Sunday, 8 November 2009

யார் பத்தினி - ஒரு அதிரடி ரிப்போர்ட்.

பத்தினியை ஒழிப்போம்.

உலக தமிழ்மாநாடு நடக்கும் இத்தருணத்தில் நான் அதிகாரத்தில் இருந்தால் முதலில் தமிழ் அகராதியில் சில வார்த்தைகளை நீக்கவேண்டும் என பரிந்துரைப்பேன்.
முதல் வார்த்தை
பத்தினி.
சமீபத்தில் ஒரு அனானி (சஞ்சை அல்ல வேறொருவர். அவருடைய பின்னூட்டத்தில் மேலும் தகாத வார்த்தைகள் இருந்ததால் அனுமதிக்கவில்லை.) என் பதிவில் வந்து நீ ஒரு சைக்கோ....பத்தினி வேஷம் போடுகிறாய் என்று முழங்கினார்.
எனக்கு அதை படித்துவிட்டு செம சிரிப்பு.

பத்தினி வேஷம் நான் போடுகிறேனா? முதலில் பத்தினி என்றால் என்ன? பத்தினி என்பவள் ஒரு அணு விஞ்ஞானியா அல்லது பல தத்துவங்களை எழுதிய ஒரு சிறந்த எழுத்தாளரா...அல்லது மின்சாரம் டெலிபோன் இப்படிப்பட்ட அறிவியல் சாதனைகளை நிகழ்த்திய பெண்மணியா...இல்லை சமுதாய முன்னேற்றத்துக்கு உழைத்த சமூக சேவகியா.
அது எல்லாம் இல்லை. பத்தினி என்பவள்அகராதிப்படி கணவன் எத்தனை பேருடன் படுத்தாலும் தன்னை எத்தனை கொடுமைகளுக்கு ஆளாக்கினாலும் நெறி தவறாமல் தன் கணவனுக்கு மட்டுமே முந்தி விரிக்கும் ஒரு பேதை பெண். பச்சையாக சொல்லவேண்டுமானால் கணவனுக்கு அரிப்பெடுத்தால் அவனை கூடையில் சுமந்துகொண்டு போய் அவன் விரும்பும் பெண் வீட்டில் விட்டுவிட்டு வெளியே காவல் இருக்கவேண்டும். காரியம் முடிந்த பிறகு மீண்டும் கூடையில் சுமந்து வீட்டில் கொண்டு போய் விடவேண்டும். அவனை கூடையில் சுமந்துகொண்டு போய் நடுக்கடலில் போட்டால் தான் என்ன?

இப்படி கணவனுக்கு முந்தி விரித்து கிடைக்கையில் அவன் தன் உடல் தேவையை பூர்த்தி செய்துவிட்டு எழுந்து போவான். இவள் உடனே தாலியை முத்தம் செய்து கண்ணில் ஒற்றிக்கொள்ளவேண்டும். இது தானே பத்தினி என்ற ஆணாதிக்க சொல்லின் விளக்கம். அப்படியானால் அந்த வேஷம் போட நான் தயாராய் இல்லை. அப்படி ஒரு அடிமை வேஷம் போட நான் தயாராய் இல்லை தோழரே.

சில பெண்கள் இன்னும் பத்தினியாய் இருக்க பிரியப்படுகிறார்கள். அவர்கள் இருந்து தொலையட்டும். கணவன் நலம் வாழ மண் சோறு தின்று வாழட்டும். அந்த மூட நம்பிக்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு வேளை என் கணவனுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் நான் மருத்துவமனைக்கு கூட்டிக்கொண்டு போவேனே தவிர மண் சோறு தின்ன மாட்டேன். உடனே தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டு குஷ்புவை போல் அங்க பிரதட்சணம் செய்யமாட்டேன். அவன் அருகில் இருந்து அவனை அக்கரையோடு பார்த்துக்கொள்வேன்.

அந்த நபருடைய பின்னூட்டத்தை படித்த பிறகு என்னை திருமணம் செய்துகொள்ளப்போகும் நபரிடம் முதலில் நான் சொல்ல நினைப்பது "நான் ஒரு பத்தினி இல்லை” என்பதை தான்.


அடுத்தது வாழாவெட்டி.

ஆண்களே சிந்தித்து பாருங்கள் . இப்படி ஒரு சொல் வழக்கில் இருக்கும் ஒரு சமுதாயத்தில் ஆண்டாண்டு காலமாய் எப்பேர்ப்பட்ட ஒரு ஆணாதிக்க போக்கு நடைமுறையில் இருந்திருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்.

பெண்ணுடைய அப்பா வரதட்சணை கொடுத்து ஒருவனுக்கு தன் மகளை திருமணம் செய்து வைக்கிறார். அதாவது காசு கொடுத்து ஒரு கழுதையை பொதி சுமக்க நாம் விலைக்கு வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம். (வரதட்சணை வாங்கி திருமணம் செய்பவர்களை எல்லாம் நான் கழுதைகள் என்று சொல்லவில்லை....வரதட்சணை கேட்டு திருமணம் செய்பவர்களைத்தான் சொல்கிறேன் என்று புரிந்துகொள்பவர்கள் புரிந்துகொள்ளட்டும்) அந்த கழுதை பாதி தூரம் போன பிறகு சோம்பேறித்தனம் பட்டோ அல்லது கொழுப்பு எடுத்தோ அங்கேயே படுத்துவிடுகிறது.






ஆனால் நமக்கோ கடமை இருக்கிறது. பொதியை குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் கொடுத்தாக வேண்டும். என்ன செய்கிறோம் கஷ்டப்பட்டு அந்த பொதியை நாமே தூக்கிக்கொண்டு போகிறோம். அப்படி சுமக்கும் நமக்கு பெயர் தான் வாழாவெட்டி. புருஷன் திருமண பந்தத்தின் கடமையை மறந்த ஏதாவது ஒரு காரணத்திற்கு மனைவியை வீட்டை விட்டு துரத்திவிடுவான். அப்படி துரத்தப்பட்ட பெண்ணுக்கு பெயர் வாழாவெட்டி. அல்லது புருஷன் வேறொரு பெண்ணுடன் கிளிக்காகி ஓடிவிடுவான் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வரும் அவமான சொல் வாழாவெட்டி. ஓடிப்போன கணவனுக்கு இன்னொரு ரேஷன் கார்டில் "குடும்ப தலைவர்" என்ற அருமையான பெயர் கிடைத்துவிடும்.

உண்மையில் நம் கலாசாரத்தை வடிவமைத்தவர்களுக்கு நிச்சயம் நல்ல கற்பனை திறன் இருந்திருக்கவேண்டும். பாருங்கள் எத்தனை இரவுகள் ரூம் போட்டு யோசிச்சு பெண்களை எப்படி எல்லாம் கேவலப்படுத்தலாம் கொடுமைபடுத்தலாம் தங்கள் கட்டுப்பாட்டுக்கள் வைத்துக்கொள்ளலாம் என்று வடிவமைத்திருக்கிறார்கள். மேலும் வாழாவெட்டி என்பவளை கேவலமாக நடத்தினால் எந்த பெண்ணும் தான் வாழாவெட்டி ஆகிவிடாமல் இருக்க கணவனுக்கு பணிந்து இருப்பாள் என்ற சாடிஸ் மனநிலையோடு உருவாக்கப்பட்ட சொல் தான் வாழாவெட்டி.

இப்படிப்பட்ட சொற்களை தமிழ் அகராதியிலிருந்து நீக்கும் முன்பாக மனித மனங்களிலிருந்தும் நீக்கவேண்டும். பெண் எப்படியெல்லாம் அடக்குமுறைகளுக்கு ஆட்பட்டிருந்தால் இது போன்றதொரு சொற் பிரயோகம் நம் வழக்கில் இருக்கும் என்பதை சிந்தித்து பாருங்கள்.

நான் ஆண்களை கேவலமாக பேசுவதாக சில ஆண்கள் கண்டமேனிக்கு என்னை திட்டி தாளிக்கிறார்கள். நான் பிரசுரிக்கும் கமென்டுகள் ஒரு சாம்பிள் தான். வருபவையோ ஏராளம். அப்படிப்பட்ட ஆண்களுக்கு பொதுவான ஒரு குணம் என்னவென்றால் அவர்களுக்கே தெரிகிறது தாங்கள் இருக்கும் தளம் போலியானது...வெட்டி ஈகோவால் உருவானதென்று. அதனால் அந்த தளத்தை நான் தகர்கிற பொழுது அவர்கள் விழுந்துவிடுவார்களோ என்ற அச்சத்தினால் தான் என்னை தூஷிக்கிறார்கள். அதனால் நான் அசரப்போவதில்லை.

ஒன்று தெரிந்துகொள்ளுங்கள் ஒயின் ஷாப்பில் வேட்டி கிழிய குடித்துவிட்டு அந்த குப் நாற்றத்தோடு கெட்ட வார்த்தை பேசுவதையும்....சாலையில் எல்லோரையும் முந்திக்கொண்டு போக நினைக்கும் அவசர (செக்ஸில் காட்டும் அவசரத்தை ஆண்களே ஏன் சாலையில் காட்டுகிறீர்கள்) நிலையும் அப்படி போகிற போது யாராவது அப்பாவி குறுக்கே வந்து மாட்டிக்கொண்டால் உடனே காளரை தூக்கிவிட்டுக்கொண்டு மச்சி மாமு என சகலரையும் துணைக்கு அழைத்து வன்முறையை தூண்டும் உங்களின் அராஜக போக்கு தான் வீரம் என்று நீங்கள் நினைத்துக்கொண்டால் அந்த வீரமும் கெட்ட வார்த்தைகளும் வன்முறையும் பெண்களிடம் செல்லுபடியாகாதென்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்னும் அகராதியில் நிறைய பெண்ணடிமை வார்த்தைகள் இருக்கின்றன. மேலும் நிறைய வார்த்தைகள் புழக்கத்தில் உள்ளன.

மேலும் இந்த அவல நிலைக்கெல்லாம் தீர்வு என்னவென்று கேட்டால் உடனே மேலோட்டமாக பெண் கல்வி பெண் இட ஒதுக்கீடு என்றெல்லாம் பேசுவோம். அது எல்லாம் தவறு. அதற்கெல்லாம் மேலே பெண்கள் முதலில் தங்களை மதிக்க தெரிந்துகொள்ளவேண்டும். நான் ஒரு பெண் தானே என்று சோர்ந்து போகாமல் நான் ஒரு பெண் என்று தன்னம்பிக்கையோடு எழுந்து நிற்கவேண்டும். அந்த எழுச்சியில் தான் ஆணாதிக்கத்தை நாம் சுருட்ட முடியும். இன்னும் ஆண்களை சார்ந்து வாழ்வதையே நம் தலையாய கடைமையாக நினைத்துக்கொண்டிருந்தால் முன்னேர்ரம் கடினம் தான்.

வேறொரு நபர்...பெண்களுக்கு அழகே சக்தி என்று சொல்லி அவர்களை நான் போகப்பொருளாக பார்க்கிறேன் என்று பொங்கியிருந்தார்.
அந்த தோழருக்கு நான் சொல்லிக்கொள்வது மறுபடியும் மறுபடியும் பெண்களுக்கு அழகே சக்தி.
ரோஜா மலர் அழகாய் இருப்பது அதன் சக்தி. அதை செடியில் வைத்து அழகுபார்க்காமல் உங்கள் தேவைக்கு அதை பறித்து கயிற்றில் கட்டி தொங்கவிடுகிறீர்களே அந்த ஆணாதிக்கம் தான் பெண்ணை போக பொருளாய் பார்க்கிறது. பெண்ணை பெண்ணாக பாவியுங்கள். பெண் அழகாய் இருப்பதால் அவள் போதை பொருளாகிப்போவது உங்களுக்குத்தான். நீங்கள் அவளை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் அப்போது நீங்களே சொல்வீர்கள் பெண்ணுக்கு அழகே சக்தி.

பெண்ணுக்கு அழகே சக்தி.

நாங்கள் போதை பொருளாய் இருப்பதில் கூட வருத்தப்படவில்லை. ஆனால் எங்கள் அனுமதி இல்லாமல் எங்களை ஏமாற்றி அந்த போதையை நீங்கள் நுகர்ந்து பார்த்து அனுபவித்து பின்பு எங்களை அடிமைகளை போல் நடத்துவதை தான் நான் பெரிதும் எதிர்க்கிறேன்.

இன்னொரு நபர்...என் பதிவுகளை பெண்கள் புறக்கணிக்கிறார்களாம். அதில் அவருக்கு ஒரு சந்தோஷம் வேறு இருக்கிறது போல. ஏனென்றால் பெண்கள் எல்லாம் என் பதிவுகளை படித்து ஆண்களின் ஈகோவையும் ஆதிக்க அராஜகங்களையும் எதிர்க்க தொடங்கினால் ஆண்களுக்கு டவுசர் கிழிந்துவிடுமோ என்ற பயம். மேலும் பெண்கள் இதை புறக்கணித்தாலோ ஆண்கள் இதை புறக்கணித்தாலோ எனக்கு கவலை இல்லை. நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தான் இருப்பேன். ஆதரிப்பவர்கள் ஆதரிக்கட்டும்.


மேலும் எனக்கு ஓட்டு போடும் பின்னூட்டமிடும் அத்தனை தோழர் தோழிகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பிறகு ஒருவர் நான் மற்ற பதிவர்களின் பதிவுகளில் பின்னூட்டமிடுவதன் மூலம் பிரபலமாக நினைக்கும்ம் ஒரு வேசி என குறிப்பிட்டிருந்தார். பலே பலே....என் பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்கவே எனக்கு நேரம் போதவில்லை. பிறகு எப்படி இந்த குற்றச்சாட்டு.



இப்படி எனக்கு வரும் பின்னூட்டங்களில் வரும் தவறான புரிதல்களுக்கு பதில் எழுதுவதிலேயே என் காலம் போய்விடுகிறது. இருந்த போதும் எனக்கு அது மகிழ்ச்சியே. தொடர்ந்து உங்கள் வாதங்களை நாகரீகமான முறையில் முன் வையுங்கள். விவாதிப்போம்.

மேலும் உங்கள் சந்தேகங்களையும் ரகசிய கேள்விகளையும் என் மின் அஞ்சலுக்கு செலுத்துங்கள்.....

vincyontop@gmail.com

Sunday, 1 November 2009

மாதவிடாய் பெண்கள் தீண்டத்தகாதவர்கள்

பெண்களுக்கு அழகே சக்தி.




என்னது பீரியட்ஸ் காலத்துல வெளிய ஒரு பாய் போட்டு குத்த வச்சுக்கணுமா?....அடி செருப்பால....


காலம் காலமாய் பெண் விடுதலைக்கு குரல் கொடுக்கிறேன் பேர்வழி என்று இங்கே நிறையே பேர் பெண் அடிமைத்தனத்தை பற்றி மட்டுமே மேலும் மேலும் பேசியும் எழுதியும் இருக்கிறார்கள். அவர்கள் மேல் எனக்கு ஒரு வகையில் பெருத்த கோபம் உண்டு. அவர்கள் ஓயாமல் பெண் அடிமையாய் நடத்தப்படுகிறாள் என்று பரிதாபப்பட்டும் கோபப்பட்டும் எழுதுகிறார்கள். நீங்களே யோசித்து பாருங்கள். ஒரு பெண் குழந்தைக்கு விபரம் தெரியும் நாள் முதல் அதனிடம் "நீ ஒரு அடிமை...உன் இனம் ஒரு காலத்தில் அடிமையாய் நடத்தப்பட்டது....நீயும் அடிமை இனத்தின் ஒரு நீட்சி" என்று கூறுவதன் மூலம் அந்த பிஞ்சு மனதில் ஒரு வகை தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடுகிறார்கள். அந்த பிஞ்சு மனதில் அடிமை விதையை அவர்களே ஊன்றிவிடுகிறார்கள்.

இவர்கள் ஆணின் இரக்கத்தால், பெண் விடுதலை அடைய வேண்டும் என்ற வகையில் எழுதவும் செய்கிறார்கள். ஆனால் நான் பெண் அடிமை என்ற கருத்தையே முன்வைக்க போவதில்லை. பெண் ஆண்களுக்கு சமமானவள் என்ற வாதத்தையும் பின்னுக்கு தள்ளி பெண் ஆணை விட உயர்ந்தவள் என்கிற ரீதியில் தான் பார்க்கிறேன்.

பெண்கள் தங்கள் அழகாலும் அறிவாலும் ஆண்களை தங்களுக்கு சேவகர்களாக ஆக்கிக்கொள்ள முடியும் என்பதை தான் நான் அழுத்தமாக எடுத்துரைக்க விரும்புகிறேன். பெண் அடிமைத்தனம் என்னும் அழுக்கான பழைய புராணத்தை பாடிப்பாடி ஏன் பெண்ணை இன்னும் தலைகுனிய வைக்கிறீர்கள். அவளை நிமிர விடுங்கள்.

அதனால் நான் இங்கே பேசப்போவதெல்லாம் ஆணடிமைத்தனத்தை பற்றியே. அதனால் நிறைய பேர் கொதிப்படைகிறார்கள். அப்படி கொதிப்படைபவர்கள் எல்லாம் தங்கள் காதலி மனைவி என்று வரும்போது உள்ளாடைகளை கசக்கவும் தயாராய் இருப்பார்கள் என்பதை வாழ்வியல் நடைமுறை கூறும். பெண்களின் ஆடைகளை துவைபப்தில் இருக்கும் சுகம் பற்றி எனக்கு வந்த ஒரு கடிதத்தை அடுத்த பதிவில் பிழை திருத்தி நீங்கள் வாசிக்க தருகிறேன்.

பெண்களே யோசித்து பாருங்கள்...ஒரு காலத்தில் கலாசாரம் பண்பாட்டு மத காவலர்கள் நமக்கு இயற்கையாய் வரும் மாதவிடாய் காலத்தில் நாம் ஏதோ தீட்டுபட்டவர்கள் போல் வீட்டின் வெளியே ஒரு பாய் விரித்து படுத்துக்கொள்ள வேண்டும் என்று கீழ்த்தரமான சட்டங்களை கொண்டு வந்தார்கள். இது எல்லாம் பெண்களின் அறிவும் அழகும் ஓங்கி நின்றால் அவர்களின் பின்னால் ஆண்கள் அலைய வேண்டிவரும் என்று பயந்த கோழை கூட்டத்தால் உருவாக்கப்பட்டது. ஆண்களே……இப்படியெல்லாம் அடக்கி வைத்தால் பெண் எப்போதும் தலை குனிந்தே வாழ்ந்து விடுவாள் அவளை உங்கள் சுகங்களுக்கு உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்று தானே நீங்கள் இது போன்ற மனிதாபிமானம் இல்லாத சட்டங்களை உருவாக்கினீர்கள்.

பெண்களை குழந்தை பெற்றுத்தரும் ஒரு எந்திரம் போல் பயன்படுத்தி வந்த காலமும் உண்டு. குழந்தை பெற்றுக்கொள்வதால் பெண்களின் அழகு குறைபடும் என்று நம்பிவிடவேண்டாம். உங்கள் அழகின் மீது தகுந்த அக்கரையும் பராமரிப்பும் செலுத்தினால் போதும் நீங்கள் குழந்தை பெற்றுக்கொண்ட பிறகும் இளமையாய் தோன்றலாம். எப்போதும் உங்கள் அழகின் மீதும் கல்வி, படிப்பு இவற்றின் மீதே உங்கள் கவனம் இருக்கட்டும். குரங்கு போல் புட் போர்ட்டில் தொங்கிக்கொண்டு வரும் ஆண்களின் குரங்கு சேட்டைகளை நம்பி உங்கள் மனங்களை அலைய விடாதீர்கள். அவர்களெல்லாம் ஒயின் ஷாப்பில் மது அருந்துவதை வீரம் என்றும் கெட்ட வார்த்தையில் உளறுவதை தைரியம் என்றும் ஆண்மை என்றும் ஆண் தன்மை என்றும் நம்பி அறிவிலியாய் திரிபவர்கள். அதனால் பெண்களே உங்கள் கல்வியும் அழகும் சீராக இருந்து ஆண்களை ஆட்சி செய்யும் ஆவல் இருந்தால் உங்களுக்கு சேவை செய்ய ஆண்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள்.அழகான அறிவுடைய பெண்களுக்கு சேவை செய்வதில் தான் தங்கள் வாழ்வு பூரணம் அடைகிறது என்கிற உண்மையை ஆண்கள் உணரத்தொடங்கிவிட்டார்கள். என்ன ஆண்களே சரி தானே?

குழந்தை பெற்றுக்கொள்வதில் உங்கள் சம்மதம் இன்றி எதுவும் நடந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மாமனார் மாமியார் புருஷன் இவர்களுக்காக நீங்கள் குழந்தை சுமக்க போனால் உங்களுக்கும் கழுதைக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. தாய்மை என்பதை முதலில் நீங்கள் நேசிக்கவேண்டும். மனதளவில் அதன் மீதான தாகம் வரவேண்டும். மனம் தாய்மையை தரிக்க தயாராகவேண்டும். அதன் பின்பே நீங்கள் விரும்பும் பட்சத்தில் மட்டுமே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் குழந்தை பெற்றுக்கொள்ளும் அந்த காலகட்டத்தில் கணவன் உங்களிடம் இன்னும் அன்பாகவும் சேவைகளை சரிவர செய்பவராகவும் உங்களுக்கு கீழ்படிபவராகவும் இருத்தல் அவசியம்.

பிறகு எனக்கு நிறைய கடிதங்கள் வருகின்றன. அதில் ஒரு கடிதத்தில் ஒருவர் தனக்கு பெண்களின் பாதங்கள் மிகவும் பிடிக்கும் என எழுதியிருந்தார். என் பிளாகில் உள்ள புகைப்படத்தில் வருவது போல் தன் தோழிக்கு அவர் சேவகம் செய்வதை பெரிதும் விரும்புவதாக கூறினார். மேலும் பெண்களின் பாதத்தை தொட்டு வணங்கி வழிபடுவதில் ஒரு வித தெய்வீக நிலையை அவர் அடைவதாய் குறிப்பிட்டிருந்தார். மேலும் சாலையில் நடக்கிற போதே எந்த ஒரு பெண்ணை பார்க்கிற போதே அவர் முதலில் பார்ப்பது அவளின் பாதங்களை தானாம். ஒவ்வொரு வகை பாதங்களிலும் ஒவ்வொரு சங்கதி இருக்கிறதென்கிறார்.


ஒவ்வொரு வகை பாதங்களிலும் ஒவ்வொரு சங்கதி இருக்கிறதென்கிறார்.பெண்களின் பாதங்களின் மூலம் அவர்களின் மனநிலையையும் டாமினேட்டிங் சம்பிசிவ் கேரக்டர்களையும் தெரிந்துகொள்ள முடியும் என்றும் பெண்களின் பாத அமைப்பும் அவர்கள் பாதங்களை வெளிக்காட்டும் முறையிலும் ஸ்டைல் மேனரிஸம் இதிலெல்லாம் நிறைய சங்கதிகள் இருப்பதாய் குறிப்பிட்டிருந்தார். அவை பற்றி எனக்கு முன்னரே தெளிவான வாசிப்பும் புரிதலும் இருப்பதால் எனக்கு அது ஒன்றும் புதிதல்ல. மேலும் சில அழகான பெண் பாதங்களின் புகைப்படங்களையும் அனுப்பியிருக்கிறார்க். சில உங்களுக்காக. எந்த பாதம் என்ன செய்தி சொல்கிறதென்று பின்னூட்டமிடுங்கள்.













Tuesday, 27 October 2009

ஆண்களின் இயலாமையே பெண்ணடிமைத்தனத்தின் துவக்கம்.

என்னை தொடர்ந்து ஊக்குவித்து வரும் அனைவருக்கும் நன்றி. என் கருத்துக்களுக்கு எதிராக பின்னூட்டம் இடுபவர்கள் ஆனாலும் என் பதிவை படிக்கும் ஒவ்வொருவருக்கும் என் நன்றி. என் கருத்துக்களுக்கு எதிராக பின்னூட்டமிட்டால் அவை பிரசுரிக்கப்படுவதில்லை என்கிறார்கள். கீழ்த்தரமான வார்த்தைகள் இல்லாத எந்த பின்னூட்டமும் பிரசுரிக்கப்படும்.

பல நேரங்களில் என்னுடைய கருத்துக்கள் தவறாக புரிந்துகொள்ளப்படும் வாய்ப்பு வருகிறது. நான் வலியுறுத்துவது எல்லாம் ஆணும் பெண்ணும் சமம் என்னும் கோட்பாட்டை அல்ல. ஆணை விட பெண் மேலானவள் என்பதே. பெண் வணக்கத்துக்குரியவள் என்பதே. ஆண் என்பவன் பெண்ணை மதித்து அவளின் அன்பிலும் அரவணைப்பிலும் அதிகாரத்திலும் வாழ பழகிக்கொள்ளவேண்டும் என்பதே. நீங்கள் ஒரு மேலோட்டமான கணக்கீடு எடுத்து பாருங்கள். எந்தெந்த குடும்பங்களில் ஆண் அதிகாரம் செய்திக்கொண்டும் போலி முதன்மை நிலையை பிரகடனப்படுத்திக்கொண்டும் பெண்ணை அடிமை போல் நடத்தி தன் ஆணாதிக்க போக்கில் குடும்பம் நடக்கிறதோ அங்கெல்லாம் முன்னேற்றம் தடைப்பட்டிருக்கும். பெண் விடுதலையும் பெண் முன்னேற்றமும் பெண் ஆளுமையும் தான் குடும்பத்தையும் நாட்டையும் முன்னுக்கு கொண்டு செல்லும் என்பது என் கருத்து.





இப்படி ஒரு அழகான பெண்ணிடம் குத்து வாங்குவதும் சுகம் தான் இல்லையா?



சிலர் இப்படி சொல்வார்கள். பெண்களை காமப்பொருளாய் பார்க்கக்கூடாதென்று. அதற்கும் நான் எதிரானவள். செக்ஸ் அடிமைகளாய் பார்க்காதீர்கள் என்பது தான் என் கருத்து.

திடமான திரட்ச்சியான ஒரு பெண்ணின் மார்பை பார்க்கிற போது எந்த ஆணுக்கும் உணர்ச்சிகள் உந்தப்படும். அப்படி உந்தப்பட கூடாதென்று நான் சொல்லவில்லை. அப்படி உந்தப்படாதவன் நிச்சயம் சாமியாராகத்தான் இருக்கவேண்டும். சாமியார் என்றும் சொல்ல இயலாது. காரணம் போலி சாமியார்களின அட்டகாசங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஒரு பெண்ணின் அழகில் அறிவில் அன்பில் மயங்காதவன் ஆணாகவே இருக்க முடியாது. எனவே ஒரு பெண்ணின் அழகை கவர்ச்சியை ரசிக்கக்கூடாதென்று நான் சொல்லவில்லை. ரசிக்கவேண்டும். பெண் என்பவள் ஆண்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகி போகிறாள்.

அப்படியாக ஆண்களால் தவிர்க்கமுடியாத ஒரு விரும்பு பொருளாக பெண் இருக்கிறாள். பெண் என்பவளின் காதல் அன்பு அழகு அறிவு வசீகரம் எல்லாம் ஆண்களை கட்டிப்போடும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. இத்தனை சக்தி வாய்ந்த ஒரு பெண்ணின் முன்னால் ஆண் மண்டியிட மட்டும் மறுப்பது வியப்பாக இருக்கிறது.

இந்தியாவை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள் என்பது வரலாறு. அப்படி அடிமைப்படுத்துவதின் நோக்கம் என்ன? இந்தியா போன்றதொரு வளமிக்க நாட்டை அவர்கள் விரும்பினார்கள். இந்தியாவின் வளத்திலும் செல்வ செழிப்பையும் கண்டு அவர்கள் பெருமூச்சு விட்டார்கள். அந்த செல்வ செழிப்பின் மேல் அவர்களுக்கு அசை வருகிறது மோகம் வருகிறது. இப்போது அந்த செல்வ செழிப்பை அனுபவிக்க நினைக்கிறார்கள். ஆனால் இந்தியாவோடு ஒரு நேர்மையான வணிக ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இந்தியாவோடு ஒரு நடுநிலை வாணிக தொடர்பு வைத்துக்கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை. இந்தனை வளமிக்க இந்தியாவிடம் மண்டியிட அவர்களின் ஈகோ தடை சொல்கிறது.. ஆனால் அவர்களுக்கு இந்தியாவின் வளங்கள் வேண்டும். உடனே என்ன செய்கிறார்கள்? தங்களின் அதிகாரத்தையும் அடக்குமுறைகளையும் பயன்படுத்தி இந்தியாவை அடிமை நாடாக்கினார்கள். இந்தியாவின் வளங்களை அடித்துப்பிடுங்க ஆசைப்பட்டார்கள். இந்தியர்களை தங்கள் ஆதிக்கத்தால் மிரட்டி, இந்தியர்களே பணிந்து ஆங்கிலேயர்களின் காலடியில் இந்தியாவின் வளங்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என விரும்பினார்கள். ஆக இந்தியாவின் வளங்களை ஒரு அதிகார தொணியில் கவர்வதற்கு ம் திருடுவதற்கும் அவர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தினார்கள்.


அதையே தான் ஆண்களும் காலம் காலமாய் மதம் மூட நம்பிக்கை கலாசாரம் பண்பாடு என்ற போர்வையில் பெண்ணுக்கு செய்தார்கள். பெண்கள் இல்லாமல் ஆண்களால் வாழ முடியாது. அதே சமயம் பெண் தங்களை ஆளவும் கூடாது. உடனே எல்லா அரசியல் கலாசார பண்பாட்ட நெறிமுறைகளில் பெண்ணை அடிமைப்படுத்தும் சட்டங்களையும் பழக்கவழக்கங்களையும் உட்புகுத்துகிறார்கள். ஆக காலம் காலமாய் பெண்ணடிமைத்தனம் என்பது ஆண்களின் இயலாமையில் முளைத்ததென்பதே உண்மை.

நம் நாட்டில் மட்டுமல்ல வரலாற்றை புரட்டிப்பார்த்தால் ஆதி காலம் தொட்டு பெரும்பாலான மத கோட்பாடுகள் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாகவே பார்க்கிறது. கிறிஸ்துவமும் மேரி மாதாவின் பெயரால் திருச்சபை அமையக்கூடாதென்று தான் இயேசுவை முன்னிலைப்படுத்தி மதத்தை உருவாக்கினார்கள்.

ஆனால் இனி வரும் நூற்றாண்டுகளில் அது சாத்தியம் இல்லை. இப்போது கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பெண்கள் தாறுமாறாக முன்னேறியிருக்கிறார்கள். அதுவும் இத்தனை குறுகிய காலத்தில். அந்த முன்னேற்றம் இட ஒதுக்கீட்டில் வந்ததல்ல. ஆண்களின் இடத்தை தங்கள் அசாத்திய திறமையால் பெண் ஆக்கிரமிக்க தொடங்கியிருக்கிறாள். இந்த நிலையில் பெண் முன்னேற்றம் இருக்குமானால் ஆண்களை விட பெண்கள் கல்வியிலும் நிறைய சம்பளம் கொளிக்கும் பெரிய உத்தியோககங்களிலும் ஆக்கிரமித்துவிட்டால் ஆண்களின் நிலை என்னவாக இருக்கும்? இன்னும் ஆண்கள் பெண்கள் மீதான ஒரு அச்சத்தினால் தான் இன்னும் பெண்ணை அடிமையாக வைத்திருக்க அல்லது சம அந்தஸ்து கொடுத்து அதே நிலையில் அவர்களை வைத்திருக்க விரும்புகிறான்.

ஆனால் ஒன்று மட்டும் நிதர்சனம்

என்ன தான் பெண்கள் பல துறைகளிலும் முன்னேறியிருந்தால் கூட பெண்களுக்கு காலம் காலமாக வாழ்ந்து வந்த அடிமை வாழ்க்கையின் அழுக்கு இன்னும் அவர்களின் மனதில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதனால் தான் இன்றும் பெண் ஒரு ஆணிடம் ஒப்படைக்கப்பட வேண்டியவள் அவனுக்கு சேவகம் செய்யவேண்டியவள் என்ற மட்டகரமான எண்ணம் இருக்கிறது. பெண்கள் அதிலிருந்து விடுபட வேண்டும். நம்மை அடக்கி ஆண்ட காலம் போய்விட்டதென அவர்கள் உணர வேண்டும். இது நாம் ஆண்களை ஆளும் காலம் என்பதை உணரவ வேண்டும். உங்களின் கல்வியும் அழகும் வசீகரமும் ஆணை கட்டிப்போட வல்லது. ஆனால் ஆண்களால் கட்டுப்பாட்டில் இருக்க முடியாது என்பதால் தான் ஒரு போலி ஆதிக்க நிலையை நிறுவி ஆண்கள் உயர்ந்தவர்கள் என தங்களை காட்டிக்கொண்டு நம்மை அடிமைப்படுத்தி வந்தார்கள்.


நிறைய பேருக்கு என் மேல் கோபம் இருக்கிறது கெட்ட வார்த்தையில் திட்டுகிறார்கள். ஏனென்று தான் புரியவில்லை. உண்மையை அப்பட்டமாக எடுத்துரைத்திருப்பதால் அவர்களின் மனம் குறுகுறுக்கிறதென்றே தோன்றுகிறது.

நிறைய வாசகர் கடிதங்கள் வருகின்றன. எல்லாவற்றிற்கும் பதிலளிக்க நேரம் போதவில்லை. ஒரே ஒரு கடிதத்தை இங்கே பிரசுரிக்கிறேன்.

கேள்வி: வின்சி மேடம் அவர்களே வணக்கம். உங்கள் பிளாகை தொடர்ந்து படித்து வருகிறேன். அருமையான ஒரு வலைபக்கம். தமிழில் உங்களை போல் எழுத்தாளர்கள் இல்லை என்ற குறையை போக்கியுள்ளீர்கள். நான் ஆங்கிலத்தில் இது போன்ற நிறைய இலக்கியங்கள் படித்திருக்கிறேன். என்னுடைய கேள்வி இது தான்.

நான் திருமணமானவன். என் மனைவியை கடவுளாக போற்றவில்லை எனினும் அவளை என்னில் பாதியாகவே நினைக்கிறேன். என் மேல் அவள் செலுத்திய காதலும் அன்பும் தான் என்னை ஒரு மனுஷனாக மாற்றியதென்றே சொல்லலாம். அவளின் அரவணைப்பும் சில சமயம் கண்டிப்பும் இல்லையென்றால் எங்கள் குடும்பம் இப்போதிருக்கும் நிலையில் இருந்திருக்காதென்றே தோன்றுகிறது. அவளை நான் முழுவதும் நேசிக்கிறேன். எனக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. அதாவது என் மனைவிக்கு தெரியாமல் அவளுடைய ஆடைகளை முகர்ந்து பார்ப்பது. இதை நான் காமத்தின் தூண்டுதலால் செய்வதாக நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் உண்மையில் அவளுடைய ஆடைகளை முகர்ந்து பார்க்கிற போது மனம் முழுதும் அவள் நிறைந்து ஒரு தேவதை போல் என் முன்னால் நின்றுகொண்டு என்னை அரவணைப்பது போல் உணர்கிறேன்.

ஒரு வகையான தெய்வீக தன்மையை அதில் உணர்கிறேன். அவளுடைய ஆடையை முகர்ந்து பார்ப்பதை கீழ்த்தரமான செக்ஸ் இச்சையாய் நான் கருதவில்லை. நாம் பெரிதும் மதிக்கும் ஒருவர் உபயோகப்படுத்திய பொருட்களை பயபக்தியோடு தொட்டு உணர்த்து துய்ப்போமே அது போல் தான் என் மனைவியின் ஆடைகளை தொட்டு உணர்ந்து முகர்கிற போது உணர்கிறேன். அந்த ஆடைகளின் சுகந்தம் மட்டுமல்ல மென்மை மட்டுமல்ல அந்த ஆடைகளை என் மனைவி உபயோகப்படுத்துகிறாள் என்கிற மரியாதையின் மித்தமாகவே அதை தொட்டு உணர்ந்து முகர்ந்து பார்க்கிறேன்.

ஆனால் என் மனைவி தான் என் ஆடைகளையும் சேர்த்து துவைப்பாள். இப்போதெல்லாம் வீட்டு வேலைகளை பகிர தொடங்கிவிட்டேன். ஆனால் எனக்கு அவளின் ஆடைகளை அதே பயபக்தியோடு அணுகி துவைக்கவேண்டும் என்ற ஆசை உள்ளது. அதை என் மனைவியிடம் சொல்ல கூச்சமாக உள்ளது என்ன செய்வது?


நீங்கள் மட்டுமல்ல. பெரும்பாலான ஆண்களுக்கு இந்த ஆசைகள் இருக்கும். ஆனால் ஆண் என்ற ஈகோ அவர்களை தடுக்கும். காலம் காலமாக ஆண்களுக்கு கால் அமுக்கி விடவும் அவன் சாப்பிட்ட எச்சில் தட்டில் சோறு தின்னவும் தான் நாம் பெண்களை பழக்கி வைத்திருக்கிறோம். இப்போது ஆண்களின் போலியான அதிக்க தளத்தை விட்டுக்கொடுக்க அவர்களுக்க்கு மனம் வரவில்லை. அதனால் தான் இவ துணியை நான் துவைக்கணுமா?என்று விலகி விடுகிறார்கள். உங்கள் விருப்பங்களை நீங்கள் உயிரோடு இருக்கிற போதே நிறைவேற்றிக்கொள்ளாமல் மரித்துப்போவதில் என்ன பயன். மனைவியின் ஆடைகளை துவைத்துப்போடுவதில் பெருங்குற்றம் இருப்பதாய் எனக்கு தோன்றவில்லை. அவளுடைய ஆடைகளை துவைத்துப்போடுவதால் உங்களின் ஆண் என்ற போலியான கொம்பு முறிந்துவிடும் என்று நினைத்தால் மனைவியிடம் கேட்காதீர்கள். இல்லையென்றால் மனைவிக்கு தெரியாமலையே அவள் ஆடைகளை துவைத்து போடுங்கள் அவள் நிச்சயம் மகிழ்வாள். எந்த மனைவியும் கணவனின் அன்புக்கு எதிரானவள் அல்ல. எனவே மனைவியின் ஆடைகளை துவைத்து உங்கள் அன்பை வெளிப்படுத்துவதை உங்களை மனைவியும் நிச்சயம் விரும்புவாள்.

உங்கள் கேள்விகளையும் ரகசிய சந்தேகங்களையும் வாதங்களையும் இந்த முகவரிக்கு அனுப்புங்கள்.

vincyontop@gmail.com

Sunday, 25 October 2009

அம்மன் பெயரில் ஆணாதிக்கம்!!!

அம்மன் பெயரில் ஆணாதிக்கம்.
நம் தேசத்தில் நிறைய பெண் கடவுள்களை நாம் வழிபடுகிறோம் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று. ஆனால் பெண்களை கடவுளாக வழிபட நமக்கு மனம் ஒத்துக்கொள்வதில்லை. சரி போகட்டும். பாரத மாதா எனவும் நதிகளுக்கு பெண்களின் பெயரை இட்டும் அழகுபார்த்த நாம் அந்த பெண்கடவுள்களின் வழிபாட்டு முறையின் அடித்தளத்தை ஆணாதிக்கத்தில் உருவாக்கியிருக்கிறோம் என்பது தான் வேதனைக்குரியது.

அம்மனை வழிபடுபவர்கள் பெரும்பாலும் கீழ்தட்டு உழைக்கும் வர்க்கத்தை சார்ந்தவர்களாகவே இருப்பார்கள். அந்த குடும்பங்களில் அம்மன் கடவுளாகவும் அவர்கள் வீட்டிலிருக்கும் பெண்கள் அடிமைகளாகவும் தான் பார்க்கப்படுகிறார்கள். தாங்கள் வழிபடும் தெய்வம் பெண்ணாக இருக்கும்போதும் அவர்களுக்கு கிடைப்பதென்னவோ சாராய நெடி வீசும் அடியும் உதையும் வன் புணர்வும் தான்.

பெண் கடவுளின் வாயிலாக நாம் வலியுறுத்துவதெல்லாம் பெண் கற்புள்ளவளாக இருக்கவேண்டும் என்பதும் கணவனின் நல்வாழ்வுக்காக மண் சோறு உட்கொள்ளவேண்டும் அங்கபிரதட்சணம் செய்யவேண்டும் நோன்பு இருக்கவேண்டும் தீட்டு என்ற பெயரில் பெண்களிடம் கற்பு கற்பு என்னும் ஆணாதிக்க வலையை விரித்துவிடுகிறார்கள். ஒரு பெண் வேறு ஆணுடன் தொடர்பு வைத்துக்கொண்டால் அவளை ஏதோ தீட்டு பெற்றவள் போலவும் பாவியை போலவும் பாவித்து பல சித்திரவதைகளுக்கும் ஆளாக்கி ஆணாதிக்க வெறியர்கள் மகிழ்கிறார்கள். அந்த சித்திரவதைகளின் நோக்கமெல்லாம் நீ நெறிகெட்டவள் எனவே உன்னை எல்லோரும் அனுபவிக்கலாம் என்கிற மறைமுக வக்கிர எண்ணமே மேலோங்கியிருக்கிறது. ஒருத்தியை நெறிகெட்டவள் ஆக்குவது தங்கள் உடல் சுகத்துக்கு ஒரு பலி ஆட்டை தயார் செய்வதுக்கு ஒப்பாகும்.

நான் இங்கே பெண் ஆணை விட உயர்ந்தவள் என்று சொல்லி எழுதுகிற போது எல்லோரும் கொதித்துப்போகிறார்கள். ஆனால் அபராதம் கட்டினால் கற்பழிப்பு ஒரு குற்றமே இல்லை என்கிற ரீதியில் நம் நாட்டில் ஆண் நாட்டாமைகள் தீர்ப்பு வழங்கி மகிழ்ந்ததை நாம் மறந்துவிடவேண்டாம். அப்படி வக்கிரங்களையும் பெண்ணை ஒரு இன்பத்தின் தூண்டுபொருளாக்கி மகிழ்ந்த இந்த சமுதாய ஆண்கள் இன்று ஏதோ திருந்திவிட்டது போல் பொய் வேடம் போடுகிறார்கள். நம்பவேண்டாம். அவர்கள் என்றும் பெண்களை அடிமைகளாக வைத்திருக்கவே விரும்புகிறார்கள். தெய்வமாக வேண்டுமானல் ஒரு பெண் இருந்துவிட்டு போகட்டும் ஆனால் மனுஷியாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் அடிமையாக இருக்கவேண்டும் என்ற கோட்பாடோடு தான் இந்த அம்மன் வழிபாட்டு முறைகள் உருவாக்கியிருக்கிறார்கள் என்பது என் கருத்து.







ஆண்க்ளே உங்கள் சேவையை ஒரு பெண்ணின் பாதங்களிலிருந்து தொடங்குங்கள்


நான் சைக்கோவா?
ஆணும் பெண்ணும் சமம் போன்ற எழுத்துக்கள் ஒரு காலத்தில் அடிமைகளிடம் மட்டுமே அதிகாரம் செலுத்த விரும்பும் ஆண் மன நோயாளிகளுக்கு பெரிய எரிச்சலாக இருந்தது. அவர்கள் அதை பல வழிகளில் எதிர்த்தார்கள். மேலும் அவ்வாறான எழுத்துக்கள் தங்கள் வீட்டு பெண்களிடம் சிக்கிவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். அந்த எழுத்துக்களை படித்து பெரிய எரிச்சல் கொண்டு அதை தங்கள் மனைவியிடம் அடக்குமுறைகளாக வெளிப்படுத்தினார்கள் அந்த மன நோயாளிகள்.

பிறகு காலப்போக்கில் பெண்களுக்கு சம வாய்ப்புகள் வழங்கப்பட்டு ஆண்களுக்கு மேலாக அவர்கள் சாதிக்க தொடங்கிவிட்டார்கள். இப்போது அவர்களின் பயமெல்லாம் ஒரு காலத்தில் நம் காலை வருடிக்கிடந்த பெண்கள் முன்னேறிவிட்டார்கள். முன்பு போல் போலி ஆதிக்கம் செலுத்தி மூட வழக்கங்களை சொல்லி அவர்களை அடிமைப்படுத்தி வைப்பது சாத்தியமில்லை. அவர்களை முன்பு போல் நம் அடிமைகள் என்று நினைக்கும் பட்சத்தில் ஆண்கள் கசக்கி எறியும் காகிதம் போல் வீசப்பட்டுவிடுவார்கள் என்ற பயத்தில் உடனே ஆணும் பெண்ணும் சமம் என்பதை ஒத்துக்கொண்டு பம்மிவிட்டார்கள். இப்போதும் ஆணும் பெண்ணும் சமம் என்பதை ஏதோ ஆண்கள் தங்களுக்கான ஒரு இடத்தை பெண்களுக்கு ஒதுக்கி கொடுத்துவிட்டதாய் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. காலம் காலமாய் அடிமைகளை நடத்தப்பட்டு வந்த பெண்கள் இன்று அவர்களின் மூக்குடைத்துவிட்டார்கள் என்பது தான் உண்மை.



இப்போது நான் ஆண்களை விட பெண் உயர்ந்தவள். பெண் வணக்கத்துக்குரியவள். பெண்களுக்கு சேவகம் செய்ய படைக்கப்பட்டவன் தான் ஆண் என்று சொல்கிறபோதும் அதே வகை கொதிப்பும் மன உளைச்சலும் இந்த மன நோயாளிகளுக்கு ஏற்படுகிறது.

உடனே என்னை சைக்கோ என்றும் நான் திருமண வாழ்வில் துன்பப்பட்டவள் என்பதால் என்னுடைய வலியை இங்கே பதிவு செய்கிறேன் என்றும் உடனே நான் ஒரு மருத்துவரை அணுகவேண்டும் என்றும் பல கீழ்த்தரமான( சகிப்புத்தன்மை கொஞ்சமும் இல்லாத வீரம் இல்லாத ஆண்கள் பயன்படுத்தும் வார்த்தைகள்) வார்த்தைகளால் வஞ்சித்து மகிழ்ந்தார்கள். இதனால் அவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனக்கும் ஆண்களை பிடிக்கும். அழகான ஆண்கள் மிகவும் பிடிக்கும்.


ஆண்களே ஒரு அழகான பெண்ணை பார்க்கிற பொழுது உங்களுக்கு மனம் படபடக்கிறது அவள் மேல் ஆசை வருகிறது. அவள் பின்னால் அலைவதில் ஒரு சுகம் இருக்கிறது. ஆனால் அப்படி அலைவதும் திரிவதும் அவள் உங்களின் செக்ஸ் தேவைகளுக்கும் சுகங்களுக்கும் ஒத்துழைக்கவேண்டும் என்பதற்குத்தானே. ஒரு பெண்ணின் விருப்பமில்லாமல் அவளின் உடல் பாகங்களை தீண்டும் எந்த ஆணும் அவளை கற்பழிக்கிறான். ஒரு ஆண் ஒரு பெண்ணின் உடல் பாகங்களை அவள் அனுமதி இல்லாமல் தொடுவதும் உரசுவதும் எதற்கு? அவளின் காம உணர்ச்சிகளை தூண்டி அவளை தங்கள் இச்சைகளை தீர்க்கும் பொருளாக மாற்றும் பொருட்டான நடவடிக்கைகளே தவிர அதில் ஒரு காதலும் கத்திரிக்காயும் இல்லை.




அதாவதுங்க ஆணாதிக்க வெறியர்கள் என்ன கமென்டுவார்கள் என்றால் கெட்ட கெட்ட வார்த்தைகள் அதாவது அந்த வார்த்தைகளை எல்லாம் கேட்டால் நான் பயந்து போய்விடுவேன் என்று கண்ணுகளா என்னிடம் ஆங்கிலத்திலும் தமிழிலும் கெட்ட வார்த்தைக்கென்றே தனி புத்தகம் இருக்கிறது. அப்படிப்பட்ட கோழைகளின் கமென்டுகள் எவ்வாறாக இருக்குமென்றால் மேலே நீங்கள் பார்க்கும் படம் ஆபாசமாக உள்ளதென்பார்கள். அதாவது ஒரு பெண்ணின் பாதத்தை அதன் மென்மையை அதன் பரிசுத்தத்தை ஆராய்ந்து பார்க்கும் ஒரு ஆண் அல்லது அவள் பாதங்களை வணங்கும் ஒரு ஆண் அவளுக்கு சேவகம் செய்யும் ஒரு ஆண் அல்லது அவள் பாதங்களை முத்தம் செய்யும் சுத்தம் செய்யும் ஒரு ஆண் - அது ஆபாசம். தொப்புளை காட்டிக்கொண்டு ஆம்ப்லேட்டுக்கும் பம்பரத்துக்கும் படுத்திருந்தால் ஐயோ அப்படியே வழிஞ்சு ஒழுகும் இல்ல.....ஏன்யா இப்படி இருக்கீங்க???



எனவே பெண்களே உங்கள் உடலை தீண்டி உங்கள் காம இச்சைகளை தூண்டிவிட்டு அதில் குளிர் காய நினைக்கும் ஆண் ஓநாய்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.

பெண்களே நீங்கள் ஆள பிறந்தவர்கள். ஒரு ஆணிடம் உங்கள் உடலை ஒப்படைத்துவிட்டு மல்லாக்க படுத்திருக்கும் அடிமை கோலம் பூண்டு வாழ்வதற்கு அல்ல. அழகும் கல்வியும் உங்களை உயர்த்தும். தொடர்ந்து முன்னேறுவதில் நோக்கமாய் இருங்கள். வீணான உடல் இச்சைகளுக்கு பலியாகவிடாதீர்கள்.


-உங்கள் தோழி வின்சி.
உங்கள் கேள்விகள் சந்தேகங்கள் கோட்பாடுகள் தர்க்கங்கள் நாகரீகமான மொழி பயன்பாட்டில் இருப்பின் என் முகவரிக்கு அனுப்புங்கள். பதில் அளிக்கப்படும்.


vincyontop@gmail.com

Monday, 21 September 2009

கன்னியாகுமாரி மாமனார்களின் வரதட்சணை வெறி.

உலகின் அழகான படைப்புகளின் ஒன்றாக திகழ்ந்தும் அறிவில் ஆண்களை மிஞ்சும் பல சாகசம் புரிந்தும் உலகிற்கு உயிர்களை நீட்டித்து கொடுத்தும் தன் உடல் சுகங்களை ஓரங்கட்டிவிட்டு அடுத்த சந்நதியின் உடல் நலத்துக்காய் தன்னை வருத்தி பாடு பட்டும் இன்னும் இங்கே பெண்களை யாரும் வணங்குவதாய் தெரியவில்லை. வணக்கத்துக்கு உரியவள் பெண். அவளை இன்னும் தெருவில் கைகுழந்தையோடு தெருநாய் போல் அலைய வைக்கும் ஆணாதிக்க வர்க்கம் இருக்கும் போது அவற்றிற்கு பதிலடி கொடுக்க ஒரே வழி பெண் ஆதிக்கம் என்று நான் பல முறை கூறுகிறேன். என் மீது சேறும் சகதியும் வாரி இரைக்கிறீர்கள் போகட்டும்.

கன்னியாகுமாரியில் நடக்கும் கொடுமைகளில் வெளியே வந்திருக்கும் ஒரு கொடுமையை படிக்க இங்கே சொடுக்கவும்.

http://www.dinamalar.com/new/Incident_detail.asp?news_id=12935


தமிழக மாவட்டங்களின் அதிகமாக வரதட்சணை புழங்கும் மாவட்டம் கன்னியாகுமாரி. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் இங்கு பெண்களின் படிப்பு விகிதம் ஆண்களை விட மிக மிக அதிகம். உதாரணத்துக்கு இங்கே அதிக வரதட்சணையோடு கல்லூரியில் மூன்று நான்கு டிகிரி வாங்கிய ஒரு பெண் பத்தாம் வகுப்பு படித்து பஸ் டயர் உருட்டும் வேலை பார்க்கும் ஒருவனை மணந்துகொள்ள நேர்கிறது. அதற்கும் மாப்பிள்ளையின் தாய் தந்தை பேசும் பேரத்துக்கு அளவில்லை.

படிப்பிலும் அறிவிலும் சிறந்து விளங்குபவள், மாதா கடவுளுக்கு சமமாக போற்றப்படவேண்டியவள் இந்த கன்னியாகுமாரி மாவட்டத்தில் அழுகிய மீனுக்கு இணையாக விலை பேசப்படுகிறாள். பெண் ஆதிக்கம் கொண்டு தான் இதை உடைக்க முடியும் என்பது என் கருத்து மட்டுமல்ல அது தான் உண்மையும் கூட.

நீங்கள் கூட இதை முயற்சித்து பார்க்கலாம்.
மேட்ரிமோனி வாயிலாக ஒரு கன்னியாகுமாரி பையனின் புரோபைலை எடுத்துக்கொள்ளுங்கள். அவன் பி.ஈ எனும் அதி புத்திசாலி படிப்பு படித்தவனாக இருந்தால் நல்லது. ஹரியர்ஸ் வைத்து ஏதோ ஒரு குப்பை காலேஜில் பி.ஈ வாங்கிவிட்டால் இவர்கள் எல்லாம் ஐ.ஐ.டி யில் படித்த மேதாவிகள் என நினைப்பு. பிறகு அவன் சாப்ட்வேர் நிறுவனத்தில் இரா பகலாக உழைத்து இருபது முதல் முப்பதாயிரம் சம்பளம் வாங்குபவனாக இருக்கவேண்டும். செய்வது என்னவோ அடிமை வேலை இருந்தாலும் சாப்ட்வேர் எம்.என்.சி கூடவே என்ஜினியர் அட்ரா சக்க....
பிறகு அதில் கொடுக்கப்பட்டிருக்கும் நம்பருக்கு போன் செய்து உங்களுக்கு ஒரு மகள் இருப்பதாகவும் அவளும் பி.ஈ அல்லது அதற்கும் மேல் படித்தவள் என்றும் உங்கள் மகனின் புரோபைல் எங்களுக்கு பிடித்திருக்கிறது என்றும் சொல்லுங்கள். உடனே அந்த பையனின் தகப்பனாரிடமிருந்து கீழ்கண்ட கேள்விகள் வரும்.







வரதட்சணை வாங்கி திருமணம் செய்துகொள்ளும் ஆண்களை நீங்கள் கால் மேல் கால் போட்டுக்கொண்டு சுண்ட விரலை அசைத்து அருகில் அழைத்து உங்களின் பாதணிகளின் அடிப்பகுதியில் இருக்கும் அழுக்கை துடைத்துவிட சொல்வதற்கு உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு.அவர்களும் மண்டி போட்டு துடைத்துவிட வேண்டும். நமக்கு உபயோகம் இல்லாத பொருளை எதற்காக நாம் விலை கொடுத்து வாங்கவேண்டும்


பொண்ணுக்கு என்ன செய்வீங்க? (டேய் கெழ நாயே...போற வயசுல உனக்கு
ஏன்டா இந்த ஆசை. பையனுக்கு பொண்ண புடிக்குமா? பொண்ணுக்கு பையனை புடிக்கும? பெண் எப்படி பட்டவள்...குடும்பம் எப்படி அதை பற்றி எல்லாம் கவலை இல்லை. முதலில் கேட்கும் கேள்வி பொண்ணுக்கு என்ன செய்வீங்க. அதாவது என்னுடைய என்ஜினியர் ஆண் மாட்டுக்கு என்ன விலை என்று கேட்காமல் பெண்ணுக்கு என்ன செய்வீர்கள் என்று தான் முதல் கேள்வி இருக்கும். குறைந்தது ஒரு கோடி எதிர்பார்ப்பார்கள்.

இப்படி கோடி கணக்கில் பணம் சேர்த்து வைக்காத அப்பாவி பெண்கள் ஏதாவது கூலி வேலை செய்பவனோடு குடும்பம் நடத்த வேண்டியிருக்கும். பல குடும்பங்களில் பெண் பள்ளியில் ஆசிரியையாக இருப்பாள் ஆண் கூலி வேலைக்கு போவான். வரதட்சணை மட்டும் பத்து முதல் இருபது லட்சம் கேட்பான்.

இன்னும் சில கிழ அப்பாக்கள் ஒரு கோடி இருந்தால் பேசுங்கள்...இரண்டு கோடி இருந்தால் பேசுங்கள் என்பார். நீங்கள் அவரிடம் சம்மந்தம் பேச போனால் அவர் கேட்கும் முதல் கேள்வியே இது தான். எப்படி இருக்கிறது பாருங்கள்.
ஆக இப்படி வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ய சக்தி உள்ள பெண்கள் செய்து கொள்ளுங்கள். ஆனால் செய்துகொண்ட பின் ஒன்றை மட்டும் மனதில் நிலைநிறுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் ஒரு கோடியோ இரண்டு கோடியோ அல்லது பல லட்சமோ கொடுத்து அந்த ஆண் மாட்டை விலைக்கு வாங்கியிருக்கிறீர்கள். மாட்டை வாங்கி கயிறு கட்டி இழுத்துக்கொண்டு வருவோம். ஆனால் ஆணாதிக்க சமுதாயத்தில் மாடு ஓனருக்கு கயிறு (தாலி) கட்டுகிறது. பரிதாபம்.


இப்படி வரதட்சணை கொடுத்து ஒரு வீட்டில் நீங்கள் வாழ போகிற போது அந்த வீட்டிலிருக்கும் மாமனார் மாமியார் மற்றும் உங்கள் கணவன் உங்களுக்கு அடிமை பிராணிகளாக இருக்க நீங்கள் எதிர்பார்ப்பதில் தவறேதும் இல்லை. வரதட்சணை கொடுத்து திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் மாமனார் வீட்டில் கீழ்கண்டவற்றை எதிர்பார்க்கலாம்.

வரதட்சணை கொடுத்து வாங்கிய மாடு வீட்டு வேலை செய்யட்டும். எஜமானிக்கு சேவை செய்வது தானே அவனுக்கு அழகு. பின்னே ஒரு கோடிக்கு அவனை வாங்கிவிட்டு நாம் அவன் ஜெட்டியை துவைத்து போடுவது எவ்வகையில் ஞாயம். கணவனே கண் கண்ட தெய்வம் என்றா சொல்கிறாய் தாயே ஒரு கோடி இல்லையென்றால் உனக்கு கணவனே இல்லை.

உங்கள் மாமனார் உங்கள் உள்பாவாடையை துவைத்து போடட்டும். உங்களிடமிருந்து ஒரு கோடி இரண்டு கோடி என்று பேரம் பேசி தன் மகனை விற்றிருக்கிறார். புரோக்கர் வேலை பார்த்திருக்கிறார். உங்கள் கணவனின் சேவையில் ஏதேனும் குறைபாடு இருந்தால் உடனடியாக உங்கள் மாண்புமிகு மாமனாரை அணுகுங்கள்.

வரதட்சணை ஒழிப்பது கடினம் என்றாலும் இப்படி வரதட்சணை கொடுத்து மாட்டை வாங்கிவிட்டு அந்த வீட்டில் நீங்கள் போய் தொழுவத்தில் உட்கார்ந்துகொள்ளாதீர்கள் பெண்களே. ஆளவேண்டியது நீங்கள்.

Thursday, 10 September 2009

என்னை பழித்த நல் உள்ளங்களுக்கு...

கடந்த பதிவுக்கு ரோஷ்மா என்ற பெண்ணோ ஆணோ அனானி வேடமிட்டு என்னை கண்டபடி திட்டி தீர்த்தார். அவரை ஒன்றும் குறை சொல்வதற்கு இல்லை. நான் சொல்ல வரும் கருத்துக்களை குறித்த புரிதலும் அந்த கருத்துக்கள் யாருக்காக சொல்லப்படுகின்றன என்ற அறிவும் இல்லாமல் இருப்பது தான் காரணம். எனவே மேலும் நான் தொடர்ந்து எழுதுவதற்கு முன் சில விஷயங்களை தெளிவுபடுத்துவது நல்லது என நினைக்கிறேன்.

முதலில் என் எழுத்தோடு என் தனிப்பட்ட வாழ்கையை ஒப்பிட்டு பார்க்கும் பாமர தனத்தை விடுங்கள். எழுத்தை எழுத்தாக பாருங்கள். அதில் இருக்கும் கருத்துக்களை விவாதியுங்கள். நான் கணவனுக்கு அடங்கிய ஒரு ஆல்பா பீமேலாக இருந்து கூட இது போன்ற கருத்துக்களை எழுதலாம். கொலை பற்றி கதை எழுதுபவன் கொலை செய்திருக்க வேண்டும் என நினைப்பது பாமரத்தனம்.

நான் சொல்ல வரும் கருத்துக்களை பற்றிய சில அடிப்படை விஷயங்களை பார்ப்போம்.
நான் பெரியாரோ பாரதியாரோ அல்ல. அவர்கள் எல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே பெண் உரிமைக்காக போராடியவர்கள். அவர்கள் விரும்பியதெல்லாம் சமத்துவம். ஆண்கள் பெண்களை கலாசாரம் மதம் மூட பழக்க வழக்கங்கள் என்ற பெயரில் சர்வ சாதாரணமாக அடிமை படுத்தி வைத்திருந்தார்கள். அப்படிப்பட்ட அடிமை விலங்குகளை உடைத்தெறிய போராடியவர்கள் தான் அவர்கள். நான் சொல்ல வருவது பெண்மை என்னும் புனிதத்தை போற்றவேண்டும் வழிபட வேண்டும். பெண் இனி மேல் ஒரு போதை பொருளல்ல அவள் ஒரு வழிபாட்டு ஸ்தலம். அவள் வணக்கத்துக்கு உரியவள். அவள் ஆணுக்கு சமமானவள் அல்ல. அவனை விட ஒரு படி உயர்ந்தவள் என்பது தான் என் கருத்தும் நம்பிக்கையும். காலம் காலமாக அடிமை பட்டு கிடந்த ஒரு இனம் இன்று சம வாய்ப்புகள் வழங்கப்படுகிற பொழுது சர்வ சாதாரணமாக ஆண்களை மிஞ்சி நிற்க முடிகிறதென்றால் அது நிச்சயம் உயர்ந்த இனம் தானே. நான் சொல்ல வரும் கருத்து இது தான். ஆண்களை விட பெண்கள் உயர்ந்தவர்கள். பெண்கள் போதை பொருள் அல்ல வழிபாட்டு பொருள்.





பெண்மையை அதன் புனிதத்தன்மையை போற்றி வழிபடும் தன்மையே ஆண்மை என்பது தான் என் கருத்து. இது நான் ஏதோ புதிதாக சொல்ல வந்த கருத்தும் அல்ல. பல நூற்றாண்டுகளாய் இந்த உலகத்தில் போற்றப்பட்டு வரும் ஒரு மேலான ஒழுக்கம். நம் தமிழர்களுக்கோ இந்தியர்களுக்கோ இது வியப்பை தரலாம். தரும். காரணம் நாம் தெருவில் ஒருவன் யார் மீதாவது மோதிவிட்டால் உடனே இருக்கும் வேலையை எல்லாம் விட்டுவிட்டு அவனை காட்டு மிராண்டித்தனமாக அடிக்க புறப்படும் காட்டு கூட்டம். அவர்களிடம் ஒழுக்கத்தையோ அறிவையோ பண்பாட்டையோ எதிர்பார்க்க முடியாது. அப்படி பட்ட ஒரு காட்டுவாசி கூட்டத்துக்கு பெண்மையின் மேன்மையை போற்ற தெரியாது. வெறும் ஐந்து நிமிட சுகத்துக்காக பெண்ணை வன்புணர்ந்து அதை ஏதோ பெரிய வீர தீர செயல் செய்தது போல் மீசையை தடவி விட்டபடி செல்லும் ஆண்கள் தானே இங்கே இருக்கிறார்கள்.

இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு பெண்ணும் கடவுளுக்கு சமமானவள். அவளை கடவுளாக வழிபட படைக்கப்பட்டவர்கள் தான் ஆண்கள். இது தான் என்னுடைய கருத்து. பெரியாரோ பாரதியோ சொன்ன பெண் உரிமை அல்ல. ஆண் பெண் சமத்துவமும் அல்ல.


யாருக்காக இதை எழுதுகிறேன்.
காலம் காலமாக அடிமைகளாகவே வாழ்ந்துவிட்ட நமக்கு தலை நிமிர்ந்து நடப்பது கூட அகங்காரமாக தோன்றலாம். அப்படி பெண்மையின் மேன்மை குறித்து சராசரி அறிவு கூட இல்லாமல் கோழைத்தனமாக ஆண்களை சார்ந்து அவர்களுக்கு கீழே வாழ விருப்பப்படும் மஞ்சள் பூசி தாலி சொருகி புடவை சுற்றிய அப்பாவி பெண்கள் சிறிதளவாவது தங்கள் இனத்தின் மேன்மையை உணரவேண்டும் என்பதற்காக இதை எழுதுகிறேன். சிலர் என் மீது கோபப்படலாம். படுங்கள். எந்த புதிய சித்தாந்தமும் சொல்லப்படுகிற போது பொது ஜனங்களால் கல்லடித்து துரத்தப்பட்டது என்பதை நான் சொல்ல தேவையில்லை.

யாருக்காக இதை எழுதுகிறேன்.
அதே போல் பெண்களை தெய்வமாக மதித்து அவர்களை போற்றி அவர்களின் அன்பிலும் அதிகாரத்திலும் வாழ்வதால் தங்கள் வாழ்வு மேன்மை பெறும் என ஆணித்தரமாய் நம்பும் லட்சாதி லட்சம் ஆண்களும் இங்கே இருக்கிறார்கள். நீங்களே சிந்தித்து பாருங்கள் ஆண்கள் காதல் என்ற பெயரில் ஒரு பெண்ணிடம் அடிமை பட்டு கிடப்பதை பெரிய கொடுப்பனையாக நினைப்பார்கள் அதுவே திருமணம் முடிந்தவுடன் ஈகோ தலை தூக்கும். நான் புருஷன் என்ற அகங்காரம் வரும். பெண்ணை ஆழவேண்டும் என்ற முடியாத ஆசைக்கு வலை வீசுவதால் சிக்கல்கள் வரும். ஆண்களில் இது போன்ற கீழ்த்தரமான ஈகோவை தூக்கி எறிந்து பெண்களை வழிபாட்டு பொருளாக பாவிக்க தெரிந்த உன்னத ஆண்கள் இங்கே நிறையே பேர் இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் தான் நான் இதை எழுதுகிறேன்.

பெண்களின் ஆடையை அணிந்து பெண்ணாக வாழ விருப்பப்படும் ஆண்கள் புராண காலம் தொட்டு இருந்து வருகிறார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் அப்படிப்பட்ட ஆண்களை நாம் பழிப்போம். அவர்களை கேலி பேசுவோம். இன்று எவ்வளவோ சமுதாய மாற்றம் வந்துவிட்டது. இன்று அவர்களை மரியாதையோடு திருநங்ககைகள் என்று அழைக்கிறோம். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என தீர்மானிக்க அதிகாரம் உண்டு. எனவே நான் எழுதும் இந்த கருத்துக்களை நீங்கள் படித்து தான் ஆகவேண்டும் என்று நான் நிர்ப்பந்திக்கவில்லை. உங்களுக்கு விருப்பம் இருந்தால் படியுங்கள். இல்லையேல் தயவு செய்து என் பக்கங்களை நாடவேண்டாம். அப்படி படித்துவிட்டு சரியான புரிதலும் அறிவு முதிர்ச்சியும் இல்லாமல் என்னை பழிக்க வேண்டாம். என் பக்கங்களை எத்தனை பேர் படிக்கிறார்கள்...யாரும் படிக்கவில்லையே என்று நான் என்றைக்கும் வருத்தப்படுவது இல்லை.

இந்த கருத்துக்களில் உடன்பாடு இல்லாதவர்கள் தயவு செய்து என் பக்கங்களுக்கு வரவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

வாசகர் கேள்விகளுக்கு பதில்கள்.
1. இவ்வளவு நல்ல கருத்துக்களை சொல்லும் நீங்கள் ஏன் உங்கள் பிளாகில் ஆபாசமான படம் வைத்திருக்கிறீர்கள்?

எத்தனை வன்மம் பாருங்கள். ஒரு பெண்ணின் பாதங்களை தொட்டு வணங்குவதோ அல்லது தசைகளை நெருடி ஓய்வு கொடுப்பதையோ ஒரு ஆண் செய்வது போன்ற காட்சி ஆபாசமாக தெரிகிறது. இதே ஒரு ஆணின் காலில் ஒரு பெண் விழுவது போல் எத்தனை காட்சிகள் சினிமாவில் பத்திரிகையில் தொலைக்காட்சியில் வருகிறது. என்றாவது அது ஆபாசம் என்று நீங்கள் ஒதுக்கியதுண்டா. ஆண்களுக்கு கால் அமுக்கி விடுவதும் முதுகு தேய்த்து விடுவதும் ஒரு பெண்ணின் அன்றாட வேலைகளில் ஒன்று என கருதியும் அவை ஆபாச வர்க்கம் இல்லை என்ற உறுதியும் இருக்கும் உங்களுக்கு இது போன்ற படங்கள் ஆபாசமாக தெரியும். தொப்புளில் பம்பரமும் ஆம்லேட்டும் போடுவது போல் படம் போட்டால் இழித்துக்கொண்டு வருவீர் தானே.

Tuesday, 8 September 2009

என் கணவர் ஆண்மை இல்லாதவர் - அந்தரங்க பேட்டி.- 1

Vincy - உங்கள் கணவருக்கு ஆண்மை இல்லை என்பதை எப்போது ஒப்புக்கொண்டார்.

Menaka: முதலிரவில். மற்ற முதலிரவு போல் ஆண் உள்ளே காத்திருக்க பெண் தலை குனிந்தபடி பால் சொம்போடு உள்ளே போகும் ஆணாதிக்க தனமான முதலிரவு இல்லை எங்களுடையது. சொல்லப்போனால் முதலிரவு அறையில் நான் தான் முதலில் போய் அமர்ந்திருந்தேன். புடவை கட்டவில்லை. ஒரு ஜீன்ஸும் டீ ஷர்டும் அணிந்திருந்தேன். பெமினா படித்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் என்னுடைய பாய் பிரண்ட் கம் கணவன் வந்தான். தயங்கி தயங்கி உள்ளே வந்தான். நான் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு மீண்டும் பெமினாவில் ஆழ்ந்திருந்தேன். அவன் கட்டிலின் ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு என் பாதங்களையே பார்த்தபடி இருந்தான்.
செக்ஸ் என்பது நான் விருப்பப்படும் பொழுது அவன் எனக்காக அளிக்க வேண்டிய ஒரு உடல் சுகம் என்பது அவனுக்கு தெரியும். அதனால் அமைதியாக அமர்ந்திருந்தான். நான் கால் மேல் கால் போட்டிருந்தது அவனுக்கு பிடித்திருந்தது. அரை மணி நேரம் புத்தகம் படித்துவிட்டு அதை சோபாவில் எறிந்தேன். எழுந்து கொண்டேன். உடனே அவன் நான் எதிர்பார்க்காத நிமிடத்தில் என் காலில் விழுந்தான். எனக்கு தலை கால் புரியவில்லை. கோடானு கோடி பெண்களை முதலிரவு அறையில் தங்கள் காலில் விழும்படி அதிகாரம் செய்த ஆண் வர்க்கத்தின் ஒரு உதிரி என் காலில் விழுந்து கிடந்ததை பார்த்தபோது பெண் விடுதலையும் அதன் ஆதிக்கமும் மெல்ல துளிர்விட்டிருப்பதை உணர முடிந்த்தது.

ஏய் என்னது இது சில்லியா என்று சொல்லிவிட்டு நான் பாத்ரூமுக்கு போனேன். இதே ஆண்களாய் இருந்திருந்தால் தன் காலில் ஒரு பெண் விழுந்துவிட்டால் போதும் உடனே பெரிய ராஜாவை போல் பாவ்லா செய்து அவளை எழுப்பி ஆசீர்வதித்து தூ....கான்ட்ராவி....(கோபத்தோடு சிரிக்கிறார்).நான் அவனை கண்டுகொள்ளாதது அவனுக்கு ஏமாற்றமும் என்னை குறித்து ஒரு பயமும் வந்திருக்கும். நான் டாயிலட்டுக்கு போய் கதவை சாற்றிக்கொண்டேன். வெளியே வந்து பார்த்தபோது அவன் டாயிலட் வாசலில் நின்றுகொண்டிருந்தான். நான் மெதுவாக புன்னகைத்தேன். அவனும் பதிலுக்கு சிரித்தான். போய் பிளஷ் பண்ணிட்டு வா என்றேன். அவன் உடனே உள்ளே போய் பிளஷ் செய்துவிட்டு வந்தான். அதை பார்க்க பரிதாபமாக இருந்தது.
அவன் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தபோது உட்கார் என்று கட்டிலின் விளிம்பை காட்டினேன். அவன் மெதுவாய் அமர்ந்தான்.



















ஆண்மை இல்லாதவர்கள் நாட வேண்டியது என் பூட்ஸின் அடிப்புறத்தை.


"நான் ஒரு துரோகம் பண்ணிட்டேன். என்று தொடங்கி தனக்கு ஆண்மை இல்லை என்பதையும் என் மேல் தீராத காதலும் மோகமும் இருந்ததால் தான் என்னை துரத்தி துரத்தி காதலித்ததாகவும் அது பெரிய தப்பு எனவும் என்னை ஏமாற்றிவிட்டதாகவும் கூறினான். அவனை நான் மன்னிக்கவேண்டும் எனவும் கெஞ்சினான். நான் அவனை பார்த்து லேசாக சிரித்தேன். நீ ஒண்ணுக்கும் யூஸ் இல்லாத தகர டப்பான்னு எனக்கு என்னைக்கோ தெரியும். ஆனாலும் உன்ன ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் தெரியுமா முதல்ல நீ என் மேல வச்சிருந்த பக்தி நிறைந்த காதல். என்னையே சுற்றி சுற்றி வந்த. எனக்கு என்னவெல்லாமோ செஞ்ச. நான் என்ன சொன்னாலும் அது எவ்வளவு கஷ்டமான காரியமா இருந்தாலும் ஓடி ஓடி பண்ணின. அது எனக்கு புடிச்சிருந்தது. அதனால உன்ன கல்யாணம் பண்ண முடிவு பண்ணினேன்.

அப்புறமா என்ன விட்டு போயிட மாட்டியேன்னு கேட்டான். உன்ன மாதிரி ஆப்ஜக்ட எல்லாம் யாரும் மிஸ் பண்ண மாட்டாங்க. கல்யாணம் ரிஷப்ஷனுன்னு நின்னுகிட்டே இருந்து கால் எல்லாம் வலிக்கிது. கொஞ்சம் அமுக்கி விடுன்னு சொன்னேன். சொன்னது தான் தாமதம் தரையில உக்காந்து அமுக்க ஆரம்பிச்சிடிச்சு.

Vincy - உங்கள் கணவர் செக்ஸ் விஷயத்தில் லாயக்கில்லாதவர் என தெரிந்தும் அவரை இன்னும் ஏற்றுக்கொண்டு வாழ்கிறீர்கள். அது மிக பெரிய விஷயம். செக்ஸ் விஷயத்தில் பிறகு உங்களை எப்படி திருப்தி படுத்திக்கொள்கிறீர்கள்.


Menaka - கட்டிய கணவன் மட்டுமே இந்த உலகத்தில் தனக்கு ஒரே ஆண் என வாழும் கோழை பெண் அல்ல நான். அப்படி வாழவேண்டும் என இந்த ஆணாதிக்க சமுதாயம் நம்மை ஊக்குவிக்கிறது. காரணம் பெண்களின் அழகும் அறிவும் ஆண்களை விட மித மிஞ்சியது. அப்படிப்பட்ட ஒரு பெண்ணை காலம் பூராவும் தன் வசம் வைத்திருக்கும் தகுதி இங்கு பல ஆண்களுக்கு கிடையாது. அந்த பயத்தில் தான் இப்படிப்பட்ட முட்டாள் தனமான வரைமுறைகளை கலாசாரம் என்ற பெயரைல் பரப்பி விட்டிருக்கிறார்கள். தங்கள் திறமையால் சாதிக்க முடியாததை சட்டம் போட்டு சாதிக்க நினைக்கும் கோழைகள் தான் ஆண்கள். அந்த சட்டங்களை கலாசாரம் என்ற பெயர் சூட்டி அழைக்கிறார்கள்.....

தொடரும்....


இதை படித்துவிட்டு ஸ்கூள் பிள்ளைகள் போல் ஆண்களே தயவு செய்து இது போல கமென்ட் எழுத வேண்டாம்..."வின்சி தோழி வெறும் செக்ஸ் மட்டும் வாழ்க்கை இல்லை...இல்லறம் என்பது....இத்யாதி இத்யாதி...."