்பதையே ஏதோ புனித புண்ணாக்காக மாற்றி அதை காட்டியே பெண்ணை அடிமையாக வைக்க நினைத்த மகா கில்லாடிகள் நம் ஆண்கள்.

அதாவது தாய்க்குபின் தாரம் என்று ஏதோ கவர்னர் பதவியை நமக்கு கொடுத்துவிட்டது போல் இந்த ஆண்கள் நம்மை படுத்தியபாடு தெரியாதா என்ன?

விதவைகளுக்கு மொட்டை அடித்து வெள்ளை துணி கட்டி அழகு பார்த்த அரும்பெரும் புலிகள் அல்லவா இந்த ஆண் சமூகம்.



யோசித்து பார்த்தால் இப்படி பெண்ணை அடிமைபடுத்தும் எல்லா விஷயங்களையும் புனிதப்படுத்தியோ கடவுளோடு தொடர்புபடுத்தியோ அல்லது தியாகம் அன்பு என்று உருவகப்படுத்தியோ சமூகம் நம் மீது மறுபடியும் மறுபடியும் திணிக்கிறது. குழந்தையை தாய் கவனித்துக்கொள்ளவேண்டுமாம். ஓத்துவிட்டு போன ஆணுக்கு என்ன பொறுப்பு இருக்கிறதென்று கேட்டு பாருங்கள். தாய் தெய்வீகம் புனிதம் என்று வந்துவிடுவார்கள்.

இப்படித்தான் வீட்டு வேலை செய்வதையும் பெண்கள் மீது திணித்துவிட்டார்கள். மார்கழி மாதம் எந்த வீட்டிலாவது ஒரு ஆண் எழுந்து வாசல் தெளித்து கோலம் போடுவதை பார்க்க முடியுமா?



ஏன் என்று சொல்லுங்கள்? கேவலம் வாசலில் கொஞ்சூண்டு தண்ணி தெளித்து உக்காந்து தெமாத்தூண்டுக்கு ஒரு படம் வரைய முடியாத அளவுக்கு ஆண்கள் எல்லாம் பலகீனமாக உடல் ஊனமாகவா போய்விட்டார்கள்.

அல்லது ஓவியம் வரைவது ஆண்களுக்கு தீட்டு என்று எழுதியிருக்கிறதா? ஒரு வீட்டிலும் அப்படி பார்க்க முடியாது. காரணம் அதெல்லாம் பெண்களின் குல தொழில்.

தாய்க்கு பின் தாரம் அல்லவா ஆண்களே.

தொடரும்...

Wednesday 7 July 2010

மாப்பிள்ளை பொண்ணோட கால்ல விழுந்து கும்பிடணும்



யோசிக்காதீங்க பாஸ் விழுந்து கும்பிடுங்க

எனக்கு வந்த ஒரு கடிதம். இதை பற்றி விவாதிப்போம்

----------------------------------------------------------------

Hi Vincy,
please tamil la elutha mudila...sorry..
Unga blog sudden ah nan google la parthen...Thanks to Google..neenga solra karuthu avlovum...correct(1000000000000%). Ipdilam iruntha epdi irukkum nu enakku ippa yosikka thonuthu
Ennakku ippa than kalyanam achu...5 months munnadi than....aangala pengalukku adangi irukkanumnu solringala...athu unmai...athukku en life ey oru example...nanum en husband um software la work panrom
avar 5.5 years ah work panrar....nan 2.5 years than. parunga...last month enakku promotion ..ippa nan team leader ah irukken...en keela 6 members.....intha 6 perum ...leave venumna en kitta than kekranga...
ana...en husband oh...5.5 years ah work panrar..innum team member ah irukkar..pengal evlo thiramai salingrathukku ithu oru alagana example...
enakku ivlo thiramai irunthum...nan than veetu vela seiren...thuni thoikren....kalyanathukku niraya panamum nanga than kuduthom...ithu yen???
ana onnu nanga thani kuduthnam la than irukkom....en amma adikadi vanthu povanga...ammakku ponnu mela paasam...ana ivar solrar...athan thani kuduthnama thana...yen un amma adikadi varanga...
unga terms la solren nan - vilaikku vanginathu nanga..kelvi kekrathu en purushan...
unga blog ah en amma kitta katinen..amma kooda...yen namma ipdi lam irukka koodathu nu solranga..
ana enakku than bayama irukku ithu mudiyuma nu...
en husband kitta kooda katinen...avar...itha padichuttu....romba upset...munnadi mathiri enna athathrathu illa....thanni kooda enna than ketpar munnadilam...ippa ennada nu avara eduthu kudikrar...unnakkum venuma nu enna kekrar...nan venam nanye eduthukren nu solliten...
aprammm.bed lam clean panni vaikrar...
anal ivar vangina panathukku ivar seira vela romba kammi vincy
amma kitta ketten...amma sonnanga...kutram ulla nenju kurukurukuthu...nee adakki aala ithan correct ana time....start pannu...vincy ya mail la contact panni advice kelu nu sonnangay
athan ungalukku mail panren...
enna lam nan panlam...ivara....epdi adakrathu...ennalam rules kudukkanum...enakku onum puriya...pls advice pannunga Vincy..
apram unga pen parkum padalam blog padichen...atha padichuttu...namma mapla pakka pona super ah irukkumey nu thonuthu aasaya irukku...but enakku marriage ayuduchu :(
oru pengal government urvanganum...aan parkum padalam urvaganum...governement rules podanum...ipdi than poi pakkanumnu ...itho en karpanai rules...
Rule 1: Mapla pakka ponnu veetar poganum
Rule 2: mapla than cofee kudukkanum
Rule 3: mapla ponnu kalula vilunthu kummudanum..
Rule 4: ponnu maplaya kelvi kekkanum.samayal theriyuma etc etc
Rule 5: mapla...Saree la varanum...ponnu jeans shirt la varanum
Rule 6: mapla pudichurukka illaya nu...pohone panni than sollanum...
Rule 7: ponnu veetukaranga...udaney pathil sollanumnu entha kattayamum illa..eppa venumnalum sollalam
Rule 8: anal ponnu veetla irunthu pathil vara varikkum...maplaya our moolayila paai pottu ukkara vaikkanum....like period for girls
Mapla veetla phone pottu kenjanum...enna result enna result nu...
Rule 9 - ***** Important*****
9a) result - mapla pudikala na...
Govt Central Database for Mapla Pakkum padalam - GCD MPP la...record pannanum..mapla parthanga...ponnukku mapla pudikalanu...each mapla will have unique id...
mapla pakka porathukku munnadi..ponnuga ithula chek pannalam..intha maplaya ethana ponnunga parthuttu poirukanganu...
Database pakka mudiyathavanga epdi purinjupanga nu thana kekringa...mapla rejected nu ketta udaney...mapla moolaila ukkara theva illa...avan normal routine kku pogalam...anal...High heels pottu than poganum...yello color high heels....it means rejected first time....
Intha rules thodarum...ithu epdi irukku nu sollunga pls...but enna pathi veliya sollathinga..just oru ponnu sonnal nu sollunga..pls VIncy mam
9b) result - mapla pudichurukku na..
mapla veetukaranga...payanukku...kalula kolusu maati vidanum
mapla veetu gate munnadi...mapla ya nikka vaikkanum...kaila oru pad with paper..
15 ponnunga no objection nu solli sign podanum....
intha paper oda..maplaya ponnu veetla kondu poi vidanum
anga maplaikku test vaipanga...1 week..samaikka therima...thuni thoikka therima....etc etc
epdilam nammala kodumai padithripanga...mapla veetla...namma yen athaye thiruppi seiyanum...diferrent ah panlamey thonuna karpana than ithu..

...ithu epdi irukku nu sollunga pls...but enna pathi veliya sollathinga..just oru ponnu sonnal nu sollunga..pls VIncy


ippadikku

Malathy(Nija per illai)

Tuesday 6 July 2010

போலி பெண்ணியவாதிகளின் ஆபாச நடனம்.



சமகாலத்தில் பெண் போலி பெண்ணியவாதிகளிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளாள்.

இந்த போலிகள் வலை உலகிலும் வலம் வருகின்றன.

ஒரு பெண் சைக்கிளில் போய்க்கொண்டிருக்கிறாள். வெட்டியாய் மூன்று ஆண்கள் தெருவில் நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு நாய் குறுக்கே வர பெண் தடுமாறி கீழே விழுகிறாள். அவ்வளவு தான். அந்த மூன்று பேரும் அவளை தூக்குவதென்ன....அந்த நாயை விரட்டுவதென்ன...சைக்கிளை நிமிர்த்தி வைப்பதென்ன....அவளது கீழே விழுந்த பொருட்களை குனிந்து எடுப்பதென்ன. இதை எல்லாம் கூட ஒரு மனிதாபிமானத்தின் அடிப்படையில் என்று சொல்லலாம். அந்த பெண் எழுந்து சைக்கிளை மிதித்தபடி தன் வேலையை பார்த்துக்கொண்டு கிளம்பிவிட்டாள். ஆனால் போலிகளோ அங்கேயே நின்றுகொண்டு அங்கு சுற்றி திரியும் நாய் மீது கல்லடிப்பதென்ன....நாய் ஒழிப்பு பிரசாரம் நடத்துவதென்ன...

கூடவே வீட்டு நாய்களையும் சேர்த்து வைத்து வசைபாடுவதென்ன...

"பெண்களுக்கு எதிராக தீங்கு செய்த நாய்கள் மண்டி போட்டு மன்னிப்பு கேட்கவேண்டும்" என்று போராடுவதென்ன...

போயா போ போய் வேலையை பாரு.

பெண்ணுக்கு தன்னை சீண்டும் மிருகத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் அதை முட்டி மோதி எப்படி ஜெயிக்க வேண்டும் சாக்கடையிலிருந்து எப்படி விலகி நடக்கவேண்டும் தொடர்ந்து தான் வாழ்க்கையை எப்படி வெற்றிகரமாய் இயக்கவேண்டும் என்பதெல்லாம் தெரிந்தே இருக்கிறது. பெண்ணியம் பேசுவதென் மூலம் கை தட்டோ அல்லது உள்ளுக்குள் கொப்பளிக்கும் ஒரு வித ஆனந்த களிப்புக்கோ சுய இன்பத்திற்கோ வேண்டுமானால் உங்களின் பெண்ணிய பேச்சுக்கள் பயன்படலாம். ஆனால் பெண்ணுக்கு இது எந்த வகையிலும் உபயோகப்படப்போவதில்லை. இன்றைய காலகட்டத்தில் அதை அவள் எதிர்பார்ப்பதும் இல்லை.

ஒரு வேளை ஐம்பது வருடத்திற்கு முன்பு இப்படி கூப்பாடு போட்டிருந்தால் உங்களுக்கு சிலை வைத்திருப்பார்கள். இன்றைய காலகட்டத்தில் பெண்ணியம் பேசுவதை பெண் விரும்புவதில்லை. காலம் காலமாய் நம்மை அடிமையாய் வைத்து ஆண்டு முடித்த ஆண்கள் பேசும் பெண்ணியத்தை அவள் அவ்வளவாக நம்பப்போவதில்லை. ஒரு வேளை பெண்ணிய செயல்பாடுகளை பார்த்து வேண்டுமானால் உங்களை பெண்ணிய வாதியாக ஏற்றுக்கொள்ளலாம். வெருமனே வலைபதிவில் குதறுவதை விட்டுவிட்டு முதலில் ஆண்களே உங்களுக்கு உபயோகமானதை செய்யுங்கள்.

வீணாக தூ...தூ...என துப்பி எச்சில் ஆறு ஓடவைப்பதோ....

மாஸ்டர்பேஷன் என்று சொல்லி விந்தாறு ஓடவைப்பதோ...

ஜாதி ஜமுக்காளம் என்று சொல்லி வீண் பிரிவினை தோற்றுவிப்பதோ

பெண்ணுக்கு எந்த வகையிலும் உதவியாக இருக்கப்போவதில்லை.

ஆண் வர்க்கம் முட்டாள்களின் மந்தை என்பதை நாங்கள் எப்போதோ புரிந்துகொண்டுவிட்டோம். உங்களை நீங்களே மீண்டும் மீண்டும் முட்டாளாக்கி காட்டவெண்டியதில்லை.

பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்க்க நாங்கள் துணிந்துவிட்டோம். உதவிக்கு அழைத்தால் மட்டும் விருப்பமுள்ளவர்கள் வரலாம். அதை விட்டுவிட்டு வீணாக வாண்டடா வந்து எங்கள் கால்களை வருடியபடி நிற்கவேண்டாம் என்று பெரும் சிரிப்புடன் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

துணிந்து போராட திராணி இல்லாமலா இன்று பெண்கள் ஆண்களே வியந்து பார்க்கும் உயரத்திற்கு நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

என்வே பதிவுலக போலி பெண்ணியவாதிகளே உங்கள் காபரே நடனத்தை நிறுத்திவிட்டு மனைவிகளுக்கு காய் கறி வாங்கி கொடுங்கள் துணி துவைத்து போடுங்கள் சமைத்து பாருங்கள் முடிந்தால் அவளின் கை கால்களை பிடித்து விடுங்கள். அதன் மூலம் உங்கள் மனைவியருகாவது உபயோகமாய் இருங்கள்.

வெறுமனே இங்கு வந்து துப்பி தீர்க்காதீர்கள். உங்களின் துப்பு கலாசாரம் வீதிகளை அசிங்கப்படுத்துவது போல் வலைத்தளங்களையும் நாறடிக்கிறது.

DISC: பெண்ணியவாதிகள் யாராவது இருந்தால் இதை தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டு போடவும்.



Just for fun.

பெண்: சார் நீங்க பெண்ணியவாதி தானே?
ஆண்கள் :( கோரஸாக) ஆமாங்க மேடம்.
பெண் : டென்னிஸ் விளையாடிகிட்டு இருந்தேன் அந்த சந்துல பால் விழுந்திடிச்சு கொஞ்சம் எடுத்து கொடுங்களேன்.
ஆண்கள்: நீங்க விளையாடுவீங்க நீங்க பந்து பொறுக்கி போடணுமா? (ஆணாதிக்கம்)
பெண்: ஆக்சுவலா நானும் என் பாய் பிரண்டும் தான் விளையாடிட்டு இருந்தோம். பந்த அடிச்சது அவன் தான்.
ஆண்கள் உடனே தள்ளுமுள்ளு ஆகும் அளாவுக்கு கூட்டமாய் புறப்பட்டுவிட்டார்கள். பந்தை பொறுக்க.....அந்த கூட்டத்தில் பேசிக்கொண்டவை....

"இது எவ்வளவு பெரிய தடித்தனம் ஒரு பெண் விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது பந்தை அடித்து குழியில் போடுவதா?"

"பந்தை அடித்து குழியில் போட்டது அவளுக்கு எதிரான வன்புணர்ச்சி"

"சீ தூ....கோழையே பந்தை அடித்து பாதாளத்தில் போய்ட்டாயே?"

"மன்னிப்பு கேள்"

அடப்பாவிகளா இதுக்கு நாமளே போய் பந்த எடுத்துட்டு வந்திருக்கலாமே....

Monday 8 February 2010

குடும்ப பொண்ணு அப்படியின்னா என்ன?

எனக்கு வந்த ஒரு கடிதமும் அது சார்ந்த விளக்கங்களும்.

//நல்ல நல்ல விசயங்களை தேவையில்லாத எடுத்துக்காட்டுகளால் வீணடிக்கிறீர்கள். முக்கியமான விசயங்களுக்கு சினிமாவை மட்டும் உதாரணமாக எடுக்க வேண்டாம்.

டைரக்டர் படத்தில் தேவை என்று நினைத்து வைத்தார். அவருக்குத் தேவை துட்டு. நடிகர் சொன்னதை நடித்தார், தேவை துட்டு. நடிகை சொன்னதைக் காட்டினார், தேவை துட்டு. அவ்வளவுதான். அவர்கள் யாரும் ஆணாதிக்கம் பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை. இவ்வளவு ஏன், அந்த நடிகையான பெண் கூட கவலைப்படவில்லை.//


டயரக்டர் படத்தில் தேவை என்று நினைத்து வைத்தார். இப்போது இதற்கு இரண்டு காரணங்கள் இருக்க வேண்டும்.

1. கதையில் அந்த கதாபாத்திரத்திற்கு தேவையாக இருக்கலாம்.
2. அதை பார்க்க வரும் மக்களுக்கு தேவையாக இருக்கலாம்.

கதையில் கதாபாத்திரத்திற்கு தேவையானதென்று நீங்கள் குறிப்பிட்டால் அந்த கதாபாத்திரம் ஆணாதிக்கத்தை ஊக்குவிக்கும் கதாபாத்திரமாக இருக்க வேண்டும். ஆணாதிக்கத்தை நிலைநிறுத்த நினைக்கும் ஒரு கோழை தான் பெண்கள் எவ்வாறு உடை உடுத்த வேண்டும். எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார். எனவே ஒரு கதாபாத்திரம் திரையில் ஆணாதிக்க சிந்தனையோடு படைக்கப்படுமானால் அதில் இவ்வாறான ஆணாதிக்க வசனங்களை வைத்துக்கொள்ளலாம்.
ஆனால் நீங்கள் சொல்லுங்கள் பாபாவோ சிவகாசியோ படையப்பாவோ ஆணாதிக்க சிந்தனை கொண்ட ஒருவனின் கதையா? இல்லையே. அது முழுக்க முழுக்க மாஸ் ஹீரோ அப்பீலோடு உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள். அப்படியிருக்கும் போது ஆணாதிக்க சிந்தனை என்பது எதற்காக ஓரிரு காட்சிகளில் தெளிக்கப்படுகிறது. கதாபாத்திரத்திற்கு சம்மந்தம் இல்லை எனும் போதும் தொடர்ந்து டயரக்டர் ஒன்றிரண்டு காட்சிகளில் ஆணாதிக்கத்தை போதிக்க காரணம் என்ன?

அதற்கு காரணம் 2. அதாவது அதை பார்க்க வரும் மக்களுக்கு அது தேவைப்படுகிறது. சினிமாவில் எம்.ஜி.ஆர். பிறகு ரஜினி பிறகு விஜய் என மாஸ் அப்பீல் ஹீரோக்களை நோக்க மக்கள் அலை மோத காரணம் என்ன? சினிமா கொட்டகையில் நாம் கலையை தேடி போவதை விட போதையை தேடி போகிறோம். சமுதாயத்தில் நம்மால் எதிர்த்து கேட்க முடியாத விஷயங்களை அல்லது சமுதாயத்தில் நமக்கு இழைக்கப்படும் தீமைகளை திரையில் ஹீரோ எதிர்த்து போராடுகிற போது நாம் அதை ஒரு போதையோடு ரசிக்கிறோம். உடம்பில் ஜிவ்வென்று ஒரு சக்தி ஏறுகிறது.

உடனே அந்த ஹீரோவை வணங்கி அவருக்கு அரசியல் பிரவேசம் வரை நாம் தூக்கிக்கொண்டு போகிறோம். அப்படித்தான் இந்த ஆணாதிக்க சிந்தனையும் சில பல ஆண்களை திருப்த்தி படுத்த திரையில் ஹீரோவின் வாயிலிருந்து கக்கப்படுகிறது. யாரை திருப்தி படுத்த என்று நான் திரும்பவும் விளக்கவேண்டுமா என்ன?


குடும்ப பொண்ணு அப்படின்னா என்னங்க....ஒரு பொண்ணுக்கு குடும்பம் தாண்டி எந்த அடயாளமும் இல்லையா? ஐ.எ.எஸ். ஆபீசரா இருந்தாலும் குடும்ப பொண்ணு தான் வேணுங் குறீங்களே....குடும்ப பொண்ணுன்னா என்ன? இதோ துப்பாக்கி காட்டிட்டு நிக்கிறாங்களே இவங்க குடும்ப பொண்ணா? இல்லேன்னு சொல்லாதீங்க சுட்டுடுவாங்க.



//மேற்கத்திய கலாச்சாரமும் நமதும் ஒன்றா? உடனே அங்கே இப்படியெல்லாம் சொல்வதில்லை என்று சொல்கிறீர்களே! அங்கே அம்மணமாக போராட்டமே நடத்துவார்கள்.

பெண் இப்படிதான் இருக்கவேண்டுமென்று சொல்ல யாருக்கும் உரிமையில்லைதான். ஆனால் சினிமாவில் காட்டுவதெல்லாம் மக்கள் மனநிலைக்கு சொறிதலே, கல்லா கட்ட ஒரு வழி. சூப்பர் ஸ்டார்களின் ஆணாதிக்கம் பற்றி சொன்ன நீங்கள், அதில் பணம் வாங்கிக்கொண்டு ஆதரிக்கும் பெண்களைப் பற்றி சொல்லாதது ஏன்?
சென்ற ஒரு பதிவிலேயே கண்டேன். ஆணாதிக்கம் பற்றி சொல்லும் நீங்கள் அதற்குத் துணை போகும் பெண்கலைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. சொல்ல மறுக்கிறீர்களா, மறைக்கிறீர்களா அல்லது அது உங்களது கண்களுக்குத் தெரியவில்லையா என்று தெரியவில்லை. வரதட்சணை பற்றிப் பேசும்போது, அதைக் கேட்கும் பெண்கள் பற்றி பேசுவதில்லை. இந்தப் பதிவில் அதில் நடிக்கும் பெண்களைப் பற்றிப் பேசவில்லை. ஆக உங்களுடைய ஒரே நோக்கம் ஆண்களைக் குறைசொல்வதுதானா?

இது என்ன பெண்ணாதிக்கமா? இல்லை இப்படி நான் கேட்பதுதான் ஆணாதிக்கமா? அருமையாக பெண்ணடிமை, ஆணாதிக்கம் பற்றிக் கூற நினைக்கிறீர்கள். ஆண்கள் மட்டுமே காரணம் என்பதுபோலதான் உங்கள் பதிவுகள் இருக்கின்றன. ஆண் மற்றும் பெண் இருவரும் எப்படி இந்த ஆணாதிக்கத்தை வளர்க்கிறார்கள், ஆதரிக்கிறார்கள் என்ற கோணத்தில் எழுதிப்பாருங்கள். இதை விட அது மேலோங்கியிருக்கும் என்பது எனது எண்ணம்.//



நீங்களே கேள்வியும் கேட்டு அதற்கான பதிலை நீங்களே சொல்லிவிட்டீர்கள். சபாஷ். உங்களுடைய கேள்வி ஆணாதிக்க சிந்தனையை ஆதரிக்கும் காட்சியில் நடிப்பவள் ஒரு பெண். அவள் அந்த காட்சியில் ஏன் நடிக்க வேண்டும்? அதற்கான உங்களின் பதில் துட்டு.
ஆம் துட்டு. பணத்திற்காக பெண்ணே ஆணாதிக்க சிந்தனையை பேணி வளர்க்கும் அந்த காட்சியில் துட்டுக்காக நடிக்கிறாள் அதை நான் ஏன் குறை கூறவில்லை என்பது உங்கள் ஆதங்கம். ஆனால் சிந்தித்து பாருங்கள் தோழரே அந்த துட்டை அவர்களுக்கு அளிப்பது யார்?

கவுண்டரில் ஐம்பதும் நூறும் பிளாக்கில் இருநூறும் ஐநூறும் கொடுத்து டிக்கெட் வாங்கி அந்த படத்தை பார்த்து அவர்களுக்கு பணம் பெற்று தருவது யார்? ரசிகர்கள். ரசிகர்களுக்கு எது பிடிக்கிறதோ...எது விற்பனை ஆகிறதோ அதை விற்கத்தான் எந்த சினிமா வியாபாரியும் பிரியப்படுவான். என்வே ஆணாதிக்க சிந்தனைகள் நன்றாக விற்கிறது. காரணம் நம்மில் உள்ள சில மன நோயாளிகளுக்கு விஜய்யோ ரஜினியோ அந்நியாயத்தை எதிர்க்கிற போது கிடைக்கும் போதை ஆணாதிக்கத்தை போதிக்கிற போதும் கிடைக்கிறது. காரணம் அந்த ரசிகனுக்கு அடிப்படையில் பெண்களின் முன்னேற்றம் பிடிக்கவில்லை. பெண் தான் விரும்புவதை அணிவது பிடிக்கவில்லை. பெண் உடற்பயிற்சி செய்வது பிடிக்கவில்லை. அதை கேள்வி கேட்க அவனால் முடியாத காரணத்தால் திரையில் அவன் விரும்பும் ஹீரோ அந்த ஆணாதிக்க சிந்தனையை பிரகடனப்படுத்தும் போது அவனுக்கு ஒரு போதை கிடைக்கிறது.

அந்த போதைக்கு அவன் துட்டு கொடுக்கிறான். அந்த துட்டுக்காக அவர்கள் ஆணாதிக்க சிந்தனையை தூண்டும் காட்சிகளை அரங்கேற்றுகிறார்கள். ரசிகர்களும் சமுதாயமும் இது போன்ற ஆணாதிக்க சிந்தனையை தூண்டும் திரைப்படங்களை வெறுத்துஒதுக்க ஆரம்பிக்கும் போது இனியும் ஆணாதிக்கத்தை பேணி கல்லா கட்ட முடியாது எனும் நிலை வரும்போது அவர்களாகவே அதை நிறுத்திவுடுவார்கள். எனவே திரையில் தோன்றும் நடிகைகள் ஆணாதிக்க சிந்தனையை தூண்டும் காட்சிகளில் நடிப்பது துட்டுக்காக எனும் போது அந்த துட்டை கொடுக்க சமுதாயம் பிரியப்படாமல் போனால் அதற்கான காட்சிகளுக்கும் அவசியம் இல்லாமல் போய்விடும். மேலும் சினிமா நடிகைகளையோ சினிமாவையோ சார்ந்தல்ல என் வாதம். அதை ரசிக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு எதிராகவே ....

மேலும் நீங்கள் கேட்கலாம். ரஜினியோ விஜய்யோ துட்டுக்காக அதை செய்கிறார்கள்.அவர்களை ஏன் நீங்கள் குற்றம் சொல்கிறீர்கள் என்று?

சிந்தித்து பாருங்கள் - அப்படி ஒரு காட்சியில் நான் நடிக்கமாட்டேன் என்று சொல்லி அடம் பிட்க்கும் அளவுக்கு ரஜினிக்கோ விஜய்க்கோ நிச்சயமாக செல்வாக்கு உண்டு. அந்த காட்சியில் நடிக்கும் நடிகையை விட....

---------------------

உங்களுடைய இரண்டாவது ஆதங்கம்.
சமுதாயத்தில் நிலவும் பெண்ணடிமைத்தனத்திற்கு துணை போகும் பெண்களை நான் ஏன் சாடுவதில்லை. எப்போதும் ஏன் ஆண்களை குறை சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்பது.

விளக்கம்.

உதாரணமாக நம் குடும்பம் ஒரு பண்ணையாருக்கு ஒரு தலைமுறையாக அடிமையாக வாழ்கிறது என்று வைத்துக்கொள்வோம். பண்ணையார் வரும் போது நாம் எழுந்து துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு அவரை வணங்கியபடி நிற்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகிறோம். நாமும் அடிமை என்பதால் அதை தவறாமல் செய்கிறோம். நம் குழந்தைகளும் அதை கவனிக்கிறது. அந்த பழக்கம் நம் குழந்தைகளுக்கும் வருகிறது. பிறகு ஒரு நாள் நமக்கு அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கிடைத்துவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். உடனே நாம் நம் பிள்ளைகளை அழைத்து குழந்தைகளே இனி மேல் நாம் பண்ணையாரை வணங்க தேவையில்லை. நமக்கு விடுதலை கிடைத்துவிட்டது. இனிமேல் நாம் அடிமைகள் இல்லை. நாம் பண்ணையாருக்கு சமமானவர்கள் ஆகிவிட்டோம். எனவே இனி மேல் அவரை கண்டு நாம் வணங்கவோ மரியாதை செலுத்தவோ பயப்படவோ தேவையில்லை என்று சொல்கிறோம். குழந்தைகள் நிச்சயமாக ஓரிரு மாதங்கள் அல்லது ஆண்டுகளில் அதை புரிந்துகொண்டு திருந்திவிடும்.

ஆனால் பண்ணையாரை ஒரு தெய்வத்தின் திருவடிவமாக...பண்ணையாரை கிட்ட தட்ட கடவுளாக உருவகப்படுத்தி பண்ணையார் வரும் பொழுது துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு வணங்கியபடி குனிந்து நிற்கவில்லை என்றால் அது தெய்வ குற்றம் என்று போதித்து பாருங்கள். விடுதலை கிடைத்த பிறகும் கூட நம் குழந்தைகள் ஏதாவது தெய்வ குற்றம் வந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே பண்ணையாரை வணங்குவதை ஒரு கடமையாக ஏற்கும் வாய்ப்பிருக்கிறது. இதே போன்றொரு வழிமுறையில் தான் ஆணாதிக்கமும் சமுதாயத்தில் காலங்காலமாய் விதைக்கப்பட்டிருக்கிறது.

என்வே ஆணாதிக்கம் எனும் தனி ஒரு இனத்தின் வசதிக்காக உருவாக்கப்பட்ட சட்டதிட்டங்களில் பெரும்பான்மையானவை மதத்தை முன் நிறுத்தி பிரகடனப்படுத்தப்பட்டது. என்வே காலம் காலமாய் ஆணாதிக்கத்தை தெய்வ வழிபாட்டு முறையாக பாவித்து கடைபிடித்து வருகிறோம். உதாரணமாக பெண் தான் விரும்பும் உடை அணிவது ஜீன்ஸ் அல்லது வேறு உடைகள் அணிவது இழுக்கு கலாசார சீர்கேடு என்றெல்லாம் நாம் வாதிட்டு இருக்கிறோம். பெண்கள் அதிகமாக ஊர் சுற்றினால் கெட்டு போய்விடுவார்கள். பெண்கள் தாலி கட்டிக்கொண்டு அதை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் கடவுள் தண்டிப்பார். இவ்வாறான கோட்பாடுகளின் மூலம் ஆணாதிக்கத்துக்கு ஒரு Religious Identity கொடுத்து வளர்த்துவிட்ட படியால் பெண்களால் அதை அவ்வளவு எளிதில் கடந்து வர முடியவதில்லை. அதனால் தான் இன்னும் பல பெண்கள் ஆணாதிக்கத்துக்கு பரிந்து பேசி துணை போகும் நிலை உள்ளது. அவர்களை நான் எப்படி கண்டிப்பது. அவர்களை நான் எப்படி சாடுவது. காலம் காலமாய் அடிமையாய் வாழ்வது தெய்வ தரிசனம் என்று சொல்லி சொல்லி வளர்க்கப்பட்ட ஒரு பெண்ணின் மனதில் மாற்றத்தை மென்மையாக சொல்லித்தான் உருவாக்க முடியும். எனவே பெண்களை இப்போது உள்ள கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள். அணாதிக்கத்தின் வரலாறையும் பெண் அடிமைத்தனத்தின் பண்டைய ஆதார கூறுகளையும் ஆராய்ந்து பார்த்தால் பெண்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள்.....கேள்விகேட்கப்படவேண்டியவர்கள் அல்ல என்பது உங்களுக்கு புரியும்.
----------------

மேலும் என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி இது தான் "வரதட்சணை என்று கூவுகிறாயே அதை ஆதரிக்கும் மாமியார்களை சாடாதது ஏன்?"

உதாரணமாக நீங்கள் ஒரு குதிரை வாங்குகிறீர்கள். பத்தாயிரம் ரூபாய். அதை உங்களுக்கு பராமரிக்க தெரியவில்லை. அதனால் பராமரிப்பு தெரிந்த ஒருவரிடம் அதை ஒப்படைக்கிறீர்கள். அவர் அதற்காக மாதம் ஆயிரம் ரூபாய் கேட்கிறார். ஒப்புக்கொள்கிறீர்கள். பிறகு உங்களுடைய மகன் குதிரை பராமரிப்பில் பி.ஹெச்.டி. வாங்கிவிடுகிறான். இப்போது பக்கத்து வீட்டுக்காரர் அவருடைய குதிரையை உங்கள் மகனிடம் இலவசமாக பராமரிக்கும்படி சொன்னால் நீங்கள் அதை ஒத்துக்கொள்வீர்களா? உடனே நீங்கள் சொல்ல மாட்டீர்களா? “யோவ் நான் குதிரை வாங்கினப்ப ஆயிரம் ரூபாய் கொடுத்து பராமரித்தேன். உனக்கு மட்டும் ஓ.சி.யில் பராமரிப்பு கேட்கிறதா?”

அது தான் இன்றைய மாமியார்களின் நிலமை. அவர்கள் ஒரு காலத்தில் வரதட்சணை கொடுக்க வேண்டி வந்தது. அப்படி கொடுத்து திருமணம் செய்துகொண்ட பிறகு இப்போது தன் மகனுக்கு வரதட்சணை இல்லை எனும் போது அவள் சஞ்சலப்படுகிறாள். இதை நான் ஞாயப்படுத்தவில்லை. இருந்தபோதும் இது ஒரு மனித இயல்பு. அப்படியிருக்கும் போது காலம் காலமாய் வரதட்சணை எனும் விலங்கால் பெண்களை பிணைத்து வைத்துவிட்டு இப்போது மாமியார்களை குற்றம் சொல்வதில் ஒரு பயனும் இல்லை.

ஆனால் ஒரு ஆண் வரதட்சணை எனக்கு அவசியமில்லை என்று உறுதியாக நிற்பானே ஆனால்...ஒரு பெண் நான் அஞ்சு பைசா வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ய மாட்டேன் என்று போர் தொடுப்பாளே ஆனால் நிச்சயம் வரதட்சணை ஒழியும். இன்றைய சமுதாயத்தில் வரதட்சணைக்கு ஆசைப்படும் ஆண்கள் குறைந்து வருகிறார்கள். அதே நேரத்தில் பெண்களும் அதை எதிர்க்க தொடங்கிவிட்டார்கள். என்வே நாம் திருத்த வேண்டியது சம கால ஆண்களையும் பெண்களையுமே தவிர மாமியார்களை அல்ல.

சம கால ஆண்கள் வரதட்சணைக்கு ஆதரவாய் செயல்பட்டால் அவர்களை ஐம்பது சதம் திட்டுவேன். சமகால பெண்கள் வரதட்சணைக்கு ஆதரவாய் செயல்பட்டால் அவர்களை இருநூறு சதம் கண்டிப்பேன்.

மேலும் பெண்கள் மேற்கத்திய உடைகள் அணிய வேண்டும் என்பதோ...மேற்கத்திய நாகரீகம் பழக வேண்டும் என்பதோ....குடிக்க வேண்டும் என்பதோ....சிகிரெட் புகைக்க வேண்டும் என்பதோ அல்ல என்னுடைய பரிந்துரை. நான் கோருவதெல்லாம் அவள் விரும்புவதை செய்ய அவளுக்கு சுதந்திரம். அவளிடம் ஆணாதிக்கம் சார்ந்த அறிவுரைகள் கூறுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.


உங்கள் தோழி வின்சி.

vincyontop@gmail.com

Wednesday 3 February 2010

சூப்பர் ஸ்டார்களின் ஆணாதிக்கம்.

ரஜினி பாபா என்று ஒரு திரைப்படத்தில் பெண்கள் அதிகமாக ஊர் சுற்றினால் கெட்டு போய்விடுவார்கள் என்றார். விஜய் என்ற அடுத்த வளரும் சூப்பர் ஸ்டார். கட்சி என்ற கமர்கட்டை காட்டி படத்தை ஓட வைக்கும் தந்திரத்தை ரஜினியிடமிருந்து கற்றுக்கொண்டு தமிழக மக்களை மூடர்களாய் வைத்திருக்க துடிக்கும் இளைய தளபதி. அவர் ஒரு படத்தில் அசின் போர்த்திக்கொண்டு வரவேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். அதாவது போர்த்தி நல்ல பெட்ஷீட்டா எடுத்து முழுசா போர்த்தி மஞ்சள் பூசி ஒரு ரூபா சைசுக்கு குங்குமம் வச்சுகிட்டு வந்தா உடனே எல்லோரும் நம்மள மகாலட்சுமி என்று கும்பிடுவார்களாம். ஆக பெண்கள் இவர்களை பொருத்தவரை கும்பிடும் சாமியாக இருக்க வேண்டும் அல்லது காம இச்சையை பூர்த்தி செய்யும் பரத்தையாக இருக்க வேண்டும். அதை தவிர பெண்ணுக்கென்று தனியாக எந்த அடயாளமும் இல்லை. அவளது படிப்போ அறிவோ வேலையோ சம்பாத்தியமோ இல்லை. மகாலட்சுமி அல்லது மஜா சுந்தரி.

படையப்பா என்றொரு திரைப்படத்தில் அதிகமா ஆசைப்படுற ஆம்புளையும் அதிகமா கோபப்படுற பொம்புளையும்....அதென்னப்பா ஆண்கள் ஆசைப்பட கூடாதாம் ஆனால் கோபப்படலாமாம்...பெண்கள் ஆசைப்படலாமாம் ஆனால் கோபப்படக்கூடாதாம். எங்கேருந்தையா இந்த சைக்காலஜி எல்லாம் கத்துகிட்டு வர்றீங்க....மறுபடியும் பெண் என்பவள் போர்த்திக்கொண்டு கோபப்படாமல் தலை குனிந்தபடி ஆண்களை கண்டால் நாணி ஒடுங்கி ஒடிந்து ஓடக்கூடிய அந்த திரைப்படத்தில் வரும் சவுந்தர்யா போல் இருக்கவேண்டும் என்று சூப்பர் ஸ்டார் வருங்கால இளைஞர்களுக்கு ஆணாதிக்கம் கற்றுக்கொடுக்கிறார்.

படையப்பா திரைப்படம் எனக்கு பிடிக்கும். ஒரு ஆணின் உயிர் பிச்சையில் வாழ பிடிக்காத ஒரு புரட்சி பெண்ணாக ரம்யா நடித்திருப்பார். உண்மையில் அந்த கிளைமாக்ஸ் ரஜினிக்கு எத்தனை பெரிய அவமானம். ஆனால் நாம் பிச்சை போடுவது சூப்பர் ஸ்டார் என்பதால் அவரது பிச்சையை தூக்கி அவர் முகத்தில் வீசிய வீர பெண்மணியை பரிதாபத்தோடும் பிச்சை போட்ட சூப்பர் ஸ்டாரை கம்பீரத்தோடும் பார்க்க பழகிவிட்டோம். காலம்காலமாய் பெண்கள் அடிமைகளாய் வீட்டு வேலை செய்தபடி வீட்டோடு இருக்க வேண்டும் என்று நமது ஹீரோக்கள்கள் கற்பித்து வைத்திருக்கிறார்கள்.

















எல்லோரும் நல்லா பாத்துக்கோங்கப்பா......ஹீரோ மற்றும் ஹீரோவின் அறிவுரைப்படி உடை உடுத்தியிருக்கும் மகாலட்சுமி. உடம்ப காட்டக்கூடாதுன்னு ஆணாதிக்க அறுவுரை சொன்ன நமது தளபதி கட்டிக்கொண்டு நிற்பது நம்புங்கப்பா மகாலட்சுமி...


திரைப்படங்களில் ஒரு காட்சியில் ஹீரோயின் ஆடை ஆபாசமாக இருப்பதாய் ஹீரோ அறிவுரை கூறுவார். அதாவது பெண்கள் அடக்கமாக அமைதியாக பஜாரியாக அல்லாமல் நாணத்தோடு வெட்கப்பட்டுக்கொண்டு இருக்க வேண்டும் என்று ஹீரோ அறிவுரை கூறுவது அதற்கு அடுத்த காட்சியில் ஹீரோவின் அந்த ஆணாதிக்க அறிவுரையால் மனம் மாறி ஹீரோயின் புடவை சுற்றிக்கொண்டு வந்து தன் காதலை வெளிப்படுத்துவதும் அதற்குள் பொறுமையில்லாமல் அடுத்த காட்சியில் சுவிட்சர்லாண்டில் ஹீரோயினுக்கு ஒரு ஜெட்டியும் பிராவும் கொடுத்து அரை நிர்வாணமாய் ரோட்டில் ஆட விட்டு ஹீரோ கோட் சூட் கூளிங் கிளாஸ் சமிதமாய் ஓடி வருவதும்.....அட டா என்னே தமிழ் சினிமா....

தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் ஆணாதிக்க சிந்தனைகளை போதிக்கவும் அதே படத்தில் ஐட்டம் சாங் என்ற பெயரில் அரை நிர்வாணமாக பெண்களை குலுங்க விட்டு வேடிக்கை பார்ப்பதற்கும் மட்டுமே ஹீரோயின்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். மொழி போன்ற பெண்ணை மையப்படுத்தி வரும் திரைப்படங்கள் ஒரு விலக்கு. மற்றபடி ஹீரோ ஏழைகளுக்கு தையல் மெஷின் கொடுப்பதும் ஞாயத்தை நிலை நாட்டுவதும் குடிசை மக்களோடு குழந்தைகளோடு பாடுவதும் ஆலமரம் ஆக்ஸ்போர்டு ஆக வேண்டும் என்ற கற்பனைக்கும் எட்டாத கர்மாந்திர வரிகளை பாடி இளைஞர்களை தன் பால் ஈர்த்து அரசியல் சினிமா ஆதாயம் தேடவும் மட்டுமே பயன்படுகிறார்கள்.

இங்கே உலக சினிமா உலக சினிமா என்று பீற்றிக்கொள்ளும் கமல் கூட ஒரு பெண் கதாபாத்திரத்தை ஆபாசத்தின் உச்சமாகவும் இன்னொரு கதாபாத்திரத்தை வெகுளித்தனத்தின் உச்சமாகவும் காட்ட தவறவில்லை. ஆனால் அதே திரைப்படத்தில் அவர் மட்டும் பத்து வேடங்களிலும் புரட்சியாளராகவே வருகிறார்.

நேற்று போக்குவரத்து கழகத்தின் பேருந்தின் கூரையின் மீது நின்றுகொண்டு கல்லூரி மாணவர்கள் டான்ஸ் ஆடுகிறார்கள். ஒருவர் தவறி விழுகிறார். உடனே அந்த மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து பஸ் ரயில் ஆட்டோ என்று கற்களை வீசி தாக்குகிறார்கள். இப்படிப்பட்ட குரங்கு கூட்டம் தான் விஜய் ரஜினி என்று கையில் ஒரு கர்சீப்பை கட்டிக்கொண்டு போஸ்டர் ஒட்டி அடித்து பிடித்து டிக்கெட் வாங்கி முன் இருக்கையில் அமர்ந்து விசில் அடிக்கிறது. அந்த ஒன்றுக்கும் உதவாத ஆண் வீரர்கள் தங்களின் ஹீரோ ஆணாதிக்க வசனம் பேசும் போது விசில் அடிப்பார். அது போன்ற மன நிலை பாதிக்கப்பட்ட இளைஞர்களை ஒரு வித வன்முறை ஆபாச போதையில் ஆழ்த்தி பணம் பார்க்கும் நீங்கள் எல்லாம் ஹீரோக்கள்(குரங்கு கூட்டத்திற்கு மட்டும்) என்று சொன்னால் நான் ஒத்துக்கொள்வேன் தயவு செய்து சினிமா கலைஞர்கள் என்று சொல்லி சினிமா என்ற அதிசயத்தை அழுக்கு படுத்த வேண்டாம்.

என்னுடைய பெண் பார்க்கும் படலம் என்ற கட்டுரைக்கு நிறைய பதில்கள் வந்தன. சில பதில்களில் பெண் பார்க்க வரும் பொழுது காபி கொடுப்பதில் தவறில்லை என்று சொன்னார்கள். காபி கொடுப்பதில் தவறில்லை. அதை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் செய்யட்டுமே. பெண் தான் காபி தட்டை தூக்கிக்கொண்டு போய் ஒரு சர்வரை போல் ஒவ்வொருவருக்கும் காபி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லையே.

பெண் பார்க்கும் சடங்கில் இப்போது காலில் விழுவது இல்லை பாட்டு இல்லை என்றெல்லாம் பெரிய புரட்சியாளர்கள் போல் ஆண்கள் எழுதுகிறார்கள். ஆண்களே உங்கள் முன்னோர்கள் இதை எல்லாம் கன கச்சிதமாய் பின் பற்றினார்கள். பெண்களை பாட சொல்லி அவள் ஊமையா இல்லையா என்று சரி பார்த்தார்கள். நடக்க சொல்லி நொண்டியா இல்லையா என்று சோதித்தார்கள். பெரியர்வர்களை சேவித்தல் என்று சொல்லி மண்டி போட்டு தலை குனிய வைத்தார்கள். இப்போது பெண்கள் வளர்ச்சியும் எழுச்சியும் அடைந்த பிறகு அப்படி சொல்ல உங்களுக்கே கூச்சமாக இருக்கும் அல்லது அப்படி சொன்னால் எந்த பெண்ணும் செய்ய மாட்டாள் என்பதால் தான் அந்த சங்கதிகள் எல்லாம் மூட்டை கட்டப்பட்டன. மாறாக ஆணாதிக்க சிந்தனை இல்லாததாலோ....அல்லது ஆண்கள் எல்லாம் புரட்சியாளர்கள் ஆகிவிட்டதாலோ அல்ல...பெண்கள் முன்னேறியதால் தான் இந்த கொடுமைகள் அழிக்கப்பட்டு விட்டன.

Wednesday 20 January 2010

பெண் பார்க்கும் படலம் என்னும் ஆணாதிக்க வக்கிரம்.

ஒரு கடிதம்


தோழி வின்சி அவர்களுக்கு வணக்கம். நான் தொடர்ந்து உங்கள் வலைத்தளத்தை வாசித்து வருகிறேன். உங்களின் எண்ணங்கள் அனைத்துடனும் நான் ஒத்து போகிறேன். உங்கள் கருத்துக்கள் சில இடங்களில் வீரியமாக சொல்லப்பட்டாலும் அத்தனையும் முகத்தில் அறையும் உண்மைகள்.
பெண்கள் தொடர்ந்து பல வழிகளில் கலாசாரம் மதம் என்ற போர்வையில் பல வன்மையான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதில் வக்கிரம் என்னவென்றால் சிறு வயதிலிருந்தே அந்த கொடுமைகளை எல்லாம் ஏதோ தனக்கு வந்து சேரும் பெருமைகளை போல் ஒரு பெண் பாவித்துக்கொள்ள பழக்கப்படுத்தப்படுகிறாள். உதாரணமாக பெண் பார்க்கும் படலம். ஒரு பெண்ணை விற்பனை பொருளாக பாவிக்கும் ஒரு சடங்கு தான் பெண் பார்க்கும் படலம் என்பது என் கருத்து. மேலும் இதை பெண் ஆனவள் தன் வாழ்வில் ஒரு சாதாரண நிகழ்வாக அதை கருத நிர்ப்பந்திக்கப்படுகிறாள். இது எத்தனை வக்கிர குணம் கொண்ட ஒருவனால் வடிவமைக்க பட்டிருக்கும் சடங்கு என்று நினைக்கிற போது மனம் வேதனை அடைகிறது. இதை பற்றி உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். மேலும் எனக்கு பெண் பார்க்கும் படலம் என்ற கீழ்த்தரமான நிகழ்வு நடந்தேறவில்லை. நான் உண்மையில் மாப்பிள்ளை பார்க்க போனேன். சொன்னால் நம்பமாட்டீர்கள். அதை இன்னொரு கடிதத்தில் எழுதுகிறேன். இப்போதைக்கு விடை பெறும்

தோழி
சித்ரா.
-------

பெண் பார்க்கும் சடங்கு என்று ஒரு சாபக்கேடு நம் சமுதாயத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு பெண் அழகாக புடவை கட்டிக்கொண்டு அலங்காரம் செய்துகொண்டு பூ வைத்துக்கொண்டு தயாராய் இருக்க வேண்டும். பிறகு மாப்பிள்ளை வீட்டார் வருவார்கள். பெண் அவர்கள் முன்னால் நடந்து வந்து அமரவேண்டும். பெண் ஊனமாக இருக்கிறாளா என்பதன் சோதனை முயற்சி. பிறகு தலை குனிந்து வெட்கப்பட்டபடி அவள் அவர்கள் முன் காட்சியளிக்க வேண்டும். பிறகு அவர்களுக்கு காபி கொண்டு வந்து ஒவ்வொருவருக்காய் கொடுக்க வேண்டும்(கிட்ட தட்ட வேலைக்காரி போல்). அவர்கள் அந்த காபி பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் தின்பார்கள். அடுத்து சில குடும்பங்களில் பெண் மண்டி போட்டு பெரியவர்களை வண்ணங்க வேண்டும் என்ற சம்பிரதாயமும் உண்டு. முன்பெல்லாம் பெண்ணை பாட சொல்வார்களாம். அதாவது பெண் ஊமையா என்ற பரிசோதனை. இது எல்லாம் நடந்தேறிய பின் மாப்பிள்ளை வீட்டார் கிளம்பிவிடுவார்கள். போய் கடிதமோ தொலை பேசியிலோ வியாபாரம் பேசுவார்கள். பிறகு திருமணம். இது போன்ற ஒரு நிகழ்வை வேசிகளின் கூடாரத்தில் தான் நாம் பார்க்க முடியும்.

விபசாரம் என்ற சாபக்கேடு உள்ள இடங்களில் வேசிகளின் கூடாரத்தில் தான் பெண் அலங்கரிக்கப்பட்டு ஆண்கள் முன்னால் நிறுத்தப்படுவாள். ஆண்கள் தங்களுக்கு பிடித்த பெண்ணை தேர்ந்தெடுப்பார்கள். பெண்கள் அலங்காரம் செய்யப்பட்ட பொம்மைகள் போல் விற்பனைக்கு தயாராய் நிற்பார்கள். அதன் மறு பிரதியே பெண் பார்க்கும் படலம். பெண் என்ன விற்பனை பொருளா. துடைத்து மெருகேற்றி பலருக்கு கண்காட்சிக்கு வைத்து அதில் ஒருவர் அவளை வாங்கிக்கொண்டு போக.

நற்குடி பெண்கள் பர்தா அணிவார்கள் என்ற கீழ்குடி சிந்தனை நிறைந்திருக்கும் நம்மிடம் பெண்களை முன்னுக்கு கொண்டு வருவது பெரிய சவாலாகவே உள்ளது. நாம் பலமுறை இந்த தளத்தில் குறிப்பிடுவது போல் நற்குடி பெண்கள் வீட்டு வேலை செய்வதை முற்றிலும் துறக்க வேண்டும். நமக்கு வீட்டுவேலை செய்வதை விட நிறைய வேலைகள் இருக்கிறது என்று உணரவேண்டும். நற்குடி பெண்கள் வீட்டு வேலைகளை ஆண்களிடம் ஒப்படைத்துவிட்டு கல்வி வேலை வாய்ப்பு என தன் உடல் அழகை பேணி முன்னேற வேண்டுமே தவிர வீட்டு வேலைகள் செய்வதல்ல அவளது கர்ம விதி.

இப்போது ஆண்கள் எல்லாம் நல்லவர்கள் போல் வீட்டு வேலைகளை 50-50 என பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று பெருந்தன்மையோடு ஒத்துக்கொள்கிறார்கள். உண்மையில் அது பெருந்தன்மை அல்ல. காலத்தின் கட்டாயம். பல நூற்றாண்டுகளாய் பெண்கள் அடுப்பூத மட்டுமே பயன்படுத்தப்பட்டார்கள். ஏன் ஆண்கள் அடுப்பூதக்கூடாது என்பது தான் என் கேள்வி. 50-50 என்பதெல்லாம் ஆண்கள் பெண்களின் வளர்ச்சியும் முன்னேற்றத்தையும் கண்டு இதற்கு மேலும் அவர்களால் தங்கள் போலி ஆணாதிக்கத்தை நிலை நிறுத்த முடியாது என்பதால் தங்களின் பாதுகாப்புக்காக கொண்டு வந்த திட்டம் தான் 50-50. இதில் ஏமாந்து போக வேண்டாம். ஆணும் பெண்ணும் சமம் என்பதெல்லாம் நாம் ஆண்களை விட முன்னேறி விடக்கூடாதென்பதற்காய் போடப்படும் கட்டு வேலை என்பதை நாம் மறந்துவிட கூடாது. நான் எப்போதும் சொல்வது போல் ஆணும் பெண்ணும் சமம் என்பது கேலி கூத்து. பெண் ஆணை விட உயர்வானவள்.

பெண்கள் வீட்டு வேலை செய்வதிலிருந்து எப்படி விலகி இருக்க வேண்டுமோ அதே போல் பெண் என்பவள் பெண் பார்க்கும் சடங்கு என்ன்னும் வேசித்தனமான வியாபார விளையாட்டையும் வலிமையாக எதிர்க்க வேண்டும். பெண்களே நினைத்து பாருங்கள் நாம் என்ன விற்பனை பொருளா. அல்லது ஒருவனுக்கு மட்டுமே விற்கப்படும் வேசியா. எதற்காக நாம் அலங்காரம் பண்ணிக்கொண்டு ஆண்கள் முன்னால் போய் நிற்க வேண்டும். கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இன்று ஆண்களை புறந்தள்ளும் அளவுக்கு சக்தி படைத்த நாம் ஏன் நம்மை ஒரு விற்பனை பொருள் போல் அலங்கரித்துக்கொண்டு ஈ என பல் இளித்தபடி ஆண்கள் முன்னால் போய் நிற்க வேண்டும்.



என்ன மாப்பிள்ளை சார் ரொம்ப நெர்வஸா இருக்கீங்க. எனக்கு உங்கள பிடிக்குமோ இல்லையோன்னு பயப்படுறீங்களா? ரிலாக்ஸ். வீட்டுக்கு போய் லெட்டர் போடுறோம்.





பெண் பார்க்கும் படலம் என்பது ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு கீழ்த்தரமான நிகழ்வு. நம் உடல் பரிசுத்தமானது. அதை நம் அனுமதியின்றி யாரும் தொடவோ தீண்டவோ அனுமதிக்க கூடாது. என்வே பெண்கள் எல்லாம் ஒருமித்த வலிமையோடு பெண் பார்க்கும் படலம் என்ற ஆணாதிக்க சடங்கை முற்றிலும் எதிர்க்க வேண்டும். துறக்க வேண்டும். ஏன் என்று கேள்வி எழுப்ப வேண்டும்.

நாம் உயர்வானவர்கள். ஆண்களை விட. இந்த பூமியில் எல்லா உயிருனங்களை விடவும் நாம் மேன்மை பெற்றவர்கள். நம் உடல் அழகை மெருகேற்றி அதை வரும் மாப்பிள்ளை வீட்டாருக்கு காட்டி நம்மை ஏற்றுக்கொள்ளும் படி கெஞ்சும் வலுவிழந்த நிலையில் நாம் இல்லை என்பதை உணரவேண்டும். ஏன் பெண் பார்க்கும் சடங்கு என்பது மாப்பிள்ளை பார்க்கும் சடங்காக இருக்க கூடாது என்று கேளுங்கள்.
என்னுடைய நெருங்கி தோழி ஒருவருக்கு பெண் பார்க்கும் சடங்கு நடந்தது. எப்படி என்றால் கோயிலில் வந்து பெண்ணை பார்ப்பார்களாம். பார்த்துவிட்டு பிடித்திருந்தால் வீட்டில் வந்து பேசுவார்களாம். நானும் அழைக்கப்பட்டிருந்தேன். அந்த பெண் அழகாய் அலங்காரம் பண்ணியிருந்தாள். அவளின் பெற்றோரும் இன்னும் சில உறவினர்களும் அவளோடு வந்திருந்தார்கள். மாப்பிள்ளை ஒரு காரில் வந்தான். அவ்னோடு வனுடைய அப்பாவும் ஒரு நண்பனும் வந்தார்கள். இரண்டே நிமிடம் நின்றுவிட்டு போய்விடார்கள். அவனுக்கு பெண்ணை பிடிக்கவில்லையாம். அந்த இரண்டு நிமிட காட்சிக்கு இவள் ஒரு நாள் முழுக்க சிரமம் எடுத்து தன்னை அலங்காரப்படுத்தியிருந்தாள். அவன் கார் எடுத்துக்கொண்டு பறந்துவிட்டான். பதில் இல்லை. அந்த பெண்ணின் மனம் எவ்வளவு வேதனை பட்டிருக்கும். இத்தனைக்கும் அந்த பெண் மாப்பிள்ளையை விட அதிகம் படித்தவள். அதிகம் சம்பாதிப்பவள். அவனை விட அழகு. அதை பார்க்கவே எனக்கு பரிதாபமாய் இருந்தது. இது தான் இன்று பெண்களின் நிலை. அந்த பெண்ணும் அதை இயல்பாக எடுத்துக்கொள்ள தயார்படுத்தப்படுகிறாள். ஏன் இந்த அவல நிலை. நாம் என்ன அவ்வளவு கீழ்த்டரமாய் போய்விட்டோமா சிந்தியுங்கள் பெண்களே.


சித்ராவின் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தின் விபரமான மடலை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

உங்கள் தோழி
வின்சி.

vincyontop@gmail.com