Friday, 2 October 2015

லெக்கின்ஸ் அணிவது ஆபாசமா?

இந்த லெக்கின்ஸ் விவகாரம் பற்றி கேள்விப்பட்டேன். தினமும் 10 பேராவது மெயிலிலும் கமென்ட்ஸிலும் ஏதாவது எழுதுங்கள் என்று கேட்கிறார்கள். எழுத நேரமில்லை. லெக்கின்ஸ் அணிவதை ஆபாசமென்று ஏதோ பத்திரிகை புகைபடம் எடுத்து எழுதியதற்கு இங்கிருக்கும் பெண்கள் கொதித்து ஆபாசம் என்பது பார்க்கும் கண்களில் தான் இருக்கிறது பாயாசம் என்பது குடிக்கும் கிண்ணத்தில் தான் இருக்கிறது என்று வாதாடி போராடிக்கொண்டிருந்தார்கள்.

இதை பார்க்கிற போது பெண்கள் இன்னும் கோழைகளாகவே இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது..

" டேய் லெக்கின்ஸ் ஆபாசமா தெரியுதாடா....கண்ணு கூசுதா.....பார்த்தா கிளுகிளுப்பா இருக்க....த்தா அத தாண்டா நாங்க இனி மேல் இன்னும் அதிகமா போடப்போறோமுன்னு" எதிர்த்து சொல்ற தில் இன்னும் பெண்களுக்கு வரவில்லை என்றே தோன்றுகிறது.

 ஆபாசம் என்றால் என்ன? நான் சாலையில் காரில் செல்கிற போது இரவு நேரத்தில் கவனிக்கிறேன். சுவற்றின் ஓரம் ஆண்கள் எல்லாம் வரிசையாக குஞ்சை பிடித்துக்கொண்டு பார்ப்பவருக்கு குமட்டும் அளவிற்கு ஒன்றுக்கு அடித்துக்கொண்டிருக்கிறார்கள். கேவலமா இல்லை? அடுத்து ரோட்டில் ஒருவன் ஒரு லுங்கியை அரைகுறையாய் கட்டிக்கொண்டு வாயில் ஒரு பிரஷ் வைத்துக்கொண்டு எச்சிலை குமட்டிக்கொண்டு என் காரை நில் என்று சைகை காட்டிவிட்டு ஒரு காட்டு பன்றியை போல் ஹாலுக்கும் பெட்ரூமுக்கும் நடந்து போவது போல் சாலையை கடக்கிறான். 

அடுத்து ஆண்கள் எல்லோரும் டாஸ்மாக்கில் குடித்துக்கொண்டு ஜெட்டி தெரிய தெருவில் விழுந்து கிடக்கிறார்கள். அதை பார்க்கிற போது உள்ளூற ஒரு சந்தோஷமும் பொங்குகிறது. ஏன்டா எத்தனை காலம் தண்ணி போட்டா ஏதோ பெரிய ரௌடி மாதிரி பெண்களை வீட்டுக்கு வந்து அசிங்கம் அசிங்கமா பேசி அடித்து கொடுமை படுத்தினீர்கள். அந்த பாவம் தாண்டா இப்போ நீங்க எல்லாம் குடிச்சிட்டு மல்லாக்க படுக்க வச்சிருக்கு. என்ன கேட்டால் டாஸ்மாக்கில் ஒரே ரக சரக்கு தான் விற்க வேண்டும். குடித்த அடுத்த பத்து நிமிடத்தில் மட்டை ஆகிவிடவேண்டும். தெருவிலே விழுந்து கிடப்பவர்களை கார்ப்பரேஷன் லாரி ஒன்றை கொண்டு வந்து அள்ளி கொண்டு போய் ஊருக்கு வெளியே கொட்டிவிடவேண்டும். பிறகு போதை தெளிந்து நிஜாரை ஏற்றி போட்டுக்கொண்டு அதுகளாகவே வீடு போய் சேரவேண்டும். யோசித்து பாருங்கள் ஒரு காலத்தில் ஆண் குடித்துவிட்டு வந்திருக்கிறான் என்றாலே அவனை ஏதோ வீராதி வீரன் சூராதி சூரன் என்கிற ரேஞ்சுக்கு பெண்கள் மனைவிமார்கள் குழந்தைகள் எல்லாம் பயந்து ஒதுங்கி போயிருக்கிறோம். 

இந்த நாய்கள் அந்த சாக்கடை போன்ற டாஸ்மாக்கில் குடித்துவிட்டு ரோட்டில் நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்ன பேசுகிறார்கள் "ஓத்தா.....அவன....லவடை கபால்.....தேவிடியா பையன்....அவன சாவடிக்கணும்....என் கிட்டையே....ஓத்தா.....அவன....லவடை கபால்.....தேவிடியா பையன்....அவன சாவடிக்கணும்....என் கிட்டையே...மறுபடியும் அதே தான் "ஓத்தா"...இப்படி உரத்த குரலில் தொடர்ந்து ஏதோ மந்திரம் போல் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். பிறகு பான்பாராக்கை போட்டு கொப்பளித்து புளிச் புளிச் என்று துப்பிவிட்டு பிறகு ஒரு "ஓத்தா" வை உதிர்ந்துவிட்டு வண்டியில் ஏறி போய் போலீசில் மாட்டிக்கொள்கிற லூசுகள். இது எல்லாம் ஆபாசம் இல்லையா? எட்டாவது படிக்கும் மாணவன் மூன்று வார்த்தைக்க்கு ஒரு முறை ஓத்தா என்ற வார்த்தையை வெட்ட வெளிச்சமாக பேசுகிறான். கூசவில்லை அவனுக்கு. கேட்டால் அது தான்  ஆம்பிளை தனம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். கெட்ட வார்த்தையை சேர்த்து பேசுவதை ஆம்பிளை தனம் என்று நினைத்துக்கொண்டிருப்பது வடிவேலுவின் கைப்புள்ளை ஜோக் தான் நினைவிற்கு வருகிறது. எனவே ஆண் குஞ்சுகளே

உங்களது தாளாத சாக்கடை ரவுசுகளை தெருவில் அவிழ்த்துவிடுவது ஆபாசமல்ல....நாராசம். எனவே முதலில் உங்கள் நாராசத்தை நிறுத்திக்கொள்ளுங்கள்.

ஒரு சமுதாயத்தில் எப்படி பண்பட்ட நாகரீகத்தோடு நடந்துகொள்ளவேண்டும் என்பதை கற்றுக்கொள்ளுங்கள். கெட்ட வார்த்தை பேசுவது சத்தமாக பேசுவது சுருக் சுருக் என்று பைக்கில் வேகமாக சென்று போஸ்ட்டில் முட்டி உயிர் விடுவது பெண்களை கேலி பேசுவது லெக்கின்ஸ் போடுறது ஆபாசமுன்னு கண்டு புடிக்கிறது இதை எல்லாம் விட்டுட்டு போய் புள்ள குட்டிகள படிக்க வையுங்க.

ஐன்ஸ்டீன்....எடிசன் இவங்க எல்லாம் விஞ்ஞான கண்டு புடிப்பா புடிச்சாங்க நம்ம ஆளுங்க நாம போடுற ஜெட்டி பிரா நைட்டி லெக்கின்ஸ் இதுகளையே கொட்ட கொட்ட வெறிச்சு பாத்துட்டு அதுல எங்க ஆபாசம் இருக்கு எங்க பாயாசம் இருக்குன்னு நாக்க தொங்க போட்டுகிட்டு அலையுறானுங்க. ஏன்டா லெக்கின்ஸ் ஆபாசமுன்னு கண்டுபுடிச்ச நீ......டுத்தவ புடவை சரியுறத பாத்து ஆபாசமுன்னு சொல்ற நீ இந்தியா ரூபாயின் மதிப்பு ஏன் சரிஞ்சிட்டு இருக்குன்னு ஒரு ஆராய்ச்சி பண்ணி கண்டுபுடி. எப்போ பாரு ரோட்டுல குடிச்சிட்டு துப்பிகிட்டு ஒன்னுக்கு போயிட்டு கெட்ட வார்த்தை பேசிகிட்டு பொண்ணுங்கள கிண்டல் பண்ணிகிட்டு து...போஙகடா லூசுங்களா.....

 மேட்டர் என்னன்னா உண்மையாவே லெக்கின்ஸ் சவுகரியமான உடை மட்டுமல்ல கொஞ்சம் செக்ஸியான உடையும் கூட. நம்ம அம்பளைங்க எல்லாம் தொப்பையும் கொப்பையுமா திரியுறப்போ நாம லெக்கின்ஸ் மாதிரி செக்ஸியா திரியுறது கொஞ்சம் உறுத்தத்தான் செய்யும். அப்படி உறுத்துறது தான் நமக்கு தேவை. பெண்களே இன்னும் அதிகமாக லெக்கின்ஸ் அணியவும். உடலை அழகாக பேணவும். அழகும் அறிவும் தான் நமது ஆயுதங்கள். அழகையும் அறிவையும் மட்டுமே பேணுங்கள்.

வீட்டு வேலை செய்வது, சமைப்பது, துணி துவைப்பது, குனிந்து மணி கணக்காக கோலம் போடுவது இது போன்ற அல்பை விஷயங்களை விட்டொழியுங்கள். அந்த நேரத்தில் நல்ல புத்தகங்களை படித்து அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் மறுபடியும் சொல்கிறேன் அறிவும் அழகும் தான் நமது ஆயுதங்கள். உடலை அழகாக கம்பீரமாக செக்ஸியாக வைத்துக்கொள்ளுங்கள். இன்னும் அதிகமாக லெக்கின்ஸ் அணியுங்கள். வாருங்கள் ஆண்களை கடுப்பேற்றுவோம். வாழ்த்துக்கள்

 vincyontop@gmail.com

Thursday, 7 May 2015

கழுவி குடியுங்கடா!! - பிளஸ் டூ ரிசல்ட்


கழுவி குடியுங்கடா!! கழுவி குடியுங்கடா மீசை வைத்து கண்ட இடத்தில் ஒன்றுக்கு அடித்து கெட்ட வார்த்தை பேசி ஆம்பளைத்தனத்தை வெளிப்படுத்தும் ஆண் குஞ்சுகளே கழுவி குடியுங்கள் அப்போதாவது உங்களுக்கு படிப்பு வருகிறதா என்று பார்ப்போம். ஹா ஹா ஹா.....பத்தாவது மாணவ குஞ்சுகள் டாஸ்மாக்கில் குடிக்க போய்விடுகிறார்களாம். சினிமா பார்த்து பீர் அடித்து ஆம்பளை தனத்தை வெளிப்படுத்தும் குஞ்சுகளே கழுவி ஊற்றுகிறோம் வாங்கி குடியுங்கள்.

Saturday, 18 April 2015

Mangalsutra - Thaali

What do you think about women forced to wear Mangalsutra by our culture police. Comment or email me.

Monday, 3 February 2014

hi all

hi all, are you all there, shall i write something

Wednesday, 1 June 2011

மனைவியின் ஆடைகளை துவைக்க வழிமுறைகள்(1)

மனைவியின் ஆடைகளை கணவன் துவைப்போது போன்ற காட்சிகள் எப்போதும் சினிமாவில் காமெடி மயமாகவே சித்தரிக்கப்படுகின்றன. அதே நேரம் ஒரு பெண் கணவனின் துணியை துவைப்பதோ தண்ணீர் சுமந்து வருவதோ வீட்டில் கழிவறையை சுத்தப்படுத்துவதோ இயல்பான காட்சிகளாக வடிக்கப்படுகிறது. மனைவியின் துணிகளை கணவன் துவைத்துப்போடுவதில் என்ன காமெடி இருக்கிறது என்று கேட்கிறார் என் தோழியின் கணவர்.

"என் மனைவி என்னை விட அதிகம் சம்பாதிக்கிறார். அதிகம் படித்தவர். ஒரு அலுவலகத்தில் பத்து பேரை கட்டி மேய்க்கும் மேலாண்மை அதிகாரியாக பணி புரிகிறார். அவர் தினமும் நேர்த்தியாக உடை உடுத்துவது அவசியம். ஒரு காலத்தில் பெண்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்தார்கள். அப்போது அவர்களை நாம் கண்ட மேனிக்கு வேலை வாங்கினோம். இப்போது அவர்கள் படிப்பிலும் அறிவிலும் வேலை வாய்ப்பிலும் சம்பாத்தியத்திலும் நம்மை மிஞ்சி அசுர வேகத்தில் முன்னேறிவருகிறார்கள். இந்த சமுதாய சூழ்நிலையில் மனைவிமார்கள் துணி துவைப்பது போன்ற காட்சிகள் தான் உண்மையில் காமெடி காட்சிகளாக சித்தரிக்கப்பட வேண்டியவை.மேலும் கணவரை விட அதிகம் படித்திருந்தும் அதிகம் சம்பாதிக்கும் வேலையில் இருந்தாலும் வீட்டு வேலைகளை பெண்கள் தான் செய்யவேண்டும் என்று நிர்ப்பந்திப்பது எத்தனை பெரிய கொடுமை.ஆண்கள் பெண்களின் ஆடைகளை துவைத்துப்போடுவது தான் யதார்த்தம்."

அவர் சொல்வது எத்தனை நிதர்சனம்.

ஒரு ஆராய்ச்சி கூடத்தில் உயர் அதிகாரியாக பணிபுரியும் மற்றொரு தோழியிடம் கேட்டபோது "பெண்களை அடிப்பது ஆபாசமாய் பேசுவது அதே போல் பெண்களை வீட்டு வேலை செய்ய பணிப்பது சில நேரங்களில் வீட்டில் மனைவியிடம் எதிர்த்து பேசுவதை கூட வன்கொடுமை சட்டத்திற்கு கீழ் கொண்டு வரவேண்டும்" என்று ஆதங்கத்தோடு தெரிவித்தார். உண்மையில் பெண்கள் இன்று படும் பாட்டை பார்க்கிற போது இது போன்ற சட்டங்கள் வந்தால் தான் பெண்கள் தங்கள் முன்னேற்ற பாதையில் இன்னும் பல சாதனைகளை செய்ய முடியும் என்று நம்புகிறேன்.

பிரபல பதிவர் ஒருவர் பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் போதெல்லாம் இவ்வாறு சொல்வார். அதாவது மாணவர்களை வீட்டில் எப்போதும் பருப்பு வாங்கிட்டு வா அப்பளம் வாங்கிட்டு வா என்று அடிக்கடி கடைக்கு அனுப்புகிறார்களாம். அதனால் தான் அந்த சீமான்களால் அதிக அளவில் தேர்ச்சி பெற முடியவில்லையாம். அடடே என்ன ஒரு கண்டுபிடிப்பு!!!

நேற்று கண்ட காட்சி. ஒரு பெண் சாலையில் சிவனே என்று நடந்து போய்க்கொண்டிருக்கிறார். பருப்பு அரிசி வாங்க கடைக்கு ஓடி ஓடி உழைத்து கிடைக்கும் நேரத்தில் படிக்கும் ஆண் குஞ்சுகள் எல்லாம் பத்து பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தான் பின்னால் வருவதும் சத்தமிடுவதும் ஊளையிடுவதுமாக என்ன அருமையாக தெருவில் அந்த பெண்ணை கேலி செய்தவாறு தங்கள் வேதியில் அறிவியல் புத்தகத்தை திறந்து படித்து திண்டாடுகிறார்கள்.

அன்பு நண்பரே நீங்கள் யோசித்து பாருங்கள். பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக அளவில் தேர்ச்சி பெறும் எம் குல மாணவிகள் எல்லாம் அடுத்த ஐந்தாண்டுகளில் அதே மிதமான முன்னேற்றத்தை ஆண்களுக்கு நிகராக பெற முடிகிறதா. பத்தாம் வகுப்பிலோ பிளஸ் டூவிலோ ஒரு மாணவனை விட அதிக மதிப்பெண் பெற்ற மாணவியை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பத்து வருடம் கழித்து இருவரின் நிலையும் என்ன என்று பாருங்கள். பிளஸ் டூவில் மாணவனை படிப்பில் வீழ்த்திய மாணவி தொடர்ந்து தன் வாழ்க்கையில் அந்த மாணவனை கல்வியிலும் அறிவிலும் வாழ்க்கை முறையிலும் வீழ்த்த முடிகிறதா?

அது தான் எங்களின் வாழ்க்கை. மாணவர்கள் பருப்பு அரிசி வாங்க கடைக்கு போவதால் அதிகம் தோல்வியுறவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஆண்கள் எப்போதும் போலத்தான் படிக்கிறார்கள். பெண்கள் நாங்கள் தான் எங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் கொஞ்சூண்டு வாய்ப்பை பயன்படுத்தி எங்களை நாங்களே முன்னேற்றிக்கொள்கிறோம். ஆண்களை விட பெண்கள் கல்வியில் பிரகாசிக்க முடியும் என்பதற்கு வருடா வருடம் சான்றுகள் வந்துகொண்டு தானே இருக்கின்றன. சொல்லப்போனால் உங்களை விட நாங்கள் தான் அறிவில் மேன்மக்கள். ஆனால் பிளஸ் டூவில் சாதிக்கும் நாங்கள் அடுத்தடுத்த கலாசார கட்டுப்பாடுகளில் சிக்கி சிதறுண்டு முப்பது வயதில் சமையல்காரியாகவும் கக்கூஸ் கழுபுவளாகவும் கணவனின் ஜெட்டி துவைத்து போடுபளாகவும் குழந்தையின் பீ அள்ளி கழுவி விடுபவளாகவும் மாறிப்போகிறோம். நீங்கள் ரொம்ப பாவம் அரிசி பருப்பு வாங்க கடைக்கு ஓடி ஓடியும் என்னவா முன்னேறுகிறீர்கள்?


சரி இனி மனைவியின் ஆடைகளை துவைத்து பராமரிப்பது பற்றி பார்ப்போம். இது என்னுடைய கற்பனை அல்ல. முழுக்க முழுக்க மனைவியின் ஆடைகளை தானே துவைத்துப்போடும் ஒரு அற்புத கணவரிடமிருந்து வாய் வழியாக கேட்டுப்பெற்ற தகவல்களை அவருடைய அனுமதியோடு இங்கே எழுதுகிறேன்.

பிளவுஸ்:

பெண்களின் பல்வேறு ஆடைகளில் ஆண்கள் ரசித்து துவைக்கும் ஒரு ஆடை பிளவுஸ். காரணம் அதிலிருக்கும் ஒரு கிளுகிளுப்பு தான். பெரும்பாலான ஆண்களுக்கு தங்கள் மனைவிமார்களின் அக்குள் வாசம் முகர்ந்து பார்க்க பிடிக்கும். தினமும் இரவு தன் மனைவி வேலையிலிருந்து வீட்டுக்கு வந்து உடைகளை அறையில் அவிழ்த்து போட்ட பிறகு உள்ளே போய் பிளவுஸில் தன் மனைவியின் வியர்வை வாசத்தை முகர்வது தனக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார்.

பொதுவாக பிளவுஸ் அதிக நேரம் தண்ணீரில் ஊற வைக்கக்கூடாது. காரணம் சாயம் போய்விடும். பிறகு உங்கள் மனைவி காலையில் மேச்சிங்காக இல்லை என்று உங்களிடம் கோவித்துக்கொள்வார். எனவே பிளவுஸ் எப்போதும் அதிக நேரம் ஊற வைக்கக்கூடாது. அடுத்தது பெண்களை போல அவர்களின் ஆடைகளும் மிருதுவானவை. அதன் மேல் உங்கள் காட்டுமிராண்டி வன்புணர்ச்சி உணர்வுகளை வெளிப்படுத்தாதீர்கள். பிளஸை அடித்து துவைப்பது அறிவாளி எருமை மாடு மேய்க்க கூட லாயக்கில்லாதவன் என்பேன்.

பிளவுஸை சிறிது நேரம் ஊற வைத்த பிறகு மெதுவாக கல்லில் வைத்து குலுக்க வேண்டும். அதிலே வியர்வை போன்றவை கரைந்து போய்விடும். பிறகு சிறிய அளவில் மட்டுமே சோப்பு பயன்படுத்தவேண்டும். எங்காவது கரை தென்பட்டால் அங்கு மட்டும் அதிகமாக சோப்பு போடலாம். அல்லது மிதமான சோப்பும் நுரையுமே போதுமானது. பிரஷ் உபயோகிக்கலாம். ஆனால் தேவையான பிரதேசத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அக்குளில் கண்டிப்பாக பயன்படுத்தலாம். அதுவும் கை பகுதியை மறித்து உள் பகுதியில் தான் பிரஷ் போடவேண்டும். இரண்டு இழுப்பு போதும். எங்காவது கரை இருக்குமானல் கவனமாக அதை அகற்றுங்கள். திங்கட்கிழமை காலை நீங்கள் சமையல் செய்துகொண்டிருக்க உங்கள் மனைவி டிரெஸ்ஸிங் ரூமிலிருந்து "என்ன துவச்சிருக்கீங்க இங்க பாருங்க" என்று கறையை காட்டி பிளவுஸை உங்கள் முகத்துக்கு நேராக விட்டெறியப்போகிறார்கள் ஜாக்கிரதை.

நன்றாக அலசிவிடவேண்டும். அலசிய பிறகு கொக்கிகள் சரியாக இருக்கின்றனவா என்று கவனிக்கவேண்டும். சில கொக்கிகள் விரிந்திருந்தால் அவற்றை அமர்த்தி சரி செய்வது நலம். பிறகு நன்றாக பிழிந்து கொட்டை வெயில் கொண்டு காயப்போடுபவரா நீங்கள் அப்படியானால் உங்களுக்கு பன்றி மேய்க்கும் வேலை கூட கிடைக்காது. பிளவுஸ் எப்போதும் நிழலில் தான் உலர்த்தவேண்டும். எனவே வெயில் இல்லாத இடத்தில் காயப்போட்டு காய்ந்தவுடன் அருகிலிருந்து பத்திரமாக எடுத்துவிடுங்கள்.

எடுத்த பிறகு ஒரு முறை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு அயர்ன் செய்யவும். அயர்ன் செய்யும் போது அக்குள் பகுதியிலிருக்கும் சுருக்கங்கள் சுத்தமாக போய்விடவேண்டும். இல்லையென்றால் ஓரிரு முறை அப்படியே விட்டுவிட்டால் சுருக்கம் சேர்ந்துவிடும். அழகாக அயர்ன் செய்து உங்கள் மனைவியின் அலமாரியில் மடித்து வைத்துவிடுங்கள்.

விரும்பினால் அடுத்தடுத்த ஆடைகள் பற்றி அடுத்தடுத்த பதிவில்.




ஆண்களே நீங்கள் பிளஸ் டூவில் வாங்கிய மார்க்கை பார்த்தால் இது போன்ற பிளவுஸ் துவைக்க அறிவு போதாது தனியாக வகுப்பெடுக்கவேண்டும் போலல்லவா இருக்கிறது.

Monday, 3 January 2011

யோனி ஆராய்ச்சி (திறக்காத மொட்டு)
















சமீபத்தில் ஒருவர் என்னோடு சாட் செய்தார். தன்னை பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டார். என் பிளாகை தொடர்ந்து படிப்பதாகவும் என்னுடைய கருத்துக்கள் பிடித்திருப்பதாகவும் சொன்னார். பிறகு என்னிடம் திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்டார். நான் இல்லை என்றேன். உடனே அவரது பதில் என்ன தெரியுமா?

"வாவ்...திருமணம் ஆகவில்லையா? அப்போது நீங்கள் புதிய மொட்டு அப்படித்தானே? மன்னிக்கவும் திறக்காத மொட்டு. என்ன சரி தானே திறக்காத மொட்டு சரிதானே?"
என்று தொடர்ந்து பத்து முறை கேட்டு பதில் அனுப்பிக்கொண்டிருந்தார்.

இது தான் ஆண்களின் கம்பீரம். அதாவது இரண்டு கன்னத்தில் இரண்டு கையை முட்டு கொடுத்து நிறுத்தியபடி மண்டி போட்டு எப்போதும் நமது யோனியை ஆராய்வது தான் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான வேலை.

திறந்த மொட்டா? திறக்காத மொட்டா? அங்கே யார் யார் வந்து போகிறார்கள். அவர்கள் துப்பிவிட்டு போவது என்ன? அதன் வாசம் என்ன? சுவை என்ன? ஏன் அவர்களுக்கு எல்லாம் மொட்டு திறக்கிறது? இப்படி மண்டி போட்டு பெண்களின் மறைவு பிரதேசத்தை ஆராய்வது தான் ஆண்களுக்கு மிகவும் பிடித்தமான வேலை. அந்த மறைவு பிரதேசத்தை ஆராய்ந்து டாக்டரேட் பட்டம் பெற்றதன் விளைவு தான் கற்பு என்ற கர்மாந்திரம்.

அதாவது பெண்கள் மட்டும் தங்கள் உறுப்பை யாருக்கும் காட்டாமல் ஒருவனுககே அதை உரித்தாக்க வேண்டும் என்ற பாசிஸ சிந்தனை குறைந்தது பத்து தலைமுறை ஆண்கள் வேறு வேலை வட்டி இல்லாமல் பொழுது புலர்ந்து இரவு முழுதும் யோனியின் அருகே மண்டி போட்டு வேறு வேலை வட்டி இல்லாமல் யோசித்திருந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பது இந்த திருமணமாகாது மொட்டின் கருத்து.

இப்படிப்பட்ட வம்சத்தில் வந்த ஆண் வர்க்கத்தை தான் நாம் வரதட்சணை கொடுத்து வாங்கி வைத்து குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறோம். வரிசையாக ஒரு ஆயிரம் யோனியை அடுக்கி வைத்தால் நாள் முழுத ஆராய்ச்சி செய்திகொண்டிருப்பேனே என்று உற்சாகமாக துள்ளி எழும் ஆண்களிடமிருந்து தான் இது போன்ற வக்கிரங்கள் வெளிப்படும். இவர்கள் கக்கூஸை ஆராய்வது போல் யோனியை ஆராய்ச்சி செய்துவிட்டு ஏதோ தாங்கள் தான் இந்த உலகில் மேன்மையாக படைக்கப்பட்டவர்கள் போல் பாவ்லா காட்டவேண்டும் அல்லவா? அதற்காகத்தான் வைத்திருக்கிறார்கள் தாலி மெட்டி கற்பு கன்ட்ராவி வாழாவெட்டி.

அதாவது அவர்களுக்கு ஆட்டை பலியிடுவது போதாது. நாமாகவே போய் என்னை பலியிடுங்கள் என்னை பலியிடுங்கள் எனக்கு வாழ்க்கை கொடுங்கள் என்னை வாழ வையுங்கள் என்று கெஞ்சவேண்டும். அதற்குத்தான் இந்த அடக்குமுறைகளும் சம்பிரதாயங்களும் பெண்கள் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது.

ஒரு பெண் என்ன படித்திருக்கிறாள். சமுதாயத்திற்கு அவள் என்ன தொண்டாற்றுகிறாள். அவள் என்ன வேலை செய்கிராள் இதை எல்லாம் விட ஆணுக்கு மிகவும் முக்கியமான ஒன்று அவள் திறந்த மொட்ட திறக்காத மொட்ட என்ற தகவல் மட்டுமே.

உதாரணமாக கார் டிரைவருக்கு தன் எஜமானியின் யோனி பற்றி கவலை. அவனுக்கு தன்னை விட படிப்பிலும் பணத்திலும் திறமையிலும் ஒரு பெண் சாதித்திருப்பது பற்றி வியப்பில்லை. அதை மதிக்கவோ ஆராதிக்கவோ அதன் பொருட்டு தன்னை உயர்த்திக்கொள்ளவோ அவனுக்கு எண்ணமில்லை . அவனுடைய கவலை எல்லாம் தன் எஜமானியின் யோனி எப்படிபட்டது என்பதே. இப்படிப்பட்ட ஆண்களுக்கும் தெருவில் மாடுகள் போட்டு வைக்கும் சாணத்துக்கும் எந்த வேருபாடும் இல்லை.

திருமணம் ஆனால் திறந்த மொட்டு இல்லையென்றால் திறக்காத மொட்டு என்று உங்களுக்கு நீங்களே ஒரு உன்னதமான முடிவுக்கு வந்து மகிழ்ந்துகொள்கிறீர்கள்.

"உங்கள் தாயும் திருமணம் ஆனவள் தான். அப்போது அவளை திறந்த மொட்டு என்று அழைப்பீர்களா? "
இப்படி நான் கேட்கப்போவதில்லை. இது போன்ற கேள்விகளை தமிழின் வடிகட்டிய ஆணாதிக்க இயக்குனர்கள் தான் கேட்க முடியும். அவர்கள் தான் அப்பாவி பெண்களை வைத்து இப்படியெல்லாம் கேட்கச்சொல்வார்கள்
"நீ அக்கா தங்கச்சியோட பொறக்கலையா? நான் உன் அம்ம மாதிரிடா எட்சட்ரா எட்சட்ரா..."
அக்கா தங்கச்சியோட பொறந்தவன் மட்டும் யோக்கியமா எல்லா பெண்களை அக்க தங்கச்சி போல் நினைக்கவேண்டும் என்று நான் அறிவுறுத்தவில்லை மாறாக அக்க தங்கச்சியோடு பொறந்தவன் பிற பெண்களை போல தன் அக்க தங்கச்சி மனைவி தாய் போன்ற தன் பெண் உறவுகளுக்கும் உரிய மரியாதையும் சுதந்திரமும் கொடுக்கட்டுமே. சன் மியூசிக்கில் வரும் 18 வயது பெண்ணை மேடம் என்று அழைக்கும் நீ உன் மனைவியை அழைக்க மட்டும் கூசுவது ஏன். அவளை மட்டும் வாடீ...போடீ என்று உன் ஆண் திமிரை கட்டி அழைத்து மகிழ்வது ஏன்?

எது எப்படியோ ஆண் திமிர் பிடித்தவர்களுக்கு பெண்களை வெறும் யோனியை சுமக்கும் பொம்மைகளாக பார்க்க மட்டுமே அறிவு வளம் பெற்றிருக்கிறது என்பதை அறிகிறபோது கேலி சிரிப்பு தான் வருகிறது.
வாழ்க ஆண்களின் யோனி ஆராய்ச்சி.

Thursday, 16 December 2010

புத்திசாலிப்பெண்கள் வீட்டு வேலை செய்யக்கூடாது

ஆண் சாவகாசமாக அமர்ந்து தினகரனில் வரும் கற்பழிப்பு செய்தியை மாய்ந்து மாய்ந்து படித்துக்கொண்டிருக்கும் பொழுது பெண் அடுப்பங்கரையில் (அது மாடுலர் கிச்சனாக இருந்தாலும் சரி) கஞ்சி வடித்துக்கொண்டிருப்பாள். ஆண் எப்போதும் தொலைக்காட்சியில் செய்திகள் கேட்டபடி "ஏன்டீ....கொஞ்சம் ஜூஸ் எடுத்துட்டு வா" என்று கட்டளையிடுவான். அதென்ன டீ போட்டு கூப்பிடுறது. புருஷன நாம டா போட்டு கூப்பிட்டா ஏதோ அவங்களுக்கு புடவை கட்டி விட்டமாதிரி அவமானப்பட்டுக்குறாங்க. நம்மள மட்டும் நிமிஷத்துக்கு நூறு வாட்டி டீ போட்டு கூப்பிடுறது.


இப்படி பொண்டாட்டிய 'டீ' போட்டு கூப்பிடுற அதிவீர தீர அதி பயங்கர ரணகள கெட்டவார்த்தை பான்பாராக் ஆண் சிங்கங்கள் தான் சன் மியூசிக்கில் வரும் பதினெட்டு வயது பெண்ணை 'மேடேம்....மேடேம்..."என்று மேய்கிறார்கள். ஆக அவர்களுக்கு பெண்களை மேடம் என்று அழைப்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதை மனைவியிடம் காட்டிவிட்டால் ஈகோ போய்விடும் அல்லவா. காலம் காலமாக என்ன சொல்லிக்கொடுத்தார்கள்? மனைவியை 'டீ' போட்டு அழைப்பது தான் ஆண்மைத்தனம். நல்ல கூப்பிடுங்கப்பா. பெண்களே உங்களுக்கும் சூடு சொரணை இல்லை. அவன் டீ போட்டு கூப்பிட்டா 'என்னங்க' என்று கே.ஆர்.விஜயா மாதிரி போய் நில்லுங்க.

பெண்கள் ஏன் வீட்டு வேலை செய்யவேண்டும் என்பது எனக்கு புரியவேயில்லை. ஆண் தன்னை பலசாலி எனவும் அதிவீர பான்பாராக் பாண்டிகளாகவும் பாக்கு போட்டு படிக்கட்டு முக்கில் துப்பி வைப்பது ஆண் வர்க்கத்தின் அதிபயங்கர போர்வீரனின் நெஞ்சுரம் போலவும் பீற்றிக்கொள்ளும் ஆண் கேவலம் பாத்திரம் கழுவவும் துணி துவைக்கவும் ஏன் பெண்ணை பணிக்கவேண்டும். அந்த சொற்ப வேலைகளை கூடவா அவர்களால் செய்ய முடியாது. புட்போர்டில் தொங்கியபடி சாகசம் காட்டும் ஆண்கள் அந்த சக்தியில் ஒரு பகுதியை செலவிட்டாலே பெண்களை உள்ளாடை வரை துவைத்து போட்டுவிடலாமே பிறகு ஏன் வீட்டு கழுவ பெருக்க என்று வீட்டு வேலைகளை எப்போதும் பெண்ணே செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

இன்று ஆணும் பெண்ணும் உழைக்கும் குடும்பங்களில் கூட பெண் தான் வீட்டு வேலை செய்ய பணிக்கப்படுகிறாள். கஞ்சி வடிப்பதும் கக்கூஸ் கழுவுவதும் பெண்களின் பிறப்புரிமை போல ஆணுக்கு நிகராக சம்பாதித்தாலும் இந்த கன்ட்ராவிகளை எல்லாம் நாமே செய்யவேண்டியிருக்கிறது.

பழங்காலத்தில் ஆண் வெளியில் போய் சம்பாதித்துவிட்டு வருவான். (அப்போது பெண்களாகிய நம்மை எங்கே அவர்களை விட நிறைய சம்பாதித்துவிடுவோமோ என்று அஞ்சி வேலைக்கே அனுப்பவில்லை.) அது வேறு கதை. அப்படி சம்பாதித்த காலத்தில் இரவில் ஆண்கள் தங்களை ஓசியில் குஷிபடுத்திக்கொள்ள தாலி என்ற புனித வஸ்துவை கட்டி மாட்டை போல் பெண்களை கூட்டி வைத்துக்கொண்டார்கள்.

ஒருவனை அடிமையாக வைத்துக்கொள்ள சிறந்த வழி எது தெரியுமா அந்த அடிமைத்தனத்தை புனிதப்படுத்துவது தான்.

ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அது ஒரு ஆங்கிலோ இந்தியப்பள்ளி. அங்கே ஒரு ஆசிரியை பயங்கர கோபக்காரி. எதற்கெடுத்தாலும் எங்களை அடித்துவிடுவார். அதுவும் அவரது ஸ்டைல் எப்படிஎன்றால் மண்டி போட்டு நிற்க வைத்து புட்டத்தில் பிரம்பால் அடிப்பாள். ஆண் பெண் பேதம் இல்லாமல் எல்லோரும் அவரிடத்தில் அடி வாங்கியிருக்கிறோம். வகுப்பில் பேசினால் போதும் எழுந்து வந்து கன்னத்தை பளாரிவிடுவார்.

ஒரு முறை இப்படி பிரம்பால் அடித்து ஒரு பையனுக்கு புட்டம் வீங்கிவிட்டது. அவன் அதை வீட்டில் சொல்லியிருக்கிறேன். வீட்டில் என்ன சொன்னார்கள் தெரியுமா "ஆசிரியர் அடித்தால் வாங்கிக்கொள்ள வேண்டும். அவர்கள் நீ நல்வழிப்படத்தான் அடிக்கிறார்கள். குருவின் தண்டனையை எதிர்த்து கேள்வி கேட்டவன் எவனும் உருப்பட்டதில்லை" என்று அறிவுரை வேறு கூறி அனுப்பிவிட்டார்கள்.

காலப்போக்கில் நாங்களும் அந்த ஆசிரியரின் வக்கிரங்களை குரு, சிஷ்யர்களுக்கு அளிக்கும் புனிதப்பரிசாக நினைக்க ஆரம்பித்தோம். இன்னும் ஒரு படி மேலே போய் அவர் கையால் அடி வாங்குவது ஏதோ வரம் கிடைத்தது போல உருவகப்படுத்திக்கொண்டோம். தொடர்ந்து அடி வாங்கியபடியே இருந்தோம். ஒரு நாள் வகுப்பில் ஒரு பெண் பேசிக்கொண்டிருந்தாள். அந்த ஆசிரியை பார்த்துவிட்டாள். கையில் வைத்திருந்த கட்டை டஸ்டரை எடுத்து அந்த பெண் மீது வீசினாள். அது அவளின் நெற்றியில் பட்டு கீழே விழுந்தது. அந்த பெணுக்கு சட்டென்று பெருங்கோபம் வந்தது. எப்படித்தான் அப்படி கோபப்பட்டாளோ தெரியாது. குனிந்து டஸ்டரை எடுத்து அந்த ஆசிரியை மீது ஓங்கி அடித்தாள். அவ்வளவு தான். அதன் பிறகு அந்த ஆசிரியை எங்கள் யாரையும் அடிப்பதில்லை. இது தான் புரட்சி. நம் அடிமைத்தனத்தை நாமே புனிதப்படுத்தி மண் சோறு தின்று தாலிக்கு மஞ்சள் குங்குமம் தடவி என்னங்க ஏதுங்க என்று ஒரு விலைக்கு வாங்கப்பட்ட அடிமை நாயை போல புனித யாத்திரை மேற்கொண்டால் ஆண்கள் இப்படித்தான் தொடர்ந்து நம்மை வதைத்துக்கொண்டிருப்பார்கள்.

ஆண்கள் பலே கில்லாடிகள் பாருங்கள். பெண்களை அடிமைகளாக வைத்திருக்கும் திருட்டு ரகசியம் நமக்கு தெரிந்துவிடும் என்பதால் உடனே அதை புனிதப்படுத்திவிடுகிறார்கள். உதாரணமாக தாலி. தாலியை ஒரு புனித சம்பிரதாயமாக நம் மீது திணிக்கிறார்கள். இன்று சில குடும்பங்களில் பறவாயில்லை முன்பெல்லாம் பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருக்கிற உரிமை இருந்ததா?

அதாவது இரவில் ஆணை குஷி படுத்துவதும் பிறகு மசக்கை வாந்தி மயிரு என்று படாதபாடுபட்டு குழந்தை பெற்றுக்கொள்வதும் பிறகு அதை வளர்ப்பதும் அடுத்த ஒரு மாதத்திலேயே மீண்டும் ஆணை இரவில் குஷி படுத்துவதும் அடுத்த குழந்தையை சுமந்து வாந்தி எடுத்து சாப்பிடபிடிக்காமல் பசித்து துடித்து மீண்டும் மீண்டும் அதே துன்பத்தை வருடாவருடம் நம்மிடம் திணித்தார்கள். ஒரு ஐம்பது வருடத்திற்கு முன்பு பார்த்தால் எல்லார் வீட்டிலும் ஐந்தோ பத்தோ குழந்தைகள் இருக்கும். எந்த பெண்ணுக்காவது இனி குழந்தை பெற்றுக்கொள்ளமாட்டேன் என்றோ இன்றைக்கு என்னை தொடாதே என்றோ சொல்ல உரிமை இருந்ததா? இல்லை. ஏனென்றால் தாய்மை என்பதையே ஏதோ புனித புண்ணாக்காக மாற்றி அதை காட்டியே பெண்ணை அடிமையாக வைக்க நினைத்த மகா கில்லாடிகள் நம் ஆண்கள்.

அதாவது தாய்க்குபின் தாரம் என்று ஏதோ கவர்னர் பதவியை நமக்கு கொடுத்துவிட்டது போல் இந்த ஆண்கள் நம்மை படுத்தியபாடு தெரியாதா என்ன?

விதவைகளுக்கு மொட்டை அடித்து வெள்ளை துணி கட்டி அழகு பார்த்த அரும்பெரும் புலிகள் அல்லவா இந்த ஆண் சமூகம்.



யோசித்து பார்த்தால் இப்படி பெண்ணை அடிமைபடுத்தும் எல்லா விஷயங்களையும் புனிதப்படுத்தியோ கடவுளோடு தொடர்புபடுத்தியோ அல்லது தியாகம் அன்பு என்று உருவகப்படுத்தியோ சமூகம் நம் மீது மறுபடியும் மறுபடியும் திணிக்கிறது. குழந்தையை தாய் கவனித்துக்கொள்ளவேண்டுமாம். ஓத்துவிட்டு போன ஆணுக்கு என்ன பொறுப்பு இருக்கிறதென்று கேட்டு பாருங்கள். தாய் தெய்வீகம் புனிதம் என்று வந்துவிடுவார்கள்.

இப்படித்தான் வீட்டு வேலை செய்வதையும் பெண்கள் மீது திணித்துவிட்டார்கள். மார்கழி மாதம் எந்த வீட்டிலாவது ஒரு ஆண் எழுந்து வாசல் தெளித்து கோலம் போடுவதை பார்க்க முடியுமா?



ஏன் என்று சொல்லுங்கள்? கேவலம் வாசலில் கொஞ்சூண்டு தண்ணி தெளித்து உக்காந்து தெமாத்தூண்டுக்கு ஒரு படம் வரைய முடியாத அளவுக்கு ஆண்கள் எல்லாம் பலகீனமாக உடல் ஊனமாகவா போய்விட்டார்கள்.

அல்லது ஓவியம் வரைவது ஆண்களுக்கு தீட்டு என்று எழுதியிருக்கிறதா? ஒரு வீட்டிலும் அப்படி பார்க்க முடியாது. காரணம் அதெல்லாம் பெண்களின் குல தொழில்.

தாய்க்கு பின் தாரம் அல்லவா ஆண்களே.

தொடரும்...