Monday 21 September 2009

கன்னியாகுமாரி மாமனார்களின் வரதட்சணை வெறி.

உலகின் அழகான படைப்புகளின் ஒன்றாக திகழ்ந்தும் அறிவில் ஆண்களை மிஞ்சும் பல சாகசம் புரிந்தும் உலகிற்கு உயிர்களை நீட்டித்து கொடுத்தும் தன் உடல் சுகங்களை ஓரங்கட்டிவிட்டு அடுத்த சந்நதியின் உடல் நலத்துக்காய் தன்னை வருத்தி பாடு பட்டும் இன்னும் இங்கே பெண்களை யாரும் வணங்குவதாய் தெரியவில்லை. வணக்கத்துக்கு உரியவள் பெண். அவளை இன்னும் தெருவில் கைகுழந்தையோடு தெருநாய் போல் அலைய வைக்கும் ஆணாதிக்க வர்க்கம் இருக்கும் போது அவற்றிற்கு பதிலடி கொடுக்க ஒரே வழி பெண் ஆதிக்கம் என்று நான் பல முறை கூறுகிறேன். என் மீது சேறும் சகதியும் வாரி இரைக்கிறீர்கள் போகட்டும்.

கன்னியாகுமாரியில் நடக்கும் கொடுமைகளில் வெளியே வந்திருக்கும் ஒரு கொடுமையை படிக்க இங்கே சொடுக்கவும்.

http://www.dinamalar.com/new/Incident_detail.asp?news_id=12935


தமிழக மாவட்டங்களின் அதிகமாக வரதட்சணை புழங்கும் மாவட்டம் கன்னியாகுமாரி. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் இங்கு பெண்களின் படிப்பு விகிதம் ஆண்களை விட மிக மிக அதிகம். உதாரணத்துக்கு இங்கே அதிக வரதட்சணையோடு கல்லூரியில் மூன்று நான்கு டிகிரி வாங்கிய ஒரு பெண் பத்தாம் வகுப்பு படித்து பஸ் டயர் உருட்டும் வேலை பார்க்கும் ஒருவனை மணந்துகொள்ள நேர்கிறது. அதற்கும் மாப்பிள்ளையின் தாய் தந்தை பேசும் பேரத்துக்கு அளவில்லை.

படிப்பிலும் அறிவிலும் சிறந்து விளங்குபவள், மாதா கடவுளுக்கு சமமாக போற்றப்படவேண்டியவள் இந்த கன்னியாகுமாரி மாவட்டத்தில் அழுகிய மீனுக்கு இணையாக விலை பேசப்படுகிறாள். பெண் ஆதிக்கம் கொண்டு தான் இதை உடைக்க முடியும் என்பது என் கருத்து மட்டுமல்ல அது தான் உண்மையும் கூட.

நீங்கள் கூட இதை முயற்சித்து பார்க்கலாம்.
மேட்ரிமோனி வாயிலாக ஒரு கன்னியாகுமாரி பையனின் புரோபைலை எடுத்துக்கொள்ளுங்கள். அவன் பி.ஈ எனும் அதி புத்திசாலி படிப்பு படித்தவனாக இருந்தால் நல்லது. ஹரியர்ஸ் வைத்து ஏதோ ஒரு குப்பை காலேஜில் பி.ஈ வாங்கிவிட்டால் இவர்கள் எல்லாம் ஐ.ஐ.டி யில் படித்த மேதாவிகள் என நினைப்பு. பிறகு அவன் சாப்ட்வேர் நிறுவனத்தில் இரா பகலாக உழைத்து இருபது முதல் முப்பதாயிரம் சம்பளம் வாங்குபவனாக இருக்கவேண்டும். செய்வது என்னவோ அடிமை வேலை இருந்தாலும் சாப்ட்வேர் எம்.என்.சி கூடவே என்ஜினியர் அட்ரா சக்க....
பிறகு அதில் கொடுக்கப்பட்டிருக்கும் நம்பருக்கு போன் செய்து உங்களுக்கு ஒரு மகள் இருப்பதாகவும் அவளும் பி.ஈ அல்லது அதற்கும் மேல் படித்தவள் என்றும் உங்கள் மகனின் புரோபைல் எங்களுக்கு பிடித்திருக்கிறது என்றும் சொல்லுங்கள். உடனே அந்த பையனின் தகப்பனாரிடமிருந்து கீழ்கண்ட கேள்விகள் வரும்.







வரதட்சணை வாங்கி திருமணம் செய்துகொள்ளும் ஆண்களை நீங்கள் கால் மேல் கால் போட்டுக்கொண்டு சுண்ட விரலை அசைத்து அருகில் அழைத்து உங்களின் பாதணிகளின் அடிப்பகுதியில் இருக்கும் அழுக்கை துடைத்துவிட சொல்வதற்கு உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு.அவர்களும் மண்டி போட்டு துடைத்துவிட வேண்டும். நமக்கு உபயோகம் இல்லாத பொருளை எதற்காக நாம் விலை கொடுத்து வாங்கவேண்டும்


பொண்ணுக்கு என்ன செய்வீங்க? (டேய் கெழ நாயே...போற வயசுல உனக்கு
ஏன்டா இந்த ஆசை. பையனுக்கு பொண்ண புடிக்குமா? பொண்ணுக்கு பையனை புடிக்கும? பெண் எப்படி பட்டவள்...குடும்பம் எப்படி அதை பற்றி எல்லாம் கவலை இல்லை. முதலில் கேட்கும் கேள்வி பொண்ணுக்கு என்ன செய்வீங்க. அதாவது என்னுடைய என்ஜினியர் ஆண் மாட்டுக்கு என்ன விலை என்று கேட்காமல் பெண்ணுக்கு என்ன செய்வீர்கள் என்று தான் முதல் கேள்வி இருக்கும். குறைந்தது ஒரு கோடி எதிர்பார்ப்பார்கள்.

இப்படி கோடி கணக்கில் பணம் சேர்த்து வைக்காத அப்பாவி பெண்கள் ஏதாவது கூலி வேலை செய்பவனோடு குடும்பம் நடத்த வேண்டியிருக்கும். பல குடும்பங்களில் பெண் பள்ளியில் ஆசிரியையாக இருப்பாள் ஆண் கூலி வேலைக்கு போவான். வரதட்சணை மட்டும் பத்து முதல் இருபது லட்சம் கேட்பான்.

இன்னும் சில கிழ அப்பாக்கள் ஒரு கோடி இருந்தால் பேசுங்கள்...இரண்டு கோடி இருந்தால் பேசுங்கள் என்பார். நீங்கள் அவரிடம் சம்மந்தம் பேச போனால் அவர் கேட்கும் முதல் கேள்வியே இது தான். எப்படி இருக்கிறது பாருங்கள்.
ஆக இப்படி வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ய சக்தி உள்ள பெண்கள் செய்து கொள்ளுங்கள். ஆனால் செய்துகொண்ட பின் ஒன்றை மட்டும் மனதில் நிலைநிறுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் ஒரு கோடியோ இரண்டு கோடியோ அல்லது பல லட்சமோ கொடுத்து அந்த ஆண் மாட்டை விலைக்கு வாங்கியிருக்கிறீர்கள். மாட்டை வாங்கி கயிறு கட்டி இழுத்துக்கொண்டு வருவோம். ஆனால் ஆணாதிக்க சமுதாயத்தில் மாடு ஓனருக்கு கயிறு (தாலி) கட்டுகிறது. பரிதாபம்.


இப்படி வரதட்சணை கொடுத்து ஒரு வீட்டில் நீங்கள் வாழ போகிற போது அந்த வீட்டிலிருக்கும் மாமனார் மாமியார் மற்றும் உங்கள் கணவன் உங்களுக்கு அடிமை பிராணிகளாக இருக்க நீங்கள் எதிர்பார்ப்பதில் தவறேதும் இல்லை. வரதட்சணை கொடுத்து திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் மாமனார் வீட்டில் கீழ்கண்டவற்றை எதிர்பார்க்கலாம்.

வரதட்சணை கொடுத்து வாங்கிய மாடு வீட்டு வேலை செய்யட்டும். எஜமானிக்கு சேவை செய்வது தானே அவனுக்கு அழகு. பின்னே ஒரு கோடிக்கு அவனை வாங்கிவிட்டு நாம் அவன் ஜெட்டியை துவைத்து போடுவது எவ்வகையில் ஞாயம். கணவனே கண் கண்ட தெய்வம் என்றா சொல்கிறாய் தாயே ஒரு கோடி இல்லையென்றால் உனக்கு கணவனே இல்லை.

உங்கள் மாமனார் உங்கள் உள்பாவாடையை துவைத்து போடட்டும். உங்களிடமிருந்து ஒரு கோடி இரண்டு கோடி என்று பேரம் பேசி தன் மகனை விற்றிருக்கிறார். புரோக்கர் வேலை பார்த்திருக்கிறார். உங்கள் கணவனின் சேவையில் ஏதேனும் குறைபாடு இருந்தால் உடனடியாக உங்கள் மாண்புமிகு மாமனாரை அணுகுங்கள்.

வரதட்சணை ஒழிப்பது கடினம் என்றாலும் இப்படி வரதட்சணை கொடுத்து மாட்டை வாங்கிவிட்டு அந்த வீட்டில் நீங்கள் போய் தொழுவத்தில் உட்கார்ந்துகொள்ளாதீர்கள் பெண்களே. ஆளவேண்டியது நீங்கள்.

Thursday 10 September 2009

என்னை பழித்த நல் உள்ளங்களுக்கு...

கடந்த பதிவுக்கு ரோஷ்மா என்ற பெண்ணோ ஆணோ அனானி வேடமிட்டு என்னை கண்டபடி திட்டி தீர்த்தார். அவரை ஒன்றும் குறை சொல்வதற்கு இல்லை. நான் சொல்ல வரும் கருத்துக்களை குறித்த புரிதலும் அந்த கருத்துக்கள் யாருக்காக சொல்லப்படுகின்றன என்ற அறிவும் இல்லாமல் இருப்பது தான் காரணம். எனவே மேலும் நான் தொடர்ந்து எழுதுவதற்கு முன் சில விஷயங்களை தெளிவுபடுத்துவது நல்லது என நினைக்கிறேன்.

முதலில் என் எழுத்தோடு என் தனிப்பட்ட வாழ்கையை ஒப்பிட்டு பார்க்கும் பாமர தனத்தை விடுங்கள். எழுத்தை எழுத்தாக பாருங்கள். அதில் இருக்கும் கருத்துக்களை விவாதியுங்கள். நான் கணவனுக்கு அடங்கிய ஒரு ஆல்பா பீமேலாக இருந்து கூட இது போன்ற கருத்துக்களை எழுதலாம். கொலை பற்றி கதை எழுதுபவன் கொலை செய்திருக்க வேண்டும் என நினைப்பது பாமரத்தனம்.

நான் சொல்ல வரும் கருத்துக்களை பற்றிய சில அடிப்படை விஷயங்களை பார்ப்போம்.
நான் பெரியாரோ பாரதியாரோ அல்ல. அவர்கள் எல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே பெண் உரிமைக்காக போராடியவர்கள். அவர்கள் விரும்பியதெல்லாம் சமத்துவம். ஆண்கள் பெண்களை கலாசாரம் மதம் மூட பழக்க வழக்கங்கள் என்ற பெயரில் சர்வ சாதாரணமாக அடிமை படுத்தி வைத்திருந்தார்கள். அப்படிப்பட்ட அடிமை விலங்குகளை உடைத்தெறிய போராடியவர்கள் தான் அவர்கள். நான் சொல்ல வருவது பெண்மை என்னும் புனிதத்தை போற்றவேண்டும் வழிபட வேண்டும். பெண் இனி மேல் ஒரு போதை பொருளல்ல அவள் ஒரு வழிபாட்டு ஸ்தலம். அவள் வணக்கத்துக்கு உரியவள். அவள் ஆணுக்கு சமமானவள் அல்ல. அவனை விட ஒரு படி உயர்ந்தவள் என்பது தான் என் கருத்தும் நம்பிக்கையும். காலம் காலமாக அடிமை பட்டு கிடந்த ஒரு இனம் இன்று சம வாய்ப்புகள் வழங்கப்படுகிற பொழுது சர்வ சாதாரணமாக ஆண்களை மிஞ்சி நிற்க முடிகிறதென்றால் அது நிச்சயம் உயர்ந்த இனம் தானே. நான் சொல்ல வரும் கருத்து இது தான். ஆண்களை விட பெண்கள் உயர்ந்தவர்கள். பெண்கள் போதை பொருள் அல்ல வழிபாட்டு பொருள்.





பெண்மையை அதன் புனிதத்தன்மையை போற்றி வழிபடும் தன்மையே ஆண்மை என்பது தான் என் கருத்து. இது நான் ஏதோ புதிதாக சொல்ல வந்த கருத்தும் அல்ல. பல நூற்றாண்டுகளாய் இந்த உலகத்தில் போற்றப்பட்டு வரும் ஒரு மேலான ஒழுக்கம். நம் தமிழர்களுக்கோ இந்தியர்களுக்கோ இது வியப்பை தரலாம். தரும். காரணம் நாம் தெருவில் ஒருவன் யார் மீதாவது மோதிவிட்டால் உடனே இருக்கும் வேலையை எல்லாம் விட்டுவிட்டு அவனை காட்டு மிராண்டித்தனமாக அடிக்க புறப்படும் காட்டு கூட்டம். அவர்களிடம் ஒழுக்கத்தையோ அறிவையோ பண்பாட்டையோ எதிர்பார்க்க முடியாது. அப்படி பட்ட ஒரு காட்டுவாசி கூட்டத்துக்கு பெண்மையின் மேன்மையை போற்ற தெரியாது. வெறும் ஐந்து நிமிட சுகத்துக்காக பெண்ணை வன்புணர்ந்து அதை ஏதோ பெரிய வீர தீர செயல் செய்தது போல் மீசையை தடவி விட்டபடி செல்லும் ஆண்கள் தானே இங்கே இருக்கிறார்கள்.

இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு பெண்ணும் கடவுளுக்கு சமமானவள். அவளை கடவுளாக வழிபட படைக்கப்பட்டவர்கள் தான் ஆண்கள். இது தான் என்னுடைய கருத்து. பெரியாரோ பாரதியோ சொன்ன பெண் உரிமை அல்ல. ஆண் பெண் சமத்துவமும் அல்ல.


யாருக்காக இதை எழுதுகிறேன்.
காலம் காலமாக அடிமைகளாகவே வாழ்ந்துவிட்ட நமக்கு தலை நிமிர்ந்து நடப்பது கூட அகங்காரமாக தோன்றலாம். அப்படி பெண்மையின் மேன்மை குறித்து சராசரி அறிவு கூட இல்லாமல் கோழைத்தனமாக ஆண்களை சார்ந்து அவர்களுக்கு கீழே வாழ விருப்பப்படும் மஞ்சள் பூசி தாலி சொருகி புடவை சுற்றிய அப்பாவி பெண்கள் சிறிதளவாவது தங்கள் இனத்தின் மேன்மையை உணரவேண்டும் என்பதற்காக இதை எழுதுகிறேன். சிலர் என் மீது கோபப்படலாம். படுங்கள். எந்த புதிய சித்தாந்தமும் சொல்லப்படுகிற போது பொது ஜனங்களால் கல்லடித்து துரத்தப்பட்டது என்பதை நான் சொல்ல தேவையில்லை.

யாருக்காக இதை எழுதுகிறேன்.
அதே போல் பெண்களை தெய்வமாக மதித்து அவர்களை போற்றி அவர்களின் அன்பிலும் அதிகாரத்திலும் வாழ்வதால் தங்கள் வாழ்வு மேன்மை பெறும் என ஆணித்தரமாய் நம்பும் லட்சாதி லட்சம் ஆண்களும் இங்கே இருக்கிறார்கள். நீங்களே சிந்தித்து பாருங்கள் ஆண்கள் காதல் என்ற பெயரில் ஒரு பெண்ணிடம் அடிமை பட்டு கிடப்பதை பெரிய கொடுப்பனையாக நினைப்பார்கள் அதுவே திருமணம் முடிந்தவுடன் ஈகோ தலை தூக்கும். நான் புருஷன் என்ற அகங்காரம் வரும். பெண்ணை ஆழவேண்டும் என்ற முடியாத ஆசைக்கு வலை வீசுவதால் சிக்கல்கள் வரும். ஆண்களில் இது போன்ற கீழ்த்தரமான ஈகோவை தூக்கி எறிந்து பெண்களை வழிபாட்டு பொருளாக பாவிக்க தெரிந்த உன்னத ஆண்கள் இங்கே நிறையே பேர் இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் தான் நான் இதை எழுதுகிறேன்.

பெண்களின் ஆடையை அணிந்து பெண்ணாக வாழ விருப்பப்படும் ஆண்கள் புராண காலம் தொட்டு இருந்து வருகிறார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் அப்படிப்பட்ட ஆண்களை நாம் பழிப்போம். அவர்களை கேலி பேசுவோம். இன்று எவ்வளவோ சமுதாய மாற்றம் வந்துவிட்டது. இன்று அவர்களை மரியாதையோடு திருநங்ககைகள் என்று அழைக்கிறோம். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என தீர்மானிக்க அதிகாரம் உண்டு. எனவே நான் எழுதும் இந்த கருத்துக்களை நீங்கள் படித்து தான் ஆகவேண்டும் என்று நான் நிர்ப்பந்திக்கவில்லை. உங்களுக்கு விருப்பம் இருந்தால் படியுங்கள். இல்லையேல் தயவு செய்து என் பக்கங்களை நாடவேண்டாம். அப்படி படித்துவிட்டு சரியான புரிதலும் அறிவு முதிர்ச்சியும் இல்லாமல் என்னை பழிக்க வேண்டாம். என் பக்கங்களை எத்தனை பேர் படிக்கிறார்கள்...யாரும் படிக்கவில்லையே என்று நான் என்றைக்கும் வருத்தப்படுவது இல்லை.

இந்த கருத்துக்களில் உடன்பாடு இல்லாதவர்கள் தயவு செய்து என் பக்கங்களுக்கு வரவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

வாசகர் கேள்விகளுக்கு பதில்கள்.
1. இவ்வளவு நல்ல கருத்துக்களை சொல்லும் நீங்கள் ஏன் உங்கள் பிளாகில் ஆபாசமான படம் வைத்திருக்கிறீர்கள்?

எத்தனை வன்மம் பாருங்கள். ஒரு பெண்ணின் பாதங்களை தொட்டு வணங்குவதோ அல்லது தசைகளை நெருடி ஓய்வு கொடுப்பதையோ ஒரு ஆண் செய்வது போன்ற காட்சி ஆபாசமாக தெரிகிறது. இதே ஒரு ஆணின் காலில் ஒரு பெண் விழுவது போல் எத்தனை காட்சிகள் சினிமாவில் பத்திரிகையில் தொலைக்காட்சியில் வருகிறது. என்றாவது அது ஆபாசம் என்று நீங்கள் ஒதுக்கியதுண்டா. ஆண்களுக்கு கால் அமுக்கி விடுவதும் முதுகு தேய்த்து விடுவதும் ஒரு பெண்ணின் அன்றாட வேலைகளில் ஒன்று என கருதியும் அவை ஆபாச வர்க்கம் இல்லை என்ற உறுதியும் இருக்கும் உங்களுக்கு இது போன்ற படங்கள் ஆபாசமாக தெரியும். தொப்புளில் பம்பரமும் ஆம்லேட்டும் போடுவது போல் படம் போட்டால் இழித்துக்கொண்டு வருவீர் தானே.

Tuesday 8 September 2009

என் கணவர் ஆண்மை இல்லாதவர் - அந்தரங்க பேட்டி.- 1

Vincy - உங்கள் கணவருக்கு ஆண்மை இல்லை என்பதை எப்போது ஒப்புக்கொண்டார்.

Menaka: முதலிரவில். மற்ற முதலிரவு போல் ஆண் உள்ளே காத்திருக்க பெண் தலை குனிந்தபடி பால் சொம்போடு உள்ளே போகும் ஆணாதிக்க தனமான முதலிரவு இல்லை எங்களுடையது. சொல்லப்போனால் முதலிரவு அறையில் நான் தான் முதலில் போய் அமர்ந்திருந்தேன். புடவை கட்டவில்லை. ஒரு ஜீன்ஸும் டீ ஷர்டும் அணிந்திருந்தேன். பெமினா படித்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் என்னுடைய பாய் பிரண்ட் கம் கணவன் வந்தான். தயங்கி தயங்கி உள்ளே வந்தான். நான் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு மீண்டும் பெமினாவில் ஆழ்ந்திருந்தேன். அவன் கட்டிலின் ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு என் பாதங்களையே பார்த்தபடி இருந்தான்.
செக்ஸ் என்பது நான் விருப்பப்படும் பொழுது அவன் எனக்காக அளிக்க வேண்டிய ஒரு உடல் சுகம் என்பது அவனுக்கு தெரியும். அதனால் அமைதியாக அமர்ந்திருந்தான். நான் கால் மேல் கால் போட்டிருந்தது அவனுக்கு பிடித்திருந்தது. அரை மணி நேரம் புத்தகம் படித்துவிட்டு அதை சோபாவில் எறிந்தேன். எழுந்து கொண்டேன். உடனே அவன் நான் எதிர்பார்க்காத நிமிடத்தில் என் காலில் விழுந்தான். எனக்கு தலை கால் புரியவில்லை. கோடானு கோடி பெண்களை முதலிரவு அறையில் தங்கள் காலில் விழும்படி அதிகாரம் செய்த ஆண் வர்க்கத்தின் ஒரு உதிரி என் காலில் விழுந்து கிடந்ததை பார்த்தபோது பெண் விடுதலையும் அதன் ஆதிக்கமும் மெல்ல துளிர்விட்டிருப்பதை உணர முடிந்த்தது.

ஏய் என்னது இது சில்லியா என்று சொல்லிவிட்டு நான் பாத்ரூமுக்கு போனேன். இதே ஆண்களாய் இருந்திருந்தால் தன் காலில் ஒரு பெண் விழுந்துவிட்டால் போதும் உடனே பெரிய ராஜாவை போல் பாவ்லா செய்து அவளை எழுப்பி ஆசீர்வதித்து தூ....கான்ட்ராவி....(கோபத்தோடு சிரிக்கிறார்).நான் அவனை கண்டுகொள்ளாதது அவனுக்கு ஏமாற்றமும் என்னை குறித்து ஒரு பயமும் வந்திருக்கும். நான் டாயிலட்டுக்கு போய் கதவை சாற்றிக்கொண்டேன். வெளியே வந்து பார்த்தபோது அவன் டாயிலட் வாசலில் நின்றுகொண்டிருந்தான். நான் மெதுவாக புன்னகைத்தேன். அவனும் பதிலுக்கு சிரித்தான். போய் பிளஷ் பண்ணிட்டு வா என்றேன். அவன் உடனே உள்ளே போய் பிளஷ் செய்துவிட்டு வந்தான். அதை பார்க்க பரிதாபமாக இருந்தது.
அவன் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தபோது உட்கார் என்று கட்டிலின் விளிம்பை காட்டினேன். அவன் மெதுவாய் அமர்ந்தான்.



















ஆண்மை இல்லாதவர்கள் நாட வேண்டியது என் பூட்ஸின் அடிப்புறத்தை.


"நான் ஒரு துரோகம் பண்ணிட்டேன். என்று தொடங்கி தனக்கு ஆண்மை இல்லை என்பதையும் என் மேல் தீராத காதலும் மோகமும் இருந்ததால் தான் என்னை துரத்தி துரத்தி காதலித்ததாகவும் அது பெரிய தப்பு எனவும் என்னை ஏமாற்றிவிட்டதாகவும் கூறினான். அவனை நான் மன்னிக்கவேண்டும் எனவும் கெஞ்சினான். நான் அவனை பார்த்து லேசாக சிரித்தேன். நீ ஒண்ணுக்கும் யூஸ் இல்லாத தகர டப்பான்னு எனக்கு என்னைக்கோ தெரியும். ஆனாலும் உன்ன ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் தெரியுமா முதல்ல நீ என் மேல வச்சிருந்த பக்தி நிறைந்த காதல். என்னையே சுற்றி சுற்றி வந்த. எனக்கு என்னவெல்லாமோ செஞ்ச. நான் என்ன சொன்னாலும் அது எவ்வளவு கஷ்டமான காரியமா இருந்தாலும் ஓடி ஓடி பண்ணின. அது எனக்கு புடிச்சிருந்தது. அதனால உன்ன கல்யாணம் பண்ண முடிவு பண்ணினேன்.

அப்புறமா என்ன விட்டு போயிட மாட்டியேன்னு கேட்டான். உன்ன மாதிரி ஆப்ஜக்ட எல்லாம் யாரும் மிஸ் பண்ண மாட்டாங்க. கல்யாணம் ரிஷப்ஷனுன்னு நின்னுகிட்டே இருந்து கால் எல்லாம் வலிக்கிது. கொஞ்சம் அமுக்கி விடுன்னு சொன்னேன். சொன்னது தான் தாமதம் தரையில உக்காந்து அமுக்க ஆரம்பிச்சிடிச்சு.

Vincy - உங்கள் கணவர் செக்ஸ் விஷயத்தில் லாயக்கில்லாதவர் என தெரிந்தும் அவரை இன்னும் ஏற்றுக்கொண்டு வாழ்கிறீர்கள். அது மிக பெரிய விஷயம். செக்ஸ் விஷயத்தில் பிறகு உங்களை எப்படி திருப்தி படுத்திக்கொள்கிறீர்கள்.


Menaka - கட்டிய கணவன் மட்டுமே இந்த உலகத்தில் தனக்கு ஒரே ஆண் என வாழும் கோழை பெண் அல்ல நான். அப்படி வாழவேண்டும் என இந்த ஆணாதிக்க சமுதாயம் நம்மை ஊக்குவிக்கிறது. காரணம் பெண்களின் அழகும் அறிவும் ஆண்களை விட மித மிஞ்சியது. அப்படிப்பட்ட ஒரு பெண்ணை காலம் பூராவும் தன் வசம் வைத்திருக்கும் தகுதி இங்கு பல ஆண்களுக்கு கிடையாது. அந்த பயத்தில் தான் இப்படிப்பட்ட முட்டாள் தனமான வரைமுறைகளை கலாசாரம் என்ற பெயரைல் பரப்பி விட்டிருக்கிறார்கள். தங்கள் திறமையால் சாதிக்க முடியாததை சட்டம் போட்டு சாதிக்க நினைக்கும் கோழைகள் தான் ஆண்கள். அந்த சட்டங்களை கலாசாரம் என்ற பெயர் சூட்டி அழைக்கிறார்கள்.....

தொடரும்....


இதை படித்துவிட்டு ஸ்கூள் பிள்ளைகள் போல் ஆண்களே தயவு செய்து இது போல கமென்ட் எழுத வேண்டாம்..."வின்சி தோழி வெறும் செக்ஸ் மட்டும் வாழ்க்கை இல்லை...இல்லறம் என்பது....இத்யாதி இத்யாதி...."