Monday, 8 February 2010

குடும்ப பொண்ணு அப்படியின்னா என்ன?

எனக்கு வந்த ஒரு கடிதமும் அது சார்ந்த விளக்கங்களும்.

//நல்ல நல்ல விசயங்களை தேவையில்லாத எடுத்துக்காட்டுகளால் வீணடிக்கிறீர்கள். முக்கியமான விசயங்களுக்கு சினிமாவை மட்டும் உதாரணமாக எடுக்க வேண்டாம்.

டைரக்டர் படத்தில் தேவை என்று நினைத்து வைத்தார். அவருக்குத் தேவை துட்டு. நடிகர் சொன்னதை நடித்தார், தேவை துட்டு. நடிகை சொன்னதைக் காட்டினார், தேவை துட்டு. அவ்வளவுதான். அவர்கள் யாரும் ஆணாதிக்கம் பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை. இவ்வளவு ஏன், அந்த நடிகையான பெண் கூட கவலைப்படவில்லை.//


டயரக்டர் படத்தில் தேவை என்று நினைத்து வைத்தார். இப்போது இதற்கு இரண்டு காரணங்கள் இருக்க வேண்டும்.

1. கதையில் அந்த கதாபாத்திரத்திற்கு தேவையாக இருக்கலாம்.
2. அதை பார்க்க வரும் மக்களுக்கு தேவையாக இருக்கலாம்.

கதையில் கதாபாத்திரத்திற்கு தேவையானதென்று நீங்கள் குறிப்பிட்டால் அந்த கதாபாத்திரம் ஆணாதிக்கத்தை ஊக்குவிக்கும் கதாபாத்திரமாக இருக்க வேண்டும். ஆணாதிக்கத்தை நிலைநிறுத்த நினைக்கும் ஒரு கோழை தான் பெண்கள் எவ்வாறு உடை உடுத்த வேண்டும். எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார். எனவே ஒரு கதாபாத்திரம் திரையில் ஆணாதிக்க சிந்தனையோடு படைக்கப்படுமானால் அதில் இவ்வாறான ஆணாதிக்க வசனங்களை வைத்துக்கொள்ளலாம்.
ஆனால் நீங்கள் சொல்லுங்கள் பாபாவோ சிவகாசியோ படையப்பாவோ ஆணாதிக்க சிந்தனை கொண்ட ஒருவனின் கதையா? இல்லையே. அது முழுக்க முழுக்க மாஸ் ஹீரோ அப்பீலோடு உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள். அப்படியிருக்கும் போது ஆணாதிக்க சிந்தனை என்பது எதற்காக ஓரிரு காட்சிகளில் தெளிக்கப்படுகிறது. கதாபாத்திரத்திற்கு சம்மந்தம் இல்லை எனும் போதும் தொடர்ந்து டயரக்டர் ஒன்றிரண்டு காட்சிகளில் ஆணாதிக்கத்தை போதிக்க காரணம் என்ன?

அதற்கு காரணம் 2. அதாவது அதை பார்க்க வரும் மக்களுக்கு அது தேவைப்படுகிறது. சினிமாவில் எம்.ஜி.ஆர். பிறகு ரஜினி பிறகு விஜய் என மாஸ் அப்பீல் ஹீரோக்களை நோக்க மக்கள் அலை மோத காரணம் என்ன? சினிமா கொட்டகையில் நாம் கலையை தேடி போவதை விட போதையை தேடி போகிறோம். சமுதாயத்தில் நம்மால் எதிர்த்து கேட்க முடியாத விஷயங்களை அல்லது சமுதாயத்தில் நமக்கு இழைக்கப்படும் தீமைகளை திரையில் ஹீரோ எதிர்த்து போராடுகிற போது நாம் அதை ஒரு போதையோடு ரசிக்கிறோம். உடம்பில் ஜிவ்வென்று ஒரு சக்தி ஏறுகிறது.

உடனே அந்த ஹீரோவை வணங்கி அவருக்கு அரசியல் பிரவேசம் வரை நாம் தூக்கிக்கொண்டு போகிறோம். அப்படித்தான் இந்த ஆணாதிக்க சிந்தனையும் சில பல ஆண்களை திருப்த்தி படுத்த திரையில் ஹீரோவின் வாயிலிருந்து கக்கப்படுகிறது. யாரை திருப்தி படுத்த என்று நான் திரும்பவும் விளக்கவேண்டுமா என்ன?


குடும்ப பொண்ணு அப்படின்னா என்னங்க....ஒரு பொண்ணுக்கு குடும்பம் தாண்டி எந்த அடயாளமும் இல்லையா? ஐ.எ.எஸ். ஆபீசரா இருந்தாலும் குடும்ப பொண்ணு தான் வேணுங் குறீங்களே....குடும்ப பொண்ணுன்னா என்ன? இதோ துப்பாக்கி காட்டிட்டு நிக்கிறாங்களே இவங்க குடும்ப பொண்ணா? இல்லேன்னு சொல்லாதீங்க சுட்டுடுவாங்க.



//மேற்கத்திய கலாச்சாரமும் நமதும் ஒன்றா? உடனே அங்கே இப்படியெல்லாம் சொல்வதில்லை என்று சொல்கிறீர்களே! அங்கே அம்மணமாக போராட்டமே நடத்துவார்கள்.

பெண் இப்படிதான் இருக்கவேண்டுமென்று சொல்ல யாருக்கும் உரிமையில்லைதான். ஆனால் சினிமாவில் காட்டுவதெல்லாம் மக்கள் மனநிலைக்கு சொறிதலே, கல்லா கட்ட ஒரு வழி. சூப்பர் ஸ்டார்களின் ஆணாதிக்கம் பற்றி சொன்ன நீங்கள், அதில் பணம் வாங்கிக்கொண்டு ஆதரிக்கும் பெண்களைப் பற்றி சொல்லாதது ஏன்?
சென்ற ஒரு பதிவிலேயே கண்டேன். ஆணாதிக்கம் பற்றி சொல்லும் நீங்கள் அதற்குத் துணை போகும் பெண்கலைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. சொல்ல மறுக்கிறீர்களா, மறைக்கிறீர்களா அல்லது அது உங்களது கண்களுக்குத் தெரியவில்லையா என்று தெரியவில்லை. வரதட்சணை பற்றிப் பேசும்போது, அதைக் கேட்கும் பெண்கள் பற்றி பேசுவதில்லை. இந்தப் பதிவில் அதில் நடிக்கும் பெண்களைப் பற்றிப் பேசவில்லை. ஆக உங்களுடைய ஒரே நோக்கம் ஆண்களைக் குறைசொல்வதுதானா?

இது என்ன பெண்ணாதிக்கமா? இல்லை இப்படி நான் கேட்பதுதான் ஆணாதிக்கமா? அருமையாக பெண்ணடிமை, ஆணாதிக்கம் பற்றிக் கூற நினைக்கிறீர்கள். ஆண்கள் மட்டுமே காரணம் என்பதுபோலதான் உங்கள் பதிவுகள் இருக்கின்றன. ஆண் மற்றும் பெண் இருவரும் எப்படி இந்த ஆணாதிக்கத்தை வளர்க்கிறார்கள், ஆதரிக்கிறார்கள் என்ற கோணத்தில் எழுதிப்பாருங்கள். இதை விட அது மேலோங்கியிருக்கும் என்பது எனது எண்ணம்.//



நீங்களே கேள்வியும் கேட்டு அதற்கான பதிலை நீங்களே சொல்லிவிட்டீர்கள். சபாஷ். உங்களுடைய கேள்வி ஆணாதிக்க சிந்தனையை ஆதரிக்கும் காட்சியில் நடிப்பவள் ஒரு பெண். அவள் அந்த காட்சியில் ஏன் நடிக்க வேண்டும்? அதற்கான உங்களின் பதில் துட்டு.
ஆம் துட்டு. பணத்திற்காக பெண்ணே ஆணாதிக்க சிந்தனையை பேணி வளர்க்கும் அந்த காட்சியில் துட்டுக்காக நடிக்கிறாள் அதை நான் ஏன் குறை கூறவில்லை என்பது உங்கள் ஆதங்கம். ஆனால் சிந்தித்து பாருங்கள் தோழரே அந்த துட்டை அவர்களுக்கு அளிப்பது யார்?

கவுண்டரில் ஐம்பதும் நூறும் பிளாக்கில் இருநூறும் ஐநூறும் கொடுத்து டிக்கெட் வாங்கி அந்த படத்தை பார்த்து அவர்களுக்கு பணம் பெற்று தருவது யார்? ரசிகர்கள். ரசிகர்களுக்கு எது பிடிக்கிறதோ...எது விற்பனை ஆகிறதோ அதை விற்கத்தான் எந்த சினிமா வியாபாரியும் பிரியப்படுவான். என்வே ஆணாதிக்க சிந்தனைகள் நன்றாக விற்கிறது. காரணம் நம்மில் உள்ள சில மன நோயாளிகளுக்கு விஜய்யோ ரஜினியோ அந்நியாயத்தை எதிர்க்கிற போது கிடைக்கும் போதை ஆணாதிக்கத்தை போதிக்கிற போதும் கிடைக்கிறது. காரணம் அந்த ரசிகனுக்கு அடிப்படையில் பெண்களின் முன்னேற்றம் பிடிக்கவில்லை. பெண் தான் விரும்புவதை அணிவது பிடிக்கவில்லை. பெண் உடற்பயிற்சி செய்வது பிடிக்கவில்லை. அதை கேள்வி கேட்க அவனால் முடியாத காரணத்தால் திரையில் அவன் விரும்பும் ஹீரோ அந்த ஆணாதிக்க சிந்தனையை பிரகடனப்படுத்தும் போது அவனுக்கு ஒரு போதை கிடைக்கிறது.

அந்த போதைக்கு அவன் துட்டு கொடுக்கிறான். அந்த துட்டுக்காக அவர்கள் ஆணாதிக்க சிந்தனையை தூண்டும் காட்சிகளை அரங்கேற்றுகிறார்கள். ரசிகர்களும் சமுதாயமும் இது போன்ற ஆணாதிக்க சிந்தனையை தூண்டும் திரைப்படங்களை வெறுத்துஒதுக்க ஆரம்பிக்கும் போது இனியும் ஆணாதிக்கத்தை பேணி கல்லா கட்ட முடியாது எனும் நிலை வரும்போது அவர்களாகவே அதை நிறுத்திவுடுவார்கள். எனவே திரையில் தோன்றும் நடிகைகள் ஆணாதிக்க சிந்தனையை தூண்டும் காட்சிகளில் நடிப்பது துட்டுக்காக எனும் போது அந்த துட்டை கொடுக்க சமுதாயம் பிரியப்படாமல் போனால் அதற்கான காட்சிகளுக்கும் அவசியம் இல்லாமல் போய்விடும். மேலும் சினிமா நடிகைகளையோ சினிமாவையோ சார்ந்தல்ல என் வாதம். அதை ரசிக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு எதிராகவே ....

மேலும் நீங்கள் கேட்கலாம். ரஜினியோ விஜய்யோ துட்டுக்காக அதை செய்கிறார்கள்.அவர்களை ஏன் நீங்கள் குற்றம் சொல்கிறீர்கள் என்று?

சிந்தித்து பாருங்கள் - அப்படி ஒரு காட்சியில் நான் நடிக்கமாட்டேன் என்று சொல்லி அடம் பிட்க்கும் அளவுக்கு ரஜினிக்கோ விஜய்க்கோ நிச்சயமாக செல்வாக்கு உண்டு. அந்த காட்சியில் நடிக்கும் நடிகையை விட....

---------------------

உங்களுடைய இரண்டாவது ஆதங்கம்.
சமுதாயத்தில் நிலவும் பெண்ணடிமைத்தனத்திற்கு துணை போகும் பெண்களை நான் ஏன் சாடுவதில்லை. எப்போதும் ஏன் ஆண்களை குறை சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்பது.

விளக்கம்.

உதாரணமாக நம் குடும்பம் ஒரு பண்ணையாருக்கு ஒரு தலைமுறையாக அடிமையாக வாழ்கிறது என்று வைத்துக்கொள்வோம். பண்ணையார் வரும் போது நாம் எழுந்து துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு அவரை வணங்கியபடி நிற்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகிறோம். நாமும் அடிமை என்பதால் அதை தவறாமல் செய்கிறோம். நம் குழந்தைகளும் அதை கவனிக்கிறது. அந்த பழக்கம் நம் குழந்தைகளுக்கும் வருகிறது. பிறகு ஒரு நாள் நமக்கு அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கிடைத்துவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். உடனே நாம் நம் பிள்ளைகளை அழைத்து குழந்தைகளே இனி மேல் நாம் பண்ணையாரை வணங்க தேவையில்லை. நமக்கு விடுதலை கிடைத்துவிட்டது. இனிமேல் நாம் அடிமைகள் இல்லை. நாம் பண்ணையாருக்கு சமமானவர்கள் ஆகிவிட்டோம். எனவே இனி மேல் அவரை கண்டு நாம் வணங்கவோ மரியாதை செலுத்தவோ பயப்படவோ தேவையில்லை என்று சொல்கிறோம். குழந்தைகள் நிச்சயமாக ஓரிரு மாதங்கள் அல்லது ஆண்டுகளில் அதை புரிந்துகொண்டு திருந்திவிடும்.

ஆனால் பண்ணையாரை ஒரு தெய்வத்தின் திருவடிவமாக...பண்ணையாரை கிட்ட தட்ட கடவுளாக உருவகப்படுத்தி பண்ணையார் வரும் பொழுது துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு வணங்கியபடி குனிந்து நிற்கவில்லை என்றால் அது தெய்வ குற்றம் என்று போதித்து பாருங்கள். விடுதலை கிடைத்த பிறகும் கூட நம் குழந்தைகள் ஏதாவது தெய்வ குற்றம் வந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே பண்ணையாரை வணங்குவதை ஒரு கடமையாக ஏற்கும் வாய்ப்பிருக்கிறது. இதே போன்றொரு வழிமுறையில் தான் ஆணாதிக்கமும் சமுதாயத்தில் காலங்காலமாய் விதைக்கப்பட்டிருக்கிறது.

என்வே ஆணாதிக்கம் எனும் தனி ஒரு இனத்தின் வசதிக்காக உருவாக்கப்பட்ட சட்டதிட்டங்களில் பெரும்பான்மையானவை மதத்தை முன் நிறுத்தி பிரகடனப்படுத்தப்பட்டது. என்வே காலம் காலமாய் ஆணாதிக்கத்தை தெய்வ வழிபாட்டு முறையாக பாவித்து கடைபிடித்து வருகிறோம். உதாரணமாக பெண் தான் விரும்பும் உடை அணிவது ஜீன்ஸ் அல்லது வேறு உடைகள் அணிவது இழுக்கு கலாசார சீர்கேடு என்றெல்லாம் நாம் வாதிட்டு இருக்கிறோம். பெண்கள் அதிகமாக ஊர் சுற்றினால் கெட்டு போய்விடுவார்கள். பெண்கள் தாலி கட்டிக்கொண்டு அதை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் கடவுள் தண்டிப்பார். இவ்வாறான கோட்பாடுகளின் மூலம் ஆணாதிக்கத்துக்கு ஒரு Religious Identity கொடுத்து வளர்த்துவிட்ட படியால் பெண்களால் அதை அவ்வளவு எளிதில் கடந்து வர முடியவதில்லை. அதனால் தான் இன்னும் பல பெண்கள் ஆணாதிக்கத்துக்கு பரிந்து பேசி துணை போகும் நிலை உள்ளது. அவர்களை நான் எப்படி கண்டிப்பது. அவர்களை நான் எப்படி சாடுவது. காலம் காலமாய் அடிமையாய் வாழ்வது தெய்வ தரிசனம் என்று சொல்லி சொல்லி வளர்க்கப்பட்ட ஒரு பெண்ணின் மனதில் மாற்றத்தை மென்மையாக சொல்லித்தான் உருவாக்க முடியும். எனவே பெண்களை இப்போது உள்ள கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள். அணாதிக்கத்தின் வரலாறையும் பெண் அடிமைத்தனத்தின் பண்டைய ஆதார கூறுகளையும் ஆராய்ந்து பார்த்தால் பெண்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள்.....கேள்விகேட்கப்படவேண்டியவர்கள் அல்ல என்பது உங்களுக்கு புரியும்.
----------------

மேலும் என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி இது தான் "வரதட்சணை என்று கூவுகிறாயே அதை ஆதரிக்கும் மாமியார்களை சாடாதது ஏன்?"

உதாரணமாக நீங்கள் ஒரு குதிரை வாங்குகிறீர்கள். பத்தாயிரம் ரூபாய். அதை உங்களுக்கு பராமரிக்க தெரியவில்லை. அதனால் பராமரிப்பு தெரிந்த ஒருவரிடம் அதை ஒப்படைக்கிறீர்கள். அவர் அதற்காக மாதம் ஆயிரம் ரூபாய் கேட்கிறார். ஒப்புக்கொள்கிறீர்கள். பிறகு உங்களுடைய மகன் குதிரை பராமரிப்பில் பி.ஹெச்.டி. வாங்கிவிடுகிறான். இப்போது பக்கத்து வீட்டுக்காரர் அவருடைய குதிரையை உங்கள் மகனிடம் இலவசமாக பராமரிக்கும்படி சொன்னால் நீங்கள் அதை ஒத்துக்கொள்வீர்களா? உடனே நீங்கள் சொல்ல மாட்டீர்களா? “யோவ் நான் குதிரை வாங்கினப்ப ஆயிரம் ரூபாய் கொடுத்து பராமரித்தேன். உனக்கு மட்டும் ஓ.சி.யில் பராமரிப்பு கேட்கிறதா?”

அது தான் இன்றைய மாமியார்களின் நிலமை. அவர்கள் ஒரு காலத்தில் வரதட்சணை கொடுக்க வேண்டி வந்தது. அப்படி கொடுத்து திருமணம் செய்துகொண்ட பிறகு இப்போது தன் மகனுக்கு வரதட்சணை இல்லை எனும் போது அவள் சஞ்சலப்படுகிறாள். இதை நான் ஞாயப்படுத்தவில்லை. இருந்தபோதும் இது ஒரு மனித இயல்பு. அப்படியிருக்கும் போது காலம் காலமாய் வரதட்சணை எனும் விலங்கால் பெண்களை பிணைத்து வைத்துவிட்டு இப்போது மாமியார்களை குற்றம் சொல்வதில் ஒரு பயனும் இல்லை.

ஆனால் ஒரு ஆண் வரதட்சணை எனக்கு அவசியமில்லை என்று உறுதியாக நிற்பானே ஆனால்...ஒரு பெண் நான் அஞ்சு பைசா வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ய மாட்டேன் என்று போர் தொடுப்பாளே ஆனால் நிச்சயம் வரதட்சணை ஒழியும். இன்றைய சமுதாயத்தில் வரதட்சணைக்கு ஆசைப்படும் ஆண்கள் குறைந்து வருகிறார்கள். அதே நேரத்தில் பெண்களும் அதை எதிர்க்க தொடங்கிவிட்டார்கள். என்வே நாம் திருத்த வேண்டியது சம கால ஆண்களையும் பெண்களையுமே தவிர மாமியார்களை அல்ல.

சம கால ஆண்கள் வரதட்சணைக்கு ஆதரவாய் செயல்பட்டால் அவர்களை ஐம்பது சதம் திட்டுவேன். சமகால பெண்கள் வரதட்சணைக்கு ஆதரவாய் செயல்பட்டால் அவர்களை இருநூறு சதம் கண்டிப்பேன்.

மேலும் பெண்கள் மேற்கத்திய உடைகள் அணிய வேண்டும் என்பதோ...மேற்கத்திய நாகரீகம் பழக வேண்டும் என்பதோ....குடிக்க வேண்டும் என்பதோ....சிகிரெட் புகைக்க வேண்டும் என்பதோ அல்ல என்னுடைய பரிந்துரை. நான் கோருவதெல்லாம் அவள் விரும்புவதை செய்ய அவளுக்கு சுதந்திரம். அவளிடம் ஆணாதிக்கம் சார்ந்த அறிவுரைகள் கூறுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.


உங்கள் தோழி வின்சி.

vincyontop@gmail.com

Wednesday, 3 February 2010

சூப்பர் ஸ்டார்களின் ஆணாதிக்கம்.

ரஜினி பாபா என்று ஒரு திரைப்படத்தில் பெண்கள் அதிகமாக ஊர் சுற்றினால் கெட்டு போய்விடுவார்கள் என்றார். விஜய் என்ற அடுத்த வளரும் சூப்பர் ஸ்டார். கட்சி என்ற கமர்கட்டை காட்டி படத்தை ஓட வைக்கும் தந்திரத்தை ரஜினியிடமிருந்து கற்றுக்கொண்டு தமிழக மக்களை மூடர்களாய் வைத்திருக்க துடிக்கும் இளைய தளபதி. அவர் ஒரு படத்தில் அசின் போர்த்திக்கொண்டு வரவேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். அதாவது போர்த்தி நல்ல பெட்ஷீட்டா எடுத்து முழுசா போர்த்தி மஞ்சள் பூசி ஒரு ரூபா சைசுக்கு குங்குமம் வச்சுகிட்டு வந்தா உடனே எல்லோரும் நம்மள மகாலட்சுமி என்று கும்பிடுவார்களாம். ஆக பெண்கள் இவர்களை பொருத்தவரை கும்பிடும் சாமியாக இருக்க வேண்டும் அல்லது காம இச்சையை பூர்த்தி செய்யும் பரத்தையாக இருக்க வேண்டும். அதை தவிர பெண்ணுக்கென்று தனியாக எந்த அடயாளமும் இல்லை. அவளது படிப்போ அறிவோ வேலையோ சம்பாத்தியமோ இல்லை. மகாலட்சுமி அல்லது மஜா சுந்தரி.

படையப்பா என்றொரு திரைப்படத்தில் அதிகமா ஆசைப்படுற ஆம்புளையும் அதிகமா கோபப்படுற பொம்புளையும்....அதென்னப்பா ஆண்கள் ஆசைப்பட கூடாதாம் ஆனால் கோபப்படலாமாம்...பெண்கள் ஆசைப்படலாமாம் ஆனால் கோபப்படக்கூடாதாம். எங்கேருந்தையா இந்த சைக்காலஜி எல்லாம் கத்துகிட்டு வர்றீங்க....மறுபடியும் பெண் என்பவள் போர்த்திக்கொண்டு கோபப்படாமல் தலை குனிந்தபடி ஆண்களை கண்டால் நாணி ஒடுங்கி ஒடிந்து ஓடக்கூடிய அந்த திரைப்படத்தில் வரும் சவுந்தர்யா போல் இருக்கவேண்டும் என்று சூப்பர் ஸ்டார் வருங்கால இளைஞர்களுக்கு ஆணாதிக்கம் கற்றுக்கொடுக்கிறார்.

படையப்பா திரைப்படம் எனக்கு பிடிக்கும். ஒரு ஆணின் உயிர் பிச்சையில் வாழ பிடிக்காத ஒரு புரட்சி பெண்ணாக ரம்யா நடித்திருப்பார். உண்மையில் அந்த கிளைமாக்ஸ் ரஜினிக்கு எத்தனை பெரிய அவமானம். ஆனால் நாம் பிச்சை போடுவது சூப்பர் ஸ்டார் என்பதால் அவரது பிச்சையை தூக்கி அவர் முகத்தில் வீசிய வீர பெண்மணியை பரிதாபத்தோடும் பிச்சை போட்ட சூப்பர் ஸ்டாரை கம்பீரத்தோடும் பார்க்க பழகிவிட்டோம். காலம்காலமாய் பெண்கள் அடிமைகளாய் வீட்டு வேலை செய்தபடி வீட்டோடு இருக்க வேண்டும் என்று நமது ஹீரோக்கள்கள் கற்பித்து வைத்திருக்கிறார்கள்.

















எல்லோரும் நல்லா பாத்துக்கோங்கப்பா......ஹீரோ மற்றும் ஹீரோவின் அறிவுரைப்படி உடை உடுத்தியிருக்கும் மகாலட்சுமி. உடம்ப காட்டக்கூடாதுன்னு ஆணாதிக்க அறுவுரை சொன்ன நமது தளபதி கட்டிக்கொண்டு நிற்பது நம்புங்கப்பா மகாலட்சுமி...


திரைப்படங்களில் ஒரு காட்சியில் ஹீரோயின் ஆடை ஆபாசமாக இருப்பதாய் ஹீரோ அறிவுரை கூறுவார். அதாவது பெண்கள் அடக்கமாக அமைதியாக பஜாரியாக அல்லாமல் நாணத்தோடு வெட்கப்பட்டுக்கொண்டு இருக்க வேண்டும் என்று ஹீரோ அறிவுரை கூறுவது அதற்கு அடுத்த காட்சியில் ஹீரோவின் அந்த ஆணாதிக்க அறிவுரையால் மனம் மாறி ஹீரோயின் புடவை சுற்றிக்கொண்டு வந்து தன் காதலை வெளிப்படுத்துவதும் அதற்குள் பொறுமையில்லாமல் அடுத்த காட்சியில் சுவிட்சர்லாண்டில் ஹீரோயினுக்கு ஒரு ஜெட்டியும் பிராவும் கொடுத்து அரை நிர்வாணமாய் ரோட்டில் ஆட விட்டு ஹீரோ கோட் சூட் கூளிங் கிளாஸ் சமிதமாய் ஓடி வருவதும்.....அட டா என்னே தமிழ் சினிமா....

தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் ஆணாதிக்க சிந்தனைகளை போதிக்கவும் அதே படத்தில் ஐட்டம் சாங் என்ற பெயரில் அரை நிர்வாணமாக பெண்களை குலுங்க விட்டு வேடிக்கை பார்ப்பதற்கும் மட்டுமே ஹீரோயின்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். மொழி போன்ற பெண்ணை மையப்படுத்தி வரும் திரைப்படங்கள் ஒரு விலக்கு. மற்றபடி ஹீரோ ஏழைகளுக்கு தையல் மெஷின் கொடுப்பதும் ஞாயத்தை நிலை நாட்டுவதும் குடிசை மக்களோடு குழந்தைகளோடு பாடுவதும் ஆலமரம் ஆக்ஸ்போர்டு ஆக வேண்டும் என்ற கற்பனைக்கும் எட்டாத கர்மாந்திர வரிகளை பாடி இளைஞர்களை தன் பால் ஈர்த்து அரசியல் சினிமா ஆதாயம் தேடவும் மட்டுமே பயன்படுகிறார்கள்.

இங்கே உலக சினிமா உலக சினிமா என்று பீற்றிக்கொள்ளும் கமல் கூட ஒரு பெண் கதாபாத்திரத்தை ஆபாசத்தின் உச்சமாகவும் இன்னொரு கதாபாத்திரத்தை வெகுளித்தனத்தின் உச்சமாகவும் காட்ட தவறவில்லை. ஆனால் அதே திரைப்படத்தில் அவர் மட்டும் பத்து வேடங்களிலும் புரட்சியாளராகவே வருகிறார்.

நேற்று போக்குவரத்து கழகத்தின் பேருந்தின் கூரையின் மீது நின்றுகொண்டு கல்லூரி மாணவர்கள் டான்ஸ் ஆடுகிறார்கள். ஒருவர் தவறி விழுகிறார். உடனே அந்த மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து பஸ் ரயில் ஆட்டோ என்று கற்களை வீசி தாக்குகிறார்கள். இப்படிப்பட்ட குரங்கு கூட்டம் தான் விஜய் ரஜினி என்று கையில் ஒரு கர்சீப்பை கட்டிக்கொண்டு போஸ்டர் ஒட்டி அடித்து பிடித்து டிக்கெட் வாங்கி முன் இருக்கையில் அமர்ந்து விசில் அடிக்கிறது. அந்த ஒன்றுக்கும் உதவாத ஆண் வீரர்கள் தங்களின் ஹீரோ ஆணாதிக்க வசனம் பேசும் போது விசில் அடிப்பார். அது போன்ற மன நிலை பாதிக்கப்பட்ட இளைஞர்களை ஒரு வித வன்முறை ஆபாச போதையில் ஆழ்த்தி பணம் பார்க்கும் நீங்கள் எல்லாம் ஹீரோக்கள்(குரங்கு கூட்டத்திற்கு மட்டும்) என்று சொன்னால் நான் ஒத்துக்கொள்வேன் தயவு செய்து சினிமா கலைஞர்கள் என்று சொல்லி சினிமா என்ற அதிசயத்தை அழுக்கு படுத்த வேண்டாம்.

என்னுடைய பெண் பார்க்கும் படலம் என்ற கட்டுரைக்கு நிறைய பதில்கள் வந்தன. சில பதில்களில் பெண் பார்க்க வரும் பொழுது காபி கொடுப்பதில் தவறில்லை என்று சொன்னார்கள். காபி கொடுப்பதில் தவறில்லை. அதை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் செய்யட்டுமே. பெண் தான் காபி தட்டை தூக்கிக்கொண்டு போய் ஒரு சர்வரை போல் ஒவ்வொருவருக்கும் காபி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லையே.

பெண் பார்க்கும் சடங்கில் இப்போது காலில் விழுவது இல்லை பாட்டு இல்லை என்றெல்லாம் பெரிய புரட்சியாளர்கள் போல் ஆண்கள் எழுதுகிறார்கள். ஆண்களே உங்கள் முன்னோர்கள் இதை எல்லாம் கன கச்சிதமாய் பின் பற்றினார்கள். பெண்களை பாட சொல்லி அவள் ஊமையா இல்லையா என்று சரி பார்த்தார்கள். நடக்க சொல்லி நொண்டியா இல்லையா என்று சோதித்தார்கள். பெரியர்வர்களை சேவித்தல் என்று சொல்லி மண்டி போட்டு தலை குனிய வைத்தார்கள். இப்போது பெண்கள் வளர்ச்சியும் எழுச்சியும் அடைந்த பிறகு அப்படி சொல்ல உங்களுக்கே கூச்சமாக இருக்கும் அல்லது அப்படி சொன்னால் எந்த பெண்ணும் செய்ய மாட்டாள் என்பதால் தான் அந்த சங்கதிகள் எல்லாம் மூட்டை கட்டப்பட்டன. மாறாக ஆணாதிக்க சிந்தனை இல்லாததாலோ....அல்லது ஆண்கள் எல்லாம் புரட்சியாளர்கள் ஆகிவிட்டதாலோ அல்ல...பெண்கள் முன்னேறியதால் தான் இந்த கொடுமைகள் அழிக்கப்பட்டு விட்டன.

Wednesday, 20 January 2010

பெண் பார்க்கும் படலம் என்னும் ஆணாதிக்க வக்கிரம்.

ஒரு கடிதம்


தோழி வின்சி அவர்களுக்கு வணக்கம். நான் தொடர்ந்து உங்கள் வலைத்தளத்தை வாசித்து வருகிறேன். உங்களின் எண்ணங்கள் அனைத்துடனும் நான் ஒத்து போகிறேன். உங்கள் கருத்துக்கள் சில இடங்களில் வீரியமாக சொல்லப்பட்டாலும் அத்தனையும் முகத்தில் அறையும் உண்மைகள்.
பெண்கள் தொடர்ந்து பல வழிகளில் கலாசாரம் மதம் என்ற போர்வையில் பல வன்மையான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதில் வக்கிரம் என்னவென்றால் சிறு வயதிலிருந்தே அந்த கொடுமைகளை எல்லாம் ஏதோ தனக்கு வந்து சேரும் பெருமைகளை போல் ஒரு பெண் பாவித்துக்கொள்ள பழக்கப்படுத்தப்படுகிறாள். உதாரணமாக பெண் பார்க்கும் படலம். ஒரு பெண்ணை விற்பனை பொருளாக பாவிக்கும் ஒரு சடங்கு தான் பெண் பார்க்கும் படலம் என்பது என் கருத்து. மேலும் இதை பெண் ஆனவள் தன் வாழ்வில் ஒரு சாதாரண நிகழ்வாக அதை கருத நிர்ப்பந்திக்கப்படுகிறாள். இது எத்தனை வக்கிர குணம் கொண்ட ஒருவனால் வடிவமைக்க பட்டிருக்கும் சடங்கு என்று நினைக்கிற போது மனம் வேதனை அடைகிறது. இதை பற்றி உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். மேலும் எனக்கு பெண் பார்க்கும் படலம் என்ற கீழ்த்தரமான நிகழ்வு நடந்தேறவில்லை. நான் உண்மையில் மாப்பிள்ளை பார்க்க போனேன். சொன்னால் நம்பமாட்டீர்கள். அதை இன்னொரு கடிதத்தில் எழுதுகிறேன். இப்போதைக்கு விடை பெறும்

தோழி
சித்ரா.
-------

பெண் பார்க்கும் சடங்கு என்று ஒரு சாபக்கேடு நம் சமுதாயத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு பெண் அழகாக புடவை கட்டிக்கொண்டு அலங்காரம் செய்துகொண்டு பூ வைத்துக்கொண்டு தயாராய் இருக்க வேண்டும். பிறகு மாப்பிள்ளை வீட்டார் வருவார்கள். பெண் அவர்கள் முன்னால் நடந்து வந்து அமரவேண்டும். பெண் ஊனமாக இருக்கிறாளா என்பதன் சோதனை முயற்சி. பிறகு தலை குனிந்து வெட்கப்பட்டபடி அவள் அவர்கள் முன் காட்சியளிக்க வேண்டும். பிறகு அவர்களுக்கு காபி கொண்டு வந்து ஒவ்வொருவருக்காய் கொடுக்க வேண்டும்(கிட்ட தட்ட வேலைக்காரி போல்). அவர்கள் அந்த காபி பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் தின்பார்கள். அடுத்து சில குடும்பங்களில் பெண் மண்டி போட்டு பெரியவர்களை வண்ணங்க வேண்டும் என்ற சம்பிரதாயமும் உண்டு. முன்பெல்லாம் பெண்ணை பாட சொல்வார்களாம். அதாவது பெண் ஊமையா என்ற பரிசோதனை. இது எல்லாம் நடந்தேறிய பின் மாப்பிள்ளை வீட்டார் கிளம்பிவிடுவார்கள். போய் கடிதமோ தொலை பேசியிலோ வியாபாரம் பேசுவார்கள். பிறகு திருமணம். இது போன்ற ஒரு நிகழ்வை வேசிகளின் கூடாரத்தில் தான் நாம் பார்க்க முடியும்.

விபசாரம் என்ற சாபக்கேடு உள்ள இடங்களில் வேசிகளின் கூடாரத்தில் தான் பெண் அலங்கரிக்கப்பட்டு ஆண்கள் முன்னால் நிறுத்தப்படுவாள். ஆண்கள் தங்களுக்கு பிடித்த பெண்ணை தேர்ந்தெடுப்பார்கள். பெண்கள் அலங்காரம் செய்யப்பட்ட பொம்மைகள் போல் விற்பனைக்கு தயாராய் நிற்பார்கள். அதன் மறு பிரதியே பெண் பார்க்கும் படலம். பெண் என்ன விற்பனை பொருளா. துடைத்து மெருகேற்றி பலருக்கு கண்காட்சிக்கு வைத்து அதில் ஒருவர் அவளை வாங்கிக்கொண்டு போக.

நற்குடி பெண்கள் பர்தா அணிவார்கள் என்ற கீழ்குடி சிந்தனை நிறைந்திருக்கும் நம்மிடம் பெண்களை முன்னுக்கு கொண்டு வருவது பெரிய சவாலாகவே உள்ளது. நாம் பலமுறை இந்த தளத்தில் குறிப்பிடுவது போல் நற்குடி பெண்கள் வீட்டு வேலை செய்வதை முற்றிலும் துறக்க வேண்டும். நமக்கு வீட்டுவேலை செய்வதை விட நிறைய வேலைகள் இருக்கிறது என்று உணரவேண்டும். நற்குடி பெண்கள் வீட்டு வேலைகளை ஆண்களிடம் ஒப்படைத்துவிட்டு கல்வி வேலை வாய்ப்பு என தன் உடல் அழகை பேணி முன்னேற வேண்டுமே தவிர வீட்டு வேலைகள் செய்வதல்ல அவளது கர்ம விதி.

இப்போது ஆண்கள் எல்லாம் நல்லவர்கள் போல் வீட்டு வேலைகளை 50-50 என பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று பெருந்தன்மையோடு ஒத்துக்கொள்கிறார்கள். உண்மையில் அது பெருந்தன்மை அல்ல. காலத்தின் கட்டாயம். பல நூற்றாண்டுகளாய் பெண்கள் அடுப்பூத மட்டுமே பயன்படுத்தப்பட்டார்கள். ஏன் ஆண்கள் அடுப்பூதக்கூடாது என்பது தான் என் கேள்வி. 50-50 என்பதெல்லாம் ஆண்கள் பெண்களின் வளர்ச்சியும் முன்னேற்றத்தையும் கண்டு இதற்கு மேலும் அவர்களால் தங்கள் போலி ஆணாதிக்கத்தை நிலை நிறுத்த முடியாது என்பதால் தங்களின் பாதுகாப்புக்காக கொண்டு வந்த திட்டம் தான் 50-50. இதில் ஏமாந்து போக வேண்டாம். ஆணும் பெண்ணும் சமம் என்பதெல்லாம் நாம் ஆண்களை விட முன்னேறி விடக்கூடாதென்பதற்காய் போடப்படும் கட்டு வேலை என்பதை நாம் மறந்துவிட கூடாது. நான் எப்போதும் சொல்வது போல் ஆணும் பெண்ணும் சமம் என்பது கேலி கூத்து. பெண் ஆணை விட உயர்வானவள்.

பெண்கள் வீட்டு வேலை செய்வதிலிருந்து எப்படி விலகி இருக்க வேண்டுமோ அதே போல் பெண் என்பவள் பெண் பார்க்கும் சடங்கு என்ன்னும் வேசித்தனமான வியாபார விளையாட்டையும் வலிமையாக எதிர்க்க வேண்டும். பெண்களே நினைத்து பாருங்கள் நாம் என்ன விற்பனை பொருளா. அல்லது ஒருவனுக்கு மட்டுமே விற்கப்படும் வேசியா. எதற்காக நாம் அலங்காரம் பண்ணிக்கொண்டு ஆண்கள் முன்னால் போய் நிற்க வேண்டும். கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இன்று ஆண்களை புறந்தள்ளும் அளவுக்கு சக்தி படைத்த நாம் ஏன் நம்மை ஒரு விற்பனை பொருள் போல் அலங்கரித்துக்கொண்டு ஈ என பல் இளித்தபடி ஆண்கள் முன்னால் போய் நிற்க வேண்டும்.



என்ன மாப்பிள்ளை சார் ரொம்ப நெர்வஸா இருக்கீங்க. எனக்கு உங்கள பிடிக்குமோ இல்லையோன்னு பயப்படுறீங்களா? ரிலாக்ஸ். வீட்டுக்கு போய் லெட்டர் போடுறோம்.





பெண் பார்க்கும் படலம் என்பது ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு கீழ்த்தரமான நிகழ்வு. நம் உடல் பரிசுத்தமானது. அதை நம் அனுமதியின்றி யாரும் தொடவோ தீண்டவோ அனுமதிக்க கூடாது. என்வே பெண்கள் எல்லாம் ஒருமித்த வலிமையோடு பெண் பார்க்கும் படலம் என்ற ஆணாதிக்க சடங்கை முற்றிலும் எதிர்க்க வேண்டும். துறக்க வேண்டும். ஏன் என்று கேள்வி எழுப்ப வேண்டும்.

நாம் உயர்வானவர்கள். ஆண்களை விட. இந்த பூமியில் எல்லா உயிருனங்களை விடவும் நாம் மேன்மை பெற்றவர்கள். நம் உடல் அழகை மெருகேற்றி அதை வரும் மாப்பிள்ளை வீட்டாருக்கு காட்டி நம்மை ஏற்றுக்கொள்ளும் படி கெஞ்சும் வலுவிழந்த நிலையில் நாம் இல்லை என்பதை உணரவேண்டும். ஏன் பெண் பார்க்கும் சடங்கு என்பது மாப்பிள்ளை பார்க்கும் சடங்காக இருக்க கூடாது என்று கேளுங்கள்.
என்னுடைய நெருங்கி தோழி ஒருவருக்கு பெண் பார்க்கும் சடங்கு நடந்தது. எப்படி என்றால் கோயிலில் வந்து பெண்ணை பார்ப்பார்களாம். பார்த்துவிட்டு பிடித்திருந்தால் வீட்டில் வந்து பேசுவார்களாம். நானும் அழைக்கப்பட்டிருந்தேன். அந்த பெண் அழகாய் அலங்காரம் பண்ணியிருந்தாள். அவளின் பெற்றோரும் இன்னும் சில உறவினர்களும் அவளோடு வந்திருந்தார்கள். மாப்பிள்ளை ஒரு காரில் வந்தான். அவ்னோடு வனுடைய அப்பாவும் ஒரு நண்பனும் வந்தார்கள். இரண்டே நிமிடம் நின்றுவிட்டு போய்விடார்கள். அவனுக்கு பெண்ணை பிடிக்கவில்லையாம். அந்த இரண்டு நிமிட காட்சிக்கு இவள் ஒரு நாள் முழுக்க சிரமம் எடுத்து தன்னை அலங்காரப்படுத்தியிருந்தாள். அவன் கார் எடுத்துக்கொண்டு பறந்துவிட்டான். பதில் இல்லை. அந்த பெண்ணின் மனம் எவ்வளவு வேதனை பட்டிருக்கும். இத்தனைக்கும் அந்த பெண் மாப்பிள்ளையை விட அதிகம் படித்தவள். அதிகம் சம்பாதிப்பவள். அவனை விட அழகு. அதை பார்க்கவே எனக்கு பரிதாபமாய் இருந்தது. இது தான் இன்று பெண்களின் நிலை. அந்த பெண்ணும் அதை இயல்பாக எடுத்துக்கொள்ள தயார்படுத்தப்படுகிறாள். ஏன் இந்த அவல நிலை. நாம் என்ன அவ்வளவு கீழ்த்டரமாய் போய்விட்டோமா சிந்தியுங்கள் பெண்களே.


சித்ராவின் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தின் விபரமான மடலை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

உங்கள் தோழி
வின்சி.

vincyontop@gmail.com

Tuesday, 15 December 2009

வரதட்சணை - பெண்கள் மாட்டை விட கீழானவர்களா?

இந்தியா உலக நாடுகள் வரிசையில் பின் தங்கியிருக்க முக்கிய காரணம் ஆணாதிக்க கலாசாரமும் முட்டாள்தனமான மத கோட்பாடுகளும் தான். மேலும் எழுதுவதற்கு முன் நான் இரண்டு விஷயங்களை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

1. தண்டோரா என்ற பதிவர் வலைச்சரத்தில் என்னுடைய வலை பக்கத்தை அறிமுகப்படுத்தினார். என்னை ஆப்பரசி என்று வர்ணித்தார். ஆணாதிக்கத்துக்கு ஆப்படிக்கும் ஆப்பரசி. மிக்க மகிழ்ச்சி. பெரும்பாலானவர்கள் என் வலை தளத்துக்கு வரவே அச்சப்படுகிறார்கள். ஆணாதிக்க சிந்தனையுடைய யாரும் என் வலை பக்கத்துக்கு வர அச்சப்படுவார்கள். என் எழுத்துக்களை சரியாக புரிந்துகொள்ள சில பேர் இன்னும் இருக்கிறார்கள் என்று அறிகிற போது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. மீண்டும் நன்றி தண்டோரா.

அடுத்ததாக வருகிறார் ரோஷ்மா. அதாவது பெண் பெயரில் என்னை திட்டி எழுதினால் நான் உடனே ஐயஹோ பெண்களுக்கு என் இனத்துக்கே நான் எழுதுவது பிடிக்கவில்லை என்று மூடிக்கொண்டு போய்விடுவேனா. பெண் வேடமிட்ட ரோஷ்மா ஒரு கருத்தை முன் வைக்கிறார். சரளமான ஆங்கிலத்தில் என் பதிவுகளை திட்டுகிறார். சரி போகட்டும் . பிறகு அவர் சொல்லும் ஒரு விஷயத்தை தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் புரட்சிகரமான கருத்துக்களை எழுத்வேண்டுமென்றால் தமிழச்சி எழுதுவதை போல் எழுதவேண்டுமாம். அவரது வலை தளத்தின் சுட்டியையும் இணைத்துள்ளார். என்னுடைய எழுத்துக்கள் பலரை நோயாளிகள் ஆக்குமாம். ஐயா தமிழச்சியை போல் எழுத நான் பல அடுக்கு புத்தகங்கள் படித்த அறிவாளியோ பெரியாரை கரைத்து குடித்த பெரியார்தாசியோ அல்ல. பிறகு நேர்த்தியான தமிழில் கிரேக்க வரலாற்றில் ஆணாதிக்கம் போர்ச்சுகீசிய ஆண்கள் பெண் உடை உடுத்தினார்கள் என்றெல்லாம் வரலாற்றை மேற்கோள் காட்டி எழுத நான் அதிகம் படிக்கவில்லை ஐயா. என்னுடைய குரல் ஒரு பாரம தமிழச்சியின் குரல். அது தெரு சண்டை போல் கொச்சையா இருக்கலாம். இருக்கும். அப்படித்தான் நான் கத்த விரும்புகிறேன். அன்றாடம் நான் காணும் ஆணாதிக்க போக்கை எனக்கு தெரிந்த மொழியில் கை வந்த வார்த்தைகளை பயன்படுத்தி கொஞ்சம் வன்மையாக எழுதுகிறேன். அவ்வளவு தான். எனக்கு கவிதை எழுதவோ புறநாநூறு படிக்கவோ நேரமில்லை. விபசார விடுதிகளில் அல்லல்படும் ஒரு பெண் டயரி குறிப்பு எழுதினால் ஓத்தா தெவிடியா பையா என்ற இரண்டு வார்த்தைகள் கூட ஒரு கவிதை தான். அதை புரிந்துகொள்ளுங்கள். ஒடுக்கப்பட்டவர்களும் ஏழைகளும் பாமரர்களும் அழகாக தமிழ் கற்றுக்கொண்டு இமேஜ் பாதிக்காமல் எழுதவேண்டுமென்றால் அதற்கு நான் ஆளல்ல. உங்களுக்கு என் வலை மனை பிடிக்கவில்லை என்றால் வரவேண்டாம். யாரையும் வற்புறுத்தி நான் அழைக்கவில்லை. அழைக்க நான் என்ன வேசியா.

நான் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன். பெண்கள் பெரும்பாலானவர்கள் சமையல் குறிப்புகளும் வீட்டை சுத்தமாக வைக்கும் டிப்ஸும் பிறகு ஹார்ப்பிக் வைத்து டாயிலட் கழுவுவதை பற்றி செய்முறை விளக்கங்களும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட பாலோவர்ஸ். அதற்கு பின்னூட்டம் போடும் கூட்டம் ஆண்கள் கூட்டம். ஆக சமையல் குறிப்பும் டாயிலட் கழுவுவதை பற்றி பெண்கள் எழுதினால் அதற்குத்தான் பெண்கள் இருக்கிறார்கள் என்ற ஆணாதிக்க நம்பிக்கை வலுப்பெறுவதனால் ஆண்கள் செய்யும் நன்றிக்கடன் தான் பின்னூட்டமோ என்று தோன்றுகிறது. ஆக சமையல் குறிப்பு எழுதினால் நிறைய பாலோவர்ஸ் கிடைக்கும் போலிருக்கிறது. நானும் எழுதுகிறேன். நிறைய ஆண்களுக்கு பெண்கள் அடுக்களை சம்மந்தமாக எழுதினால் ஒரு திருப்தி.















உடனே பெண் சிகிரெட் புகைக்கும் புகைப்படத்தை ஏன் போடுகிறீர்கள் என்று கேட்பார்கள். உங்களுக்கெல்லாம் குளித்து தலையில் டவல் கட்டிக்கொண்டு புடவை சுற்றியபடி சாமி கும்பிடும் பெண் படம் போட்டால் சூப்பரா இருக்கும் இல்ல....




என் வலைத்தளம் பலருக்கு எரிச்சலூட்டுகிறது. இங்கே வர பல ஆண்கள் அச்சப்படுகிறார்கள். நான் தொடர்ந்து அவர்களின் முகமூடிகளை கிழிப்பதால் அவர்களுக்கு பயம். திருடனை பற்றி செய்தி வந்தால் திருடனோ அல்லது அவனுக்கு ஆதரவு தெரிவிப்பவனோ தானே எரிச்சல் அடைய வேண்டும். ஏன் நீங்கள் பதட்டப்படுகிறீர்கள். காரணம் மறைமுகமாக ஆணாதிக்கம் என்ற மாய வன்மத்தால் விளையும் சுகங்களை உங்களுக்கு தங்கு தடையின்றி அளிக்க பெண்கள் எப்போதும் ஏமாளிகளாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் போனால் உங்களுக்கு பொசுக்கென்று கோபம் வந்துவிடுகிறது.

வரதட்சணை புழங்கும் ஒவ்வொரு திருமணமும் மாட்டு வியாபாரமே அல்லது அதை விட கீழ்த்தரமானது. நீங்கள் சந்தையில் ஒரு மாடு வாங்க போகிறீர்கள். எத்தனை லிட்டர் பால் கறக்கும்....அவனுடைய வருமானம் என்ன?.....வயது என்ன வசதிகள் என்னென்ன என்றெல்லாம் பார்த்துவிட்டு மாட்டை வாங்குகிறோம். வாங்கிவிட்டு மாட்டை ஒரு கயிறு கட்டி இழுத்துக்கொண்டு வந்து நம் வீட்டில் கட்டுவோம். ஆனால் திருமணம் என்னும் மாட்டு வியாபாரத்தில் தான் பெண் காசு கொடுத்து ஒரு மாப்பிள்ளையை வாங்கிவிட்டு அந்த மாப்பிள்ளையோடு தங்க போகிறாள். அதாவது மாட்டை வாங்கி சந்தையிலேயே மாட்டோடு படுத்துக்கொள்ள வேண்டும். நாம் வாங்கிய மாடு நம்மோடு வந்து இருக்காது. மாறாக நாம் காசு கொடுத்து மாட்டை வாங்கிவிட்டு அதன் இடத்திற்கு அதன் இஷ்டத்திற்கு நாம் இருக்க வேண்டும். அட கொடுமையே....என்னை பொருத்தவரை வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் ஒவ்வொரு ஆணும் வீட்டோடு மாப்பிள்ளை ஆகிவிடுவது தான் சரி. காரணம் உங்களை காசு கொடுத்து வாங்கியிருக்கும் பெண்ணுக்கு தான் நீங்கள் சொந்தம். அவள் வசிக்கும் இடத்துக்கு நீங்கள் போய் வசிக்கவேண்டுமே தவிர அவளை உங்கள் வசிப்பிடத்துக்கு கொண்டு வருவது சரியா? அப்படி ஒரு நடைமுறை நம் நாட்டில் இருக்கிறதென்றால் பெண்கள் மாட்டை விட கேவலமானவர்கள் என்று தானே அர்த்தம். அப்படி ஒரு அர்த்தம் கற்பித்து ஆணாதிக்க சிந்தனையோடு வாழும் இந்த சமுதாயத்தில் பெண்ணே உனக்கு திருமணம் தேவையா?

தமிழச்சியை போல் என்னால் எழுத முடியாது. என் கோபத்தை பச்சை பச்சையாய் தான் காட்டுவேன்.

சரி நம் விஷயத்துக்கு வருவோம். இந்தியா ஒரு வளமான நாடு. இங்கே நம் முன்னோர்கள் அதாவது ராஜாக்கள் காலத்திலிருந்தே நாம் இரண்டு விஷயங்களுக்கு பேமஸ் ஒன்று குக்கிங் இன்னொன்று பக்கிங். அந்தப்புறம் அமைத்து நம் ராஜாக்கள் கலவி செய்துகொண்டிருந்த போது தான் மேலை நாடுகளிலில் மின்சாரமும் கம்ப்யூட்டரும் செய்துகொண்டிருந்தார்கள். நாம் இங்கே மதம் என்ற பெயரில் இந்திரனையும் சந்திரனையும் வணங்கிக்கொண்டிருந்த போது தான் மேலை நாட்டுக்காரன் நிலாவுக்கு ராக்கெட் செய்துகொண்டிருந்தான். அதாவது இந்தியா உருப்படாமல் போனதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு ஒன்று ஆணாதிக்க கலாசாரம் மற்றொன்று மூட நம்பிக்கைகளால் பொதிந்த மதம்.

உதாரணமாக பெண் கல்வியை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த காலத்தில் அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு என்றார்கள். இப்போது நாம் அடுப்பு ஊதாமலே எரிகிறதே என்ற கடுப்பு ஆண்களுக்கு இருக்கிறதோ என்னமோ. பெண் கல்வி எத்தனை ஆண்டுகளாய் இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் மறுக்கப்பட்டு வந்திருக்கிறது. அந்த காலம் தொட்டு பெண் கல்வியை ஊக்குவித்திருந்தால் நம் நாட்டின் கல்வி அறிவு எவ்வளவு உயர்ந்திருக்கும். ஐம்பது சதவீதம் பெண்கள் என்று தோராயமாக வைத்துக்கொள்வோம். அப்படியானால் ஐம்பது சதவீத ஜனத்தொகை கல்வி அறிவு பெறாமல் அவர்களால் இந்த நாட்டுக்கு எதையும் அளிக்க முடியாமல் போனதே. அதன் பொருட்டு பொருளாதார வளர்ச்சியும் அறிவியல் வளர்ச்சியும் குறைபட்டிருக்கிறது. அதை பற்றி எல்லாம் நமக்கு என்ன கவலை நமக்கு சூடான ஆணாதிக்க எண்ணங்கள் செழித்தால் போதுமே. விதவைகள் வாழாவெட்டி இப்படி எல்லாம் பெண்களை நீங்கள் அடக்கி வைத்த காலத்தில் இந்தியாவின் ஜனத்தொகையில் சரி பாதி 50% இந்திய வளங்கள் முடக்கப்பட்டிருந்தன. பல நூற்றாண்டுகளாய் வெறும் 50% மைலேஜில் தான் இந்தியா முன்னேறிக்கொண்டிருந்திருக்கிறது. இப்படி 50% மைலேஜில் முன்னேறினால் எப்போது நாம் வல்லரசாவது?

இதை பற்றி மேலும் அடுத்த பதிவில் பார்ப்போம்

Wednesday, 9 December 2009

ஷகீலாவுக்கு வேலை வாங்கி கொடுங்கள்.

ஒரு காலத்தில் மலயாள திரை உலகில் கொடி கட்டி பறந்த ஒரு நடிகை. தமிழிலும், வட நாட்டினர் கூட தெரிந்து வைத்திருக்கும் ஒரு செக்ஸ் சிம்பள் ஷகீலா. நான் நிறைய முறை இதை கவனிப்பதுண்டு. ஷகீலாவின் செக்ஸ் போஸ்டர்களை மாதர் சங்கங்கள் கிழிப்பதும் அதன் மேல் சாணி அடிப்பதும் செருப்பால் அடிப்பதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதும் பிட் நோட்டீஸ் கொடுப்பதுமாக ஷகீலா உட்பட பலர் நடித்து வெளிவரும் செக்ஸ் படங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்.

இப்படி செய்யும் இவர்களின் நோக்கம் என்ன. சிலர் அந்த திரைப்படம் ஓடும் தியேட்டர் வாசலில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்துவதும் அங்கு வரும் ஆண்களை விரட்டுவதுமாக ஆண்களை கேட்டால் ஒரு பெரிய கலை எதிர்ப்பு கலாட்சாபமே அவர்கள் நடத்துவதாக சொல்லக்கூடும். எனக்கு ஒரே ஒரு கேள்வி தான் அப்போதெல்லாம் தோன்றும். இப்படி போராடும் இந்த மாதர் சங்க தொழிகளும் பெண்கள் தான் அந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகையும் ஒரு பெண் தான். ஒரு பெண் தன் இனத்தின் கௌரவத்தின் மீது அக்கரை கொள்ளாமல் தன் இனத்தை மேலும் மேலும் இழிவுபடுத்தும் ஒரு செயலை தொடர்ந்து செய்து வருகிறாள். ஆனால் மாதர் சங்கங்கள் ஷகீலாவுக்கு எதிராக போர் கொடி உயர்த்துவார்களா என்றால் இல்லை. காரணம் அவள் ஒரு பெண். இப்படி பெண்ணுக்கு பரிதாபம் பார்ப்பதை முதலில் நிறுத்த வேண்டும். நீங்கள் பரிதாபமாக ஒரு பெண்ணை பார்ப்பதன் மூலம் பெண் இனத்தை அவமதிக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒரு விதத்தில் பரிதாபப்படுவது கூட பேசிஸம். (புரியாதவர்களுக்காக ஹிட்லரின் பேசிஸம்.)

உண்மையில் இப்படிப்பட்ட திரைப்படங்கள் வெளிவருவதற்கு முதல் குற்றம் சாட்டப்பட வேண்டியவர் ஷகீலா. அவரை தான் நாம் முதலில் திருத்த வேண்டும். காரணம் யாரும் அவரை துப்பாக்கி முனையில் மிரட்டி அது போன்ற படங்களில் நடிக்க வைப்பதில்லை. அந்த அம்மையாரே இஷ்டப்பட்டு தான் அது போன்ற திரைப்படங்களில் தோன்றி தன் பெருத்த உடலை காட்டி பணம் சம்பாதிக்கிறாள். என்னை கேட்டால் அந்த மாதர் சங்கங்கள் உடனடியாக ஷகீலாவுக்கு ஒரு நல்ல சம்பளத்தில் ஒரு வேலை வாங்கி கொடுத்து அவரது வருமானத்துக்கு வழி பண்ணலாம். அதை விட்டுவிட்டு போஸ்டரில் சாணி அடிப்பதும் படம் பார்க்க வரும் ஆண்களை விரட்டுவதும் அரசியல் போராட்ட ஸ்டண்டே தவிர வேறொன்றுக்கும் உதவாது.
















எனக்கு ரொம்ப நாளாக சந்தேகம் ஷகீலா அளவுக்கு குண்டாக ஒரு ஆன்டி போனால் எந்த ஆணும் சீண்ட கூட மாட்டான். ஆனால் தியேட்டர் இருட்டில் அப்படி அந்த பெண்மணியிடம் என்ன தான் ரசிக்கிறார்களோ தெரியவில்லை.

----------------

கெட்ட வார்த்தைகள் அதிகம் பேசுபவர்கள் ஆண்கள் தான். பெண்கள் அவ்வளவு சகஜமாக கெட்ட வார்த்தைகள் உபயோகிப்பதை நீங்கள் பார்க்க முடியாது. ஆனால் ஆண்களுக்கு கோபம் வந்தால் மளமளவென கெட்ட கெட்ட வார்த்தைகளாக துப்பி தள்ளுவார்கள். உண்மையில் அப்படி கெட்ட வார்த்தை பேசும் ஆண்கள் கோழைகள் என்பதே உண்மை. அவர்களை கண்டு நீங்கள் அச்சப்பட தேவையில்லை. சைக்காலஜி படி கெட்ட வார்த்தை பேசுவதென்பது உங்கள் இயலாமையை வெளிப்படுத்தும் ஒரு மீடியா அவ்வளவுதான்.

பேருந்து ஓட்டுனர்கள் அதிகமாக கெட்ட வார்த்தை உபயோகிப்பதை நாம் பார்க்கிறோம். யாராவது குறுக்கே வந்துவிட்டால் உடனே ஓரிரு கெட்ட வார்த்தைகளை அள்ளி வீசினால் தான் அவருக்கு ஆண்மை அடங்கும். எதிராளியை உண்மையில் நேருக்கு நேராக சந்தித்து வீழ்த்த அல்லது நமது கோபத்தை தணித்துக்கொள்ள முடியாத சூழ்நிலையில் நமக்கு நாமே ஆறுதல் தேடும் விதமாகத்தான் கெட்ட வார்த்தைகளை நாம் பயன்படுத்துகிறோம். சில ஆண்கள் அதுவும் காலேஜ் பையன்கள் கெட்ட வார்த்தை பேசுவதை தாங்கள் வயதுக்கு வந்துவிட்டதை அறிவுறுத்தும் ஒரு மேற்கோளாக வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு இன்டர்நெட் சென்டரில் நின்றிருந்தேன். மூன்று கல்லூரி பையன்கள் வந்தார்கள். இன்டர்நெட் சென்டரில் ஒரு பெண் இருந்தாள். அது என்னவோ அந்த பெண்ணை பார்த்த பிறகு ஒருவன் இன்னும் பலமாக கெட்ட கெட்ட வார்த்தைகளால் தன் நண்பனை அர்ச்சிக்கிறான். அவர்களுக்கு கெட்ட வார்த்தை பேசுவது தன்னை ஆண் என்று தலை தூக்கி காட்ட உதவுகிறதென்றே நினைக்கிறேன். உண்மையில் கெட்ட வார்த்தை பேசும் ஒவ்வொருவரும் கோழைகள். தங்கள் இயலாமையை இப்படி வெளிப்படுத்துகிறார்கள்.

ஆண்மை இல்லாத ஒருவனை கட்டிலில் மனைவி ஆசையாய் நெருங்கினால் உடனே அவன் "தே...உனக்கு எப்ப பாத்தாலும் இதே நெனப்பு தானா? அச்சா புச்சா...." என்று கெட்ட கெட்ட வார்த்தையால் அர்ச்சிப்பான். உடனே மனைவி ஐயயோ நான் எவ்வளவு பாவம் செய்துவிட்டேன். அவர் கோபமாக இருக்கிறார். என்றெல்லாம் மனம் வருந்தி தலையணைக்குள் அழுது உறங்கிவிடுவாள். உண்மையில் ஆண்கள் கெட்ட வார்த்தை உபயோகிப்பது பல நேரங்களில் தங்கள் இயலாமையை மறைப்பதற்கே.


vincyontop@gmail.com

Sunday, 6 December 2009

செக்ஸ் சாமியார் செய்த நன்மைகள்.

சமீபத்தில் ஒரு சாமியார் கோயில் கருவறைக்குள் பெண்களை அழைத்து வந்து சல்லாபித்திருந்தார் என்ற செய்தி வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் அந்த வீடியோ காட்சி ஒன்றை தோழி மெயிலுக்கு அனுப்பியிருந்தாள். அதை பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியோ வேதனையோ ஏற்படவில்லை. ஏனெனில் நான் சாமியார்களையோ பாதிரியார்களையோ கடவுளின் மினி தூதர்கள் என்று பாவிக்கும் மனப்பான்மை உடையவள் அல்ல. பல்வேறு பெண்கள் சாமியார்களை பாதிரியார்களை கடவுளின் மினி அவதாரங்களாக பாவிப்பதும் அவர்களின் காலில் விழுவதும் அவர்களிடம் மண்டியிடுவதும் சாமியார்களின் சொல்லே மந்திரம் என்று திரிகிறார்கள். நான் அப்படி அல்ல. நான் சாமியார்களும் ரெத்தமும் சதையுமால் ஆன மனிதர்கள் என்பதை உணர்ந்தவள். அதனால் எனக்கு அதை பார்த்தவுடன் அதிர்ச்சியோ ஆச்சரியமோ ஏற்படவில்லை.

சாதாரண மனிதர்களான இவர்கள் மத தொண்டாற்றுகிறார்கள். நாம் எப்படி அன்றாடம் வேலைக்கு போய் சம்பாதிக்கிறோமோ அது போல் இவர்கள் மத தொண்டின் மூலம் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் போதைனை செய்கிறார்கள் மந்திரம் சொல்கிறார்கள். அதனால் அவர்கள் எல்லாம் உத்தமர்கள் செக்ஸ் ஆசையை துறந்தவர்கள் என்றெல்லாம் கற்பனித்துக்கொண்டு நம் பெண்கள் சாமிகளுக்கு சிகப்பு புடவை கட்டிக்கொண்டு பூஜை செய்வதும் அம்மா...ஆத்தா...சாமி என்று காலில் விழுவதுமாக கிட்ட தட்ட மத குருக்களை கடவுளாகவே ஆக்கிவிட்டிருக்கிறார்கள். நான் அப்படி பட்ட மூட நம்பிக்கைகளுக்கு அடிமையானவள் அல்ல.

அந்த சாமியாருக்கு செக்ஸ் ஆசை வந்ததில் தவறில்லை. அவரும் மனிதர் தானே. அடுத்து அவர் வேசிகளை அழைத்து அவர்களுக்கு பணம் கொடுத்து அவர்களோடு சல்லாபிக்கிறார். அதிலும் தவறில்லை என்றே சொல்லியாக வேண்டியிருக்கிறது. காரணம் பெண்களில் இன்னும் பல பேர் பணத்திற்காக தங்கள் உடலை விற்கும் கேவலத்தை செய்யும் பொருளாதார பலவீனர்களாகவே இருக்கிறார்கள். ஒரு வகையில் அப்படி செய்யவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் பெண்களுக்கு சாமியார் உதவினார் என்று கூட கொள்ளலாம்.

ஆனால் அவர் செய்தவற்றில் தவறு என்று நான் கணிப்பது பல பேர் நம்பும் கடவுளின் கருவறையில் அந்த காரியங்களை அரங்கேற்றியது பிறகு அதை வீடியோ எடுக்கும் வக்கிரமும் தான்.

மற்றபடி பலர் ஆச்சரியப்படுவது போலவும் குய்யோ முய்யோ என்று கத்துவதும் போலவும் அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பது என் கருத்து. நீங்கள் சேற்றை வாரி அக்குளில் பூசிக்கொள்கிறீர்கள். பிறகு அது நாறுகிறது என்று சொல்வதில் பிழை உங்கள் பக்கம் தான் இருக்கிறது. சாமியார்களை நீங்கள் மினி டெமி காட் என்ற வகையில் வைத்து பார்த்தது உங்கள் தவறே அன்றி சாமியாருடையது அல்ல. சாமியார் ஒரு சாமானிய வாழ்க்கை வாழ பிரியப்பட்டார். அதையே அவர் செய்தார். ஆனால் அவரை கடவுளாக பாவித்து வணங்கி வந்த நாம் தான் கேனைகள் என்பதை இப்போதாவது புரிந்துகொள்ளுங்கள்.

அவ்வப்போது சாமியார்களின் சிற்று லீலைகள் வெளிவருவது உண்மையில் ஒரு விளிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
ஆனால் பிரேமானந்த தொடங்கி எத்தனை சாமியார்கள் உள்ளே போனாலும் மன பிராந்து பிடித்த நம் மக்கள் இன்னும் சாமியார்களை வெறும் மத போதைகம் செய்து வயிற்றை கழுவும் நம்மை போன்றதொரு தொழிளாலி என்று பார்க்காமல் கடவுளாகவும் வேத வாக்கு சொல்பவராகவும் அற்புதம் செய்பவராகவும் நம் கஷ்டங்களை எல்லாம் போக்க வல்லவராகவும் கிட்ட தட்ட கடவுளின் அவதாரமாகவும் பார்க்கிறார்கள். அதை நிறுத்திக்கொண்டால் நல்லது.

இல்லையேல் உங்கள் சேறு பூசிய அக்குள் நாறத்தான் செய்யும் அதற்கு சேறு ஒன்றும் செய்ய முடியாது.

ac

Sunday, 15 November 2009

ஆண்கள் புடவை கட்டுவது பாவமா? - 2

தூள் படம் என்று நினைவு. அதில் ஒரு வசனம் வரும். அவ புடவைய வாங்கி கட்டிக்கோ. அந்த திரைப்படம் என்றில்லை. தமிழ் திரைப்படங்களில் காலம் காலமாய் ஒருவனை அவமானப்படுத்த அல்லது அவன் கோழை என்பதை கேலி பேச அல்லது புரட்சி செய்ய அஞ்சும் ஊர் மக்களை உசுப்பேத்த என்ற பல தருணங்களில் புடவை கட்டிக்கொள் என்ற வசனம் வரும். நிஜ வாழ்க்கையில் கூட நாம் கோழைகளை வன்முறையை விரும்பாதவர்களை கூட சில நேரங்களில் "பாவாடை கட்டிக்கோ...புடவை கட்டிக்கோ..." என்றெல்லாம் கேலி பேசுவதை கேட்டிருக்கிறோம்.

இதை எல்லாம் வைத்து பார்க்கிற போது புடவை என்பது சமுதாயத்தில் கேலி சின்னமாகவும் கோழைகள் அணிய வேண்டியதாகவும் ஒரு ஆணை அவமானப்படுத்த சிறந்து யுத்தியாகவும் கையாளப்பட்டிருக்கிறது. எனக்கு இவைகளை கேட்கிற போதும் பார்க்கிற போதும் கோபமும் கொஞ்சம் சிரிப்பும் வரும். யோசித்து பாருங்கள் நம் நாட்டின் மிக உயரிய பதவியில் இருக்கும் மாண்புமிகு குடியரசு தலைவர் அணிந்திருப்பதும் சேலை தான். அப்படி ஒரு மாபெரும் பொறுப்பிலிருக்கும் பெண் அணிந்திருக்கும் ஒரு ஆடையை ஒரு ஆண் அணிவது அவனை எள்ளலுக்கும் கேவலத்திற்கும் ஆளாக்கும் என்கிற கருத்து தான் என்னை கோப்பப்பட வைக்கிறது.

திருநங்கைகள் படும் பாட்டை நான் பார்த்திருக்கிறேன். ஒரு ஆண் ஒரு பெண்ணின் உடையை அணிந்து பார்க்க பிரியப்படுகிறான் என்பதாலேயே அவன் எத்தகைய ஒரு நெருக்கடிக்கு ஆளாக்கப்படுகிறான் என்பது வருத்ததிற்கு உரியது. நான் ஹோமோ செக்ஸுவல்ஸ் பற்றி பேசுவதாய் பாமரத்தனமாய் நினைக்கவேண்டாம். ஹோமோ செக்ஸ் என்பது வேறு. பெண்களின் ஆடையை அணிய பிரியப்படும் எல்லா ஆண்களும் ஹோமோ செக்ஸுவல்ஸ் இல்லை. எனக்கு தெரிந்த ஒரு தோழியின் கணவருக்கும் இந்த ரகசிய ஆசை இருந்திருக்கிறது. ஆனால் அவர்கள் திருமணம் ஆகி தாம்பத்தியத்தில் எந்த வித நெருடலோ இல்லாமல் குடும்பம் நடத்தி வருகிறார்கள்.

ஆனால் சமுதாயத்தில் இன்னும் பெண்களையும் பெண்கள் அணியும் ஆடைகளையும் கேலி பொருட்களாக பார்க்கும் பண்பு நிறைந்திருப்பது வருத்தமே. இது முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு.

புடவை என்பது ஒரு அசாத்திய உடை. அது நம் நாட்டின் கலாசாரத்தை பறைசாற்றும் உடை. புடவையில் இருக்கும் கவர்ச்சியும் ஆளுமையும் வேறு எந்த உடையிலும் இருப்பதில்லை என்பது என் கருத்து. மேலும் நாம் அணியும் ஜீன்ஸ் சுடிதார் கூட ஒரு வகையில் ஆண்களின் உடை அலங்காரத்திலிருந்து பிரித்து எடுக்கப்பட்டது என்பதே உண்மை. ஆனால் புடவையும் ஸ்கர்ட் பாவாடையும் அப்படி அல்ல. அது பெண்மையை பறைசாற்றும் பெண்களுக்கு ஒரு தனித்தன்மையை தரும் ஒரு மரியாதையை தரும் உடை. நம் பாரத மாத பெருமையாக போர்த்தியிருக்கும் உடை.

பாரத மாதாவை கை எடுத்து வணங்கும் நீங்கள் அந்த உடையை பற்றி எத்தனை ஒரு கீழ்த்தரமான தீர்மானம் வைத்திருக்கிறோம் என்பது உங்களை எல்லாம் ஆணாதிக்க வெறியர்கள் என்றே காட்டுகிறது.

புடவை கட்ட பிரியப்படும் ஆண்களை வெறுக்காதீர்கள். நீங்கள் அணியும் ஒரு உடையை ஒரு ஆண் அணிய பிரியப்படுகிறான் என்பது உங்களுக்கு பெருமையான விஷயம் அல்லவா. நீங்களே முன் வந்து அந்த ஆணை ஊக்குவிப்பதில் எந்த தவறும் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது. ஒரு ஆண் தானாக முன் வந்து புடவை கட்ட பிரியப்படுகிற போது அவனை அந்நியனாய் பார்க்காதீர்கள். உங்கள் கணவரோ பாய் பிரண்டோ அப்படி ஒரு ஆசையை உங்களிடம் தெரிவித்தால் உடனே அவனை ஏதோ கேலி செய்து அவனுடைய மன ஆரோக்கியத்தை கெடுக்காதீர்கள். பெண்கள் நாமே நம் உடையை அணிய பிரியப்படும் ஒருவரை பழித்தால் ஆண்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்.

இங்கே பெரும்பாலான அண்களுக்கு புடவை பாவாடை போன்ற பெண்களின் ஆடைகளை அணிந்து பார்க்க ரகசிய ஆசை உண்டு. ஆனால் ஆணாதிக்க சமுதாயத்தில் தாங்கள் கேலி பொருளாய் ஆகிவிடுவோமா என்கிற அச்சம் தான் அவர்களை தவிர்க்கிறது. திரைப்படங்களில் ஒரு ஹீரோவின் சட்டையை விரும்பி அணிந்துகொள்ளும் ஹீரோயின்களை நாம் பாராட்டுகிறோம். அது காதல் என்று மயங்குகிறோம். ஏன் ஒரு ஆண் தன் மனைவியின் காதலியின் உடையை அணிந்து பார்க்க பிரியப்படும் பொழுது நாம் அவர்களை அந்நியமாய் பார்க்கிறோம்.





பெண்களே நீங்களும் உங்கள் குறுகிய பார்வையை மாற்ற வேண்டும். பெண்களின் உடையை ஆணிந்து பார்க்க பிரியப்படும் ஒரு ஆணை நீங்கள் ஊக்குவிக்காத போது நீங்களும் மறைமுகமாக ஆணாதிக்கத்துக்கு துணை போகிறீர்கள்.உங்கள் பாய் பிரண்ட் அல்லது உங்கள் கணவர் அணியும் லுங்கியை நீங்கள் தனிமையில் இருக்கிற போது அணிந்துகொள்வதில் உங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் உங்கள் கணவர் உங்கள் உள்பாவடையை அணிந்துகொண்டு வீட்டில் தனிமையில் உலா வந்தால் அவரை ஏன் வித்தியாசமாக பார்க்கிறீர்கள். ஒரு வேளை இந்த ஆணாதிக்க சமுதாயம் காலம் காலமாய் உங்களுக்கும் அப்படியே கற்பித்திருக்கலாம். இப்போது மாற்றிக்கொள்ளுங்கள் தோழிகளே.


என்னுடைய கருத்துக்கள் இது தான்.
1. புடவையை அவமான சின்னமாக சித்தரிப்பது நகைப்புக்குரியது. புடவை ஆளுமையின் வெளிப்படு. புடவை கட்டும் ஆண் ஒரு கோழை என்று நீங்கள் நினைத்தால் அந்த புடவையை காலம் காலமாக கட்டிக்கொள்ளும் பெண் வர்க்கத்தை தான் நீங்கள் மகா கோழைகளாக நினைக்கிறீர்கள் என்று அர்த்தம் . அந்த நிலைப்பாட்டை மாற்றுங்கள்.
2. பெண்களே நம்மை சுற்றியிருக்கும் ஒரு ஆண் பெண்களின் உடையை அணிந்து பார்க்க பிரியப்பட்டால் அவனை அந்நியனாய் பார்த்து கேலி பேசாதீர்கள். மாறாக அவனுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள். அவனது அந்த விருப்பத்தை ஊக்குவியுங்கள். பெண்களின் உடை எந்த விதத்திலும் கீழ்த்தரமானது அல்ல. அதை அணிவதால் அவனுடைய ஆண் தன்மை மாறிவிடபோவதில்லை என்கிற உண்மையை ஏற்றுக்கொண்டு அது போன்ற ஆண்களை நேசியுங்கள்.
3. ஆண்களே. உங்கள் ஆணாதிக்க போக்கை நீங்கள் திருநங்கைகளை இத்தனை நாள் படுத்திய பாட்டிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. இனி மேலாவது திருந்துங்கள்.
4. தன் மனைவியோ காதலியோ அவர்களுக்கு முன் புடவையிலோ பாவாடையிலோ நிற்பதில் ஒரு வித எக்ஸ்டசி இருப்பதாய் ஆண்கள் சொல்லி கேட்டும் படித்தும் இருக்கிறேன். எனக்கு அதை அனுபவிக்க வாய்ப்பில்லை. ஒருவேளை நான் ஆணாக இருந்திருந்தால் நிச்சயம் அதை செய்திருப்பேன். பெண்ணாக இருப்பதால் அப்படி விருப்பப்படும் ஆண்களை நான் ஆதரிக்கிறேன்.






ஆண்களே உங்கள் போலி ஈகோவை தூக்கிவீசிவிட்டு உங்கள் மனதில் இயல்பாக எழும் ஆசைகளை பூர்த்தி செய்துகொள்ளுங்கள். என்ன ஒரு அறுபது வருடம் இந்த உலகில் வாழ்ந்துவிட்டு மடிய போகிறோம். நாம் வாழத்தான் வாழ்க்கை நம்மில் சமுதாயம் வாழ அல்ல.

முன்னரே ஆண்கள் புடவை கட்டுவதை பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதன் பொருட்டு எனக்கு நிறைய கடிதங்கள் வந்தன். நிறைய பேர் இந்த தலைப்பில் எழுத சொல்கிறார்கள். இந்த விஷயத்தில் ஒரு ஆணின் மன நிலையை புரிந்துகொள்வதில் நான் இன்னும் சிறுமியாகவே இருக்கிறேன். ஆண்களின் இந்த இயல்பான இச்சையை பற்றி அறிந்துகொள்ள நானும் ஆவலோடு இருக்கிறேன். மேலும் இந்த தலைப்பை பற்றி உங்கள் சந்தேகங்களையும் கருத்துக்களையும் ரகசியங்களையும் என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள். கேட்க ஆவலாய் உள்ளேன்.
பெண்களும் இது தொடர்பாக கருத்து சொல்லலாம்.

vincyontop@gmail.com